Sunday 5 October 2014

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆதரவாளர்கள் சதியால் சிறை வைக்கப்பட்டார் முன்னாள் முதலவர் என்று கிளிபிள்ளை போல தமிழ்நாடு முழுவதும் மேடை போட்டு கத்தி கொண்டு இருக்கிறார்கள்
செல்வி மாயாவதி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறவில்லை,முலாயம் சிங்க் தண்டனை பெறவில்லை என்று
முலாயம் சிங் தப்பிசுட்டாக
மாயாவதி தப்பிசுட்டாக ,லாலு மாட்டிகிட்டாக ஆனா 25 லட்சம் தான் பைன் எவ்வளவு பெரிய அநீதி என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
முலாயம் சிங் செல்வி மாயாவதி மட்டுமா தப்பித்தார்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களே டாசன் வழக்குகளில் இருந்து தப்பித்தார்கள்.அந்த வழக்குகளில் இருந்து தண்டனையில் தப்பித்தது எல்லாம் இவர்கள் மற்ற முதல்வர்கள் மீது குற்றம் சாட்டுவது போல மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பேசாமல்,அவர்கள் கேட்பதை எல்லாம் வாரி வழங்கியதால் தான் தப்பித்தார் என்று எடுத்து கொள்ளலாமா
அ தி மு க ஆதரவாளர்களே அவர்களின் தலைவி மற்ற அனைத்து வழக்குகளிலும் மத்திய அரசு சொன்னபடி ஆடியதால் விட்டு விட்டார்கள் ,இன்று அவர்கள் சொன்னபடி ஆடாததால் விட்டு விடவில்லை என்று அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது விந்தையான ஒன்று
லாலு வழக்கில் அவரோடு பல மந்திரிகள்,வேறு கட்சிகளை சார்ந்த முன்னால் முதல்வர்களும் அடக்கம்.பைன் குறைவு என்று பொங்கி ஏழும் ரத்தத்தின் ரத்தங்கள் அங்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை என்பதை வசதியாக மறப்பது ஏனோ.எங்கும் யாரும் அநீதி என்று போராடவில்லை.
இதே போல தீர்ப்பு வேறு கட்சிகளின் தலைவர்களின் மீது வந்திருந்து இங்கு யாராவது ஒருவர் அதை அநீதி என்று பேசி இருந்தால் இன்று துடிக்கும் நடுநிலையாளர்களும் ,ரத்தத்தின் ரத்தங்களும் என்ன பேசி இருப்பார்கள் என்பதை நினைத்து பார்த்தால் அவர்களின் நடுநிலை ,நியாய அரசீற்றங்களின் கோவம் கண்ணகியின் கோவத்தை விஞ்சி இருக்கும்

No comments:

Post a Comment