Saturday 27 January 2018

இருபதாம் நூற்றாண்டின் ஆண்டாள்


மதுரை சண்முகவடிவு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெளிவாக பதிவு செய்தாலே பொய்களை கூறுவதையே தொழிலாக கொண்டுள்ள ஜீயர் முதல் எச் ராஜா வரையிலான இந்துத்வர்களின் பொய்களை எளிதில் தோலுறித்து விடலாம்.இருபதாம் நூற்றாண்டின் ஆண்டாள் எம் எஸ் என்றால் மிகை அல்ல
மிக தெளிவாக அக்கம்மாள் மகள் மதுரை ஷண்முகவடிவின் மகள் சுப்புலட்சுமி என்று பெரும்பாலோருக்கு இன்று தெரிந்தாலும் அதனை மாற்ற முயற்சிகளும் முழு வீச்சில் தூங்கி விட்டன .திடீர் என்று எஸ் என்ற ஆங்கில வார்த்தையில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒரு ஐயர் எம் எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் வர துவங்கி விட்டார்.
சிறிது ஆண்டுகள் அழித்து மதுரை ஷண்முக வடிவின் மகள் சுப்புலட்சுமி என்று யாராவது சொன்னால் சோடா பாட்டில் வீசுவேன் என்று அருளுரை வழங்கும் ஜீயர் முதல் சூத்திரன்@வேசி மகன் என்று தினமும் யாரையாவது
திட்டும் எச் ராஜா வின் வழி தோன்றல்கள் இன்று இவர்கள் ஆண்டாள் குடும்பத்தை,அவர் சார்ந்த கூட்டத்தை,குலத்தை பற்றிய உண்மையை ஒரு பார்வையாக முன் வைக்கும் ஆய்வுக்கு குதிப்பதை போல குதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தேவதாசிகள் பற்றிய ஆய்வு புத்தகங்களில் தெளிவாக ஆண்டாள் பற்றிய குறிப்புகள் பல ஆண்டுகளாக உள்ளன.கடவுளுக்கு மனைவி என்று திருமணம் செய்து வைப்பதே தேவதாசி என்பவர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.ஜீயர்,சங்கராச்சாரியாராக யார் ஆக முடியும் என்று தெளிவாக விதிகள் இருப்பது போல ,குறிப்பிட்ட பதவியை ஏற்று கொண்டால் வந்து சேரும் பட்டம் போல ,கடவுளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் பெண் எந்த நூற்றாண்டிலும் தேவதாசி தான்.
எந்தெந்த சாதிகளை சார்ந்தவர்கள் தேவதாசியாக முடியும் என்றும் இந்து மதத்தில் தெளிவான விதிகள் உண்டு.இவை அனைத்தையும் ஒட்டி எழுதப்பட்ட ஆய்வு புத்தகங்கள் பல உண்டு. இந்து மத நூல்கள்,சட்டங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கும் குறைவு கிடையாது.
எம் எஸ் அவர்களை யாரோ ஒரு பணக்கார செட்டியார் துணைவியாக வாழ அவரின் தாய் கட்டாயப்படுத்திய போது வந்த ஆபத்பாந்தவனாக சதாசிவம் ஐயர் எனும் தியாகி முன் நிறுத்தப்படும் கதையும் பல ஆண்டுகளாக ஓடுகிறது.தன் தாயிடம் கோவித்து கொண்டு சென்னைக்கு வந்த எம் எஸ் முதலில் உதவிக்கு அணுகிய கலை ஆர்வலர் குடுமபத்தின் எதிர்ப்பின் காரணமாக சதாசிவத்தின் உதவியை நாடினார்.
தியாகி சதாசிவ ஐயர் மனைவி பிரசவத்துக்கு அவர் தாய் வீட்டுக்கு சென்றதால் அவர் வீட்டிலேயே எம் எஸ் தங்கி கொள்ள அனுமதித்த மாபெரும் புரட்சியாளர் சதாசிவ ஐயர்.தங்கையை சமாதானம் செய்து அழைத்து போக வந்த எம் எஸ் சக்திவேல் அவர்களை அடித்து விரட்டி இன்றைய ஜீயருக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்.அவர் மனைவி சில மாதங்களுக்குள் இறந்து விட்டதால் தியாகத்தின் உச்சமாக எம் எஸ் அவர்களை மனைவியாக ஆக்கி கொண்டவர்.
தியாகத்துக்கு விலையாக அவரின் குடும்ப உறவுகளை முழுவதுமாக கத்தரித்து விட்டு என்ன பாட வேண்டும்,எங்கு பாட வேணும்,எப்படி பாட வேணும் என்று அனைத்து முடிவுகளையும் எடுத்தவர்.இன்று ஆண்டாளை முழுவதுமாக இதே போல சொந்தம் கொண்டாடும் கூட்டத்தின் முன்னோடி ஆயிற்றே.
மதுரை ஷண்முக வடிவு சுப்புலட்சுமி ஒரு முறை காஞ்சி சங்கராச்சாரியார் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வில் மடிசார் கட்டி இருப்பதை பார்த்து அடைந்த கோவத்தை பற்றி வாலி, எம் எஸ் சொன்னதை பதிந்திருப்பார்.அவரோடு ஒப்பிடும் ஜெயேந்திரரும்,விஜேயேந்திரரும் பல மடங்கு மேல் தான்.
அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பால்ய திருமணம்,பெண் சொத்துரிமைக்கு எதிர்ப்பு,கைம்பெண் மறுமணம் பெரும்பாவம் ,தீண்டாமையின் மகத்துவம் போன்றவற்றை இன்று வெளிப்படையாக யாரவது வலியுறுத்த முடியுமா ?இவர் காலத்தில் மடம் அடைந்த உச்சம் ,இவரின் அபரிதமான ஞானம்,முக்காலமும் கடந்த ஞானி என்று பல முற்போக்காளர்களும் நெகிழும் போது குழப்பமாக இருக்கிறது.
கைம்பெண் மறுமணம் தவறு என்று எண்ணம் கொண்ட ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்தை மதித்து எழுந்து நின்றிருந்தால் தான் வருந்த வேண்டும்.
ஆண்டாள் கடவுளை திருமணம் செய்து கொண்டவர்.சுமங்கலியாக இறந்தவர்.இப்படி வாழ்ந்தவர்களுக்கு என்ன பெயர் என்று இந்து மதத்தை கரைத்து குடித்தவர்கள் பதில் சொல்லுங்களேன்

No comments:

Post a Comment