Thursday 2 August 2018

சுயமரியாதை


சுயமரியாதை என்ற சொல் கடவுள் நம்பிக்கை என்ற மூடநம்பிக்கைக்கு நேர் எதிரான ஒன்று.சுயம் என்ற ஒன்றே கிடையாது. சரணாகதி அடையாவிட்டால் பெரும் கேடு தான் என்று மிரட்டுவது தான் மதம்.கடவுள் சடங்குகள் .கடவுள் நம்பிக்கை உடைய ஒருவர் சுயமரியாதையோடு இருப்பார் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.
ஆண் என்றால் என்ன உரிமை உண்டு ,பெண் என்றால் எவ்வளவு பணிவு ,கீழ்ப்படிதல்,ஒதுங்கி வாழ்தல்,மறைந்து வாழ்தல் இருக்க வேண்டும்.எந்த வர்ணத்துக்கு என்ன மரியாதை தர வேண்டும்,யாரிடம் கோவப்படலாம்,யாரிடம் என்ன செய்தாலும் பணிவாக இருக்க வேண்டும் என்பது தான் இந்து மதம்.இந்த அழகில் இந்து மத நம்பிக்கை கொண்ட ஒருவரை பார்த்து சுயமரியாதைக்கு இழுக்கு என்று சொன்னால் திருதிரு என்று விழிக்காமல் என்ன செய்வார்.
மாண்புமிகு துணை முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வராக முதன் முதலில் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்ட போதே இதற்கு தயார் செய்யப்பட்டவர்.அவரை யார் யார் எப்படி இழிவுபடுத்தினார்கள் என்ற முழு தகவல்களையும் அவர் சொன்னால் சசிகலா அவர்கள்,தினகரன்.திவாகரன் அவர்களின் அடுத்த தலைமுறை என அனைவரும் அமைச்சர் நிர்மலா சீதாராமனை மிஞ்சிய கதை தெரியும்
குறிப்பிட்ட பதவிகளில் இருப்பவர்கள்,தனக்கு பதவி கிடைக்க காரணமாக இருப்பவர்கள் அவர்களை உடன்பிறந்த உறவுகள்,உடன்பிறவா உறவுகள் எபப்டி வேண்டுமானாலும் தன்னை மட்டம் தட்டலாம்,உதாசீனம் செய்யயலாம்,இழிவுபடுத்தலாம் என்பதை தான் அவரின் இந்து மத நம்பிக்கை அவருக்கு கற்று தந்திருக்கிறது.அவரை பார்த்து அவரை போல இந்துமத நம்பிக்கை உள்ள மக்கள் சுயமரியாதை என்று பேசுவது தான் வியப்பாக இருக்கிறது
மத நம்பிக்கை உடைய பெண்ணிடம் சென்று மாத உத்திர போக்கு தீட்டு என்று கருதுவது,கடவுளை வழிபட அந்த நாட்களில் கோவிலுக்கு செல்வது கடவுளுக்கு கோவம் தரும்,கடவுளை அவமானப்படுத்தும் செயல் என்று எண்ணுவது தவறு என்று சொன்னால் அவருக்கு வரும் அதே கோவம் தான் காலில் விழும் அமைச்சர்கள் முதல் உதாசீனம் செய்யப்பட்ட துணை முதல்வர் வரை வரும்.
சாமிக்கு ,வரம் தரும் சாமிக்கு,சாமியின் பூசாரிகளுக்கு, கடவுளாக தங்களை பாவித்து கொண்டு பாவ மன்னிப்பு தரும் பாதிரியார்களுக்கு , விசிறி சாமியார்களுக்கு ,ஜீயர்களுக்கு , பத்வா தரும் மௌல்விகளுக்கு எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ள,கோவித்து கொள்ள,தண்டிக்க உரிமை உண்டு எனும் நம்பிக்கையை தகர்க்காமல் ஆணும் பெண்ணும் சமம்,சாதி ,தீண்டாமை எல்லாம் ஒழியும் என்று நினைப்பது மூட நமபிக்கை தான்.
சுயமரியாதை என்பது சரணாகதி என்பதன் நேர் எதிர் நிலை.எந்த மத நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் சுயமரியாதைக்கும் சிறிது கூட தொடர்பு கிடையாது

என் வங்கி கணக்கில் ஒரு கோடி போட்டவரய்யா கலைஞர்



ரூபாய்க்கு மூன்று படி என்று சொல்லி ஆட்சியை பிடித்தார்கள்.ஆனால் கொடுத்தார்களா என்ற கிண்டலுக்கு பதிலாக இலவசமாக மாதாமாதம் குடும்பத்துக்கு பத்து படி கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியவர்.தமிழ்நாட்டை விட பல மடங்கு வருவாய் உள்ள மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்கள் யோசிக்க கூட தயங்கும் நிலையில் இதனை எளிதாக நிறைவேற்றியவர் கலைஞர்.
திமுகவை அவரின் கடைசி தேர்தலில் தோற்கடித்தது தமிழகம் அல்ல.கொங்கு பகுதி தான். அங்கு குறிப்பிடத்தக்க சதவீதம் உள்ள கொங்கு வெள்ளாளரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி,வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடிக்க காரணமாக இருந்தவர் கலைஞர். அங்கு குறிப்பிடத்தக்க சதவீதம் உள்ள இன்னொரு சமூகம் அருந்ததியர் சமூகம்.நாடெங்கும் பட்டியல் இனத்தின் உள்ளே முயற்சிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு நிறைவேற இன்றுவரை ஆயிரம் தடைகள் இருக்க ,அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எளிமையாக உறுதியோடு நிறைவேற்றி இன்றுவரை வெற்றிகரமாக தொடர காரணம் கலைஞர் .
மத அடிப்படையில் இட ஒதுக்கீடா,இட ஒதுக்கீடு தவறு .அப்படி கொடுத்தாலும் இட ஒதுக்கீடு இந்துக்களுக்கு மட்டுமே என்று கொதிக்கும் இந்துமதவெறி கூட்டம் இன்றும் அதிகமாக இருக்கும் சூழலில் கூட இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து அது வெற்றிகரமாக தொடர காரணம் கலைஞர்.
கலைஞரை அதிகம் திட்டிய சாதி தலைவர்களில் வன்னியர்களுக்கு எளிதாக முதலிடம் கிடைக்கும் .வன்னியர்களை,மீனவர்களையும் ,சீர்மரபினரையும் தனி பிரிவாக்கி இருவது சதவீத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி நிறைவேற்றியவர் கலைஞர் .
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது முட்டாள்தனம் என்று இன்றுவரை சொல்லும் கூட்டமே நாடெங்கும் அதிகமாக இருக்க ,இதனை முப்பது ஆண்டுகளுக்கு சாத்தியமாக்கியவர் கலைஞர்
மூன்று மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பதை பெரும் மாற்றமாக முன்வைக்கும் மதவெறி கூட்ட தலைவனின் வெட்டி பேச்சுக்களுக்கு இருவது ஆண்டுகளுக்கு முன்பே மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி என்று திட்டமிட்டு அதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர். இன்றும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.
பட்டதாரி இல்லா குடும்பங்களை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு இதன் அடிப்படையில் முற்பட்டோர் உட்பட ஐந்து ஊக்க மதிப்பெண்கள் தந்த அரசு கலைஞரின் அரசு. அதனை சாதிவெறி நீதிமன்றங்கள் அடிக்க அதன் அடிப்படையில் இன்றுவரை கட்டண சலுகை ,ஸ்காலர்ஷிப் தரும் மாநிலம் தமிழ்நாடு
கிராமப்புற மாணவர்களுக்காக கிராமப்புற இட ஒதுக்கீடு கொண்டு வந்த அரசு கலைஞரின் அரசு தான் .இதனால் பலனடைந்து மாணவர்களை கண்டு வெறுப்புக்கொண்ட நீதிமன்றங்கள் இத்தனையும் நிராகரிக்க மனம் தளராத விக்ரமன் போல நுழைவு தேர்வு பெண்களுக்கு,கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு தடையாக இருப்பதால் அதனை நீக்கியவர் கலைஞர் தான்
அற்புத நுழைவு தேர்வுகளின் காரணமாக IITJEE போன்ற தேர்வுகளில் மாணவிகள் வெறும் எட்டு சதவீத இடங்களை பிடிக்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடித்து அவர்களுக்கு கூடுதல் இடங்களாக 14 சதவீதம் என்று கல்வியில் ஒதுக்க முயற்சிப்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன் பணிகளில் சாதித்த அரசு கலைஞரின் அரசு.அரசு பணிகளில் பெண்களுக்கு முப்பது சதவீதம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்ட அரசு கலைஞரின் அரசு
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் குறைய ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியைகள் மட்டும் தான் என்று உத்தரவிட்டு நிறைவேற்றிய அரசு கலைஞரின் அரசு. இன்றும் மத்திய அரசு பள்ளிகளிலோ ,மற்ற மாநிலங்களிலோ இந்த நிலை கிடையாது.தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களில் நான்கில் மூன்று பங்கு பெண்களுக்கு தான் எனும் சூழலுக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் .
இன்றும் மத்திய அரசு பள்ளிகளில் ,பல ஆயிரம் கோடிகளை வடமொழிக்கும்,இந்திக்கும் ஒதுக்கும் அரசு பள்ளிகளில் படிக்க ஆண்டுக்கு சில ஆயிரம் கட்டணம் உண்டு.ஆனால் அரசு பள்ளிகளில்,நகராட்சி பள்ளிகளில்,அரசு உதவி பெரும் பள்ளிகளில் பள்ளி படிப்பு,புத்தகம்,சீருடை,உணவு,முட்டை ,சைக்கிள் முதல் லேப்டாப் வரை இலவசமாக கிடைக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் .இதில் பெரும்பான்மை நலத்திட்டங்களுக்கு முக்கிய காரணம் கலைஞர்
தாய் தந்தை இருவரில் யார் சாதியை வேண்டுமானாலும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள் எடுத்து கொள்ளலாம் என 44 ஆண்டுகளுக்கு முன் சட்டம் போட்டவர் கலைஞர்.அதனை மூர்க்கமாக இன்றுவரை மறுப்பவை சாதிவெறி நீதிமன்றங்கள் .சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கொடுத்த அரசு கலைஞரின் அரசு .வழக்கம் போல அதனை வெறி கொண்டு அழித்த கூட்டத்தை சொன்னால் தான் தெரியுமா ?
மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல பேருந்தில் இலவச பாஸ் கொடுத்த அரசு கலைஞரின் அரசு
எல்லாரும் பாஸாகி பள்ளி படிப்பை முடித்தால் ,எளிதாக மருத்துவம்,பொறியியல் ,சட்டம் ,காலை கல்லூரிகளில் சேர்ந்து கல்லூரிகளில் சேர்ந்து பட்டதாரி ஆனால் கல்விக்கு என்ன மதிப்பு என்று சிந்திக்கும் படிப்பை கடினமாக வைத்திருந்த சைக்கோ கூட்டத்தின் பிடியில் இருந்து கல்வியை மீட்டு இந்தியாவில் பள்ளிகளில் தேர்ச்சி பெரும் மாணவ மாணவிகள்,கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவர்கள் GER சதவீதத்தில் முதலிடம் பெற முக்கிய காரணமய்யா கலைஞர்
மத்திய அரசு பல ஆயிரம் கோடி ஒதுக்கும் அய்ய்ம்ஸ் மருத்துவமனையில் இன்றும் பெரும்பான்மை நோயாளிகளுக்கு அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.இலவசமாக பெரும்பான்மை மக்கள் தமிழ்நாடெங்கும் மருத்துவம் பார்த்து கொள்ளும் வலுவான கட்டமைப்பை உருவாக்கியதில் கலைஞரின் பங்கு அளப்பரியது
பென்ஷனோடு பொங்கல் பரிசு வாங்கும் ஆசிரியையின் மகனாக ,இட ஒதுக்கீடு ,ஊக்க மதிப்பெண் மூலம் மருத்துவ படிப்பு படித்த மருத்துவனாக,இஸ்லாமிய ,கிருத்துவ உறவுகளோடு ,பல ஆயிரம் நட்பு ,சுற்றம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இலவசமாக பள்ளி படிப்பு படித்து ,ஸ்காலர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பு முடித்து, 69 சதவீத இட ஒதுக்கீடு ,அதிகரித்த அரசு ,தனியார் வேலைகள் , பெண்களுக்கான ,இட ஒதுக்கீடு,உள் ஒதுக்கீட்டு கோட்டா மூலம் பணி கிடைத்த தமிழ்நாட்டு குடிமகனாக கணக்கிட்டால் என் வங்கி கணக்கில் கலைஞர் போட்டது
எளிதாக கோடியை தாண்டும்

உழைப்பு தாழ்வு தரும்


சீர்திருத்தங்களுக்காக,துணிச்சலுக்காக , சமுதாய மாற்றங்களை கொண்டு வந்ததால் தோற்கடிக்கப்பட்ட விசித்திர தலைவர் கலைஞர்
கலைஞர் எடுத்த பெரும்பாலான முடிவுகளால் பயன்பெற்றவர்கள் அவரை தோற்கடித்தது தான் தமிழகத்தின் கடந்த நாப்பது ஆண்டு கால வரலாறு.1989 முதல்வராக பதவியேற்ற பிறகு ,திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் சில
பெண்களுக்கு சொத்துரிமை
பெண்களுக்கு அரசு பணிகளில் முப்பது சதவீதம் என்று முடிவெடுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.ஆண்களை எடுத்து கொண்டால் பத்தில் ஐந்து பேர் திமுகவாக இருப்பார்கள்.ஆனால் பெண்களில் பத்தில் இரண்டு,மூன்று தான்.எம்ஜிஆர் துவக்கிய காலம் முதல் ஜெஜெ அவர்கள் தோல்வி அடைந்த தேர்தல்கள் உட்பட பெண்களின் வாக்கு அதிமுகவுக்கு தான் அதிகம்..எங்கள் சமுதாயத்தில் படித்த பெண்கள் வெகு குறைவு.இதனால் எங்களுக்கு அதிக பாதிப்பு என்று இந்த முடிவை எதிர்த்தவர் மருத்துவர் ராமதாஸ்
பழங்குடி மக்களுக்கு தனியாக ஒரு சதவீத இட ஒதுக்கீடு செய்து 68 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு 69 சதவீதமானது.பழங்குடியினர் தவிர்த்து பட்டியல் இனத்தவருக்கு முழுமையாக 18 சதவீத இடங்கள் கிடைத்தது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் பிரிக்கப்பட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கப்பட்டது.மிக பெரும் அநியாயம் என்று போராடிய பாமகவும் குறை சொன்னது.பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வந்த சாதிகளின் தலைவர்களும் பொங்கி குதித்தனர்.
கிருத்துவ சமுதாயத்தினை வன்னியர்களுக்கு,மீனவர்களுக்கு தமிழ்நாட்டில் எம் பி சி கிடைக்க வழி செய்தார்.பாஜக ஆதரவு எனும் காலை சுற்றிய பாம்பு இலலாவிட்டால் வி பி சிங் அவர்களின் தேசிய முன்னை அரசு கிருத்தும்,இஸ்லாம் பின்பற்றும் பட்டியல் இன மக்களுக்கு பட்டியல் இனத்தின் கீழ் இட ஒதுக்கீடு செய்திருக்கும்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
பட்டதாரி இல்லா குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஊக்க மதிப்பெண். மருத்துவரின் மகனான அருமை தோழர் அரவிந்தன் கண்ணையன் அது என்ன மருத்துவர்களின் மகன்கள் தான் மருத்துவ கல்லூரிகளில் அதிக இடங்களை பிடிக்கிறார்களாமே .அதனை அழிப்பேன் என்று இந்த முடிவை கலைஞர் எடுத்தார் என்று சொல்லும் போது தான் சுரீர் என்று உரைத்தது.முதல் தலைமுறையிலேயே பொறியியல் ,மருத்துவம் பட்டதாரிகளை அதிகம் உருவாக்க முயற்சிப்பதால் அவருக்கு கிடைக்கும் அரசியல் ரீதியான பலன்கள் என்ன ?ஒன்றும் கிடையாது
இழப்பு மிக மிக அதிகம். எந்த சாதியாக இருந்தாலும் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த அதிகார வர்க்கத்தை முழுவதுமாக சினம் கொள்ள வைக்கும் முடிவு அது.இருந்தும் அதனை துணிந்து எடுத்து அதற்கான இழப்பை மிக அதிகமாக 1991 தேர்தலில் பெற்றார்.
இந்திய அமைதிப்படையை திரும்ப பெற வி பி சிங் தலைமையிலான மத்திய அரசில் பங்கு பெற்ற திமுக முக்கிய [அங்கு வகித்தது.இந்தியா திரும்பிய அமைதி படையினரை வரவேற்க இருக்கும் நடைமுறையான மாநில முதல்வர் செல்லும் நிகழ்வை புறக்கணித்த கலைஞரை இன்றும் அதற்காக திட்டும் ராணுவ அதிகாரிகளுக்கு குறைவு கிடையாது
கலைஞரும் திமுகவும் இலலாவிட்டால் விடுதலை புலிகள்,போராளிகளை அன்றே உருத்தெரியாமல் அழித்திருப்போம்..ஆனால் கலைஞரின் அழுத்தம் காரணமாக வி பி சிங் அவர்கள் எடுத்த முடிவினால் இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு பெரும் களங்கமாக இந்திய அமைதி படை நடவடிக்கை,வாபஸ் இருக்கும் என்று அன்றும் இன்றும் பேசாத ,எழுதாத ராணுவ உயர் அதிகாரிகள் வெகு குறைவு
பல சீர்திருத்த முடிவுகளை எடுத்த பிறகு கிடைத்த பரிசு 1989 பாராளுமன்ற தேர்தல் தோல்வி
.மண்டல் கமிஷனை முழுமையாக எதிர்த்த ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஜெஜெ அவர்கள் தலைமையிலான அதிமுகவோடு கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஒரு தொகுதியில் கூட வெல்லாத ,திமுக கூட்டணியில் cpi நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற சூழலுக்கு பின் இருந்த ஒரு வருடத்துக்கு குறைவான ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றில் சில
மண்டல் கமிஷன் பரிந்துரை நிறைவேற்றம் ,புத்த மதம் தழுவிய பட்டியல் இனத்தோருக்கு பட்டியல் கீழ் ஒதுக்கீடு.அண்ணலுக்கு பாரத் ரத்னா , காவிரி நடுவர்நீதி மன்றம் அமைப்பு என அனைத்திலும் திமுகவுக்கு முக்கிய பங்குண்டு
.மிக தெளிவாக காங்கிரஸ் ,அதன் தலைவர் ராஜீவ் மண்டல் கமிஷனுக்கு எதிரான நிலை எடுத்த பிறகும் ,ஈழத்தில் போராடும் போராளி குழுக்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் ஆளுநர் ஒத்து கொண்டு சம்மதிக்காத சூழலிலும் otherwise பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆர் வி ,காங்கிரஸ் ஆதரவுடன் இயங்கிய சந்திரசேகர் அரசு பரிந்துரையின் பேரில் ஆட்சியை கலைத்த பிறகு நடந்த தேர்தலில் கலைஞர் ஒருவரை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை பரிசாக தந்த மாநிலம் தமிழகம்

விறகை எரித்து விமானம் ஓட்டும் வீலர்களும் ஹீலர்களும்


மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பின் போது இறப்பு நிகழாதா என்று பல இயற்கை அறிவாளிகள் அற சீற்றம் கொண்டு பொங்கும் கேள்விகள் பல இடங்களில் இருந்து வருகின்றன .வீட்டில் பிரசவம் பார்க்க சொல்லி தருகிறேன் என்பதை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை கிண்டல் செய்து மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் மருத்துவமனையை மூடி விடுவீர்களா என்றும் கேள்விகள் வந்து கொட்டுகின்றன.
அறுவை சிகிச்சை நிபுணரான என் நண்பருக்கு இந்தியாவின் சிறந்த ராணுவ மருத்துவமனைகளில் ஒன்றான கொல்கத்தா ராணுவ மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.ஆனால் பிரசவத்தின் போது ஏற்பட்ட ஒரு உடல்நல குறைபாடு காரணமாக சுற்றிலும் பல சிறந்த, பல்லாண்டு அனுபவம் உள்ள மருத்துவர்கள் இருந்தும் தாயை காப்பாற்ற முடியவில்லை.மரணம் எங்கும் நிகழலாம்.ஆனால் அதனை தடுக்க ,அது போன்ற சூழல் வரக்கூடிய நிலைகளை வராமல் தடுக்க
அனைத்து முயற்சி ,ஆராய்ச்சி எடுப்பது தான் அறிவியல் சார்ந்த மருத்துவம்.
விமான விபத்து நடந்தால் விமான நிலையங்களை மூடி விடுவீர்களா, கப்பல் கவிழ்ந்தால் கப்பல் போக்குவரத்தை மூடி விடுவீர்களா என்றும் இதே போல கேட்கலாம்
விபத்துக்களை தடுக்க முடியாது .ஆனால் பறக்க சொல்லி தருகிறேன் என்று மலை உச்சிக்கு மக்களை அழைத்து சென்று குதிக்க வைக்கும் முயற்சியை ,நடு கடலில் சென்று நடக்க சொல்லி தருகிறேன் என்று சொன்னால் விட்டு விட வேண்டுமா ?
விமானம் ஓட்ட,தயாரிக்க ,அதனை பரிசோதிக்க ,விபத்தை தடுக்க பல்வேறு விதிகள்,முறைகள் உண்டு. இது மருத்துவமனைகளுக்கு பொருந்தும்.அதனையும் மீறி விபத்துகள் நிகழும்.அதில் இருந்து பாடம் கற்று அந்த குறைகள் சரி செய்யப்படும்.இது மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்
முதல்முதலில் விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தை இப்போது ஓட்ட முயற்சித்தாலும் அப்படி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.அந்த விமானங்களில் விபத்துக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.அதனை விட ஆற்றல் வாய்ந்த ,விபத்துக்களை பெருமளவு குறைக்க கூடிய நவீன விமானங்கள் வந்து விட்டதால் அதனை பயன்படுத்துவதே குற்றம் தான்.
இது மருந்துகளுக்கும் ,பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கும் பொருந்தும்.மயக்கவியல் துறையில் பெரும்புரட்சியை ஏற்படுத்திய க்ளோரோபார்ம் மருந்தை இப்போது யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.பயன்படுத்தினால் தண்டனை தான்.சென்ற நூற்றாண்டில் இருந்த பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளும்,மருந்துகளையும் இப்போது பயன்படுத்துவது குற்றம்
அறிவியல் என்பதன் அடிப்படையே புரியாத கூட்டம் ஒன்று உருவாகி இருப்பது மிகவும் வேதனையான ஒன்று.விறகு எரித்து விமானத்தை ஓட்டுகிறேன் என்பதற்கும் அவரவரே அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்,பிரசவம் பார்த்து கொள்ளலாம் ,உணவே மருந்து,கோமியமே அருமருந்து என்பதற்கும் வித்தியாசம் கிடையாது.ஆனால் மின்சாரம்,ஆயுதம்,வாகனங்கள் ,தொலை தொடர்பு சாதனங்கள்,செயற்கைகோள் என்று வரும் போது விஞ்ஞான மாற்றங்களை பயன்படுத்தி கொள்ளும் கூட்டம் ,அதன் துணையோடு மருத்துவ துறையை அடித்து துவம்சம் செய்வதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை

Saturday 14 April 2018

இஷ்ரத் ஜஹான் -கௌஸர் பி -ஆஷிபா


ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடத்தி,அடைத்து வைக்கப்பட்டு ,மயக்கம் கொடுத்து காவல்துறையினர் உட்பட பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆசிபா சிறுமியாக அதுவும் குழந்தையாக இருந்ததால் தீவிரவாதியாக மாற்றப்படவில்லை.இதற்கு முன் இதே போல கொடூரமாக கொலை செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் ,கௌஸர் பி மற்றும் ஆசிபா கொலைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் கிடையாது.
ஆனால் அந்த கொலைகளின் காரணகர்த்தாக்கள் இதனை மெடல் போல அணிந்து தேர்தல்களில் மகத்தான வெற்றி அடைந்து நாட்டை ஆளும் இடத்தில அமர்ந்து இருப்பதை தெளிவாக மறைத்து விட்டு கடும் தண்டனை கொடுத்தால் ,குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்தால்,இவற்றை குற்றமாக பார்க்காத மாநில அமைச்சர்கள் பதவி விலகினால் சரியான தண்டனை கிடைத்ததை போன்ற பிம்பத்தை உருவாக்க பல நடுநிலையாளர்கள் வழக்கம் போல முழுமுயற்சி எடுக்கிறார்கள்.
கணவனோடு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை , ஒரு சிறு வழக்கில் கூட சந்தேகப்படும் குற்றவாளியாக இல்லாத கல்லூரி மாணவியை ஆசிபா போல கொடூரமாக கொன்ற கூட்டத்தின் ஆட்சியில் இதை போன்ற கொடூரங்கள் நடைபெறுவது ஆச்சரியமா என்ன ?
கௌஸர் பி வழக்கை விசாரித்து வந்த நீதிபதிக்கு ஏற்பட்ட முடிவு உணர்த்தும் செய்தி என்ன ?ஒட்டுமொத்தமாக ஒரு பெருங்கூட்டத்தை இது போன்ற கொடூர குற்றங்களை புரிவதை மதத்துக்காக,தேசத்துக்காக செய்யும் அரும்பெரும் செயல் போல உருவாக்கி வைத்திருக்கும் சங்க பரிவாரங்கள் சக்தி பயம் தருகிறது.
இதனை அந்த மதத்துக்காரர்கள் செய்யவில்லையா?இந்த மாநிலத்தில் நடக்கவில்லையா?அந்த நாட்டில் நடக்கவில்லையா என்று எளிதாக மடைமாற்றும் ஆற்றல் வேதனையை தருகிறது.பழங்குடி இனத்தை சார்ந்த ஒருவர் தங்கள் சாதி,மதத்தை சார்ந்த மக்கள் வசிக்கும் இடத்தில நிலம் வாங்கியதை மூர்க்கமாக எதிர்த்தவர் தான் முக்கிய குற்றவாளி என்பதை படித்தால் இந்த கொடூர செயலுக்கான உளவியல் காரணம் விளங்கும்.
பிரிவினை கொடூரங்களோ,காதலுக்கு எதிரான ஒரே கோத்திர ,சாதி ஆணவ கொலைகளோ ,மாட்டுக்கறியா சாப்பிடுகிறாய் என்று கொலை செய்யும் நிகழ்வுகளோ ,இதற்கு பின்னே இருப்பது மாற்று கருத்து,உணவு,மதம்,கடவுள் ,மொழி மீதான வெறுப்புணர்வு தான்.இது தரும் ஜஸ்டிபிகேஷன் தான் எந்தவித குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் கொலைகளை,பாலியல் வன்முறைகளை புரிய வைக்கிறது.

சீருடை பணியாளர் எனும் ஆண்ட சாதி



 மக்கள் ஆட்சி,மன்னர் ஆட்சி,சர்வாதிகாரம் என எதுவாக இருந்தாலும் ஆண்ட சாதி சீருடை பணியாளர் தான்.இதனை மாற்றாதவரை கொடூர குற்றங்களும்,குரூரத்தின் உச்சங்களும் குறையாது.

 கடுமையான தண்டனைகள் குற்றங்களை குறைக்கும் என்ற போலியான ஆனால் பெரும்பான்மை மக்களால் நம்பப்படும் கருத்தே இந்த ஆண்ட @ஆணவ சாதிக்கு இன்னும்  அதிக அதிகாரம் கொடுக்க செய்யப்படும் பிரச்சாரம் தான்.எந்த குரூர குற்றமாக இருந்தாலும் அங்கு சீருடை பணியாளரின் பங்கு இல்லாமல் இருக்கவே இருக்காது.

  இதனை மாற்ற ,குற்றங்கள் குறைய முதலில் காவல்துறை,ராணுவம் என அனைத்திலும் பாதிக்கு பாதி பெண்கள் வர வேண்டும்.பயிற்சியில் பல மாற்றங்கள் வர வேண்டும்.இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.எந்த காவல் நிலையமாக,ராணுவ யூனிட்டாக இருந்தாலும் எந்தவொரு மதம்,சாதி குழுவின் ஆதிக்கமும் இல்லாத சூழல் உருவாக வேண்டும்.

  சட்டத்துக்கு புறம்பான குரூரங்களை குற்றவாளிகளை பிடிக்க உதவும் வழிகள் என்று செய்வதை ஆதரிக்கும் போக்கு முழுமையாக மறைய வேண்டும் .என் குஞ்சை பார்க்கும் போது கூட அங்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட பல நூறு இளைஞர்களின் அலறல் நினைவுக்கு கொண்டு வரும் குற்ற உணர்ச்சியை ஆண்டுகள் பல கடந்தாலும் மறக்க முடியவில்லை

 இன்னொரு பக்கமாக  சாலையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடிப்பில் மாட்டி கொண்ட சக ஆபிசர் ஒருவருக்கு தினமும் சிறுநீர் போகவே மேல் மெட்டல் cathether மூலம் தான் முடியும். வெடிகுண்டால் தூளான ஆணுறுப்புக்கு பதிலாக  அறுவை சிகிச்சை மூலம் சிறு தோல் சார்ந்த பள்ளம் மட்டுமே அவருக்கு 32 வயதில் கிடைத்த பரிசு..

 எதற்காக போர்,போராட்டம் ,கொலைகள் என்ற எண்ணம் வலுப்பட வேண்டும்,.எதனையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கும் சூழலை நோக்கி முன்னேற வேண்டும்.மதம்,சாதி,தேசியம், மொழி என எதனையும் வெறியோடு தன் குழந்தைகள் மீது கூட திணிப்பது பெரும் வன்முறை என்று எண்ணம் வலுப்பெற வேண்டும்.இந்த எண்ணம் கொண்டவர்களே சீருடை பணியாளர்களாக வர வேண்டும்.

 தனி நபர் குற்றங்களுக்கும் சீருடை பணியாளர் பங்கு பெரும் குற்றங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு.இது புரியாத ஆன்மீக முட்டாள்களுக்கு அரசியல் மீது ஆசை வராமல் இருக்க வேண்டும்.இது சமூகத்திற்கு இழைக்கும் அநீதியின் ஆழம் அனைவர்க்கும் புரியும் சூழல் வர வேண்டும்.

Sunday 1 April 2018

கற்பு,புனிதம்,தேசியம்

தேசியவாதம் என்பது கொடிய நோய்.அது இருந்தால் மற்ற நல்ல குணங்கள் அனைத்தும் அழிந்து விடும்.மாற்று கருத்து உள்ளவர்களை  மதிக்காமல் மிதிப்பது தான் தேசியவாதம் என்று அழைக்கப்படுகிறது.கற்பு புனிதம்,தேசியம்,அதற்காக உயிரையும் இழப்பேன்  என்று பேசுவதெல்லாம் ஒரு வகை மன நோய் தான்.

  ஒன்றாக இருப்பதால்,கூட்டமைப்பாக இருந்தால் என்ன நன்மைகள்,தனியானால் என்ன பாதிப்புகள் என்று தேசியம் பேசுவோர் பேசினால்,விளக்கினால் அர்த்தம் உண்டு. விடுதலை என்பதே ஒரு ஏமாற்று வேலை மதவெறி,சாதி,இனவெறி போட்டு கொள்ளும் முகமூடி என்றால் நியாயம்.அதை விட்டு விட்டு எங்கு பிறந்து என்ன சிந்தனை.இதனை சிந்தித்தாலே கொலை செய்து விடுவேன் என்று துடிக்கும் ஆணவ கொலை
கூட்டம் போல கோவம் கொண்டு குதிப்பது நியாயமா

   பிரிவினை கோருதல் எனும் உரிமை மணமுறிவு போன்ற ஒன்று தானே .நியாயமான காரணங்களுக்காகவோ அநியாயமான காரணங்களுக்காகவோ கேட்க கூட உரிமை உண்டு என்பதை வலியுறுத்த தான் மக்கள் ஆட்சியையும்,சட்டங்களும் உருவாக்கப்பட்டன.முதிர்ச்சி அடைந்த மக்கள் ஆட்சிகளில் அதற்கு வழி இருக்க வேண்டும் என்று தானே நாகரீக சமூகம் போராட வேண்டும்.

இந்து சனாதனி போல மணமுறிவு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இது இறைவன் போட்ட முடிச்சு என்று நடுநிலையாளர்கள் மற்றும் தேசியவாதிகள்  ஆடும் வெறியாட்டம் உண்மையில்  விளங்கவில்லை.சீக்கியர்கள்,நாகா ,குக்கி,சோரன்,காஷ்மீரி ,மலையாளி,அந்தமான் வாழ் ஜராவா இன மக்கள்,கன்னடியர்கள் ,தமிழர்கள் என பலரின் கூட்டமைப்பு தானே இந்தியா.இவர்கள் ஒட்டுமொத்தமாக சம உரிமைகள் அல்லது தனிவாழ்வு என்று முடிவெடுத்தால் யார் தடுக்க முடியும்

வன்முறை இல்லாமல் இந்த மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாதா என்ன ?முதிர்ச்சி அடைந்த மக்கள் ஆட்சி அதனை நோக்கி தானே செல்ல முடியும்

    நாகாலாந்து மக்களின் போராட்டத்தை தமிழர்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றோ வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு  தனி நாடு கோரும் சூழலுக்கு தள்ளப்படுகிறது எனும் கோசத்தை நாகா  இன மக்களும் காஷ்மீரிகளும், சீக்கியர்களும்,குக்கி இன மக்களும் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா ?ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டமைப்பை பிரிவில்லாத ஒத்த சிந்தனை உள்ள குழு போல அகண்ட பாரத கோஷ்டி தான் பேசும் என்று நினைத்தால் தேசியவாதிகள் என்ற போர்வையில் மற்றவர்களும் வெறியாட்டம் ஆடுவது வேதனை தான்

  பெண்ணாக பிறந்தவள் ஆணை நம்பி தான் வாழ வேண்டும் என்பது போல மத்திய அரசை ஆணாகவும் ,மாநில அரசுகளை பெண்ணாகவும் உருவகப்படுத்தி ,எவ்வளவு துணிச்சல் கொழுப்பு இருந்தால் ,பிரிந்து செல்வேன் என்று சொல்வாய்.என் கை பூப்பறித்து கொண்டு இருக்காது என்று  தேசியவாதிகள் ஆடும் வெறியாட்டம் அச்சமூட்டுகிறது ஒருபுறம் என்றால்

  மறுபுறம் நாங்கள் நினைத்தால் இன்றே கிடைத்து விடும் தனி நாடு என்று கிசுகிசு மூட்டும் கூட்டம் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகிறது.சமூக வலைத்தளங்களில் சம உரிமை கொடு,தீர்ப்பை அமுல்படுத்த,மாநிலத்துக்கு உரிய பங்கை ,சுயாட்சியை கொடு அல்லது பிரிந்து செல்வோம் என்ற குரல் வந்தால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் ஆட்சி அமையும் சூழலை நோக்கி செல்ல வேண்டிய தூரம் வெகு வெகு அதிகம்.

  அந்த நாளுக்காக போராட வேண்டிய வழியே வேறு.அரசு இயந்திரம் மிருகத்தனத்தின் உச்சம்.நாகா இன மக்கள்,சீக்கியர்கள்,காஷ்மீரிகளை என பல ஆண்டுகளாக பல ஆயிரம் உயிர்கள் பலியானது தான் மிச்சம்.ஈழத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடந்த கொடூரங்களை,படுகொலைகளை கண்டு ரசித்த அரசு இயந்திரங்கள்,ராணுவங்கள் தான் மிக மிக பெரும்பான்மை.இது தான் நிதர்சனமான உண்மை

  பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கேட்டு போராடிய குழுக்களின் பிரதிநிதிகளே பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்கள்.சீக்கியர் அடையாளமான கத்தியோடு தான் பாராளுமன்றத்துக்குள் வருவேன் என்று ,அனுமதி மறுக்கப்பட்டதால் பாரளுமன்றத்துக்கு செல்லவும் மறுத்தார்கள்.மத்திய அரசு நடத்திய சட்டமன்ற தேர்தலில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மக்களே வாக்களிக்கும் சூழல் நிலவியது.இந்த குறைந்த வாக்குகளின் அடிப்படையில்  வெற்றி பெற்றவர்களை வைத்து உருவான அரசு காவல்துறை ,ராணுவம் துணை கொண்டு ஆடிய வேட்டையில் பல ஆயிரம் இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.இதில் மிக பெரும்பான்மையானோர் எதனோடும் தொடர்பில்லாத அப்பாவிகள் தான்.

Thursday 8 March 2018

இஷ்ரத் ஜகான்,கௌஸர் பி,வேளச்சேரி என்கவுன்ட்டர் கொலைகள்,உஷா படுகொலை



  திருச்சியில் காவல்துறையினர் அராஜகத்தினால் கொல்லப்பட்ட மூன்று மாத கர்ப்பிணியான உஷாவின் மரணம் பலரை உலுக்கி ருக்கிறது.ஆனால் கேரளாவில் திருடன் என்று சந்தேகத்தில் அடிக்கப்பட்டு அதன் காரணமாக உயிர் இழந்த மதுவின் படுகொலையின் போது பொங்கிய அதே என்கவுன்ட்டர் ஆதரவு கூட்டம் இங்கும் பொங்குவது கோவத்தை தான் தருகிறது.

  பதிலுக்கு பைக்கை எட்டி உதைத்த காவலர் துடிக்க துடிக்க கொல்லப்பட வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.இந்த மனநிலை தான் உஷாவின் உயிர் இழப்புக்கு காரணம் என்பதை புரிந்து கொள்ளாத மூடர் கூடமாக இன்னும் பலர் இருப்பது வேதனை தான்.சந்தேகப்படும் குற்றவாளியான கணவனோடு சேர்ந்து கொல்லப்பட்ட கௌஸர் பி படுகொலையை சரி என்று ஆரவாரித்து கைதட்டி கூட்டத்துக்கு இங்கு கோவப்பட ஏதாவது நியாயம் இருக்கிறதா ?

  கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹானை ,இது போல திடீர் வெறித்தனம் காரணமாக எட்டி உதைத்து உஷாவின் படுகொலை நடந்ததை போல அல்லாது ,திட்டமிட்டு படுகொலை செய்து தீவிரவாதி போல செட்டப் செய்த காவல்துறையினரும் அதன் காரணகர்த்தாக்களும் உயர்பதவியில் இருப்பதை வெறி கொண்டு ஆதரிக்கும் கூட்டம் இருக்கும் வரை இந்த படுகொலைகள் தொடர்கதையாக தொடர தான் செய்யும்.

  அரச பயங்கரவாதம்  தனி நபர் மற்றும் அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தை விட பல மடங்கு கொடியது.அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கும் யாரும் மது கொலை மற்றும் உஷாவின் படுகொலை கண்டு கௌஸர் பி ,இஷ்ரத் ஜகான் படுகொலைகளின் போது தெரிவித்த ஆதரவை தெரிவித்தால் அவர்களின் வெறித்தனத்துக்கு நேர்மையாகவாவது இருப்பதாக அர்த்தம்.

   நான் யார் தெரியுமா என்பது தான் உடுப்பு தரும் முதல் குணம். நான் சொல்வதை நீ கேள் என்பது அடுத்தது.இவற்றை மாற்றாதவரை காவல்துறையோ ,ராணுவமோ கொலைகளை செய்ய தயங்காது.இதிலாவது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எட்டி உதைத்த காவலர் ஈடுபட்டிருக்க மாட்டார். ஆனால் என்கவுன்ட்டர் கொலைகளில் ஈடுபட்ட காவலர்கள் அனைத்தும் தெரிந்தே ,அப்பாவிகளையோ ,சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளையோ குற்ற உணர்ச்சியே இல்லாமல் கொல்பவர்கள்.

      அவற்றை தடுக்க மக்கள் ஆட்சியின் அனைத்து தூண்களும் ,மக்களோடு இணைந்து முழுமூச்சோடு  செயல்பட்டால் தான் இதற்கு ஒரு முடிவு வரும்..

Wednesday 7 March 2018

மகளிர் தினம்


பெரியார் மீது இடது முதல் வலது வரை பல வித போர்வைகளை போர்த்தி கொண்டிருக்கும் பலர் வைக்கும் முக்கிய குற்றசாட்டு அவருக்கும் மணியம்மை அவர்களுக்கும் நடந்த திருமணம்.திருமணம் நடந்த போது அவருக்கு எழுவது வயது.மணியம்மைக்கு 32 வயது.மணியம்மை அவர்கள் விரும்பி செய்து கொண்ட திருமணம்.பெரும் புரட்சியாளர் என்று முன் நிறுத்தப்படும் பாரதியார் இறந்த போது அவர் மனைவியின் வயது இதே தான்.
பெரியாரின் மனைவியாக 24 ஆண்டுகள் வாழ்ந்து பின் இயக்க தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தவர் மணியம்மை அவர்கள்.மனைவியை இழந்த அண்ணல் அம்பேத்கார் மீது காதல் கொண்டு அவருக்கு மனைவியாக வந்த மருத்துவர் சாரதா அவர்களுக்கு அண்ணலை விட இருவது வயது குறைவு.ஆந்திர முதல்வராக இருந்த என் டி ராமராவ் சுயசரிதை எழுத வந்த லட்சுமி சிவபார்வதி அவர்களை திருமணம் செய்து கொள்ளும் போது என் டி ஆர் வயது 71 .லட்சுமி சிவபார்வதி அவர்களுக்கு வயது 38
இவை மூன்றிலுமே தங்களுக்கு பிடித்த ஆணை வாழ்க்கை துணையாக ஏற்க விடாப்பிடியாக இருந்து சாதித்தவர்கள் பெண்கள் தான்.தங்களுக்கு பிடித்த வாழ்வை,பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்ததை இழிவாக பேசும் கோழைகளின் கூடாரத்தின் செய்கைகளின் பின்னே இருப்பது கையாலாகாத்தனம் தான்.
ஒரு பெண் தன் சுயவிருப்பப்படி தன்னை விரும்ப வாய்ப்பே கிடையாது என்று எண்ணும்,இயலாமையில் தவிக்கும் கூட்டம் தான் பெரியாரின் திருமணத்தை கிண்டல் செய்யும்,வன்மத்தை கொட்டும்.லவ் ஜகாத்,நாடக காதல் என்று காதலுக்கு எதிராக கூக்குரலிடும்.
மகளிர் தின வாழ்த்துக்கள்.

Friday 23 February 2018

தீர்வு

 

வேளச்சேரி போலீஸ் என்கவுன்ட்டர் படுகொலைகள் , இஷ்ரத் ஜெகன்,கௌஸர் பி ,சோராபுதீன்,துளசிராம் பிரஜாபதி,சந்தேகத்தின் பேரில் அல்லது கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நாடெங்கும் நடக்கும் பல ஆயிரம் கொலைகள்,மாட்டு கறி கொலைகள்,சாதி,மத ,ஒரே கோத்திர  ஆணவ படுகொலைகள் ,இந்த அட்டப்பாடி படுகொலை  என இவை அனைத்துமே ஒன்று தான்

  இதில் இந்த படுகொலையை தனித்து எடுத்து கொண்டு எல்லா வெறியர்களும் பொங்குவது விந்தையாக இருக்கிறது.தண்டனை தரும் அதிகாரம் தனி நபருக்கோ , சாதி,மத,மொழி,கட்சி குழுவுக்கோ ,காவல்துறைக்கோ,ராணுவத்துக்கோ  அறவே கிடையாது என்ற நிலை உருவானால் தான் இந்த கொடூர குற்றங்கள் குறையும்.

   திருடி இருப்பார் என்ற சந்தேகத்தில் அடித்து கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இல்லாத ஊரே இருக்காது.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தை ஒட்டிய எங்கள் குடியிருப்புகளில்  முகமூடி கொள்ளையர்கள் வருகிறார்கள் என்று பல நகர் இளைஞர் குழுக்கள் இரவு பேட்ரோல் செல்வார்கள்.வீட்டுக்கு ஒருவர் என்று டூட்டி ரோஸ்டர் எல்லாம் உண்டு.இந்த குழுக்களிடம் சிக்கியவர்களில் மிக பெரும்பான்மையானவர்கள் மன நலம் குறைந்தவர்கள் தான்.

  அவர்களை விசாரிக்கிறேன் என்ற போர்வையில் ஒவ்வொருவரும் அடித்த அடிகளை இப்போது நினைத்தாலும் குற்றமுள்ள நெஞ்சம் குத்துகிறது.ராணுவத்தில் பணியில் இருக்கும் போது தீவிரவாதம் தழைக்கும் மாநிலங்கள் என்று இருக்கும் பகுதிகளில் இது அன்றாட நிகழ்வு.மனிதன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை நேரிடையாக பல ஆண்டுகள் பார்த்து,பங்கு பெற்ற அனுபவம் விரக்தி,இயலாமை,குற்ற உணர்ச்சியை தான் அதிகரிக்கிறது.

  இங்கு ஒரு அடி விழுந்தால் பதிலுக்கு எதிர் குழுவுக்கு நூறு அடி விழ வேண்டும்  என்ற மனநிலை மீண்டும் மூர்க்கமாக துளிர்த்து எழுவதும் ,தனி நபர்களும்,குழுக்களும் இதனை அதிக அளவில் செய்ய துவங்க முக்கிய காரணம்.

  சட்டம் மீதான நம்பிக்கையை முழுமையாக தகர்க்கும் பணியை தான் ஊடகங்கள் செய்கின்றன . தவறான குற்றவாளி தண்டிக்கப்பட கூடாது என்று
 சென்ற நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் மாறி வந்த சூழலை ,நாலு அப்பாவிகள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை ,குற்றங்கள் குறைய கொடூர தண்டனைகளும் ,என்கவுன்டர்களும் வேண்டும் என்று எண்ணும் கூட்டமாக மாற்றுவதில் ஊடகங்கள் மிக பெரிய பங்கு வகிக்கிறது.இதன் பின்னே இருப்பது மத,மொழி,சாதி,இன,நிற வெறி தான்.

   தணடனை என்பது ,அது  எவ்வளவு கொடிய குற்றமாக இருந்தாலும் திருந்த ,மாற சந்தர்ப்பம் தரும் சிறை தண்டனையாக மட்டுமே பார்க்கும் சமூகமாக மாறினால் தான்,தண்டனை தரும் அதிகாரம் முறையான சட்ட வாய்ப்புகளுக்கு பின்னர் ,நீதிபதிகள் மட்டுமேசட்டத்தின் அடிப்படையில் தர முடியும் என்பதை முழுமையாக ஏற்று கொள்ளும் சமூகமாக மாறினால் தான்,வன்முறையை கையில் எடுத்து அடிப்பது பெரும் இழிவு,கோழைத்தனம்,,மனிதத்தன்மையற்ற செயல் என்பதை சிறுவயது முதல் ஊட்டி வளர்த்தால் தான் இந்த படுகொலைகள் இல்லாத சமூகமாக மாற முடியும்.

Saturday 27 January 2018

திராவிடர் இயக்கத்தின் தூண்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தான் திராவிடர் இயக்கத்தின் தூண்.துர்கா சுடாலின் அவர்கள் அல்ல.
உண்மையை,சமத்துவத்தை,பெண்ணுரிமையை ,இந்து மதம் எனும் சமூக அநீதியை புரிந்து கொள்ள வைக்கப்பட வேண்டியவர் துர்கா சுடாலின் அதற்காக குரல் எழுப்ப ,போராட வேண்டிய இயக்கம் தான் திராவிடர் இயக்கங்கள் ,திமுக
ஒரே ஒரு ஜெயலலிதா அவர்கள் மூடநமபிக்கைகளின் கூடாரமாக அதிமுகவை மாற்றியதை போல திமுகவும் மாற இவர் காரணமாகி விட கூடாது.
ஆண்டாள் பிரச்சினை அடிப்படையில் ஒரு இடஒதுக்கீடு,சம உரிமை ,சாதீய ஏற்றத்தாழ்வுகள் சார்ந்த பிரச்சினை.
தாசி குலத்தை சார்ந்தவர் என்று சொல்வதை சரி என்று வாதிடுவது ,அதற்கான சான்றுகள்,உரிமைகளை பற்றி விளக்குவது தான் திராவிட இயக்கத்தின்,அதன் கிளைகளின் கடமை.
அது தவறு என்று சொல்லும் போதே ஆணிவேரே ஆடி விடுகிறது.
இட ஒதுக்கீடு கூட தான் இதனை விட நூறு மடங்கு வருத்தத்தையும்,கோபத்தையும் போராடும் கூட்டத்துக்கு தருகிறது.
அதனால் இட ஒதுக்கீடு தவறு என்று வாதிடலாமா
இந்து மதத்தை போல பெண்களை இழிவாக,கீழானவர்களாக,திருமணம் ஆகி கணவனை இழந்த பெண்களை,திருமணம் ஆகாத பெண்களை ஒடுக்கும்,அடிப்படை தேவைகளை மறுக்கும் மதம் வேறு எதுவும் கிடையாது.
கடவுளை கூட ஆணாக்கி அவரை நினைத்து பல பெண்களும் உருகி மணாளனாக நினைத்து கொள்வதை பெருமையாக பேசுவதை இந்த நூற்றாண்டில் கொண்டாடுவதை விட அவலம் உண்டா.இதே போல பெண் கடவுள்களை மனைவியாக நினைத்து உருகி அவர்களோடு கலந்த தாசர்கள் ஏன் இல்லை என்பதை சிந்தித்தால் இந்து மதத்தின் அடிப்படை விளங்கும்.
இந்து மதத்தில் கைம்பெண்களை முதல் மனைவியாக கூட வேண்டாம் ,இரண்டாவதாக ,மூன்றாவதாக ஏன் முப்பத்தாறாயிரத்து ஒன்றாவது மனைவியாக ஏற்று கொண்ட கடவுள் உண்டா?
ஆண்டாள் கதைக்கும் நந்தனார் கதைக்கும் வித்தியாசம் கிடையாது.கிந்தனார் காலட்சேபம் தான் திராவிட இயக்கம்,கட்சிகள்.
ஆண்டாள் தாசி குலத்தவர் என்பதை பெருமையாக தூக்கி பிடிக்காமல் அப்படி சொல்லியது அபச்சாரம் என்று சொல்வதை விட திராவிடர் இயக்கத்துக்கு,கட்சிகளுக்கு முடிவுரை எழுத முடியாது.

மத நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை

மத நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை தான்.அதனை எதிர்க்க மாட்டோம் என்று பாஜகவும் முஸ்லீம் லீகும் தான் சொல்லும்.
இந்தியாவில் ,தமிழ்நாட்டில் பெரும்பான்மை மதம் இந்து மதம் என்பதால் ,இந்து மத எதிர்ப்பு தான் சமூக நீதி,பெண் விடுதலை,சம உரிமைக்கான,சுயமரியாதைக்கான குரலாக இருக்க முடியும்.
மதமாற்றம் இந்துக்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தும் விஷயம்.அதனை திமுக எப்படி பார்க்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயா அவர்கள் கூட மதமாற்ற தடுப்பது சட்டம் கொண்டு வந்து பின்பு அதனை திரும்ப பெற்று கொண்டார்.இது ஞாபகத்துக்கு வந்தால் நல்லது
சுயமரியாதை திருமணம் என்பதே இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான ஒன்று தான்.அதனை சட்டபூர்வமாக ஆக்கியவர் அண்ணா
இன்றுவரை கட்சி தலைமைகள் கலந்து கொள்ளும் திருமணங்கள் சுயமரியாதை திருமணங்களாக தான் இருந்தன.இனிமேல் ஜீயர்,ஆச்சாரியார் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத தான் திருமணங்கள் நடக்குமா
தி க என்றால் சில திமுகவினருக்கு கிண்டலாக இருக்கிறது.
கலைஞர் இந்து மத எதிர்ப்பில் பெரியாருக்கு பிறகான திராவிடர் கழக தலைவர்களை விட பல மடங்கு மேலே இருந்ததால்,பலவற்றை அதிகாரத்தின் துணை கொண்டு சாதித்ததால் இளைஞர் முதல் முதியோர் வரை கழகத்தை விட திமுகவில் அதிகம் இணைந்தனர்.
கேரளாவில் கம்ம்யூனிஸ்ட் கட்சி வாங்கும் வாக்குகள் மத எதிர்ப்பு வாக்குகள்.இங்கு அவை திமுகவுக்கு சென்றன .மத எதிர்ப்பு அனாவசியம் என்று கருதும் வாக்குகள் காங்கிரஸ் பக்கம்.இங்கு அதிமுகவின் பக்கம் மத எதிர்ப்பு வாக்குகள் மிக குறைவு என்பது போல மதப்பற்றுள்ள சில திமுகவினர் நினைப்பது தான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.
இந்து மத நம்பிக்கைகளை எதிர்க்க மாட்டோம் என்றால் அப்படி தான் அர்த்தம்
சமூக நீதி ,இட ஒதுக்கீடு,தமிழ் தான் கோவில்களிலும் ஒலிக்க வேண்டும் என்பது எல்லாம் இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்கள் தான்
மத மாற்றத்துக்கும்,சாதி மறுப்பு காதலுக்கும் முழு ஆதரவான இயக்கம் திமுக.அதுவும் தவறு.,திமுக அப்படி மதம் மாறும் உரிமை தவறு என்று பாஜக போல பேசும் என்றும் சொல்லி விட்டால் இந்த பேச்சுக்களுக்கே அவசியம் இல்லை.ஒதுங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புரிந்து கொண்டு இதனை முன் நிறுத்துபவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.

மொழி போர்


இன்று தமிழுக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நாள்.மொழிக்காக போராடி தன்னுயிரை இந்த பலரை கொண்ட சமூகங்கள் மிக குறைவு.அதில் ஒன்று தமிழ் சமூகம்.மற்றவர்கள் உயிரை எடுக்காமல் தன்னுயிரை தியாகம் செய்த போராட்டம் தமிழுக்கான 1938 ,1948 ,1965 நடந்த போராட்டம்.
மதம்,சாதி,இனம்,நாடு போன்றவற்றின் மீதான பற்று வெறித்தனம் தான் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. இதில் மொழியையும் சேர்த்து கொள்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.ஆனால் தமிழின் போராட்டம் ஆதிக்கத்துக்கான போராட்டம் அல்ல.ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்.மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த பின்பு மத்திய அரசு நிறுவனத்தில் பணியில் இருந்தேன்
அன்றைய காலகட்டத்தில் தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் கையெழுத்து இடும் வழக்கம் வைத்திருந்தேன்.சில மாதங்களுக்கு பிறகு என் கையெழுத்தை தற்செயலாக ஒரு நோயாளியின் மருத்துவமனை அனுமதிக்கான சீட்டில் கண்ட உயர் அதிகாரி என்னை உடனே அழைத்தார்.என்ன பூவண்ணன் (நக்கலான அழுத்தத்தோடு ) தமிழில் கையெழுத்தா .இந்த பெரியார், திமுக வேலை எல்லாம் இங்கு உதவாது. இது மத்திய அரசு நிறுவனம் ,ஸ்டேட் government அல்ல .இங்கு இந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும்..சில காலத்துக்கு ஆங்கிலத்தில் அனுமதி. இன்று முதல் தமிழில் கையெழுத்திடாதே என்று அறிவுறுத்தினார்.
அவருக்கு வந்த கோவம் எனக்கு விளங்கவில்லை.அரசு அதிகாரியான அவரின் டேபிளின் கண்ணாடியின் பின் இருந்து பெரியவா,நடுவா ,சின்னவா மூவரும் என்னை நோக்கி புன்னகைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.இந்த நிகழ்வினால் அதற்கு பிறகு ஆங்கிலத்தில் கையெழுத்து இடுவதை அறவே விட்டு விட்டேன். இன்று வரை ஒரே கையெழுத்து .தமிழில் மட்டுமே கையெழுத்து
வடமொழி தான் உயர்ந்தது ,தெய்வ மொழி,மொழிகளின் தாய்,மொழிகளின் ஆசான் (யார் சிறந்தவர்,எது சிறந்தது என்று வெறி கொண்டு அடித்து கொள்வதில் எழுத்தாளர்களின் அருகில் கூட யாரும் வர முடியாது )என்பதற்கு எதிராக இருக்கும் ஒரே கூட்டம் தமிழ் பேசும் கூட்டம்.இந்து மதம் எனும் வர்ணாசிரம @சனாதன தர்மம் வடமொழியில் தான் நிற்கிறது.வடமொழியை எதிர்க்கும் மொழியை எப்படி இந்து மத குருக்கள் வெறுக்காமல் இருக்க முடியும்
தனி மனித உரிமை, எதிர்ப்பை தெரிவிக்க நிற்கவில்லை என்று சொன்னால் அதனை இரு கை தட்டி வரவேற்பேன்.இந்த உரிமை அனைவர்க்கும் வென்றும் என்று தான் அன்றும் இன்றும் போராட்டம்.ஆனால் அப்படி பதில் வராமல் ,யாரை பார்த்து கேட்கிறாய்?அவர் தகுதி என்ன?மரபு என்ன ?அவர் யார் தெரியுமா ? என்று வரும் பதில்கள் நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம் என்பதை தான் உணர்த்துகிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஆண்டாள்


மதுரை சண்முகவடிவு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெளிவாக பதிவு செய்தாலே பொய்களை கூறுவதையே தொழிலாக கொண்டுள்ள ஜீயர் முதல் எச் ராஜா வரையிலான இந்துத்வர்களின் பொய்களை எளிதில் தோலுறித்து விடலாம்.இருபதாம் நூற்றாண்டின் ஆண்டாள் எம் எஸ் என்றால் மிகை அல்ல
மிக தெளிவாக அக்கம்மாள் மகள் மதுரை ஷண்முகவடிவின் மகள் சுப்புலட்சுமி என்று பெரும்பாலோருக்கு இன்று தெரிந்தாலும் அதனை மாற்ற முயற்சிகளும் முழு வீச்சில் தூங்கி விட்டன .திடீர் என்று எஸ் என்ற ஆங்கில வார்த்தையில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒரு ஐயர் எம் எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் வர துவங்கி விட்டார்.
சிறிது ஆண்டுகள் அழித்து மதுரை ஷண்முக வடிவின் மகள் சுப்புலட்சுமி என்று யாராவது சொன்னால் சோடா பாட்டில் வீசுவேன் என்று அருளுரை வழங்கும் ஜீயர் முதல் சூத்திரன்@வேசி மகன் என்று தினமும் யாரையாவது
திட்டும் எச் ராஜா வின் வழி தோன்றல்கள் இன்று இவர்கள் ஆண்டாள் குடும்பத்தை,அவர் சார்ந்த கூட்டத்தை,குலத்தை பற்றிய உண்மையை ஒரு பார்வையாக முன் வைக்கும் ஆய்வுக்கு குதிப்பதை போல குதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தேவதாசிகள் பற்றிய ஆய்வு புத்தகங்களில் தெளிவாக ஆண்டாள் பற்றிய குறிப்புகள் பல ஆண்டுகளாக உள்ளன.கடவுளுக்கு மனைவி என்று திருமணம் செய்து வைப்பதே தேவதாசி என்பவர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.ஜீயர்,சங்கராச்சாரியாராக யார் ஆக முடியும் என்று தெளிவாக விதிகள் இருப்பது போல ,குறிப்பிட்ட பதவியை ஏற்று கொண்டால் வந்து சேரும் பட்டம் போல ,கடவுளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் பெண் எந்த நூற்றாண்டிலும் தேவதாசி தான்.
எந்தெந்த சாதிகளை சார்ந்தவர்கள் தேவதாசியாக முடியும் என்றும் இந்து மதத்தில் தெளிவான விதிகள் உண்டு.இவை அனைத்தையும் ஒட்டி எழுதப்பட்ட ஆய்வு புத்தகங்கள் பல உண்டு. இந்து மத நூல்கள்,சட்டங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கும் குறைவு கிடையாது.
எம் எஸ் அவர்களை யாரோ ஒரு பணக்கார செட்டியார் துணைவியாக வாழ அவரின் தாய் கட்டாயப்படுத்திய போது வந்த ஆபத்பாந்தவனாக சதாசிவம் ஐயர் எனும் தியாகி முன் நிறுத்தப்படும் கதையும் பல ஆண்டுகளாக ஓடுகிறது.தன் தாயிடம் கோவித்து கொண்டு சென்னைக்கு வந்த எம் எஸ் முதலில் உதவிக்கு அணுகிய கலை ஆர்வலர் குடுமபத்தின் எதிர்ப்பின் காரணமாக சதாசிவத்தின் உதவியை நாடினார்.
தியாகி சதாசிவ ஐயர் மனைவி பிரசவத்துக்கு அவர் தாய் வீட்டுக்கு சென்றதால் அவர் வீட்டிலேயே எம் எஸ் தங்கி கொள்ள அனுமதித்த மாபெரும் புரட்சியாளர் சதாசிவ ஐயர்.தங்கையை சமாதானம் செய்து அழைத்து போக வந்த எம் எஸ் சக்திவேல் அவர்களை அடித்து விரட்டி இன்றைய ஜீயருக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்.அவர் மனைவி சில மாதங்களுக்குள் இறந்து விட்டதால் தியாகத்தின் உச்சமாக எம் எஸ் அவர்களை மனைவியாக ஆக்கி கொண்டவர்.
தியாகத்துக்கு விலையாக அவரின் குடும்ப உறவுகளை முழுவதுமாக கத்தரித்து விட்டு என்ன பாட வேண்டும்,எங்கு பாட வேணும்,எப்படி பாட வேணும் என்று அனைத்து முடிவுகளையும் எடுத்தவர்.இன்று ஆண்டாளை முழுவதுமாக இதே போல சொந்தம் கொண்டாடும் கூட்டத்தின் முன்னோடி ஆயிற்றே.
மதுரை ஷண்முக வடிவு சுப்புலட்சுமி ஒரு முறை காஞ்சி சங்கராச்சாரியார் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வில் மடிசார் கட்டி இருப்பதை பார்த்து அடைந்த கோவத்தை பற்றி வாலி, எம் எஸ் சொன்னதை பதிந்திருப்பார்.அவரோடு ஒப்பிடும் ஜெயேந்திரரும்,விஜேயேந்திரரும் பல மடங்கு மேல் தான்.
அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பால்ய திருமணம்,பெண் சொத்துரிமைக்கு எதிர்ப்பு,கைம்பெண் மறுமணம் பெரும்பாவம் ,தீண்டாமையின் மகத்துவம் போன்றவற்றை இன்று வெளிப்படையாக யாரவது வலியுறுத்த முடியுமா ?இவர் காலத்தில் மடம் அடைந்த உச்சம் ,இவரின் அபரிதமான ஞானம்,முக்காலமும் கடந்த ஞானி என்று பல முற்போக்காளர்களும் நெகிழும் போது குழப்பமாக இருக்கிறது.
கைம்பெண் மறுமணம் தவறு என்று எண்ணம் கொண்ட ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்தை மதித்து எழுந்து நின்றிருந்தால் தான் வருந்த வேண்டும்.
ஆண்டாள் கடவுளை திருமணம் செய்து கொண்டவர்.சுமங்கலியாக இறந்தவர்.இப்படி வாழ்ந்தவர்களுக்கு என்ன பெயர் என்று இந்து மதத்தை கரைத்து குடித்தவர்கள் பதில் சொல்லுங்களேன்