Friday 22 November 2013

எது ஆண்ட சாதி



அதிக எண்ணிகையில் இருக்கும் சாதிகள் ஆண்ட இனம்/சாதி என்று கூறுவது வேடிக்கை. உலகில் எங்குமே அது சாத்தியம் கிடையாது.

 மனைவி,துணைவி,அந்தபுரத்திற்கு வலுக்கட்டாயமாக தூக்கி கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு பிறந்தவர்கள் அனைவரையும் அரச பரம்பரையில் சேர்த்து கொண்டால் கூட உலகில் எங்கும் ஒரு சதவீதத்திற்கு அருகில் கூட வராது.

     ஆனால் இங்கு வன்னியர்கள்,முக்குலத்தோர்,தேவேந்திரர்,நாடார்,ரெட்டியார்,செட்டியார்  என்று எல்லா சாதிகளும் ஆண்ட இனம் என்று சொல்லி கொள்வது வாய் விட்டு சிரிக்க  வேண்டிய வேண்டிய நகைச்சுவை.

    பொய்யான நிரூபிக்கபடாத,சாத்தியமில்லாத கூற்றுக்களை பிடித்து தொங்கி கொண்டு ஆண்ட சாதி என்று மார்தட்டுவதால் விளையும் பயன்கள் ஏதாவது உண்டா ,சாதிவெறியை தூண்டி விட்டு பெரும்கேடுகளை விளைவிப்பதை தவிர

ராஜாக்கள் என்பதே ஒரு தனி ஜாதி

http://www.frontlineonnet.com/fl1812/18121270.htm
நேபாள ராஜா ஒரு பெண்ணை மணப்பதற்காக எதிர்ப்பு வந்ததால் தன் குடும்பத்தினரையே கூண்டோடு அழித்தாரே
அவர் காதலித்த பெண்ணும் ராஜ வம்சம் தான்.ஷிண்டேவாக இருந்து
சிந்தியாவாக மாறிய  வம்சத்தை சேர்ந்த அவர் முன்னோர் யாரோ நாட்டியமாடும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணதிற்கு அவர் தாய் எதிர்ப்பு தெரிவித்தார்.
http://www.telegraph.co.uk/news/worldnews/asia/nepal/1311387/A-row-over-love-that-ended-in-regicide.html
சாதாரண குடும்பத்தில் பிறந்த ரஜப்புத்திரரை திருமணம் செய்த முதல் பெண் வாரிசின் வாரிசுக்கு பட்டம் கட்ட கூடாது என்று ராஜஸ்தான் ராஜாவுக்கு இந்த 21 ஓம் நூற்றாண்டில் வரும் எதிர்ப்பை பாருங்கள்
http://www.business-standard.com/india/news/games-ex-royals-play/435497/

முதல் முதலாக பூட்டான் ராஜா ஒரு சாதாரண பெண்ணை சென்ற ஆண்டு தான் மணந்தார்
http://today.msnbc.msn.com/id/44885097/ns/today-today_news/t/bhutans-dragon-king-marries-his-commoner-bride/
ப்ளூ blooded என்று ராஜாக்கள் ராஜாக்களோடு மட்டும் தான் சம்பந்தம் செய்வார்கள்.சிங்கள ராஜாக்களோ,வேற்று மதத்தை சார்ந்த ராஜாக்களோ அவர்களோடும்
 திருமண உறவு வைத்து கொள்வார்கள்.ஆனால் அதே மொழியை பேசினாலும்,அதே இனமாக,வலங்கை/இடங்கை சாதிகளாக இருந்தாலும் அரச குடும்பத்தை சாராத  சாதாரண மனிதர்களோடு திருமணம் கிடையாது.அவர்களோடு உறவு கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு அரச வம்சத்தில் இடமும் கிடையாது.  .

        சாதாரண குடும்பத்தில் பெண் எடுத்த வாரிசுகளை குறைவாக பார்ப்பார்கள்.அவர்களுக்கு பட்டம் கட்டுவது வெகு அபூர்வம்.அவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்ய மாட்டார்கள்.அலெக்சாண்டர் தளபதியாக வந்த செளுகுஸ் இங்குள்ள ராஜாகளோடு திருமண தொடர்பு ஏற்படுத்தி கொண்டான்.அரச குடும்பத்தில் தூர தேசத்தை சார்ந்த ராஜவம்சதோடு பெண் எடுப்பதும் கொடுப்பதும் இன்றுவரை உண்டு.

  ப்ளூ blooded என்றால் என்ன என்று பார்க்கலாம்.

   சோழர் ,பாண்டியர்,பல்லவர் ,சம்பூவராயர்,தொண்டைமான் ராஜா வீட்டிலும் பெண் எடுப்பார்,கொடுப்பார்,பெண் கொடுக்க மறுத்தால் சண்டை இட்டு வென்று  அவர்களின் அரசகுலத்தில் பிறந்த பெண்களை தன் துணையாக ஆக்கி கொள்வார். இதே போல .
சாலுக்கியரோடும் ,கிருஷ்ணா தேவராயரோடும் ,ஏன் சிந்தியா ராஜாகளோடும் சம்பந்தம் வைத்து கொள்வார்.
ஆனால் அரச குடும்பமல்லாத குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொள்ள மாட்டார். அப்படி பலரை மணந்து கொண்டாலும் அவர்கள் ராணி ஆகவும் மாட்டார்கள்

     ஆண்ட சாதி என்று ஆட்டம்போடும் சிலரின் கூற்றுக்களை ஒரு பேச்சுக்காக சரி என்று எடுத்து கொண்டால் அந்த கூற்றின் அடிப்படையில் அனைத்து இஸ்லாமியர்களும் அக்பரின் பரம்பரை,ஆற்காட்டு நவாபின் பரம்பரை,ஆங்கிலோ இந்தியர்கள் அனைவரும் இங்கிலாந்து அரச பரம்பரை ஆண்ட இனம் என்று கூறி கொள்ளலாம்.

   செட்டி நாட்டரசர் என்று இன்றும் இருக்கிறார்கள்.அதனால் செட்டியார் எல்லாம் ராஜாக்களா
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்,பேஷ்வாக்கள் பிராமணர்கள்.அவரகளின் அதே கோத்திரத்தை கொண்டவர்கள் பல லட்சம் பேர் இன்றும் இந்தியா முழுவதும் உண்டு.அதனால் அத்தனை பிராமணர்களும் ராஜாக்களா

     நாயக்கர் என்று தெலுகு பேசும் மக்களும் நாட்டை ஆண்டார்கள்.நாயக்கர்,நாய்டு ,ரெட்டி எல்லாம் ஒன்றாம் அப்படியானால் இன்னுமொரு இருவது சதவீதம் ஆண்ட பரம்பரை ஆகிறது

    அடிமைகளும் ராஜாவாக,யானை மாலை போட்டு ராஜாவாக ஆனவர்களும் உண்டு.அவர்கள் பிறந்த சாதி அதனால் ஆண்ட பரம்பரை ஆகி விடுமா.

  ஐந்து வருடம்  ஆட்சி செய்ய  மக்கள் காலில் விழுந்து வோட்டு வாங்கி வெற்றி பெற்று  வருபவர்கள் ஆடாத ஆட்டமா.இவர்களே இந்த   இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் என்றால் பிறந்ததிலிருந்தே இளவரசனாக முடிசூட்டப்பட்டவர்கள் ,பல பெண்ணை ஒரே மேடையில் அனைவர் ஆசியுடன் மணந்த,நூற்றுகணக்கில் கண்ணில் பட்ட பெண்ணை எல்லாம்
அந்தபுரத்திற்கு தூக்கி சென்ற காலத்தில் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள்

     அவர்களுக்கு என்றும் சாதி இருந்தது கிடையாது.அடிமையாய் இருந்து அரசு ஆனவனும்,ஆசை நாயகிக்கு மகனாய்  பிறந்து அரசனானவனும் கூட சில தலைமுறையாய் அரசாளும் குடும்பத்தில் தான் பெண் எடுக்க ஆசைபடுவான்.தராவிட்டாலும் போர் தொடுத்தாவது அரச குடும்பத்தில் இருந்து மணந்து கொள்வான்.

      பிராமணர்கள் வகுத்த நீதிகளில்,சத்ரியர்கள் வகுத்த நீதிகளில் கூட தன வர்ணத்திற்கு கீழ் உள்ள பெண்களை மணந்து கொள்ள தடை இருந்தது இல்லை .சாதிக்குள் திருமணம் எனபது அரசருக்கு கிடையாது

      அடிமைகள் பலர் அரசர் ஆகியிருக்கிறார்கள்,ஆசைநாயகர்களும்,ஆசை நாயகிகளுக்கு பிறந்தவர் பலரும் கூட அரசர் ஆகி உள்ளார்கள்.அரசரில் 99 சதவீதம் கொடுங்கோலன் ,பெண்பித்தன் தான்.
பாபரோ,ஜைச்சந்தோ,சாளுக்கியராவ்,குப்தரோ,சோழரோ,பல்லவரோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
அதை ஒரு பெருமையாக இருவத்தி ஓராம் நூற்றாண்டில் கருதுபவர்கள் சிலர் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்
இப்போது எல்லா சாதியில் இருந்தும் ஒன்றிரண்டு மந்திரிகள் இருப்பது போல எல்லா சாதியை சேர்ந்தவர்களில் இருந்தும் ஓரிரு குடும்பங்கள்  ஏதாவது ஒருபகுதிக்கு அரசனாக இருந்திருப்பர்

     ராஜாக்களின் படையில் பல சாதியை சார்ந்த படை வீரர்கள் இருப்பார்கள்.
ஆட்சி போன பின் கூட்டம் சேர்க்க ,தன பின் சிலர் வர முன்னாள் ராஜாக்களின் பல குடும்ப வாரிசுகள் அந்த பகுதியில் இருக்கும் சாதிகளோடு அடையாளம் கட்டி கொள்கிறார்கள்.


     சில காலம் முன்வரை/இன்றும் காட்டில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கும் ராஜாக்கள் உண்டு,அரண்மனைகள் உண்டு.பட்டம் சூடும் விழாக்கள் உண்டு

  வெள்ளைக்காரன் இங்கு ஆட்சியை பிடிக்க அவனுக்கு பெரும் துணையாக இருந்த அவன் இந்தியாவில் முதலில் உருவாக்கிய மெட்ராஸ் ரெஜிமெண்டில் பெருமளவில் சேர்ந்து தங்களை அடிமைகளாக ,கீழ்சாதியாக நடத்திய அன்றைய உயர்சாதிகளுக்கு எதிராக போராடிய சாதிகளை சேர்ந்தவர்கள்,அவனால் பல்வேறு நாடுகளுக்கும் தேயிலை தொட்ட தொழிலாளர்களாக லட்சக்கணக்கில் அனுப்பட்டவர்கள்,திருவான்கொர் ராஜாவின் அரசில் தீண்டாமை கொடுமையை அனுபவித்தவர்கள் இன்று ஆண்ட சாதி என்று கூக்குரல் எழுப்புவது சரியா

 பாரதியார் நடத்திய பத்திரிக்கைகளின் தொகுப்பு என்னிடம் உள்ளது
தென்னாப்ரிக்கவிற்க்கு தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட பல லட்சம் அடிமைகளுள் பாதிக்கு மேற்பட்டோர்  வன்னியர்கள்.அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று வன்னியர் சங்கம் இங்கு உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க போராடுகிறது.அதற்க்கு பாரதியார் ஆதரவு தெரிவித்து அவருடைய இதழில் எழுதி இருக்கிறார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் பல லட்சம் மக்கள் நூற்றாண்டுகளுக்கு முன் வேறு நாடுகளுக்கு அடிமைகளாக சென்ற பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகத்தை ஆண்ட சாதி என்று சொல்வது ஏமாற்று வேலை இல்லையா.

 தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளான நாடர்கள்,ஈழவர்களின் வரலாறு ,அதை எதிர்த்த போராட்டங்கள் நடந்து நூறு வருடம் கூட ஆகவில்லை. 
 உண்மை நிலை இப்படி இருக்க ஆண்ட சாதி என்று சாதி சங்கங்கள் ஆடம் போடுவதை விட பெரிய புரட்டு உண்டா

குறிப்பிட்ட குடும்பம் ராஜா வம்சமாக இருப்பதற்கும் சாதிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.தனி குடும்பங்களின் வரலாற்றுக்கு பின்னே சாதி சங்கங்கள் புகுந்து கொண்டு மக்களை வெறி ஏற்றுவதற்காக   உருவாக்கும் போலி வரலாறுகளை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது வரலாற்று ஆசிரியர்களின் கடமை அல்லவா


      ஒரு நாட்டில் ஒன்றோ இரண்டோ ராஜ குடும்பம் இருந்தால்/சொல்லி கொண்டால் சரி .எல்லாரும்  நாங்கள் ராஜபரம்பரை என்றால் எங்கே போய் முட்டி கொள்வது

Thursday 10 October 2013

சதவீத கணக்குகளும் சங்க பரிவாரமும்

 பள்ளியில் பயின்ற காலத்தில்  என் வீட்டின் அருகில் ஹிந்து முன்னணி ,விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆர் எஸ் எஸ் பொது கூட்டங்கள் அடிக்கடி நடக்கும்.பள்ளி காலத்தில் நான் வி எச் பி மணியனிடம் மகாபாரதம் பற்றி நடந்த போட்டியில் பரிசு கூட பெற்றிருக்கிறேன்

   விஜயகாந்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே சங்க பேச்சாளர்கள் புள்ளி விவரங்களை அடுக்குவார்கள்.
இஸ்லாமியர்கள் இவ்வளவு சதவீதம் அதிகரித்து விட்டார்கள் ,கிருத்துவர்கள் இவ்வளவு சதவீதம்,இப்படியே போனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் ஹிந்துக்கள் அவர்களை விட குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில்,சென்னையில்,இந்தியாவில்
 இருப்பார்கள் என்று பேசும் போது எவ்வளவு துல்லியமாக ஆராய்கிறார்கள் என்ற பிரமிப்பு வரும்

  இன்றும் அதே போல தான் சங்க பரிவாரத்தின் பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் பல கோணங்களில் எல்லா பிரட்சினைகளையும் அலசி ஆராய்கிறார்கள்.அனைத்திலும் மதமாற்ற சதியை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்

எந்த விஷயத்திலும் காரணங்களை அலசி ஆராயும் பரிவாரம்,அதன் தாக்கம் அதிகம் உள்ள பரிசோதனை கூடங்களில் பல லட்சம் பெண் குழந்தைகள் ஏன் குறைகின்றன என்பதை பற்றி ஏதாவது ஆராய்ந்திருக்கிறதா என்று எவ்வளவு தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.
 சில நூறு பெண்கள் வேறு மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் பெரிய இழப்பு என்று கதறும் அறிவுஜீவிகள் ,கருவிலேயே கொல்லப்படும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றி கவலைபடாததர்க்கு காரணம் என்ன
 பெண்கள் எளிதில் மதம் மாறி விடுவார்கள்,லவ் ஜெஹாதில் விழுந்து விடுவார்கள் என்பதால் பலர் அவர்களை கருவிலேயே கொன்று விடுகின்றார்கள் என்றும் கூட ஹிந்டுத்வர்கள் வாதிடலாம்
மற்ற மதங்களோடு ஒப்பிடும் போது/மதமாற்றிகளின்,அவர்களின் கைக்கூலிகளின் தாக்கம் அதிகமாகவும் ஹிந்டுத்வத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடும் போது சங்கம் வலுவாக ஆட்சியை பிடிக்கும் நிலையில்,பல்லாண்டுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் லட்சகணக்கில் பெண் குழந்தைகள் குறைவது ஏன் என்பதை பற்றி சங்கம் என்று ஆராய்ச்சி செய்யும்.

http://www.youngmuslimdigest.com/society/06/2008/census-of-india-reading-between-the-lines/

சங்கத்தில் பெண்களுக்கு இடம் இல்லை என்பதால் பெண்கள் எண்ணிக்கையை பற்றி,பெண் சிசுகொலையை பற்றி சங்கம் கவலைப்படுவது கிடையாதா
 

Wednesday 9 October 2013

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

 பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்

  நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில் சேர்க்க மாட்டார்கள்
  குறைந்தபட்ச மனிதத்தன்மை,வருங்காலத்தை பற்றி கவலைப்படும் யாரும் முதலில் வைக்க வேண்டிய பிரச்சினையை ஒரு பொருட்டே அல்ல என்று என்னும் அளவில் பெரும்பான்மை மக்கள் இருக்க முக்கிய காரணம் மத அடிப்படைவாதமும் அதன் அடிப்படையில் அரசியலில் உருவாகும் முழக்கங்களும்
  பல லட்சம் பெண் சிசுக்களை கருவிலேயே கொலை செய்வதில் முன்னணி வகிக்கும் மாநிலம் தான் நல்லாட்சியின் எடுத்துகாட்டு என்று போர் முழக்கங்கள் உரக்க கொட்ட துவங்கி விட்டன
   பெண் சிசுகொலை பற்றிய கேள்விகளே எழும்பாதவண்ணம் நல்லாட்சி நல்லாட்சி என்ற கூக்குரல்கள் இந்தியா முழுவதும் எழுப்பபடுகின்றது.
    மக்கள் ஆட்சியோ,மன்னர் ஆட்சியோ,சர்வாதிகாரமோ,எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆட்சியின் அடிப்படையான மக்கள் தொகை வளர்ச்சியில்  இயற்கையாக அமையும் பாலியல் சமநிலையை மாற்றும் செயற்கையாக பாலியல் சமமின்மையை உருவாக்கும்  பாலியல்ரீதியான சிசுகொலைகளை தடுப்பதில் இந்தியாவில் கடைசி இடங்களில் உள்ள ஆட்சி நல்லாட்சி என்று புகழப்படுவதில் இருந்தே சங்க பரிவாரங்கள் பெண்களுக்கு தரும் மதிப்பு என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
 Child Population and Decadal Growth by Residence – Persons
censusindia.gov.in/2011-prov-results/.../Gujrat/7-child29-45.pdf - Cached - Similar

 
மிஸ்டர் சந்திரமௌலி சென்சுஸ் குழு தலைவர் என்ன சொல்றார்னா http://www.actionaid.org/...

Only three major States, Gujarat, Bihar and Jammu & Kashmir have shown a decline in the Sex Ratio in Census 2011


 2001 ஒ 2011 ஒ ஆண் பெண் சதவீதத்தில் சில லட்சம் பெண் குழந்தைகள் குறைவதில் என்ன மாற்றமும் இல்லையே
மோசமான ஆட்சிகள் என்று தூற்றப்படும் மாநிலங்களில் கூட இவ்வளவு பெண் குழந்தைகள் குறைவது இல்லையே.அதுவும் மோடிக்கு மிகவும் ஆதரவு இருக்கும் குஜராத் நகர்ப்புறம் கிராமங்களை விட பெண் சிசுக்களை கொல்வதில் இந்தியாவில் முதலிடத்திற்கு மிகவும் அருகில் தான்
 
http://censusindia.gov.in/.../profiles/en/IND024_Gujarat.pdf


 

கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்

            


 உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர்  இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர்


       குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி ஒன்றிய தலைவர் அதனால் பதவி விலக வேண்டிய செய்தியும் மக்கள் ஆட்சியை வெறுத்து சர்வாதிகாரதிர்க்கான பாதையை விரும்புவர்களை தெளிவாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன
     http://indiatoday.intoday.in/story/bjp-councillor-gujarat-forced-to-quit-for-having-third-child/1/313716.html

The 45-year-old businessman, who had defeated former mayor Ashok Dangar in the 2010 municipal polls, quit on Monday, four months after his wife gave birth to a boy. Rishi was born after two daughters -- Charmi (11) and Dhruvi (7).

Dhava reportedly was keen to have a son and he tried to flirt with the law, interpreting it to suit his wish.
பாராளுமன்ற தேர்தல்,சட்டசபை தேர்தல்,மாநகராட்சி தேர்தல்,இடை தேர்தல்,பெரும்பான்மை இல்லாததால் மறுபடியும் பொது தேர்தல் என்று தேர்தல்களுக்கு குறைவு கிடையாது.இதில் எதை கட்டாயம் ஆக்குவது.வோட்டு போடாததால் எத்தனை பேருக்கு தண்டனை வழங்குவது
வெற்றி பெற்றவர் எந்த காரணமும் கூறாமல் ராஜினாமா செய்யும் உரிமை இருக்கிறதா இல்லையா.பல ஆயிரம்/லட்சம் வோட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற ஒருவருக்கு இருக்கும் உரிமை சாதாரண வாக்காளருக்கு கிடையாதா
பிடிக்கவில்லை,காதல் தோல்வி,வயிற்று வலி அல்லது காரணமே இல்லாமல் வெற்றி பெற்றவர் ராஜினாமா செய்யும் உரிமை இருக்கும் போது வோட்டு போடுபவருக்கு குறிப்பிட்ட காரணத்தால் அல்லது காரணமில்லாமலோ வோட்டு போட மாட்டேன் என்ற நிலையை எடுக்க உரிமை கிடையாது என்று எப்படி இருக்க முடியும்
   நான் முற்றும் துறந்த முனிவன்,அனைத்து இச்சைகளையும் தாண்டியவன் என்று கூற/வாழ ஒருவருக்கு உரிமை உண்டா இல்லையா.
அதே போல நான் அரசியலை துறந்த முனிவன்,ஒருமனதாக தேர்வு ஆகாத போட்டி நடக்கும் தேர்தல் அரசியலை வெறுக்கும் ஒருவன் என்றால் அதில் தவறு காண முடியுமா

போட்டி இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் போட்டியில் இருந்து அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவது சட்டப்படி சரியா இல்லையா
அப்படி ஒரு நிலை இருக்கும் தொகுதிகளில்/பஞ்சாயத்துகளில் வோட்டு போட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் எப்படி வோட்டு போடுவார்கள்.ஒருவர் நின்றாலும் அந்த தொகுதியில் அவருக்கும் NOTA பொத்தானிர்க்கும் போட்டி இருக்குமா

  ஒரே மனிதர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் நின்று வெற்றி பெறுகிறார்.ஒன்றை அவர் கட்டாயமாக ராஜினாமா செய்தாக வேண்டும்.
அதற்கு உடனே ஓரிரு மாதங்களுக்குள் இடைதேர்தல் வரும்.

   சட்டசபை உறுப்பினர் மேல்சபை உறுப்பினர் ஆக சட்டம் வழி வகுக்கிறது.மேற்கு வங்கத்தில் ஒரு எம் எல் ஏ அரசு வேலை கிடைத்து விட்டதால் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது.
தனி கட்சி துவங்க முடிவு செய்து பதவியை ராஜினாமா செய்கிறார்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது
தலைவரின் குறிப்பிட்ட நடவடிக்கை பிடிக்காமல்,அல்லது மந்திரி பதவி தரவில்லை என்று ராஜினாமா செய்கிறார். அதையும் சட்டம் அனுமதிக்கிறது.

 வெற்றி பெற்றவருக்கு ராஜினாமா செய்யும் உரிமை மட்டுமல்லாமல்,அரசியல் அமைப்பின் கீழ் குற்றங்கள் என்று வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றால் பதவி நீக்கம் செய்வதையும் சட்டம் அனுமதிக்கிறது.
இது மட்டும் அல்லாமல் சில சர்வாதிகாரிகள்,சர்வாதிகார இயக்கங்கள்,பிறக்கும் குழந்தைகளை வைத்தும் வெற்றி பெற்றவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டங்களை இயற்றி இருக்கிறார்கள்.
   

       பிடிக்காத தீர்மானங்கள் வரும் போது வோட்டு போடாமல் வெளிநடப்பு செய்யலாம்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது
பல ஆயிரம் மக்களின் வோட்டுக்களை பெற்று வெற்றி பெற்று ஒரு பொறுப்பான பதவியில் அமர்ந்தவருக்கு ஆயிரம் உரிமைகள் இருக்கிறது.அவர் விருப்பபடி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
வாக்காளனுக்கு இருக்கும் ஒரே உரிமை யாருக்கு வோட்டு போடுவது,அல்லது வோட்டு போட மாட்டேன் என்று முடிவு எடுப்பது.அந்த உரிமையை பிடுங்க நினைப்பது சரியா
வோட்டு போடாதவர்களை தேர்தல் ஆணையம் தேடி சென்று ஏன் வோட்டு போடவில்லை என்று கேட்டு அதை கணக்கில் எடுத்து கொள்ளட்டும்.மாறாக தனி மனிதன் கட்டாயமாக வாக்கு சாவடிக்கு சென்று ஏதாவது ஒரு பொத்தானை அழுத்தி தான் தீர வேண்டும் எனபது சர்வாதிகாரம் மக்கள் ஆட்சி அல்ல

 கட்டாய வாக்கு பதிவு என்பதை கல்லூரி தேர்தல்கள்,அரசு அலுவலக ஊழியர் சங்கங்களில் கூட நடைமுறைபடுத்த முடியாது.
இந்த அழகில் பல கோடி மக்களை கட்டாயபடுத்த முடியும் என்ற நம்பிக்கை/வெறி  சிலருக்கு,சில இயக்கங்களுக்கு  இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று அல்ல   நாம் மிகவும் பயங்கொள்ள வேண்டிய நிகழ்வு 
ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உணவு உட்கொள்வேன்,மருந்து எடுத்து கொள்ள மாட்டேன்,பால் குடிக்க மாட்டேன், .திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.மேலாடை அணிய மாட்டேன் எனபது போல வோட்டு போட மாட்டேன் என்பதும் தனி மனிதரின் அடிப்படை உரிமை

  இந்த உரிமையை பறிக்க நினைப்பது,பல ஆயிரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மூன்றாவது குழந்தை பெற்று கொண்டார் என்று பதவி நீக்கம் செய்வது போன்றவை சர்வாதிகாரத்தை நோக்கி நம்மை அழைத்து செல்ல நடக்கும் முயற்சிகள்.இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் வருங்காலத்தில் மக்கள் ஆட்சியை மீட்க   நாம் கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகமாக இருக்கும் 
 
 

Thursday 3 October 2013

மோதியை ஏன் முஸ்லிம்கள் புகழ வேண்டும்

    நாம் ஐந்து நமக்கு இருபத்தியிந்து என்ற முஸ்லிம்களை உயர்த்தும் தத்துவங்களை தேர்தல் நேரத்தில் உருவாக்கி மத நல்லிணக்கத்தை வளர்த்தவரை புகழ்வதில் தவறுண்டோ

      சியாவோ சுன்னியோ போராவோ அஹ்மேடியாவோ ஒருவருக்கு கூட அவர் ஆட்சியில் MLA சீட்,மந்திரி பதவி தராமல்(முஸ்லிம்கள் குஜராத்தில் ஒன்பது சதவீதம்)அனைவரையும் ஒன்றாக நடத்துவதில்,நடத்தியதில் இருந்தே அவர் மேன்மையை அறிந்து வாழ்த்துவது மிக சரி.

        எடியுரப்ப ஒரு முஸ்லிம் கூட பா ஜ கா நிறுத்தி வைக்கவில்லை என்றாலும் ஒருவரை மந்திரியாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆக்கவும் செய்தாரே அவரை போன்ற போலி இந்திதுவவியாதியாக இல்லாமல் உண்மையான இந்திதுவவியாதியாக இருக்கும் மோடியின் புகழை ஸஃபர் ஸரேஷ்வாலா பாடுவது பெருமையாக உள்ளது.

மத்திய அரசாங்கம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கும் உதவி தொகையை வழங்க மாட்டேன் என்று கொள்கையாக ஆள்வதே அவரின் சிறுபான்மை முன்னேற்றத்திற்கான சான்று அல்லவா

2007 தேர்தலில் குசெர் பி-சொரபுட்டின் போலி என்சௌண்டேர் (குசர் பி கணவனோடு சேர்த்து கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டவர்)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சொராபுட்தீனை என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொது கூட்டத்திலும் கேட்டு கொலை கொலை என்ற கூச்சல்களுக்கு அதை தான் செய்தோம் என்று பெருமிதமாக பேசியவர் அல்லவா மோடி .

சொராபுட்தினோடு அவர் மனைவியை கடத்தி,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்ற மோடியை கடவுளாக வழிபட்ட காவல்துறையினரை பாராட்டிய மோடியை இஸ்லாமியர்கள் பாராட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அப்பாவி பெண்ணாக இருந்தாலும் கணவன் சந்தேகத்துக்குரிய குற்றவாளியாக இருந்தால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,அந்த வன்செயல்களை புகழ்ந்து வோட்டு வாங்கி வெற்றி பெற முடியும் என்று காட்டியவரை இஸ்லாமியர் மட்டுமல்ல அகில உலகமும் அல்லவா போற்றும்,போற்ற வேண்டும்

       டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நாடே பொங்கிய(நிர்பயா வழக்கு ) பெண்ணின் ஆண் நண்பர்  சந்தேகத்துக்குரிய தீவிரவாதியாகவோ ,அல்லது முன்னாள் குற்றவாளியாகவோ அல்லது இஸ்லாமிய பெயர் கொண்டவாரகவோ இல்லாமல் போனார்.
அப்படி இருந்து இருந்தால் குசெர் பி பாலியல் வன்முறை/கொலை வழக்கு பற்றிய கேள்விகளுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் மாநிலம் முழுவதும் பொது கூட்டம் போட்டு நியாயபடுத்திய மோடி போல நிர்பயாவிர்க்கு ஏற்பட்ட கொடுரம் தேவையான ஒன்று,தீவிரவாதத்திற்கு எதிரான ஒன்று, தீவிரவாதிக்கு,அவர் தோழிக்கு கிடைத்த சரியான தண்டனை என்று மோடி ஆதரவாளர்கள் குதித்திருப்பார்கள்.

 அப்படி இருந்திருந்தால் வன்செயலில் ஈடுபட்டவர்கள் ,அதற்க்கு உத்தரவிட்டவர்கள் மந்திரிகளாக ,மற்ற மாநில பொறுப்பாளர்களாக  மோடியின் கருணையால் பொறுப்பேற்று கொண்டு இருப்பார்கள்.அப்படிப்பட்ட கருநாமூர்த்தியை மக்கள் புகழ்வதில்,பார்த்து பூரிப்படைவதில் ஆச்சரியம் எது
 
     ஒரு அப்பாவி பெண் கடத்தப்பட்டு,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையை கிண்டல் செய்தவர்.தகுந்த தண்டனை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் கொண்டவர் மேல் பாராட்டுக்கள் பல தரப்பிலிருந்தும் வந்து குவிவதில் ஆச்சரியம் ஏது

Friday 27 September 2013

பிரதமர் பதவி என்ன கல்கி அவதாரமா



   மது கோடா,தேவ கௌடா போல யார் வேண்டுமானாலும் தேர்தலில் வெற்றி பெற்ற எம் பி க்கள் ஆதரவு இருந்தால்  பிரதமர் ஆகலாம்.
    ஒரு தனி மனிதர் குறிப்பிட்ட பதவியில் அதுவும் நேரடி தேர்தல் இல்லாத முறையில் வெற்றி பெற்ற எம் பி க்கள்/கட்சிகளின் ஆதரவில் பிரதமர் ஆனால் பல வியத்தக்க மாற்றங்களை புரிவார் என்ற சாத்தியங்கள் இல்லாத நம்பிக்கை எப்படி உருவானது /ஏன் உருவாக்கபடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை
   அமெரிக்க ஈராக் யுத்தத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்க வாஜ்பாய் தலைமையிலான அரசு முடிவு செய்து பின் பாராளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பால் பின்வாங்கியது
   நானூறு எம் பி க்கள் இருந்தாலும்,மக்களிடம் செய்திகளை இன்றுபோல உடனே கொண்டு செல்லும் வசதிகள் இல்லாத நிலை நிலவிய காலத்தில்/ நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசின் முடிவுகளுக்கு ஒத்து ஊத்தி கொண்டு இருந்த காலங்களில்/,கட்சியில் ஒரு கேள்வி எதிராக கேட்க்கும் கேட்க்கும் நிலையில் கூட யாரும் இல்லாத நிலையில் இருந்த ராஜீவ் கூட மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட முடியவில்லை.மக்களுக்கு நேரடியாக பலன் தர கூடிய அரசுகள் மாநில அரசுகள் தான்
    குறிப்பிட்ட தனி மனிதர் பிரதமர் ஆனால் காவேரி பிரட்சினையில் ஞாயம் கிடைக்கும் ,அனைத்து மாநிலங்களும் சமமாக நியாயமான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எப்படி  வருகிறது

    காவேரிக்கு சென்று விட்டோம்,ஹோகேநேக்கள் குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராடிய எடியுரப்பா அன்றைய நிலையில் பா ஜ க வின் முதலவர் வேட்பாளர்.பிரதமர் தன்கட்சியின் முதலவர்களை ,மாநில தலைவர்களை மிரட்டி தமிழகத்திற்கு ஞாயம் கிடைக்க செய்ய முடியும் என்ற நம்பிக்கை எந்த அடிப்படையில் வருகிறது.
   உச்ச நீதிமன்றத்தின்  வாக்கு பதிவு செய்யும் போது இருக்க வேண்டிய none of the above தீர்ப்பு ஞானி அவர்களின் கட்டுரையில் உள்ள பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன்னிறுத்தப்படுவது தவறு என்பதை நிரூபிக்கும் தீர்ப்பு என்றும் கூறலாம்.

நம் தேர்தல் ம
ுறை நேரிடை தேர்தல் முறை கிடையாது.நாம் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள்.எம் பி க்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமை அது.
மக்கள் போடும் none of the above குறிப்பிட்ட தொகுதியை சார்ந்த வேட்பாளர்களை எதிர்த்தா ,இல்லை பிரதமராக முன்னிருதப்படுபவரை/படுபவர்களை எதிர்த்தா என்பதை புரிந்து கொண்டால்,பிரதமர் வேட்பாளர் என்று முன் நிறுத்தப்படுவது சட்டப்படி தவறு எனபது புரியும்

மோடி எனக்கு வேண்டாம் என்று none of the above என்ற பொத்தானிற்கு விழும் வோட்டுக்களை எடுத்து கொள்ள முடியுமா.அப்படி எடுத்து கொள்வது சரி என்றால் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன் நிறுத்துவதை நம் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது என்று கூறலாம்.எதிராகவோ ,ஆதரவாகவோ விழும் வோட்டுக்கள் குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


 இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள அரசு நிறுவனங்களில் தொழிற்சங்க தேர்தல்களில் அந்தந்த பகுதிகளுக்கான உறுப்பினர்களை வாக்குசீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கும் உரிமை பணியாளர்களுக்கு உண்டு.அப்படி இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்வார்கள்.இதே தான் நம் நாட்டின் சட்ட அமைப்பின் கீழ் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையும்
பிரதமர் மீது திடீரென்று அவர் கட்சிக்காரர்களே கூட அதிருப்தி கொண்டு அவரை நீக்கி விட்டு இன்னொருவரை பிரதமராக பதவியில் அமர்த்தலாம்.மக்களிடம் என்னை பிரதமர் என்று சொல்லி வோட்டு கேட்டீர்கள்.அதனால் நீங்கள் என்னை நீக்க முடியாது,கட்சியை உடைக்க முடியாது,வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க முடியாது என்று யாரும் கூற முடியாது.

தன தொகுதியை சார்ந்த வேட்பாளரை வேண்டாம் என்று சொல்லும் உரிமையை வழங்கி இருப்பதன் மூலம் வாக்காளனின் உரிமை தன் தொகுதி எம் பி யை தேர்ந்தெடுப்பது மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக தீர்ப்பளித்துள்ளது.

நம்முடைய எம் பி க்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு 6 மாதத்திற்கு ஒருவரை,அல்லது பத்து நாட்களுக்கு ஒருவரை பிரதமர் ஆக்குவதையும் சட்டம் அனுமதிக்கிறது.
நாம் வோட்டு போட்டு அதனால் தேர்ந்தேடுக்கபட்ட எம் பி பதவியை ராஜினாமா செய்து விட்டால்,அல்லது சமீபத்திய தீர்புகளின்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ,மரணமடைந்தால் மறு தேர்தல் தான் ஒரே வழி.அது தான் நம் அரசியல் அமைப்பு.
ஆனால் பிரதமர் ராஜினாமா செய்தால் மறு தேர்தலா,அல்லது மற்றொருவரை எம் பி க்கள் பிரதமர் ஆக்குவார்களா

 
எம் பி பதவி ஆளுமை வாய்ந்தது.அவர்களின் உரிமை பிரதமரை தேர்ந்தெடுப்பது.மக்களுக்கு உள்ள உரிமை தங்கள் தொகுதி எம் பி யை தேர்ந்தெடுப்பது மட்டும் தான் என்பதை வலியுறுத்தும் இந்த தீர்ப்பு பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது சட்ட விரோதம் என்பதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது என்றும் எடுத்து கொள்ளலாம்.

Thursday 19 September 2013

மக்களின் வோட்டிற்கு பரிவாரங்கள் தரும் மதிப்பு


  பா ஜ க பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சிக்கு  வந்த மாநிலங்களின் அழகை பார்ப்போமா
 உத்தர்ப்ரதேசம்- இந்தியாவிலயே அதிக மக்கள் தொகையை,எம் பி,எம் எல் ஏ  இடங்களை கொண்ட மாநிலம்.
 அங்கு ஆட்சி செய்த ஐந்து ,6 ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள்.மக்களின் முன் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட கல்யான் சிங்,ஹிந்துத்வாவின் மூன்றாவது தூண் நிலையில் இருந்தவர் தூக்கப்பட்டு குப்தா மற்றும் ராஜ்நாத்  சிங் முதல்வர் ஆனார்கள்.
  ஹிந்துத்வாவின் பரிசோதனை கூடமான குஜராத்தில் அவர்களின் பெரும்சாதனையான 2002 குஜராத் கலவரங்கள் நடைபெறுவதற்கு முன் musical  chair ஆடிய முதல்வர்கள் கேசுபாய்,சுரேஷ் மேஹ்தா ,வகேலா (ஆர் எஸ் எஸ் இல் பல ஆண்டு காலம் பயிற்சி பெற்றாலும் மோடியின் குழிபறிக்கும் வேலைகள் பொறுக்காமல் கட்சியையே உடைத்து கட்சி எம் எல் ஏக்களின் துணை கொண்டு முதல்வர் ஆனவர்).கலவரம் மோடியின் பெருமையை பரிவாரங்களுக்கு உணர்த்தியதால் அவரை தவிர மற்ற அனைவரையும் பரிவாரம் கை கழுவி  விட்டது.ஆனால் மோடி முதல்வர் ஆனா கதையை விட  மஞ்சள் கமெண்டுக்கு பொருத்தமான எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது
 டெல்லியில் ஒரு முறை தான் ஆட்சியில் இருந்தார்கள்.அங்கு மக்கள் முன் முதல்வர் வேட்பாளராக முன் நிருதப்படுபவர் குரானா.ஆனால் musical ஷேர் பா ஜ கா வின் /பரிவாரத்தின் முக்கிய விளையாட்டு ஆயிற்றே -5 வருடத்தில் மூன்று முதல்வ்ர்கள்-குரானா ,சாஹீப் சிங் வர்மா மற்றும் பெரும்பான்மை பலம் பெற்ற எதிர்க்கட்சி தலைவியாக பதவி வகித்தவர் பிரதமர் ஆனால் மொட்டை அடித்து கொண்டு விதவைகள் போல பதியசாப்பாடு சாப்பிட்டு கொண்டு வாழ்வேன் என்று சூளுரைத்த சுஷ்மா.
 மத்ய பிரதேசம்-பெரும் வெற்றி பெற முக்கிய காரணம் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட உமா பாரதி,ஆனால் சில மாதங்களுக்குள் musical chair ஆரம்பித்து உமா போய gaur  வந்தார் டும் டும் டும் .கௌர் போய சௌவான் வந்தார் டும் டும் டும் தான்.
 உமா பாரதி கட்சியை விட்டு பிரிந்து தனி கட்சி துவங்கி வெற்றி பெற்று விடுவாரோ என்ற பயத்தால் சௌவான் musical  chair ஆட்டத்தில் இருந்து இதுவரை தப்பித்து விட்டார்.ஆனால் அவர் மோடியை எதிர்த்த பாண்டாவின் கதியை பார்த்து விட்டு ரொம்ப உஷாராக இருப்பது அவருக்கு உதவுகிறது.
 உத்தர்கந்த் மாநிலம்-அங்கு பிரிந்த பிறகு கட்சியினரால்,மக்களால் முதலவர் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கொஷியாரி ஆகவில்லை.நித்யானந்த் சுவாமி முதலவர் ஆனார். ஆனால் தேர்தலில் அவரை வைத்து வெற்றி பெற முடியாது என்பதால் 6 மாதத்திற்கு முதலவர் ஆக்கப்பட்டார்.
 அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி  பெற்றது..அதற்க்கு அடுத்த தேர்தலில் யாரையும் முன் நிறுத்தவில்லை.அங்குள்ள சாதி போட்டி தான் அதற்க்கு காரணம்.பா ஜ க வெற்றி பெற்ற பிறகு ஜெனரல் கந்தூரி முதலவர் ஆனார். துவங்கியது MUSICAL CHAIR .கந்தூரி போய் போக்ரியால் வந்தார் டும் டும் டும் ,போக்ரியால் போய் மறுபடியும் கந்தூரி வந்தார் டும் டும் டும்
 எதுக்காக அவரை தூக்கினார்கள்,எதற்காக மறுபடியும் அவரை தேர்தலுக்கு முன் முதல்வர் ஆக்கினார்கள் எனபது மக்களுக்கு தெரியாத ஆனால் பரிவாரத்தை யக்கும் சக்திகளுக்கு தான் வெளிச்சம்.
ஜார்க்ஹாந்து மாநிலம்- மக்களிடம் காட்டிய முகம் பாபுலால் மாரண்டி.ஆனால் பரிவாரத்திற்கு கலவரம் எதுவும் நடத்தி சாதிக்காத முதலவர் என்றால் அரிக்க ஆரம்பித்து விடுமே
 அதனால் அவரை தூக்கி விட்டு கரிய முண்டா

ராஜஸ்தானில் வசுன்டரே ராஜே கட்சியை விட்டே சென்று விடுவேன் என்று மிரட்டும் நிலையும் பரிவாரங்களின் கைங்கரியத்தால் நடந்தது.அவரை விளக்கி விட்டு ஆர் எஸ் எஸ் இல் ஊறிய ஒருவரை தலைவர் ஆக்கியதும் நடந்தது
அவர்கள் கை வைக்காத  ஒரே மாநிலம் சத்தீஸ்கர் தான்.
ஆனால் சத்தீஸ்கரிலும் அவர்  முதல்வரான 2003 தேர்தலில்  மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் என்பதாலும்,காங்கிரஸில் அஜீத் ஜோகி முதலவர் ஆக இருந்த காரணத்தினாலும் யாரையும் முதல்வராக முன் நிறுத்தவில்லை  முதல்வர் ராமன் சிங் நாட்டு வைத்தியர் என்பதால் அவர் மீது கை வைக்கவில்லை போல.

மக்களின் வோட்டுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கும் கட்சி நம்ம பா ஜ க

நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி   பிரதமர் ஆகிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று   நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது  பிரதமர் ஆனால்  அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
 அது  போல முதல்வர் ஆனவர் தான் மோடியும்.திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர் ஏதாவது அதை எதிர்த்து சொல்ல முடியுமா

 பரிவாரத்தின் தாதாக்களான நாக்பூர் தாத்தாக்களுக்கு இரண்டு நாள் கக்கா வரவில்லை என்றால் அதற்க்கான காரணத்தை  கண்டுபிடிக்க சோழி போட்டு பார்ப்பார்கள்.
 அதில் யாரவது மாநில முதலவர்,கட்சி தலைவரின் மச்சானின் சகலையின் பேரன் ஜின்னா என்ற பெயருடையவருக்கு facebook  இல் friend request அனுப்பி இருப்பது தெரிந்தால்,
  ஏதாவது மாநில முதல்வரின் மனைவியின் பெரியப்பா மகளின் வீட்டில் இயேசுவின் புகைப்படம் இருப்பது தெரிந்தால் உடனே அந்த முதல்வரை பதவி விலக வைத்து விடுவார்கள்.இது தான் அவர்கள் மக்கள் முன் தலைவராக காட்டும் முகத்திற்கு,மக்களின் வோட்டுக்களுக்கு தரும் மதிப்பு.

மோடீ எனக்கு ஒரு டௌட்டூ

 
          மோடி பக்தர்கள் மோடி பல சாதனைகள் புரிந்தார் என்று பல ஆண்டுகளாக கூவி வருகிறார்கள்.
கரகாட்டக்காரனில் செந்திலும் கோவை சரளாவும் ஆடுவதை ஒருவர் கௌண்ட மணி காதுபட ஒருவர் புகழ்வாரே அதே போல தான் இந்த மோடி பக்தர்கள் அவரை பற்றி புகழ்வதும்

       அவர் சூப்பர் man மாதிரி உத்தர்கண்ட் நிலசரிவு,மழைப்பெருக்கு நிகழ்வில் பல ஆயிரம் குஜராத்திகளை ஒரே நாளில் காப்பாற்றிய சாதனையை சிலர் எப்படி என்று கேட்டதும் துண்டை காணோம்,துணிய காணோம் என்று ஓடிய கூட்டம் மற்ற விஷயங்களில் கேட்டாலும் அப்படி தான் ஓடும்


      குஜராத் 2002 கலவரங்களை விட்டு விடுவோம்




     அண்ணே எனக்கு ஒரு டௌட்டு

மக்கள் ஆதரவு,கட்சி ஆதரவு   இருப்பவர் தான் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தனும்னு நம்ம ஆளுங்களே விட்டு தூண்டி விட்டு பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க இவ்வளோ டகால்டி வேலை பண்ணீங்களே
   நீங்க முதல்வர் ஆனது எப்படின்னே
  நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி அண்ணே நீங்கள்  பிரதமர் ஆகிறீர்கள்  என்று வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று நீங்க  நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது  பிரதமர் ஆனா அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
 அது  போல முதல்வர் ஆனவர் தானே அண்ணே நீங்க
மக்கள் ஆட்சியை சிறிதும் மதிக்காத ஒரு கூட்டத்தின் முடிவால் நேரடியாக பதவியில் உட்காரவைக்கப்பட்டவர்  கட்சிக்காரகளின்,வெற்றி பெற்ற எம் எள் ஏக்களின்,மக்களின் நின் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்று முதலவர் ஆன கேசுபாய் படேலுக்கு குழிபறித்து விட்டு முதல்வர் ஆனவர் ஆச்சே நீங்க
பல்கலைகழகத்தில் அடிப்படை தகுதி கூட இல்லாமல் நேரடியாக ஒரு துறையின் தலைவராக பல்கலைகழகத்தை தன இரும்பு பிடியில் வைத்திருந்த மனிதர்,மறைமுக குழுவின் தயவால் துறை தலைவரானவர் போல முதல்வர் ஆனவர் தானே நீங்க
  அதே போல உங்களை நீக்கி  விட்டு .சுரேஷ் சோனியை ஆக்கினால் நீங்கள் என்ன பண்ணுவீங்க அண்ணே



  
      ஆண் பெண் சதவீதத்தில் குஜராத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை உங்களின்  12 ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டீங்களா அண்ணே
   the state TN ruled by useless corrupt leaders performed very poorly and moved from 987 to 995

http://www.mapsofindia.com/census2011/female-sex-ratio.html


  ஆனா உங்க நல்லாட்சியில gujarat  which had a golden rule between 2001 and 2011 and a role model for others has performed outstandingly by reaching 918 from the 920 in 2001
  \
  எப்புடீன்னே இப்படி.உங்களால மட்டும் எப்படின்னே இவ்வளோ சாதனை புரிய முடியுது 


  மத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றிடிங்களா  அண்ணே 

  முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் சும்மா பிச்சு உதறநீங்க.ராணுவத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையில் பல ஆயிரம் பற்றாக்குறை.அதை நீக்குவேன்.அதை களைய பாடுபடுவேன்.வலுவான தலைமை இருந்தால் அதை உடனே களைய முடியும் என்று.

  ஆனா 12 ஆண்டு ஆட்சியில இப்ப இருக்குற பற்றாக்குறை ஆளுங்கல்ல நூத்துல ஒருத்தர் கூட குஜராத்தை சேர்ந்தவங்களா இல்லையே அண்ணே.12 ஆண்டு ஆட்சி செய்ததுல என்னா கிழிச்சீங்க,இந்தியாவிலேயே பெரிய மாநிலங்களில் இருந்து மிக குறைவான ஆட்கள் ராணுவத்தில்,மத்திய அரசு பணிகளில் சேருவது குஜராத்தில் இருந்து தான் என்ற பெருமையை தக்க வெச்சுட்டு தானே இருக்கிறீர்கள் என்று கேட்டா என்ன சொல்லுவீங்க அண்ணே   



  இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டீங்களா அண்ணே   (நம்ம சகோதரி ஆட்சி செய்கிற ஊழல் தமிழகத்திற்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கீங்களா அண்ணே  )



  ஏன்னா செய்வேன் பார்.ஒலிம்பிசில் நூறு தங்கம்,நானூறு வெள்ளி வாங்கும் நிலைக்கு இந்தியா செல்ல வலிமையான தலைமை வேண்டும் என்று பேச்சுல அனல் பறக்குது
 ஆனா விளையாட்டு துறையில் குஜராத்திகள் உங்க  ஆட்சியில் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா அண்ணே (தமாதூண்டு மாநிலம் மணிபூர்
தேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி )



 

மருத்துவர்,செவிலியர் ,பொறியாளர்,ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் அதற்க்கு அடுத்த மாநிலங்களை நம்பி இருக்கும் நிலையில் இருந்து குஜராத் நம்ம 12 ஆண்டு பொற்கால வலிமையான ஆட்சியில் மாறி விட்டதா அண்ணே


பிரசவத்தின் போது தாய் இறப்பு ,ஒரு வயதுக்கு முன் குழந்தைகள் இறப்பு போன்றவற்றில் கேரளம்,தமிழகத்தின் அருகிலாவது  குஜராத் வந்து விட்டதா அண்ணே


  https://www.facebook.com/#!/photo.php?fbid=10151874077804828&set=a.497812629827.278402.722399827&type=1&theater&notif_t=comment_mention
 
ஊழல் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிக்கிறார்கள் ,வேலை வாய்ப்பில் 1989 முதல் 30 சதவீதம் இருப்பதால் அதிக அளவில் இருக்கிறார்கள்,ஆண்களை விட பெண்கள் மருத்துவ மேற்படிப்பில் அதிக இடம் சேரும் நிலை என்று எல்லாம் பெருமை பீற்றி கொள்கிறார்கள்.நம்ம குஜராத்தில் பெண்கள் ஒரு இருவது சதவீத இடங்களையாவது பிடிக்கும் நிலை இருக்கிறதா அண்ணே 


   நம்ம ஆளுங்க பல வருஷமா அடிச்சு விட்ட பொய்யில ஒன்னு.உலக வங்கியில நாம் போட்ட பணம்.இந்த பொய்யை கூச்சமில்லாம பல வருஷமா சொல்றதுக்கு எப்படி அண்ணே பல ஆயிரம் பேரை தயார் செய்தீங்க 

 
சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த செய்தி SMS /ஈமெயில் /ப்ளாக் /அனைத்து விதமான மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் மோடி ஆதரவாளர்களால் பல முறை பல லட்சம் பேருக்கு பரப்பட்டது
http://sudhanganin.blogspot.in/2011/03/blog-post_28.html
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது.
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது. இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்..
பத்து வருடத்திற்கு முன்பு குஜராத அரசு உலகவங்கியில் வாங்கிய கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.(ஆ.ராசா மதிப்பை விட கொஞ்சம் குறைவுதான் !)
இன்று..
கடனை திருப்பி செலுத்திவிட்டது. இப்போது அந்த அரசின் கையிருப்பது தொகை 1 லட்சம் கோடிகள்.
ஹி ஹி ஹி உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போமா
http://www.indiatvnews.com/business/india/modi-s-gujarat-bears-the-third-highest-debt-burden-after-bengal–5216.html
Chief Minister Narendra Modi’s Gujarat government bears the third highest burden after West Bengal and Uttar Pradesh, says a media report.
While Gujarat’s actual debt was Rs 1,38,978 cr as on March 2012 and is projected to touch Rs 1.76 lakh crore in 2013-14, it is preceded by only two other states: West Bengal (Rs 1.92 lakh crore) and Uttar Pradesh (Rs 1.58 lakh crore), says the report


மது விலக்கு என்று குஜராத்தில் நீங்க அடிக்கிற கூத்தை இன்னும் எப்படி அண்ணே  இந்த உலகம் நம்புது.என்னமோ போங்க அண்ணே.உங்களுக்கு மச்சம்னா மச்சம்
http://www.indianexpress.com/news/gujarat-eases-liquor-norms-tourists-to-get-permit-on-arrival-at-airport/1122093/0

மது விலக்கு  மோசடி
பணம் இருப்பவன் மருத்துவ சான்றிதழ் வாங்கி பெர்மிட் வாங்கி குடிக்கலாம்
அண்டை மாநிலங்களின் அருகில் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள் அங்கு சென்று குடித்து விட்டு வரலாம்,ஊர் சுற்ற வருபவர்கள் குடிக்கலாம், அதற்காக விடுதிகளில் சாராயம் வைத்து இருக்கலாம்.
ஏழைகளுக்கு மட்டும் தான் குடிப்பது சிரமம் அவர்களுக்கு ஒரே வழி கள்ளசாராயம்.இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் கள்ள சாராயதினால் இறப்புகள்,கண்பார்வை போகுதல் அதிக அளவில் நடைபெற்ற மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.
கள்ள சாராய சாவுகள் மிக அதிகம் என்பதால் நம்ம
 சங்க பரிவாரங்களின் வழக்கமான நாட்டாமை தீர்ப்பான மரண தண்டனை சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் கொண்டு வந்தீங்க .கொலை செய்றது நம்ம பரிவாரத்துக்கு சாப்பாடு மாதிரி.எவனையாவது வெட்டு,தூக்குல போடு என்று சொல்லலைனா நம்ம பரிவாரங்களுக்கு சோறு எறங்காதே


      கொள்கை ரீதியாக நாங்கள் மதுவை எங்கள் மண்ணில் ,எப்படி முட்டையை கூட ரயிலில் விடவில்லையோ அது போல அனுமதிக்க மாட்டோம் என்று சிலர் வாதிடுவதை பார்க்கும் பொது சிப்பு சிப்பா வருது.எப்படி மூளை சலவை செய்திருக்குது பாருங்க அண்ணே நம்ம பரிவாரம்

    .ஊர் சுற்ற வருபவனுக்கு சாராயம் குடிக்க/வாங்க பெர்மிட் வாங்க அரசாங்கம் குஜராத்திற்குள் வரும் போதே இரத்தின கம்பளம் விரித்து பெர்மிட் வழங்குகிறது.அதிக பணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகளில் சாராயம் தண்ணீராக ஓடலாம்.இந்த அழகில் மது விலக்கு எங்கள் உயிர்மூச்சு என்று நம்ம ஆளுங்க பெருமை பாடுறது,அதை பார்த்து பலரும் ஆஹா ஆஹா என்று புளகாங்கிதம் அடைவது என்னமோ போங்க அண்ணே
  
  உங்க சக்தியே சக்தி

    

  
   

Friday 13 September 2013

மானமாவது மயிராவது உயிரே பெரிது



    பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது.கடும் தண்டனை வழங்கப்படும்  நாடுகளில்  பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் பெண்கள் தைரியமாக பல்வேறு வேலைகளில் பணிபுரிவதையும் ,விருப்பத்திற்கேற்ப வாழும் நிலையை கண்கூடாக பார்க்கும் போது இந்த வாதத்தின் அர்த்தமற்ற தன்மை தெளிவாக தெரிகிறது.

   டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் கொடூரத்தால் தன உயிரையும் இழந்த பெண்ணின் உடன் இருந்த தோழர் வெளிநோயாளியாக தான் வைத்தியம் பார்க்கப்பட்டார்.அவருக்கு காயங்கள் வெகு குறைவு.இதே போல மக்களின் கவனத்தை  ஈர்த்த மும்பையில் நடந்த பாலியல் வன்முறையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண் சில நாட்களுக்குள் முற்றிலும் குணம் அடைந்து மறுபடியும் வேலைக்கு திரும்பி உள்ளார்.அவரை வன்முறைக்கு உட்படுத்திய குற்றவாளிகள் அதே இடத்தில பலரை வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்திகள் வர துவங்கியுள்ளன
  டெல்லியில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் குற்றவாளிகளின்  பாலியல் இச்சைகளுக்கு/விருப்பத்திற்கு எதிராக தீவிரமாக போராடியதால் தான் உயிரை இழக்கும் அளவிற்கு வன்முறைக்கு ஆளாகி  இருக்கிறார்.
  இதற்கு முன் அந்த கும்பல் ஒரு ஆணை பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி இருக்கிறது.நம்மில் 100இல் 99 பேர் உயிருக்கு பயந்து இருப்பதை எல்லாம் கொடுத்து விட தயங்க மாட்டோம்.ஒட்டு துணி  கூட விடாமல் அனைத்தையும் பிடுங்கி கொண்டாலும் உயிர் பிழைத்ததே மகிழ்ச்சி என்று ஓடி வந்து விடுவோம்.
   காவல்காரர் நண்பர்களோடு இருக்குமிடத்தில் போதை மருந்து விற்கபடுகிறது,rave  பார்ட்டி நடக்கிறது என்ற சந்தேகத்தில் கைது செய்து சந்தேக வழக்கில் கூட்டி சென்று காவல் நிலையத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து கேள்வி கேட்டாலும் ,அடித்து உதைத்தாலும் விட்டு விட்டால் மகிழ்ச்சி தான்.அதனால் மாறாத ரணம் எனபது ஆண்களுக்கு கிடையாது.
  பல லட்சக்கணக்கான ஆண்கள் காவல்துறையினரால் ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய வைக்கப்பட்டு துன்புருத்தபட்டிருக்கிரார்கள்.நிர்வாணமாக நாள் கணக்கில் அடி,உதைகள் வாங்கி இருக்கிறார்கள்.ஆசன வாயில் லத்தியை வைத்து குத்தப்பட்டு கேள்வி கேட்க்கபட்டிருக்கிரார்கள்.

அவர்களில்  லட்சத்தில் ஒருவர்,இருவரை தவிர்த்து யாரும் அதை நினைத்து ,மாறாத ரணம் ஏற்பட்டு விட்டது,என் கற்பை இழந்து விட்டேன்,திருமண வாழ்க்கைக்கான தகுதியை இழந்து விட்டேன் என்று வருந்துவது கிடையாது.
  ஆனால் பெண்கள் மட்டும் பெரிய இழப்பை சந்தித்தது போல ஆணாதிக்க சமூகத்தால் பார்க்கும் நிலையில் வைக்கபட்டிருக்கிறார்கள்.என்னை நாலு பேர் கட்டி போட்டு ,அடி அடி என்று அடித்தாலும்,ஆசன வாயில் கட்டையை விட்டு குத்தினாலும் உயிரோடு தப்பித்தால் பெரும் மகிழ்ச்சி தான்.காயங்கள் ஆறிய பிறகு சில நாளில் பழைய நிலைக்கு திரும்புவதற்கு பெரிய மன தடைகள் கிடையாது.
  என் மகள்கள்,மனைவி,தாய்,பெண்,ஆண் நண்பர்கள் அனைவருக்கும் சொல்வது இது தான். மானமாவது ,மயிராவது,உயிர் தான் முக்கியம்,ரொம்ப ரொம்ப முக்கியம்.திருடர்கள் மிரட்டும் போது நகைகளை கழட்டி கொடுப்பது எப்படி புத்திசாலித்தனமோ,அதே போல எதிர்ப்பில்லாமல்  எல்லா வன்முறைகளையும் தாங்கி கொண்டு உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்.,காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.உயிரை விட முக்கியமானது ஒன்றும் கிடையாது.ஏதோ இழந்து விட்டோம் என்ற நினைப்பு மிக பெரிய தவறு.
  எனக்கு என் குடும்பத்தவரின்,நண்பர்களின்  உயிர் தான் முக்கியம்.உயிரை இழந்தாவது  மானத்தை காப்பற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணுவதை விட  முட்டாள்தனம் கிடையாது என்பதை தான் வலியுறுத்துவேன்.
  இது வன்முறை நிறைந்த உலகம்.இங்கு ஆண் சந்திக்கும் வன்முறைகளுக்கு குறைவு கிடையாது.அவனுக்கு கற்பு,பயிர்ப்பு  ஒன்றும் கிடையாது என்பதால் அவன் அவன் மேல் விழும் வன்முறைகளை எளிதாக தாண்டி செல்கிறான்.அதே மனநிலையை பெண்களும் வளர்த்து கொள்ள வேண்டும்
  கல்லூரியில் ராக்கிங் போது உடைகளை கழட்டு
  என்று மிரட்டப்படும் போது மிகவும் தயங்கும்,அழுது கெஞ்சி,மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மாணவன் தான்  ,மன,உடல் ரீதியான  அதிக ராக்கிங்கிர்க்கு உள்ளாக்கபடுபவன்.சொல்லி முடிக்கும் முன்பே இந்தாடா என்று உடைகளை கழற்றி எறிபவன் தப்பிப்பது எளிது.

    பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது.கடும் தண்டனை வழங்கப்படும்  நாடுகளில்  பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் பெண்கள் தைரியமாக பல்வேறு வேலைகளில் பணிபுரிவதையும் ,விருப்பத்திற்கேற்ப வாழும் நிலையை கண்கூடாக பார்க்கும் போது இந்த வாதத்தின் அர்த்தமற்ற தன்மை தெளிவாக தெரிகிறது.

   டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் கொடூரத்தால் தன உயிரையும் இழந்த பெண்ணின் உடன் இருந்த தோழர் வெளிநோயாளியாக தான் வைத்தியம் பார்க்கப்பட்டார்.அவருக்கு காயங்கள் வெகு குறைவு.இதே போல மக்களின் கவனத்தை  ஈர்த்த மும்பையில் நடந்த பாலியல் வன்முறையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண் சில நாட்களுக்குள் முற்றிலும் குணம் அடைந்து மறுபடியும் வேலைக்கு திரும்பி உள்ளார்.அவரை வன்முறைக்கு உட்படுத்திய குற்றவாளிகள் அதே இடத்தில பலரை வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்திகள் வர துவங்கியுள்ளன
  டெல்லியில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் குற்றவாளிகளின்  பாலியல் இச்சைகளுக்கு/விருப்பத்திற்கு எதிராக தீவிரமாக போராடியதால் தான் உயிரை இழக்கும் அளவிற்கு வன்முறைக்கு ஆளாகி  இருக்கிறார்.
  இதற்கு முன் அந்த கும்பல் ஒரு ஆணை பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி இருக்கிறது.நம்மில் 100இல் 99 பேர் உயிருக்கு பயந்து இருப்பதை எல்லாம் கொடுத்து விட தயங்க மாட்டோம்.ஒட்டு துணி  கூட விடாமல் அனைத்தையும் பிடுங்கி கொண்டாலும் உயிர் பிழைத்ததே மகிழ்ச்சி என்று ஓடி வந்து விடுவோம்.
   காவல்காரர் நண்பர்களோடு இருக்குமிடத்தில் போதை மருந்து விற்கபடுகிறது,rave  பார்ட்டி நடக்கிறது என்ற சந்தேகத்தில் கைது செய்து சந்தேக வழக்கில் கூட்டி சென்று காவல் நிலையத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து கேள்வி கேட்டாலும் ,அடித்து உதைத்தாலும் விட்டு விட்டால் மகிழ்ச்சி தான்.அதனால் மாறாத ரணம் எனபது ஆண்களுக்கு கிடையாது.
  பல லட்சக்கணக்கான ஆண்கள் காவல்துறையினரால் ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய வைக்கப்பட்டு துன்புருத்தபட்டிருக்கிரார்கள்.நிர்வாணமாக நாள் கணக்கில் அடி,உதைகள் வாங்கி இருக்கிறார்கள்.ஆசன வாயில் லத்தியை வைத்து குத்தப்பட்டு கேள்வி கேட்க்கபட்டிருக்கிரார்கள்.அவர்கள் லட்சத்தில் ஒருவர்,இருவரை தவிர்த்து யாரும் அதை நினைத்து ,மாறாத ரணம் ஏற்பட்டு விட்டது,என் கற்பை இழந்து விட்டேன்,திருமண வாழ்க்கைக்கான தகுதியை இழந்து விட்டேன் என்று வருந்துவது கிடையாது.
  ஆனால் பெண்கள் மட்டும் பெரிய இழப்பை சந்தித்தது போல ஆணாதிக்க சமூகத்தால் பார்க்கும் நிலையில் வைக்கபட்டிருக்கிறார்கள்.என்னை நாலு பேர் கட்டி போட்டு ,அடி அடி என்று அடித்தாலும்,ஆசன வாயில் கட்டையை விட்டு குத்தினாலும் உயிரோடு தப்பித்தால் பெரும் மகிழ்ச்சி தான்.காயங்கள் ஆறிய பிறகு சில நாளில் பழைய நிலைக்கு திரும்புவதற்கு பெரிய மன தடைகள் கிடையாது.
  என் மகள்கள்,மனைவி,தாய்,பெண்,ஆண் நண்பர்கள் அனைவருக்கும் சொல்வது இது தான். மானமாவது ,மயிராவது,உயிர் தான் முக்கியம்,ரொம்ப ரொம்ப முக்கியம்.திருடர்கள் மிரட்டும் போது நகைகளை கழட்டி கொடுப்பது எப்படி புத்திசாலித்தனமோ,அதே போல எதிர்ப்பில்லாமல்  எல்லா வன்முறைகளையும் தாங்கி கொண்டு உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்.,காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.உயிரை விட முக்கியமானது ஒன்றும் கிடையாது.ஏதோ இழந்து விட்டோம் என்ற நினைப்பு மிக பெரிய தவறு.
  எனக்கு என் குடும்பத்தவரின்,நண்பர்களின்  உயிர் தான் முக்கியம்.உயிரை இழந்தாவது  மானத்தை காப்பற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணுவதை விட  முட்டாள்தனம் கிடையாது என்பதை தான் வலியுறுத்துவேன்.
  இது வன்முறை நிறைந்த உலகம்.இங்கு ஆண் சந்திக்கும் வன்முறைகளுக்கு குறைவு கிடையாது.அவனுக்கு கற்பு,பயிர்ப்பு  ஒன்றும் கிடையாது என்பதால் அவன் அவன் மேல் விழும் வன்முறைகளை எளிதாக தாண்டி செல்கிறான்.அதே மனநிலையை பெண்களும் வளர்த்து கொள்ள வேண்டும்
  கல்லூரியில் ராக்கிங் போது உடைகளை கழட்டு
  என்று மிரட்டப்படும் போது மிகவும் தயங்கும்,அழுது கெஞ்சி,மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மாணவன் தான்  ,மன,உடல் ரீதியான  அதிக ராக்கிங்கிர்க்கு உள்ளாக்கபடுபவன்.சொல்லி முடிக்கும் முன்பே இந்தாடா என்று உடைகளை கழற்றி எறிபவன் தப்பிப்பது எளிது.

Wednesday 11 September 2013

அமைதிப்படை மணிவண்ணனும் அத்வானியும்



   கடந்த சில மாதங்களாக பா ஜ க வில் நடந்து வரும் காட்சிகள் அச்சு அசல் அமைதிப்படை படத்தில் தேர்தலில் மணிவண்ணனால் நிறுத்தி வைக்கப்பட்ட சத்யராஜ் தேர்தல் முடிவுகள் வர வர நடந்து  கொள்ளும் /அவரை  சுற்றி  இருப்பவர்கள் நடந்து  கொள்ளும் காட்சிகளை ஒத்திருக்கின்றன

   அமைதிப்படை படத்திலாவது தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டு   வெற்றி பெற்றதால் அனைவரையும் தூக்கி எறிகிறார் சத்யராஜ்.மோடி அப்படி கூட கிடையாது.
  ராப்ரி தேவி போல திடீரென்று நேரடியாக மணிவண்ணனால் மன்னிக்கவும் அத்வானியால் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்டவர்.ராப்ரி தேவியின் திடீர் முதல்வர் நிகழ்விலாவது கட்சியில் ,தேர்தெடுக்கப்பட்ட எம் எல்  ஏக்கள்,முன்னாள் முதல்வர்கள்,மந்திரிகளின் எதிர்ப்பு அவ்வளவு கிடையாது.ஆனால் இங்கு நேரடியாக அனைவரின் எதிர்ப்பையும் மீறி மணிவண்ணின் தயவினால் முதல்வராக ஆனார் மோடி

   முதல்வரான இருக்கும் போது நடைபெற்ற  ஆட்சியின் பெரும்சாதனையான குஜராத் கலவரங்களுக்கு பின் இன்று அவரின் ஜட்டியை துவைக்க சண்டை போடும் அதே கூட்டம் அவரை பதவியை விட்டு விலக வைக்க முயற்சித்தது.அன்று அவரை காப்பாற்றி முதல்வராக தொடர்ந்து இருக்க முக்கிய காரணம் மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி

  
    கட்சியை மட்டும் அல்ல இரண்டாம் இரும்பு மனிதர் என்ற பட்டத்தையும் அல்லவா சேர்த்து அடிக்கிறார் மோடி
 
    அரசியலில் நன்றி இல்லாத தலைவர்களை பார்த்திருக்கிறோம்.ஆனால் நன்றி இல்லாத தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி பா ஜ கா தான்.நெசமாலுமே பார்ட்டி வித் எ difference தான்

    இந்தியாவில் உள்ள பல நூறு கட்சிகளில் எந்த கட்சியை எடுத்து கொண்டாலும் (நம்ம கார்த்திக்குக்கு கூட ஆதரவா சில பேர் இருப்பாங்க)கட்சியின் முக்கியமான தலைவரை,ஐம்பது ஆண்டுகள் கட்சியை வளர்த்தவரை  தூக்கி எறியும் நிலை வேறு எந்த கட்சியிலும் தென்படவில்லை.
  என் டி ஆர் ஐ தூக்கி விட்டு மருமகன் ஆட்சியை பிடிக்கும் போது கூட அவர் சிவபார்வதியின் கைப்பாவையாக  மாறி விட்டார் ,அவரை விட்டு விட்டால் உடனே திரும்பி ஆட்சியை தருவோம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.     .கட்சியிலும்  ,பொதுமக்களிடமும் அவருக்கு தொடர்ந்து ஆபரிதமான ஆதரவு இருந்தது.
  அமைதிப்படை மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி ஜட்டி  துவைக்க போட்டி போட போகிறாரா அல்லது அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா  என்பதை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம்

Wednesday 4 September 2013

ஆண் உறுப்பு காம்ப்ளெக்ஸ்

ஆண்கள் உருவாக்கிய மதம்,கலாசாரம்,புத்தகங்கள் அனைத்திற்கும் அடிப்படை ஆண் உறுப்பு காம்ப்ளெக்ஸ் தான்

 ஆண்களை பற்றி ஒரு பிரபலமான நகைச்சுவை பல மொழிகளில்,நாடுகளில் உண்டு

 மூன்று பெண்கள் ஒரு ஆண் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு அவளிடம் கேட்டார்கள்.

 முதல் பெண் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடு என்று கேட்டு வாங்கி ஒரே நாளில் அவளின் சாமர்த்தியத்தால் ஷேர் மார்கெட்டில் அதை பத்து லட்சமாக்கி அவனிடம் திருப்பி கொடுத்தாள்

  இரண்டாமவள் கராத்தே உலக சாம்பியன்

 மூன்றாமவள் சமையல் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்

 ஆண் யாரை திருமணம் செய்து கொண்டான் ?

 மூவரில் யாருக்கு மார்பகம் பெரிதோ அவரை

 ஆண்கள் எப்போதும் ஆண்கள் தான்

 இதே போல பெண்கள்

 நான் ஒரு கோடி சம்பாக்கிறேன்

 அவனுக்கு ஒரு அடி

நான் பார்த்த மாப்பிள்ளை பணக்காரன்,பக்திமான்,நீ  விரும்பும் ஆண் பெண்பித்தன், ஏழை என்று தகப்பன் சொல்லும் போது

பரவாயில்லை அவனுக்கு ஒரு அடி

என்று  பெண்கள் கூறும் நிலை வந்து விடுமோ  என்ற அச்சம் பிடித்து வாட்டுவதால் பெண்ணின் மீது கவலை போன்ற நடிப்புகள்
 எதுவா இருந்தாலும் ஆண் தப்பித்து விடுவான்,பெண்ணுக்கு தான் சேதம் அதிகம் என்ற வாதங்கள்
 முள்ளு மேலே சேலை விழுந்தாலும் பழமொழிகள்
 அவர்கள் மென்மையானவர்கள் என்ற கூற்றை உருவாக்கி பல வேலைகளுக்கு தகுதி இல்லாத உடல்/மன நிலை உள்ளவர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்கி  தங்களின் பாதுகாவலர்கள் என்ற போர்வையை பத்திரமாக பாதுகாத்தல்

  ஆண் பெண் உறவு என்பதில் திருமணதிற்கு முன்-பின் எது தவறு,எது சரி என்பதெல்லாம் இன்று வரை பெண்களுக்கு மட்டும் தான்.

Saturday 17 August 2013

மரண தண்டனை எனும் நரபலி

தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல

நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது
நரபலி தருவதை பார்ப்பவர்கள்,கேட்டவர்கள் சாமி வந்து ஆடுவது போல இங்கு சிலர் மரண தண்டனைக்கு ஆதரவாக குதிப்பது வேதனையான ஒன்று.
தன உறவினரை கடித்து உரிரழக்க வைத்த பா...ம்பை,சிறுத்தையை பிடித்த பிறகு அதை வெட்டி கொன்றால் தான் மனம் ஆறும் என்று சொல்வதற்கும் ,பிடிபட்ட குற்றவாளியை கொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது

வருடத்திற்கு பல ஆயிரம் பேர் நம் நாட்டில் வெறி நாய் கடியால் ஏற்படும் நோய்க்கு பலி ஆகிறார்கள்.அதை தடுக்க தெரு நாய்களை ஒழிப்பதை ,அப்படி செய்வது பாவம் என்று எதிர்க்கிறவர்களை கூட இப்படி யாரும் திட்டுவது கிடையாது,நக்கல்
செய்வது கிடையாது.மாறாக மேனகா காந்திகளின் தாளங்களுக்கு தான் பெரும்பான்மை அரசுகள் ஆட்டம் போடுகின்றன.ஆனால் பிடிபட்ட குற்றவாளியை கொல்லாதே என்று கூறினால் கூறுபவனை வெட்ட வேண்டும்,தேச துரோஹி என்று கூறுவது சாடிசம் மன நோயின் கீழ் வருமா

நான் மார்க்கெட்டிற்கு ,ரயில் நிலையத்திற்கு செல்லும் போது வழியில் குடித்து விட்டு வண்டி ஒட்டி ஒருவன் ஏற்றி இறந்து விட்டால்,அல்லது மெட்ரோ பாலத்தை கட்டும் பணியில் தவறான பொருட்களின்/தவறான அணுகுமுறையின் காரணமாக பாலம் சரிந்து அதனடியில் மாட்டி கொண்டால்,சிக்னலை மதிக்காமல் ஒரு வாகனம் ஏற்றி கொன்று விட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கோவம் வராதா,கொலைக்கு காரணமானவனை தூக்கில் போட வேண்டும் என்று சொல்ல உரிமை கிடையாதா
அந்த உரிமை யாராவது அதே மார்கெட்டில் குண்டு வைத்தாலோ,இல்லை துப்பாகியால் சுட்டு கொல்லப்பட்டால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வருமா
குறிப்பிட்ட வகையில் இறந்தால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பம் நம் கண் முன் வருமா,உன் குடும்பம் பாதிக்கபட்டால் இப்படி பேச மாட்டாய் என்ற நக்கல் வருமா
விபத்துகளில் நெருங்கிய உறவினர்களை இழக்காதவர்கள் இல்லாத குடும்பங்களே இருக்காது. அதனால் அதனை குறைக்க சாலை விபத்துக்கு காரணமாக இருப்பவர்களை தூக்கில் போட வேண்டும் என்று யாரும் குதிக்கவில்லையே .தீவிரவாதம் காரணமாக இறப்பவர்களை விட விபத்துக்கள் காரணமாக இறப்பவர்கள் ஆயிரம் மடங்கு .ஆனால் யாரும் குற்றங்கள் குறைய தூக்கில் போடுங்கள் என்று பொங்குவது இல்லையே .பாதிக்கப்பட்ட பல லட்சம் குடும்பங்கள் கண்ணுக்கு முன் வருவதில்லையே

பால் விலக்கு

மது விலக்கு என்ற அலாஉதின் விளக்கு மறுபடியும் பலரால் ஏதாவது புதையல் கிடைக்குமா என்ற எண்ணத்தில் பலரால் தேய்க்கப்படுகிறது
பால் விலக்கு போராட்டம் ஏன் யாருக்கும் தோன்றவில்லை.பால் கறப்பதை விட கொடிய பாலியல் வன்முறை எதுவும் இருக்க முடியாது .மிருகவதை எதிர்ப்பு போராளிகளும் பசு,எருமையின் மீதான இந்த பாலியல் வன்கொடுமையை இன்று வரை எதிர்த்ததாக தெரியவில்லை .
பாலூட்டிகள் எனப்படும் ஜீவராசிகள் தங்களின் குழந்தைகளு...க்கு பாலூட்டி வளர்க்கும்.அதனால் அவற்றிற்கு மடி உண்டு
குட்டி போடாமல் தன்னால் பால் சுரக்காது.பால் கறப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா .பால் சுரப்பதற்க்காக குட்டியை சில வினாடிகள் மடியை நக்க வைத்து விட்டு பின்பு வலுக்கட்டாயமாக பிரித்து எடுப்பார்கள்.கதறும் குட்டியை பார்த்து கட்டி போடப்பட்ட பசுவும் கதறும்.ஒரு சொட்டு விடாமல் பால் கறக்கப்படும்.
பசுவை சினையாக்குவதர்க்கு வெளிநாட்டில் இருந்து விந்து மட்டும்,அல்லது காளை இறக்குமதி செய்யப்பட்டு பசு கர்ப்பம் ஆக்கப்படும்
பல ஆண்டுகளுக்கு பசுவை கட்டி போட்டு ,வலுக்கட்டாயமாக அதற்குள் செயற்கையாக விந்துவை ஏற்றி சினையாக்கி,குட்டி போட்ட பின் குட்டியின் கதறலை கேட்டபடி பால் கரக்கபடுவதை விட/அதை வைத்து அபிஷேகம் செய்வதை எதிர்க்க வேண்டும் என்று எந்த காந்தியவாதிக்கும் தோன்றாதது ஆச்சரியம் தான்
மிருக பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகள்,பெரியவர்கள் பல லட்சம் பேர் உண்டு.மது ஒவ்வாமை எனபது மிகவும் அரிது
பால் குடிப்பதால் வரும் வியாதிகளும் ஒன்றும் குறைவு கிடையாது .ராமர் பாலத்தை விட மத ரீதியாக கொண்டாடப்படும் , இவ்வளவு பெருமை கொண்ட பசுவின்  மீது பாலியல்
வன்முறை புரிந்து கரக்கபடும் பாலை விலக்க யாரும் போராடதது ஏன் என்று விளங்கவில்லை

மது விலக்கு தேவையா/சாத்தியமா

மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று எடுக்கும் நிலை வருந்த வேண்டிய ஒன்று.இதை தான் மத/சாதி அடிப்படைவாதிகளும் கூறுகிறார்கள்
addiction எனபது வியாதி. மது இல்லை என்றால் மாத்திரை/பக்தி,சாதி வெறி(முக்கால்வாசி வெறி பிடித்தவர்கள்,காந்தியை கொலை செய்ய துணியும் கோட்சேக்கள் எந்த பழக்கமும் இல்லாதவர்கள் தான் )
மதுவிலக்கு இருக்கும் மாநிலங்களில் வாழ்ந்தவன்... என்ற முறையில் கூறுகிறேன்.அது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.முட்டாள்தனமான கொள்கை
மணிப்பூரில் ஒவ்வொரு வீட்டிலும் அரிசியில் இருந்து சாராயம் காய்ச்சுவார்கள்.அதில் போதையை அதிகமாக்க என்ன சேர்க்க வேண்டும் என்பதில் தான் வேறுபாடு
பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தல்/அங்கு இருக்கும் ராணுவ வீரர்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கி விற்றல் போன்றவை மிக அதிகம்
போக்குவரத்து வசதிகள்/சாலைகள் பெருகிய இந்நாளில் அண்டை மாநிலங்களுக்கு செல்ல அதிக நேரம் எடுக்கும் ஊர் எதுவும் தமிழகத்தில் கிடையாது.புதுவை/ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம் என்று மற்ற மாநிலங்களில் சென்று மது அருந்துவதோ,அங்கிருந்து ரகசியமாக வாங்கி வந்து விற்பதோ மிகவும் எளிதான ஒன்று.விலை குறைவு என்று பாண்டியில் இருந்து வாங்கி வரும் சரக்கில் நூற்றில் ஒரு பங்கு கூட பிடிபடுவதில்லை.பிடிபட்டாலும் போலிசுக்கு அதிக வருமானம்.அவ்வளவு தான்
2500 க்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் இருந்தால் அங்கு மருத்துவ உதவி நிலையம் அவர்களுக்காக ஆரம்பிக்க வேண்டும் என்று விதி.அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதை விட அதிக எண்ணிகையில் தான் முன்னாள் ராணுவத்தினர் உள்ளனர்.அவர்கள் மது வாங்குவதை மாநில அரசின் மதுவிலக்கு தடை செய்ய முடியாது.ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மாசம் வாங்கும் பாட்டில்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகம்.மது விலக்கு வந்தால் இப்போது கிடைக்கும் விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கிடைக்கும்.அவர்களுக்கு அதிக வருமானம்.குஜராத்தில் இப்படி பெரும்பணம் சம்பாதித்தவர் பலர்.
பணக்காரர்களுக்கு லைசென்ஸ் ,ஐந்து நட்சத்திர விடுதிகளில் அனுமதி இருக்கும்.நடுத்தர வர்க்கத்தினர் நூறு கிலோமீட்டர் தள்ளி போய் பக்கத்து மாநிலத்தில் குடித்து விட்டு விழுந்து கிடப்பர்.போதைக்கு அடிமையாக விரும்புபவர்கள் இருமல் மருந்துகளில் மாத்திரைகளை கலந்து பாட்டில் பாட்டில் ஆக முழுங்குவர்
கள்ள சாராயம் பல கொலை/திடீர் பணக்காரர்களை உருவாக்கும் .
இணையத்தின் மூலம் சாராயம் எப்படி தயாரிக்கலாம் என்பதை எளிதில் யார் வேண்டுமானாலும் கற்று கொள்ள முடியும்.
மனிதன் அரிசியை முதலில் பயிர் செய்ய துவங்கியதே சாராயத்திற்காக தான் என்று பல ஆராய்ச்சியாளர்கள் இப்போது கருதுகின்றனர்.கிடைக்கின்ற அனைத்து உணவு பொருட்களில் இருந்தும் சாராயம் தயாரிக்கும் முயற்சி ஆதி மனிதன் தொட்டு இன்று வரை நடைபெற்று வருவது
திருமணமான பெண்களுக்கு திருமணம் ஆகாத பெண்களை விட கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.அதனால் திருமணத்தை தடை செய்யலாம் என்று எண்ணுவதற்கும் மது விலக்கு போதையை அழித்து விடும் என்று எண்ணுவதற்கும் வித்தியாசம் கிடையாது

பாலியல் என்றால் என்ன



இதற்கான விடையை ஆண் பல ஆயிரம் ஆண்டுகளாக தேடி கொண்டு இருக்கிறான்.

எது அவனுக்கு இன்பம் தருகிறது
எதனால் அவனுக்கு இன்பம் வருகிறது.
இதை அவன் எளிதாக உணர்ந்து கொண்டான்
ஆனால் அதை தரும் துணையை சரியான முறையில் /சரியான வயதில் தேடி கொள்வதால் அவனுக்கு இன்பம் அதிகமாகுமே தவிர குறையாது என்பதை புரிந்து கொள்ளவில்லை.
அடுத்தவரை வன்முறைக்கு ஆட்படுத்தி அதனால் தான் இன்பம் வரும் என்ற மனநிலை இர...ுப்பது குரூரம்,குற்றம் ,அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற முயற்சிக்குள் அவன் இன்னும் இறங்கவே இல்லை
பேருந்தில் தொடர்பே இல்லாத பெண்ணோடு உரசி இன்பம் பெறுவதை விட ,தனக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுத்து ,அவள் சம்மதத்தோடு கடற்கரைகளில்,சினிமா திரை அரங்குகளில் உரசுவது,முத்தம் தருவது தவறல்ல என்பதை அவனும் ,சமூகமும் புரிந்து கொண்டால் குற்றங்கள் குறையும்
என் இள வயதில்/கல்லூரி பருவத்தில் கூட்டமான பேருந்தாக பார்த்து ஏறி கொண்டிருந்தவன் என்ற முறையில் கூட்டத்தில் உரசுபவர்கள்  பற்றிய என் தோழியின் பதிவு அதில் உள்ள தவறை இப்போது தான் புரிய வைக்கிறது
ஹோலி என்ற பெயரில் பெண்களின் மேல் வண்ணம் தெளிப்பது என்ற சாக்கில் பாலியல் சுகம் பெற உரசும் அருவெறுப்பான செயல்கள்  மகிழ்ச்சியாக முழுமனதோடு இசையும் துணையோடு கூடிய பிறகு தானே
பாலியலுக்கு தொடொர்பில்லாத  வக்கிரங்கள்    எனபது  உரைக்கிறது
 
இது தவறு என்ற எண்ணமே ஏற்படாத நிலையை இப்போது நினைத்தால் கூசுகிறது

முரட்டுத்தனமாக குடித்து விட்டு வந்து மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை உடனே வா என்று அடித்து இழுத்து சென்ற உறவினரை/உறவினர்களை ,நினைத்தால் மனைவியை விளாசி எடுத்தவர்களை,சந்தேகப்பட்டு வண்டை வண்டையாக திட்டியவர்களை தவறாக பார்க்காத நிலை வருந்த வைக்கிறது

பாலியல் குற்றவாளிகள் அனைவரும் மனநோயாளிகள்.அதை குற்றம் நிகழ்த்துவதற்கு முன்பே அவன் உணர்ந்து அதை தடுக்க முயற்சிகள் எடுக்காதவரை குற்றங்கள் குறைவது கடினம்

பாலியல் வன்முறை புரிந்தவர்கள் மனநோயாளியாக பார்க்கப்பட்டு தண்டனையோடு பல ஆண்டுகள் அவர்களுக்கு மருத்துவமும் செய்யபட்டால்,அதை பார்த்து அதே எண்ணம் இருப்பவர்களும் அதை தவிர்க்க மருத்துவம் செய்து கொள்ள முன் வருவர்.
இதன் மூலம் பாலியல் குற்றங்களை குறைக்கலாம்.வன்முறை எண்ணம் உள்ள நம் குடும்பத்தில்,நட்பில் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு உட்படுத்தினாலும் குற்றங்கள் குறையலாம்
பாலியல் கல்வி ,பாலியல் என்றால் என்ன எனபது புரிந்து கொள்ளாமல் தான் பெரும்பான்மையானோர் இருக்கும் நிலையை மாற்றினாலும் பாலியல் வன்முறைகள் குறையலாம்
கன்னிகளோடு உறவு கொண்டால்,வயது வராத சிறுமிகளோடு உறவு கொண்டால் பாலியல் நோய் போய் விடும்/வராது,ஆண்மை கூடும் போன்ற மூட நம்பிக்கைகளை உடைத்து எறிந்தால் குற்றங்கள் குறையும்
கிரிக்கெட்,கால்பந்து,பாலே நடனம் போல தான்
பாலியலும்.பொறுமை,பயிற்சி,அன்னியோனியம்,கூட்டு முயற்சி இருந்தால் தான் அது சுவைக்கும் என்ற உண்மையே பலருக்கு தெரியாது என்ற நிலையை மாற்ற வேண்டும்.
சுயஇன்பம் மிக தவறு என்று எண்ணுபவர்களை,கனவுகளில் விந்து வெளியாவது ஆரோக்கியத்தை கெடுக்கும்,பாலியல் தொழிலாளர்களிடம் சென்றால் உடல் சூடு குறையும்,விந்து தன்னால் வெளியாவது ஆண்மைக்கு இழுக்கு ,அது ஒரு உடலில் தான் வெளியாக வேண்டும் என்ற நம்பிக்கை வைத்திருப்பவர்களிடம் அது தவறான மூடநம்பிக்கை என்பதை புரிய வைக்க வேண்டும்
ஊடகங்கள் இல்லாத காலத்திலும்,பெண்களை பூட்டியே வைத்திருக்கும் சமூகங்களிலும் பாலியல் குற்றங்கள் மிகுந்து தான் இருக்கின்றன என்பதை பார்த்தால் ஊடகங்களின் மேல் வைக்கும் குற்றசாட்டின் சாரம் இல்லாதது புரியும்

கொலைவெறியோடு அலையும் ஊடகங்களும் அதன் ஹீரோக்களும்

நன்றி இல்லாத அரசுகளும் வெறி ஏற்றும் ஊடகங்களும்

சரப்ஜித் சிங்கின் உடல் இந்தியா வந்து விட்டது.25 ஆண்டுகளை சிறையில் கழித்து அதன் முடிவாக அடித்து கொல்லப்பட்ட வீரனுக்காக அனைவரும் வருந்தும் நிலை ,அவர்களை பற்றி அறியும் நிலை உருவானது ஒன்று தான் இந்த நிகழ்வில் நடந்த ஒரே நல்ல விஷயம்

எல்லா நாடுகளின் அடிப்படை கோட்பாடே "செவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் "என்ற தத்துவத்தில் அடங்கியிருக்கும் வரை இவைகளுக்கு... முடிவு இருக்காது

நாட்டு பற்றினால் அல்லது ஏழ்மையில் இருந்து தப்பிக்க பணத்திற்காக உளவு பார்க்க செல்லும் அனைவரும் யோசித்து பார்க்க வேண்டிய தருணம் இது.எத்தனை ஆண்டுகள் சிறையில் வாடினாலும் ,மாட்டி கொண்டவனை கை கழுவி விடுவதற்கு,யார் என்றே தெரியாது என்று சொல்லாத அரசுகள் ஒன்று கூட தேறாது

எங்கள் நாட்டு உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று முடிவு செய்து மரணதண்டனை கொடுத்தால் அது நியாயத்தின் தீர்ப்பு,அதை நிறைவேற்றாதே என்பவர்கள் அந்நிய கைகூலிகள்,போலி மனித உரிமை வாதிகள்,தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறுபவர்களையும் சேர்த்து தண்டிக்க
வேண்டும் என்று கூக்குரல் இடுபவர்கள் அண்டை நாட்டு உச்ச நீதிமன்றம் தீவிரவாத செயல்களை புரிந்ததற்காக மரண தண்டனை வழங்கிய குற்றவாளியை நிரபராதி,தவறாக வழங்கப்பட்ட தீர்ப்பு,தண்டனையை நிறைவேற்ற கூடாது என்று கூச்சல் இடுவார்கள்.செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்,தவறா தீர்ப்பு வழங்க மாட்டான் எனபது தானே கடவுளின் வார்த்தை

இங்கு தீவிரவாத செயல்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்ற படாமல் இருக்கும் கைதிகளுக்காக அரசை குறை கூறும்,தூற்றும்,மரண தண்டனை வேண்டாம் என்பவர்களின் மீது புழுதி வாரி வீசும் கோச்வாமிகள் ,சு ஸ்வாமிகள் அண்டை நாட்டில் இதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்க முயற்சிகள் எடுக்கவில்லை என்று அரசை ஏசுவார்கள்.

நாட்டிற்காக பணி செய்ய சென்றவர்களை எப்படி காப்பாற்றுவது,இங்கு இருக்கும் குற்றவாளிகளை துருப்பு சீட்டாக வைத்து எப்படி அங்கு இருப்பவர்களை விடுவிப்பது என்று செயல்பட வேண்டிய அரசுகள் ,அவர்களின் உயிரை துச்சமென மதித்து ,இங்கு வெறி ஏற்றுபவர்களின் நோக்கத்தால் தேர்தலில் வோட்டுக்கள் குறையும் என்பதால் இங்குள்ள தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கில் போட்டு விட்டு பெரிய சாதனை செய்தது போல சிரித்து கொண்டு பேட்டி கொடுத்து அங்கு இருக்கும் கைதிகளை கை கழுவி விட்டது.இந்த அரசின் உச்சபட்ச கேவலம் இந்த செயல்
பலரை கொன்ற எதிர் நாட்டு வீரர்களை போருக்கு பிறகு இரு நாடுகளும் பரஸ்பரம் விடுவிப்பார்கள்.இரு நாடுகளின் சிறையிலும் பல நூறு கைதிகள் இப்படி பல ஆண்டுகளாக அடைபட்டு கிடக்கும் அவலத்தை,
அவர்களை எப்படி விடுவிப்பது எனபது பற்றி எந்த கோஸ்வாமியும் சிந்திப்பது கிடையாது.

வெறி ஏற்றும் ஊடகங்கள் ஒரு நாட்டிற்கு மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன.நன்றி இல்லாத அரசோடு வெறி ஊட்டும் ஊடகங்களும் சேர்ந்தால் அவர்களுக்கு தீனியாக கொல்லப்பட்ட உடல்களுக்காக அலையும் நிலை தான் உருவாகும்.

தாய்மொழி வெறி

பள்ளி கல்வியால் அனைவரையும் அறிவாளியாக .சிறந்த படிப்பாளியாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை ஆச்சரியத்தை தருகிறது.
குறிப்பிட்ட மொழியில்,தாய்மொழியில் கற்றால் அனைவரும் அறிவாளியாகி விடுவர்,உலகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நூயுடன்களும் ,போசெகளும் ஓடி விளையாடுவார்கள் என்ற எண்ணம் சரியானது தானா
பள்ளி கல்வியின் முக்கியமான நோக்கம் சிறுவர்களின்,மாணவர்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துதல்.நேரத்திற்கு எழுந்திருத்தல்.வக...ுப்பின் போது காலைகடன்கள் வந்தால் சிரமம் என்பதால் காலைகடன் கழித்தலை எழுந்தவுடன் செய்வதற்கு உடலை பழக்குதல்
பல்வேறு குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுடன் பழகுதல்,ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல்,பகிர்தல்,நட்பு பாராட்டுதல்,நண்பர்களை பெறுதல்.ஆசிரியர் என்பவரை மதித்தல்,பல்வேறு துறைகளை பற்றி அறிதல் ,ஒன்றாக விளையாடுதல்,ஒன்றாக பயணம் செய்தல் போன்றவற்றோடு சில விஷயங்களை புத்தகங்களின் வாயிலாக,ஆசிரியரின் வாயிலாக தெரிந்து கொள்ளுதல்.
பள்ளிகளை கிரிக்கெட்,கால்பந்து அகாடமி போல எண்ணுதல் சரியான ஒன்றா.அகாடேமிகள் தோனியை,ரூணியை,செரெனாவை உருவாக்காது.அவர்கள் அவர்களை செம்மை படுத்தி கொள்ள வழியை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்வார்கள்.
படிப்பும் அதே தான்.குறிப்பிட்ட பள்ளி,குறிப்பிட்ட வகை பயிற்சிமுறை,தாய்மொழி கல்வி பல அறிவாளிகளை உருவாக்கும் என்ற கூற்றில் உண்மை குறைவு.அனைவருக்கும் அடிப்படை அறிவு தருவது தான் பள்ளியின் கடமை.

தாய் மொழி தான் நல்லது என்பதற்கும் தாய்மதம் தான் நல்லது/தந்தை தொழில் என்ற குல தொழில் தான் நல்லது என்ற வெறிக்கும்வித்தியாசம் கிடையாது.இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் மொழிகள்
அதில் பெரும்பான்மை மொழிகள் வெறும்பேச்சு மொழிகள் தான் எழுத்துக்கள் கிடையாது
எழுத்து இருக்கும் மொழிகளும் வேறு மொழியின் லிபியை கடன்வாங்கியவை தான்
அதிகம் பேசப்படும் மொழிகள் பல மொழிகளை அழித்து,உள்வாங்கியதால் தான் அதிக மக்களால் பேசப்படுகின்றன
தாய்மொழி கல்வி தான் சிறந்தது என்று கூறுவதன் காரணம் அவர்கள் வசிக்கும் பகுதியில் பயன்படுத்தும் வார்த்தைகளை ,வீட்டில்பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து கற்று கொள்வது எளிது என்பதால் தான்
தமிழை தாய்மொழியாக கொண்ட வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் பிறந்த குழந்தை அவளை தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்கும் போது இவள் மட்டும் தமிழில் படித்தால் தான் கல்வியில்சிறந்து விளங்குவாள் என்ற வாதம் ஒரு புரட்டு தான்
மொழிகளின் ஆயுளும் வெகு குறைவு தான்.பல ஆயிரம் மொழிகள் அழிந்து விட்டன.இப்போது நாம் தாய்மொழி என்று சொல்லி கொள்ளும் மொழிகளும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தாய்மொழியாக இல்லாமல் இருந்திருக்கும்.வசிக்கும் இடங்களில் உள்ள பெரும்பான்மை மொழி மற்ற மொழி பேசுபவர்களை சிறிது சிறிதாக உள்வாங்கி விடும்.
மொழிகளை பாதுகாக்க வேண்டும் எனபது சரி.ஆனால் எந்த மதம் வேண்டும்,எந்த மொழியில் படிக்க வேண்டும்,எந்த இடத்தில வேலை செய்ய வேண்டும் எனபது எல்லாம் தனி மனித முடிவுகள்.அவனவனுக்கு பிடித்த மொழி அவனவனுக்கு
தமிழில் அனைத்து அறிவியியல்,மருத்துவம்,பொறியியல் புத்தகங்கள் மிகுந்தால் சீனாகாரன் கூட தமிழை அவர்கள் ஊரில் கட்டாயம் ஆக்குவான்.அப்படி இல்லாமல் ஒருவன் இங்கு பிறந்ததால்,அதுவும் அரசை நம்பி அது நடத்தும் பள்ளி,கல்லூரியில் படித்தால் அரசு அவன் மேல் பெரும்பான்மை மொழியை திணிக்கும் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது

மோடி வெ(ற்)றி



மோடியின் சாதனைகள் கடவுளையும் தாண்டி போகும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
அனைவரிலும் சிறந்த கடவுள் மோடி தான் என்று ஒத்து கொள்ளாத கடவுள்களுக்கு மோடிபக்தர்களிடம் கிடைக்கும் நிலை அத்வானியின் நிலை தான்
... மோடியின் சாதனைகள் பயங்கொள்ள வைக்கின்றன.கடனில் இருந்த குஜராத் மாநிலத்தை அவர் ஆட்சியின் கீழ் லட்சம் கோடி உபரி பணத்தை உலக வங்கியில் போட்டிருக்கும் மாநிலமாக மாற்றி உள்ளார் என்று அறிவுஜீவிகள்,பத்திர்க்கை ஆசிரியர்கள் உட்பட பலர் சில ஆண்டுகளாக அனைத்து தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக பரப்பி வருகிறார்கள்
உண்மை நிலை என்ன என்பதை பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது.கடவுள் பக்தியை விட மோசமாக இருக்கிறது மோடி பக்தி
http://www.indiatvnews.com/business/india/modi-s-gujarat-bears-the-third-highest-debt-burden-after-bengal--5216.html
Chief Minister Narendra Modi's Gujarat government bears the third highest burden after West Bengal and Uttar Pradesh, says a media report.
While Gujarat's actual debt was Rs 1,38,978 cr as on March 2012 and is projected to touch Rs 1.76 lakh crore in 2013-14, it is preceded by only two other states: West Bengal (Rs 1.92 lakh crore) and Uttar Pradesh (Rs 1.58 lakh crore), says the report.

மோடி வந்தார் ,15000 குஜராத்திகளை மீட்டு அழைத்து சென்றார் எனபது பலரை புல்லரிக்கக் வைத்த  செய்தி.

CNN IBN தொலைக்காட்சியில் பாதிக்கபட்ட்ட மக்களில் ஒருவர் மோடி அனுப்பிய 25 ஹெலிகாப்டர்களை ஒன்றுக்கும் உதவாத உத்தர்கண்ட் அரசாங்கம் ஏற்று கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டது என்று குமுறுகிறார்.வெளி உலகத்தோடு எல்லா தொடர்பும் அறுந்த நிலையில் இருந்து மீட்கப்படும் போது ஒருவரின் கூற்று அது .இவை நடைமுறையில் சாத்தியமா என்று யாரும் ஆராய்வது கிடையாது.கடவுளை ஆராய முடியுமா

http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modi-lands-in-Uttarakhand-flies-out-with-15000-Gujaratis/articleshow/20721118.cms

What cannot be dismissed, though, is Modi's now trademark style of micro-management, something his supporters say is the need of the hour for India. "It's amazing what he has done here," said Anil Baluni, a BJP leader. "If someone doesn't like it, what can we do?'

Modi's men have not only para-dropped a complete medical team in Hardwar,


ரயில்,சாலைபோக்குவரத்து பாதிக்கபடாத ஹரித்வாரில் ஏன் ஐயா பாரசூட் மூலம் மருத்துவ அணிகளை இறக்க வேண்டும் என்றால் டேய் பாதிரி உன் அல்லேலுயா வேலைகள் இங்கு செல்லுபடியாகாது என்று அன்பான புத்திமதி தான் பதில்


குஜராத்தை முன்னணி மாநிலம் ஆக்கி விட்டார் என்ற கூற்று பல லட்சம் முறை ஓதப்படும் போது என்ன ஆதாரம் என்று கேட்பவனுக்கு இன்று வரை விடை கிடையாது. நேரில் சென்று பார் எனபது தான் ஆதாரம் ,கடவுள் இல்லை என்று நீ நிரூபி என்பதை போல
கல்வியில்,மருத்துவத்தில் 11வது இடம்,14வது இடம் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன என்றால் அதற்க்கு பதில்கள் ஏச்சுக்கள் தான் .
http://www.dnaindia.com/india/1850819/report-narendra-modi-faking-figures-to-claim-gujarat-development-congress

ஆண் பெண் சதவீதம் அவரது 12 ஆண்டு ஆட்சியில் 1000-883 இல் இருந்து 1000-886 ஆகியிருக்கிறது என்றால் பாதிரியார் தானே நீ என்று தான் பெரும்பான்மையான பதில்கள்

மோடியின் மேல் உள்ள பக்தியினால்
குசர் பி என்ற பெயர் கொண்ட சொரபுத்தீன் மனைவியை (அவள்மேல் எந்த குற்ற பின்னணியும் கிடையாது.அவளை கடத்தி பாலியல் வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டு )/19 வயது கல்லூரி மாணவி இஸ்ராட் ஜெஹன் என்ற எந்த வித குற்றசாட்டுகளுக்கும் ஆளாகாத பெண்ணை (அவள் சில நாட்களில் மூளைசலவை செய்யப்பட்டு மனித வெடிகுண்டாக மாற இருந்தவள்  என்ற புனைகதை உண்மையாக இருந்தால் கூட எந்த குற்றமும் செய்யாத 19 வயது பெண்ணை மூளை சலவை செய்பட்டதால் வாழ தகுதி இல்லாதவள் என்று கொலை செய்வது )

எல்லாம் சாதாரணம்/கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று என்று வாதிடும் பெரும்பான்மையான மோடி ஆதரவாளர்களை
நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது

Friday 16 August 2013

அவன் நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய்

முகநூலில்/வலைப்பூவில்  எழுதும் பழக்கம் டைரி எழுதுவதை போல.ஏன் டைரி எழுதுகிறாய் என்று யாரும் கேட்டது கிடையாது.ஆனால் நீ என்ன பெரிய பருப்பா ,எல்லா விஷயங்களையும் அலசி ஆராய,ஏன் வெட்டியாக நேரத்தை கழிக்கிறாய் என்ற கேள்வி எனக்கு நியாயமாக படவில்லை
அன்றாட நிகழ்வுகளை பற்றி எழுதுவது,அலசுவது நம்மை மாற்றும் என்றும் திடமாக நம்புகிறேன் நாம் அறுக்கப்பட்ட செங்கல்களாக இருந்தாலும் கூட

    உன் வீட்டில் நடந்தால் என்ன செய்து இருப்பாய் என்ற கேள்வி இப்போது எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் முகத்தில் வீசப்படுகிறது. இந்த கேள்வியில் எந்த ஞாயம் இருப்பதாகவும் எனக்கு படவில்லை.நம் உறவுகள் ஆராய்ந்துபார்க்கும் தன்மையை கடந்தவை.
பிழைக்கும் வாய்ப்பே இல்லை,வேறு பிழைக்க கூடிய வாய்ப்புள்ள நோயாளிக்கு தான் ஹெலிகாப்ட்டர் evacuation/அறுவை சிகிச்சை /ventilator முதலில் என்று கூறும் உரிமை எனக்கு எப்போதும் உண்டு. உன் தாயாக/குழந்தையாக இருந்தால் இப்படி சொல்வாயா என்ற கேள்விக்கு கண்டிப்பாக சொல்ல மாட்டேன் என்று தான் கூறுவேன்.அதனால் தான் மருத்துவர்கள் தங்கள் உறவுகளுக்கு தாங்களே வைத்தியம் பார்க்க கூடாது,நீதிபதிகள் தங்கள் உறவுகளின் வழக்குக்கு தாங்களே தீர்ப்பு கூற கூடாது என்ற நடைமுறைகளும்
பிழைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் திருமணமாகாத உயர் பதவியில் இருந்த பெண் மருத்துவர் தன ஒரே துணையாக இருந்த பாட்டிக்கு பல லட்சம் செலவு செய்து சில வாரங்கள் ஆயுளை நீட்டித்து கொண்டிருந்தார். பல நோயாளிகளுக்கு /அவர்களின் உறவினர்களுக்கு தெளிவான அறிவுரை வழங்கிய அவர் தன ஒரே உறவு என்று வரும் போது அதற்க்கு நேர்மாறாக நடந்து கொண்டார். இதில் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை .

உறவுகள் பகுத்தறிவை கடந்தவை.அதனால் அவரை பார்த்து அன்று  அப்படி சொன்னே ஹி ஹி ஹி பார்த்தியா என்று சிரிப்பது அறியாமை

சரியான முடிவு எடுக்க ஏற்ற வயது எது

இன கவர்ச்சி,முதிர்ச்சியடையா வயது,இரண்டும் கெட்டான் பருவம் என்று 18,20 வயது பெண்களை பார்த்து பல கேள்விகள் ,கணைகள் தொடுக்கபடுகிறது.
இதற்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் உள்ளதா.பலர் சிக்மண்ட் ப்ராஐட் சிஷ்யர்கள் போல அவர்களின் ஆராய்சிகளின் முடிவால் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பேசுவது போல காம காதல்,21 வயதிற்கு பிறகு வருவது தான் உண்மை காதல்,புனித காதல் என்று தூள் கிளப்பி கொண்டு இருக்கிறார்கள்
...ிருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டதற்கான காரணங்களில் முக்கியமானது குழந்தை பிறப்பை கட்டுபடுத்தும் எனபது.ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் வயது 15 ஆக இருந்தது. இன்று 16 வயதிற்கு குறைவாக எடுக்க கூடாது என்ற சர்வதேச தீர்மானத்தில் இந்தியாவும் ஒத்து கொண்டு கையெழுத்து இட்டிருப்பதால் 16 வயதில் ராணுவ வீரருக்கான பயிற்சிக்கு ஒருவர் சேர்த்து கொள்ள படுகிறார். .
18 வயதில் துப்பாக்கியால் தீவிரவாதிகளை/போரில் எதிரி நாட்டு வீரகளை /ஊரடங்கு உத்தரவின் போது வெளியில் தென்படுபவர்களை,சந்தேகப்பட்டு கேள்வி கேட்கும் போது நிற்காமல் ஓடுபவரை சுட்டு கொல்லவும் அவருக்கு அனுமதி உண்டு.அந்த மனமுதிர்ச்சி வந்து விட்டது என்று பயிற்சி பெற்ற ஆண்,பெண் காவலர்கள்,துணை ராணுவ படை வீரர்களுக்கு அந்த அனுமதி வழங்கப்படுகிறது
ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு வயதில் மனமுதிர்ச்சி வரும் என்ற எந்த மருத்துவமுறை சொல்கிறது-அல்லோபதியா,உனானியா,சித்தாவா.ஆயுர்வேதமா
அதே வயதை சார்ந்த ஆண் மிகுந்த அறிவோடு ,குயுக்தி புத்தியோடு காதல் என்ற நாடகம் ஆடி ஏமாற்றுவான்,ஆனால் அதே வயதை உடைய பெண் ஒன்றும் தெரியாதவள்,ஏமாளி என்று எந்த மருத்துவ புத்தகங்கள் கூறுகின்றன
குடிகாரன்.தொடுப்பு வைத்திருப்பவன்,பல பெண்களோடு பழகி கை கழுவியவன் எல்லாருக்கும் பெற்றோர் ,உற்றார் பார்த்து திருமணம் செய்து வைக்க வாய்ப்பே கிடையாது.அவர்களின் ஒரே வழி காதல் நாடகம் தான் என்கிறார்களே -இது உண்மையா

Tuesday 13 August 2013

இட ஒதுக்கீடு




இட ஒதுக்கீடு பற்றி நிறைய குழப்பங்கள்,புரிதல் இல்லாத நிலை இன்றும் அதிகமாக உள்ளது.
ஓபன் கோட்டா என்று ஒன்று எதிலும் கிடையாது.எல்லா பதவி ,படிப்புக்கும் ஏதாவது ஒரு ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மக்கள் தேர்ந்தெடுக்கபடுவர்
புதுசேரியில் பல மருத்துவ கல்லூரிகள்(மாநில அரசு மருத்துவ கல்லூரி ஒன்று,மத்திய அரசு ஒன்று ,6,7 தனியார் மருத்துவ கல்லூரிகள்) அசாம் தவிர்த்த ஆறு வட கிழக்கு மாநிலங்களில் ஒரே ஒரு கல்லூரி தான் உள்ளது
பக்கத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்களுக்கு கூட தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் ஓபன் கோட்டாவில் சேருவதற்கு அனுமதி கிடையாது .இங்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்,குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் படித்தவர்கள் தான் ஓபன் கோட்டாவில் சேர முடியும்.மாநிலத்தை வைத்து வழங்கப்படும் இட ஒதுக்கீடு அது
நம்மை விட அதிக மக்கள் தொகை,அதிக மாணவர்கள் கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தில் நம்மிடம் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் பாதி இடம் கூட கிடையாது .அவர்கள் யாரும் ஓபன் கோட்டா தானே என்று இங்கு வந்து சேர முடியாது.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேபாளம் ,வங்காளதேசம் சேர்ந்தவர்களும் ஓபன் கோட்டா கீழ் வந்து சேர அனுமதி கோர முடியாது
மாநில ,குடியுரிமை அடிப்படையில் மொத்த இடங்களும் இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
கோவா முதல்வர் அற்புதமாக ஆட்சி செய்து வருவாயை பெருக்கி பல ஆயிரம் அரசு வேலைகளை உருவாக்கினால் அதனால் பலன் அவர்கள் மாநிலத்திற்கு தான்.மாநிலத்தில் யாரும் BPL கீழ் கிடையாது என்று அந்த மாநில காவல்துறை,மாநில அலுவலகங்களில் உள்ள வேலைகளை BPL மக்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கோ,நாடுகளுக்கோ வழங்க முடியுமா
மாநிலவாரி இட ஒதுக்கீடு எனபது நூறு சதவீதம் அல்லது மத்திய அரசு பொது தேர்விற்கு ஒப்பு கொண்ட மாநிலங்கள் என்றால் 85 /75 சதவீதம் .இந்த ஒதுக்கீட்டை தெரியாதது அல்லது புரியாதது போல பேசுவது வியப்பு தான்
இட ஒதுக்கீட்டால் ஒரு சில பிரிவினரே அதிகம் பலன் பெறுகிறார்கள் என்றால் பாதிக்கப்படும் மற்ற பிரிவுகள் போராடி தனி ஒதுக்கீடு,உள் ஒதுக்கீடு பெறுவதும் நாடு முழுவதும் நடந்து வரும் ஒன்று தான்.சாதி ரீதியான இட ஒதுக்கீடு பெரும் குழுக்கள் யாரும் கிரீமி லேயர் பற்றி பேசுவதில்லை .அதை பெறாதவர்கள் தான் அதை பற்றி அதிகம் கவலைப்படுவது

இட ஒதுக்கீடு எனபது ஏழைகள் முன்னேற்ற திட்டம் அல்லது ஏழைகள் மறுவாழ்வு திட்டம் அல்ல
ஆட்சியில் ,அரசில் அனைத்து துறைகளிலும் அனைவருக்கும் பங்கு இருக்க வேண்டும் ,யார் வேண்டுமானாலும் முயன்றால் வர முடியும் என்ற நிலை இருக்க வேண்டும் என்பதற்கான திட்டம் தான் அது.

ஆந்திராவில் டேலேங்கான பகுதியில் இருக்கும் கல்லூரிகளில் 85 சதவீதத்தினர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தான்.மீதி பதினைந்து தான் கரையோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவிர்க்கு .அதே நிலை தான் ராயலசீமாவில் இருக்கும் கல்லூரிகளில் அங்கு இருக்கும் மாணவர்களுக்கு


இதில் எல்லாம் கிரீமி லேயர் நுழையுமா.
மாற்று திறநாளிகள் இட ஒதுக்கீட்டில் படிப்பவர்,வேலை கிடைப்பது முக்கால் வாசி சோ called கிரீமி லேயரக்கு தான்.அது தவறா.


முன்னாள் ராணுவத்தினர் இட ஒதுக்கீட்டில் பெருமளவில் சேருபவர் அதிகாரிகளின் பிள்ளைகளா ,ஜவான்களின் பிள்ளைகளா


தாய் தந்தை பட்டதாரி இல்லை என்றால் எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஊக்க மதிப்பெண் கிடைக்கும் கலைஞர் திட்டத்தை அடித்தது நீதிமன்றங்கள் தான்
அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டையும் அடித்தது நீதிமன்றங்கள் தான்.

பள்ளி,பெற்றோரின் கல்வி தகுதியை வைத்து வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்களால் இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் தலைமுறையினருக்கு முன்னுரிமை தருவது எளிது தான்.நீதிமன்றங்கள் தான் அப்படி முன்னுரிமை தரும் திட்டங்களை தடுத்து வருகின்றன
திராவிட இயக்கத்தின் தாக்கமும் அதன் மீதான  அதிதீவிர வெறுப்பிற்கான காரணங்களும் 


   
திராவிட எதிர்ப்பு தங்கங்களே
http://articles.timesofindia.indiatimes.com/2012-05-06/india/31597294_1_upper-castes-scs-durables
Three states however buck this trend; across caste groupings in Punjab, Kerala and Tamil Nadu, the rate of ownership of basic consumer durables is high. In fact, the asset ownership rate for scheduled castes in these three states is better than that of OBCs and upper castes in all other states.
Tamil Nadu and Punjab are the only states where the proportion of SCs who do not own basic assets is around 10% or lower, lowest of all in Tamil Nadu. Asset ownership among SCs in these three states is higher than that among “others” in all other states.
the key determinant of each of these states’ human development situation is not its caste composition, but its politics and governance, Mehrotra says.
அதாகப்பட்டது தமிழகத்தில்/கேரளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்டவர்களின் நிலை ஹிந்டுத்வர்கள் வலுவான நிலையில் உள்ள மாநிலங்களில் உள்ள முற்பட்ட பிரிவினரை விட மேலாம்.அதற்க்கு இங்கு நடந்த நல்லாட்சிகள் தான் காரணமாம்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல தான் திராவிட இயக்கமும்.அந்த இயக்கத்தை பெருமளவில் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் சுவீகரித்து கொண்டதால் அவர்கள் நன்றாகவே பலன் பெற்றார்கள்.மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் அதன் பலன்கள் புரியும்.
ஹிந்துத்வம் மற்றும் காங்கிரஸ் கோலோச்சிய/கோலோச்சும் ராஜஸ்தான்,உத்தர் பிரதேசம்,மத்திய பிரதேசம் ,பீகார் ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் சாதிகளுக்கு இடையே ஆன நிலையோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நம் நிலை புரியும்.
திருப்பி அடிக்கலாம்/சாதி கடந்து திருமணம் செய்யலாம்,பிறப்பால் எவனும் உயர்ந்தவன் கிடையாது என்ற சிந்தனையே அங்கு பின்தங்கிய சாதிகளுக்கு இன்னும் வரவில்லை.
மதரீதியாக சாதிகள் இல்லை என்று சொல்லும் சீக்கிய மதத்தை ஏற்ற பஞ்சாபில் கூட சாதிபிரிவினைகள் வெகு அதிகம்.முப்பது சதவீதத்திற்கு மேல் இருந்தாலும்/பொருளாதார ரீதியாக முன்னேறி இருந்தாலும் தலித் சீக்கியர்களுக்கும் உயர்சாதி சீக்கியர்களுக்கும் பிளவுகள் மிக அதிகம்.இப்போது கூட கீழ் சாதி சீக்கியரை மணந்த குற்றத்திற்காக சொந்த மகளை கொலை செய்த/வலுகட்டாயமாக கரு கலைப்பு செய்து இறப்புக்கு காரணமான குற்றத்திற்காக மந்திரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சாதி வேண்டாம் என்பவர்களை கிண்டலாக /வெறுப்பாக பார்க்கும்,சாதிரீதியான பெருமைகள் /இழிவுகள் சரி தான் என்ற எண்ணமே அங்கு மிகவும் பெரும்பாலோருக்கு இன்றும் உண்டு(பாரதியின் மறைவிற்கு கூட போகாத,அவரை சபித்த நம் தமிழகத்தின் 90 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலை தான் ).இங்கே போலித்தனமாக இருந்தாலும் சாதி வேண்டாம் ,ஒழியனும் என்று பேசுபவர்கள் பலர் உண்டு.தலைவர்களும் அதில் அடக்கம்.அதில் ஓரிரு சதவீதம் சொல்வதற்கு ஏற்ப உண்மையானவர்களாக இருந்தால் கூட அதுவே மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகம் தான்.
24 ஆண்டுகளுக்கு முன்னே கலைஞர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு செய்தார்.ஜெயலலிதா அனைத்து பெண்கள் காவல் நிலையம்,பெண் கமாண்டோ என்று பெண்கள் அனைத்து துறைகளிலும் மிளிர நடவடிக்கைகள் எடுத்தார்.
தமிழகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகமாக வேலைக்கு போவது,பெரிய பதவிகளில் சிறந்து விளங்குவது ,சாதி மறுப்பு திருமணங்களில் ஈடுபடுவது போன்றவற்றில் முன்னோடியாக உள்ளனர்.
மத்திய அரசு பணிகளில்,விளையாட்டு,கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் மற்றும் ஒதுக்கீட்டு வகுப்பினர் பெரும்பாலும் தென் மாநிலங்களை சார்ந்தவர்களே
தமிழகத்தில் சாதிகளுக்கு இடையே ஆன இடைவெளி குறுகி கொண்டே தான் வருகிறது.அதற்கு திராவிட இயக்கம் முக்கிய காரணம்

மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் திராவிட இயக்கத்தின் பலன்கள் புரியும்.திராவிட இயக்கம் இல்லாத /வலுபெறாத மாநிலங்களில் சாதி ஒழிந்து விட்டதா,சாதி அடிப்படையில் கொலைகள்,வன்கொடுமைகள் நடை பெறுவதில்லையா.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை முதலில் வழங்கியது திராவிட ஆட்சி தான்.சாதி மறுப்பு திருமணதிற்கு அரசு ரீதியான ஆதரவு,பரிசு,இட ஒதுக்கீடு வழங்கியது திராவிட கட்சிகள் தான்.பெண்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர் தான் .


முக்கால்வாசி மாநிலங்களில் வேறு மதத்தவர் நடத்தும் கடைகள்,உணவகங்களுக்கு யாரும் போக மாட்டார்கள்.வெகு எளிதாக மத,சாதி சண்டைகள் பற்றிகொள்ளும்.
பீகாரில் புமிஹார் பிராமணர்கள் ரன்வீர் சேனா என்று அமைப்பு வைத்து வார வாரம் படுகொலைகளை  நிகழ்த்துவார்கள்
அதே போல் குழந்தை திருமணங்கள்,பெண்ணை அடிமையாக நடத்துவது எனபது தான் அங்கு உள்ள நிலை.
சாதியை சொல்லி உரிமையை கோருவதும்,உரிமையை மறுப்பதும் தலைநகரங்களிலேயே சாதரணமாக நடக்கும்.வேறு சாதியை சேர்ந்தவர்களை திருமணம் செய்யலாம் என்ற நினைப்பு வரவே அங்கு இன்னும் அறை நூற்றாண்டு ஆகும்
திராவிட இயக்கத்தில் பல குறைகள் இருந்தாலும் மற்ற காங்கிரஸ்/இந்துத்வா கட்சிகள் கோலோச்சும் மாநிலங்களின் நிலையோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நம் நிலை பல மடங்கு மேல்





உட்டர்ப்ரதேசதில் மக்கள் வோட்டு பல துண்டுகளாக சிதறி உள்ளது.இப்போது முலாயமும் மாயாவதியும் மாறி மாறி வருவது பா ம க வும் விடுதலை சிறுத்தையும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது போல
இப்போது வெறியோடு ராஜு பையாகளும் யாதவ்களும் பழி தீர்த்து கொள்வார்கள்.இருவரின் ஆட்சியிலும் அதிக அட்டகாசம் உயர்சாதியினரான பிராமணர்,ராஜபுதிரகள் செய்வது தான்.
சோனியா சுஷ்மா மம்தா ஜெயா ஷீலா பதவியில் இருப்பதால் டௌரி ஒழிந்து விட்டதா,இல்லை பெண் சிசுகொலை குறைந்து விட்டதா
அதிக எண்ணிகையில் அனைத்து பதவிகளிலும் தலித்கள் ,பெண்கள் இருப்பது தமிழகத்தில் தான்.மத்திய அரசு பணிகளில் ,அரசு அதிகாரிகளாக குஜராத்திலோ இல்லை உட்டர்ப்ரதேசதிலோ கூட மத்திய அரசு பணிகளின் கீழ் ஒதுக்கீட்டு இடங்களை பிடிப்பது தமிழர்கள் தான்
 

சில ஆயிரம் பேர் உள்ள தேவதாசி முறைக்கு பெண்களை விட வைக்கப்பட்ட கருணாநிதி /அண்ணாதுரை திராவிட இயக்கத்தால் முதல்வர் ஆனது எந்த விதத்திலும் குறைந்த சாதனை அல்ல.
ஆந்திராவில் காங்கிரஸ் தலித் ஒருவரை முதல்வர் ஆக்கியதாலோ /இல்லை பா ஜ கா மத்தியில் பங்காரு தமிழகத்தில் கிருபாநிதி (அவரும் தி மு க வில் ஐக்கியமாகி விட்டார்)என்ன பெரிய மாற்றம் வந்தது.அவர்களுக்கு ஏதாவது சக்தி இருந்ததா.
ஒதுக்கீட்டு பிரிவினர் ஒட்டுமொத்தமாக முன்னேறி வருவதில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா
உத்தர் பிரதேசத்தில் ,குஜராத்தில் தமிழகத்தை விட அதிக அளவில் தலித்கள் மருத்துவராக,பொறியாளராக,வங்கி அதிகாரிகளாக,நீதிபதிகளாக,ஆட்சி பணி அதிகாரிகளாக வருகிறார்கள் என்று கூற முடியுமா.இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3384834.ece
On the other hand, when it came to the Backward Classes – other than Muslims for whom 49 posts were reserved, a total of 3,096 candidates (46.2 per cent), including 2,035 male and 1,061 female, participated in the examinations and 220 of them, equal to 47.83 per cent within the category, cleared all the four papers.
The next big success was achieved by Scheduled Caste candidates. About 1,341 (20.01 per cent) of them, including 977 male and 364 female, wrote the examinations and 111 got selected for the viva voce taking the percentage of successful candidates in their category to 24.13 per cent.



சாதி ,மத சண்டைகள் எந்த மாநிலங்களில் அதிகம் என்பதை பார்த்து விட்டு திராவிட இயக்கத்தை பழித்தால் ஞாயம்


எண்ணிக்கை அதிகமாக யார் இருந்தாலும்/அதிகாரத்திலும் பங்கோடு இருக்கும் போது அவர்கள் ஆதிக்கம் செய்வது தான் எங்கும் நடக்கிறது.அதை தடுப்பது தான் இட ஒதுக்கீடு
உத்தர் ப்ரதேச மாநிலத்தில் பிராமணர்கள் நம்ம ஊரில் உள்ள முக்குலத்தோர்,வன்னியர்,நாடார் போல குறிபிடத்தக்க சதவீதத்தில் உள்ளனர்.அங்க சும்மா அடிச்சு விளையாடுவாங்க
முக்கால்வாசி தாதா,கொலை கொள்ளை எல்லாவற்றிலும் திவாரி,ஷர்மா,திரிபாதி என்று தான் பெயர்கள் இருக்கும்
செல்வி மாயாவதியின் ஆட்சியில் ஒரு குப்தா என்ற பொறியியல் இன்ஜிநீரை அடித்து கொன்ற எம் எல் ஏ ஒரு திவாரி
http://articles.economictimes.indiatimes.com/2008-12-24/news/28465674_1_pwd-engineer-m-k-gupta-bsp-mla-shekhar-tiwari
இப்ப அகிலாஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தவுடன் கூண்டாஇசம் ,ஆட்டோ டிரைவர் அடித்து கொலை என்று செய்தி .பார்த்தல் ஒரு திவாரி யாதவ் என்பரை அடித்து கொலை செய்கிறார்
இடைநிலை மற்றும் மற்ற உயர்சாதியினரையே இந்த அடி அடிகிறார்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணி பாருங்கள்.
பார்சிகள் ஒன்றும் செய்வதில்லை மற்ற சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை போல என்றால் காரணம் எண்ணிக்கை. அவர்களின் பாதி எண்ணிகையில் பார்சிகள் இருந்தால் அவர்களும் புகுந்து விளையாடுவார்கள்
http://zeenews.india.com/news/uttar-pradesh/amarmani-tripathi-out-of-jail-for-2-months_729950.html
http://news.worldsnap.com/states/bihar/behind-bars-but-jd-u-legislator-munna-shukla-still-enjoys-minister-status-88475.html
வேறு மாநிலத்தில் மும்பையில் வசித்தாலும் தன் தங்கை கேரளாவை சேர்ந்த கீழ்சாதியை சார்ந்தவனை மணந்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தையே அழித்த திவாரி சகோதரர்களின் வழக்கில் நீதிபதியும் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்று தீர்ப்பு தந்ததும் இங்கு உண்டு
http://www.indlaw.com/guest/DisplayNews.aspx?8B2609C9-2E84-46DB-92F8-F2FDB42A0616



திராவிட இயக்கத்தால் அதிகம் பலனடைந்தது ஹிந்து மதமும்,பிராமணர்களும் தான்
இன்று இஸ்லாமை பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு,கிண்டல் செய்யும்,பழிக்கும் நிலைக்கு ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் பேசும் நிலையை உருவாக்கியது அம்பேத்கரும் பெரியாரும் தான்
அவர்கள் அடித்த அடியில் தான் தன பழமைவாதங்களை,பிற்போக்குத்தனங்களை,பெண்களை விலங்குகளை,அடிமைகளை விட கேவலமாக நடத்துவதை ஹிந்து மதம் விட்டு விட்டது
திராவிட இயக்கத்திற்கு முன்னால் லட்சக்கணக்கில் நாடார்கள்,வன்னியர்கள்,கள்ளர்கள்,மீனவர்கள்,உடையார்கள் என்று தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் கிருத்துவத்திற்கு மாறினர்
அவர்கள் அனைவருக்கும் சுயமரியாதையை உருவாக்கியதால்,எதிர்க்கும் சக்தியை தந்ததால் தான் மத மாற்றங்கள் நின்றன
இங்கு வந்த மிச்சிஒனரிகள் அளவிற்கு வட மாநிலங்களில் இருந்திருந்தால் அவை முற்றிலுமாக மாறியிருக்கும்.பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நாராயண குரு அவர்களின் பிராமணர்களை ஒதுக்கிய ஹிந்து மத வழிப்பாடுகள் வந்ததால் கூட பாதி தான் மத மாற்றம் இல்லாமல் தப்பித்து
பெரியாரால் தான் இங்கு மத மாற்றங்கள் தடுக்கப்பட்டன.கடவுள் இல்லை, இல்லவே இல்லை
கடவுளை நம்புபவன் முட்டாள் எனபது தான் மத மாற்றங்களை தடுத்தது
இங்கிருக்கும் பிராமணர்களையும் மற்ற மாநிலங்களில் (பக்கத்து மாநிலங்கள் உட்பட)உள்ளவர்களையும் ஒப்பிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பெரியாரால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் புரியும்
கடல் தாண்டினால் ஒதுக்குதல்,நன்கு படித்தவர்கள் கூட பெண்களை பதினெட்டு வயதில்,அதற்கு முன் திருமணம் செய்தல்,பெண்களை,விதவைகளை மிகவும் இழிவாக நடத்துதல் ,சாதி கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடித்தல் என்று 1930 லேயே பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவிலேயே சிறந்து விளங்குபவர்கள் தமிழக பிராமணர்கள் தான்.பிராமண பெண்களில் நல்ல பதவியில்,கலைகளில்,எந்த துறை எடுத்து கொண்டாலும் சிறந்து விளங்குபவர்களில் பெரும்பான்மையானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்
பெரியாரின் சாதி மறுப்பு திருமணங்களை பெருமளவில் ஆதரிப்பவர்கள் அவர்கள் தான்

பல மாநிலங்களில் வேலை செய்தவன்.அரசு ,பொதுத்துறை இரண்டிலும் வேலை செய்தவன் செய்து கொண்டிருப்பவன் என்ற முறையில் நான் பார்த்தவரை தமிழகத்தை சார்ந்த அரசு வேலையில்,தனியாரில் வேலை செய்பவர்களின் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம்
வட மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததால் வடகிழக்கில் மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து பெண்களை மனைவியாக எடுத்து கொண்டு வரும் வழக்கம் உண்டு.
பல நூற்றாண்டுகளாக அங்கு பெண்களை சில சாதிகளில் இருந்து எடுக்கலாம் ஆனால் கொடுக்க மாட்டோம் என்ற வழக்கமும் உண்டு
பிராமணர்களை மணந்த தலித்கள் என்று எடுத்து கொண்டால் தமிழகம் மற்ற மாநிலங்களை விட நூறு மடங்கு அதிகம்.
எந்த மத்திய அரசு,பொது துறை நிறுவனங்களில் வேண்டுமானாலும் நுழைந்து பாருங்கள்.அங்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிவார்கள்.
எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சாதிமறுப்பு திருமணம் புரிந்திருக்கிறார்கள் என்று புரியும்
சாதியை பொறுத்தவரை கிராமங்களின் நிலையில் தமிழகம் மிகவும் பின்தங்கி.பிற்போக்கான நிலையில் தான் உள்ளது என்பதை மறுக்கவில்லை

    எந்த சமூகத்தின் பெண்கள் அதிக அளவில் சாதி/மதம் கடந்து திருமணம் செய்து கொள்கிறார்களோ அந்த சமூகங்களின் ஆண்கள் தான் அளவுகடந்த வெறுப்பை திராவிட இயக்கங்களின் மேல் காட்டுபவர்கள்.

  திராவிட இயக்கம் இல்லாததால் இந்த மாநிலம்/பகுதி தமிழகத்தை விட மத நல்லிணக்கத்தில்,பெண் கல்வியில்,அணைத்து சாதியில் இருந்தும் மக்கள் உயர் பதவிகளுக்கு வருவதில் பல மடங்கு மேலே உள்ளது என்று எடுத்துக்காட்டுகளை எடுத்து வீசி விட்டு வெறுப்பை கொட்டினால் ஞாயம்