Saturday 27 January 2018

திராவிடர் இயக்கத்தின் தூண்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தான் திராவிடர் இயக்கத்தின் தூண்.துர்கா சுடாலின் அவர்கள் அல்ல.
உண்மையை,சமத்துவத்தை,பெண்ணுரிமையை ,இந்து மதம் எனும் சமூக அநீதியை புரிந்து கொள்ள வைக்கப்பட வேண்டியவர் துர்கா சுடாலின் அதற்காக குரல் எழுப்ப ,போராட வேண்டிய இயக்கம் தான் திராவிடர் இயக்கங்கள் ,திமுக
ஒரே ஒரு ஜெயலலிதா அவர்கள் மூடநமபிக்கைகளின் கூடாரமாக அதிமுகவை மாற்றியதை போல திமுகவும் மாற இவர் காரணமாகி விட கூடாது.
ஆண்டாள் பிரச்சினை அடிப்படையில் ஒரு இடஒதுக்கீடு,சம உரிமை ,சாதீய ஏற்றத்தாழ்வுகள் சார்ந்த பிரச்சினை.
தாசி குலத்தை சார்ந்தவர் என்று சொல்வதை சரி என்று வாதிடுவது ,அதற்கான சான்றுகள்,உரிமைகளை பற்றி விளக்குவது தான் திராவிட இயக்கத்தின்,அதன் கிளைகளின் கடமை.
அது தவறு என்று சொல்லும் போதே ஆணிவேரே ஆடி விடுகிறது.
இட ஒதுக்கீடு கூட தான் இதனை விட நூறு மடங்கு வருத்தத்தையும்,கோபத்தையும் போராடும் கூட்டத்துக்கு தருகிறது.
அதனால் இட ஒதுக்கீடு தவறு என்று வாதிடலாமா
இந்து மதத்தை போல பெண்களை இழிவாக,கீழானவர்களாக,திருமணம் ஆகி கணவனை இழந்த பெண்களை,திருமணம் ஆகாத பெண்களை ஒடுக்கும்,அடிப்படை தேவைகளை மறுக்கும் மதம் வேறு எதுவும் கிடையாது.
கடவுளை கூட ஆணாக்கி அவரை நினைத்து பல பெண்களும் உருகி மணாளனாக நினைத்து கொள்வதை பெருமையாக பேசுவதை இந்த நூற்றாண்டில் கொண்டாடுவதை விட அவலம் உண்டா.இதே போல பெண் கடவுள்களை மனைவியாக நினைத்து உருகி அவர்களோடு கலந்த தாசர்கள் ஏன் இல்லை என்பதை சிந்தித்தால் இந்து மதத்தின் அடிப்படை விளங்கும்.
இந்து மதத்தில் கைம்பெண்களை முதல் மனைவியாக கூட வேண்டாம் ,இரண்டாவதாக ,மூன்றாவதாக ஏன் முப்பத்தாறாயிரத்து ஒன்றாவது மனைவியாக ஏற்று கொண்ட கடவுள் உண்டா?
ஆண்டாள் கதைக்கும் நந்தனார் கதைக்கும் வித்தியாசம் கிடையாது.கிந்தனார் காலட்சேபம் தான் திராவிட இயக்கம்,கட்சிகள்.
ஆண்டாள் தாசி குலத்தவர் என்பதை பெருமையாக தூக்கி பிடிக்காமல் அப்படி சொல்லியது அபச்சாரம் என்று சொல்வதை விட திராவிடர் இயக்கத்துக்கு,கட்சிகளுக்கு முடிவுரை எழுத முடியாது.

No comments:

Post a Comment