Thursday 10 October 2013

சதவீத கணக்குகளும் சங்க பரிவாரமும்

 பள்ளியில் பயின்ற காலத்தில்  என் வீட்டின் அருகில் ஹிந்து முன்னணி ,விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆர் எஸ் எஸ் பொது கூட்டங்கள் அடிக்கடி நடக்கும்.பள்ளி காலத்தில் நான் வி எச் பி மணியனிடம் மகாபாரதம் பற்றி நடந்த போட்டியில் பரிசு கூட பெற்றிருக்கிறேன்

   விஜயகாந்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே சங்க பேச்சாளர்கள் புள்ளி விவரங்களை அடுக்குவார்கள்.
இஸ்லாமியர்கள் இவ்வளவு சதவீதம் அதிகரித்து விட்டார்கள் ,கிருத்துவர்கள் இவ்வளவு சதவீதம்,இப்படியே போனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் ஹிந்துக்கள் அவர்களை விட குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில்,சென்னையில்,இந்தியாவில்
 இருப்பார்கள் என்று பேசும் போது எவ்வளவு துல்லியமாக ஆராய்கிறார்கள் என்ற பிரமிப்பு வரும்

  இன்றும் அதே போல தான் சங்க பரிவாரத்தின் பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் பல கோணங்களில் எல்லா பிரட்சினைகளையும் அலசி ஆராய்கிறார்கள்.அனைத்திலும் மதமாற்ற சதியை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்

எந்த விஷயத்திலும் காரணங்களை அலசி ஆராயும் பரிவாரம்,அதன் தாக்கம் அதிகம் உள்ள பரிசோதனை கூடங்களில் பல லட்சம் பெண் குழந்தைகள் ஏன் குறைகின்றன என்பதை பற்றி ஏதாவது ஆராய்ந்திருக்கிறதா என்று எவ்வளவு தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.
 சில நூறு பெண்கள் வேறு மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் பெரிய இழப்பு என்று கதறும் அறிவுஜீவிகள் ,கருவிலேயே கொல்லப்படும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றி கவலைபடாததர்க்கு காரணம் என்ன
 பெண்கள் எளிதில் மதம் மாறி விடுவார்கள்,லவ் ஜெஹாதில் விழுந்து விடுவார்கள் என்பதால் பலர் அவர்களை கருவிலேயே கொன்று விடுகின்றார்கள் என்றும் கூட ஹிந்டுத்வர்கள் வாதிடலாம்
மற்ற மதங்களோடு ஒப்பிடும் போது/மதமாற்றிகளின்,அவர்களின் கைக்கூலிகளின் தாக்கம் அதிகமாகவும் ஹிந்டுத்வத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடும் போது சங்கம் வலுவாக ஆட்சியை பிடிக்கும் நிலையில்,பல்லாண்டுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் லட்சகணக்கில் பெண் குழந்தைகள் குறைவது ஏன் என்பதை பற்றி சங்கம் என்று ஆராய்ச்சி செய்யும்.

http://www.youngmuslimdigest.com/society/06/2008/census-of-india-reading-between-the-lines/

சங்கத்தில் பெண்களுக்கு இடம் இல்லை என்பதால் பெண்கள் எண்ணிக்கையை பற்றி,பெண் சிசுகொலையை பற்றி சங்கம் கவலைப்படுவது கிடையாதா
 

Wednesday 9 October 2013

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

 பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்

  நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில் சேர்க்க மாட்டார்கள்
  குறைந்தபட்ச மனிதத்தன்மை,வருங்காலத்தை பற்றி கவலைப்படும் யாரும் முதலில் வைக்க வேண்டிய பிரச்சினையை ஒரு பொருட்டே அல்ல என்று என்னும் அளவில் பெரும்பான்மை மக்கள் இருக்க முக்கிய காரணம் மத அடிப்படைவாதமும் அதன் அடிப்படையில் அரசியலில் உருவாகும் முழக்கங்களும்
  பல லட்சம் பெண் சிசுக்களை கருவிலேயே கொலை செய்வதில் முன்னணி வகிக்கும் மாநிலம் தான் நல்லாட்சியின் எடுத்துகாட்டு என்று போர் முழக்கங்கள் உரக்க கொட்ட துவங்கி விட்டன
   பெண் சிசுகொலை பற்றிய கேள்விகளே எழும்பாதவண்ணம் நல்லாட்சி நல்லாட்சி என்ற கூக்குரல்கள் இந்தியா முழுவதும் எழுப்பபடுகின்றது.
    மக்கள் ஆட்சியோ,மன்னர் ஆட்சியோ,சர்வாதிகாரமோ,எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆட்சியின் அடிப்படையான மக்கள் தொகை வளர்ச்சியில்  இயற்கையாக அமையும் பாலியல் சமநிலையை மாற்றும் செயற்கையாக பாலியல் சமமின்மையை உருவாக்கும்  பாலியல்ரீதியான சிசுகொலைகளை தடுப்பதில் இந்தியாவில் கடைசி இடங்களில் உள்ள ஆட்சி நல்லாட்சி என்று புகழப்படுவதில் இருந்தே சங்க பரிவாரங்கள் பெண்களுக்கு தரும் மதிப்பு என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
 Child Population and Decadal Growth by Residence – Persons
censusindia.gov.in/2011-prov-results/.../Gujrat/7-child29-45.pdf - Cached - Similar

 
மிஸ்டர் சந்திரமௌலி சென்சுஸ் குழு தலைவர் என்ன சொல்றார்னா http://www.actionaid.org/...

Only three major States, Gujarat, Bihar and Jammu & Kashmir have shown a decline in the Sex Ratio in Census 2011


 2001 ஒ 2011 ஒ ஆண் பெண் சதவீதத்தில் சில லட்சம் பெண் குழந்தைகள் குறைவதில் என்ன மாற்றமும் இல்லையே
மோசமான ஆட்சிகள் என்று தூற்றப்படும் மாநிலங்களில் கூட இவ்வளவு பெண் குழந்தைகள் குறைவது இல்லையே.அதுவும் மோடிக்கு மிகவும் ஆதரவு இருக்கும் குஜராத் நகர்ப்புறம் கிராமங்களை விட பெண் சிசுக்களை கொல்வதில் இந்தியாவில் முதலிடத்திற்கு மிகவும் அருகில் தான்
 
http://censusindia.gov.in/.../profiles/en/IND024_Gujarat.pdf


 

கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்

            


 உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர்  இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர்


       குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி ஒன்றிய தலைவர் அதனால் பதவி விலக வேண்டிய செய்தியும் மக்கள் ஆட்சியை வெறுத்து சர்வாதிகாரதிர்க்கான பாதையை விரும்புவர்களை தெளிவாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன
     http://indiatoday.intoday.in/story/bjp-councillor-gujarat-forced-to-quit-for-having-third-child/1/313716.html

The 45-year-old businessman, who had defeated former mayor Ashok Dangar in the 2010 municipal polls, quit on Monday, four months after his wife gave birth to a boy. Rishi was born after two daughters -- Charmi (11) and Dhruvi (7).

Dhava reportedly was keen to have a son and he tried to flirt with the law, interpreting it to suit his wish.
பாராளுமன்ற தேர்தல்,சட்டசபை தேர்தல்,மாநகராட்சி தேர்தல்,இடை தேர்தல்,பெரும்பான்மை இல்லாததால் மறுபடியும் பொது தேர்தல் என்று தேர்தல்களுக்கு குறைவு கிடையாது.இதில் எதை கட்டாயம் ஆக்குவது.வோட்டு போடாததால் எத்தனை பேருக்கு தண்டனை வழங்குவது
வெற்றி பெற்றவர் எந்த காரணமும் கூறாமல் ராஜினாமா செய்யும் உரிமை இருக்கிறதா இல்லையா.பல ஆயிரம்/லட்சம் வோட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற ஒருவருக்கு இருக்கும் உரிமை சாதாரண வாக்காளருக்கு கிடையாதா
பிடிக்கவில்லை,காதல் தோல்வி,வயிற்று வலி அல்லது காரணமே இல்லாமல் வெற்றி பெற்றவர் ராஜினாமா செய்யும் உரிமை இருக்கும் போது வோட்டு போடுபவருக்கு குறிப்பிட்ட காரணத்தால் அல்லது காரணமில்லாமலோ வோட்டு போட மாட்டேன் என்ற நிலையை எடுக்க உரிமை கிடையாது என்று எப்படி இருக்க முடியும்
   நான் முற்றும் துறந்த முனிவன்,அனைத்து இச்சைகளையும் தாண்டியவன் என்று கூற/வாழ ஒருவருக்கு உரிமை உண்டா இல்லையா.
அதே போல நான் அரசியலை துறந்த முனிவன்,ஒருமனதாக தேர்வு ஆகாத போட்டி நடக்கும் தேர்தல் அரசியலை வெறுக்கும் ஒருவன் என்றால் அதில் தவறு காண முடியுமா

போட்டி இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் போட்டியில் இருந்து அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவது சட்டப்படி சரியா இல்லையா
அப்படி ஒரு நிலை இருக்கும் தொகுதிகளில்/பஞ்சாயத்துகளில் வோட்டு போட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் எப்படி வோட்டு போடுவார்கள்.ஒருவர் நின்றாலும் அந்த தொகுதியில் அவருக்கும் NOTA பொத்தானிர்க்கும் போட்டி இருக்குமா

  ஒரே மனிதர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் நின்று வெற்றி பெறுகிறார்.ஒன்றை அவர் கட்டாயமாக ராஜினாமா செய்தாக வேண்டும்.
அதற்கு உடனே ஓரிரு மாதங்களுக்குள் இடைதேர்தல் வரும்.

   சட்டசபை உறுப்பினர் மேல்சபை உறுப்பினர் ஆக சட்டம் வழி வகுக்கிறது.மேற்கு வங்கத்தில் ஒரு எம் எல் ஏ அரசு வேலை கிடைத்து விட்டதால் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது.
தனி கட்சி துவங்க முடிவு செய்து பதவியை ராஜினாமா செய்கிறார்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது
தலைவரின் குறிப்பிட்ட நடவடிக்கை பிடிக்காமல்,அல்லது மந்திரி பதவி தரவில்லை என்று ராஜினாமா செய்கிறார். அதையும் சட்டம் அனுமதிக்கிறது.

 வெற்றி பெற்றவருக்கு ராஜினாமா செய்யும் உரிமை மட்டுமல்லாமல்,அரசியல் அமைப்பின் கீழ் குற்றங்கள் என்று வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றால் பதவி நீக்கம் செய்வதையும் சட்டம் அனுமதிக்கிறது.
இது மட்டும் அல்லாமல் சில சர்வாதிகாரிகள்,சர்வாதிகார இயக்கங்கள்,பிறக்கும் குழந்தைகளை வைத்தும் வெற்றி பெற்றவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டங்களை இயற்றி இருக்கிறார்கள்.
   

       பிடிக்காத தீர்மானங்கள் வரும் போது வோட்டு போடாமல் வெளிநடப்பு செய்யலாம்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது
பல ஆயிரம் மக்களின் வோட்டுக்களை பெற்று வெற்றி பெற்று ஒரு பொறுப்பான பதவியில் அமர்ந்தவருக்கு ஆயிரம் உரிமைகள் இருக்கிறது.அவர் விருப்பபடி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
வாக்காளனுக்கு இருக்கும் ஒரே உரிமை யாருக்கு வோட்டு போடுவது,அல்லது வோட்டு போட மாட்டேன் என்று முடிவு எடுப்பது.அந்த உரிமையை பிடுங்க நினைப்பது சரியா
வோட்டு போடாதவர்களை தேர்தல் ஆணையம் தேடி சென்று ஏன் வோட்டு போடவில்லை என்று கேட்டு அதை கணக்கில் எடுத்து கொள்ளட்டும்.மாறாக தனி மனிதன் கட்டாயமாக வாக்கு சாவடிக்கு சென்று ஏதாவது ஒரு பொத்தானை அழுத்தி தான் தீர வேண்டும் எனபது சர்வாதிகாரம் மக்கள் ஆட்சி அல்ல

 கட்டாய வாக்கு பதிவு என்பதை கல்லூரி தேர்தல்கள்,அரசு அலுவலக ஊழியர் சங்கங்களில் கூட நடைமுறைபடுத்த முடியாது.
இந்த அழகில் பல கோடி மக்களை கட்டாயபடுத்த முடியும் என்ற நம்பிக்கை/வெறி  சிலருக்கு,சில இயக்கங்களுக்கு  இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று அல்ல   நாம் மிகவும் பயங்கொள்ள வேண்டிய நிகழ்வு 
ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உணவு உட்கொள்வேன்,மருந்து எடுத்து கொள்ள மாட்டேன்,பால் குடிக்க மாட்டேன், .திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.மேலாடை அணிய மாட்டேன் எனபது போல வோட்டு போட மாட்டேன் என்பதும் தனி மனிதரின் அடிப்படை உரிமை

  இந்த உரிமையை பறிக்க நினைப்பது,பல ஆயிரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மூன்றாவது குழந்தை பெற்று கொண்டார் என்று பதவி நீக்கம் செய்வது போன்றவை சர்வாதிகாரத்தை நோக்கி நம்மை அழைத்து செல்ல நடக்கும் முயற்சிகள்.இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் வருங்காலத்தில் மக்கள் ஆட்சியை மீட்க   நாம் கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகமாக இருக்கும் 
 
 

Thursday 3 October 2013

மோதியை ஏன் முஸ்லிம்கள் புகழ வேண்டும்

    நாம் ஐந்து நமக்கு இருபத்தியிந்து என்ற முஸ்லிம்களை உயர்த்தும் தத்துவங்களை தேர்தல் நேரத்தில் உருவாக்கி மத நல்லிணக்கத்தை வளர்த்தவரை புகழ்வதில் தவறுண்டோ

      சியாவோ சுன்னியோ போராவோ அஹ்மேடியாவோ ஒருவருக்கு கூட அவர் ஆட்சியில் MLA சீட்,மந்திரி பதவி தராமல்(முஸ்லிம்கள் குஜராத்தில் ஒன்பது சதவீதம்)அனைவரையும் ஒன்றாக நடத்துவதில்,நடத்தியதில் இருந்தே அவர் மேன்மையை அறிந்து வாழ்த்துவது மிக சரி.

        எடியுரப்ப ஒரு முஸ்லிம் கூட பா ஜ கா நிறுத்தி வைக்கவில்லை என்றாலும் ஒருவரை மந்திரியாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆக்கவும் செய்தாரே அவரை போன்ற போலி இந்திதுவவியாதியாக இல்லாமல் உண்மையான இந்திதுவவியாதியாக இருக்கும் மோடியின் புகழை ஸஃபர் ஸரேஷ்வாலா பாடுவது பெருமையாக உள்ளது.

மத்திய அரசாங்கம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கும் உதவி தொகையை வழங்க மாட்டேன் என்று கொள்கையாக ஆள்வதே அவரின் சிறுபான்மை முன்னேற்றத்திற்கான சான்று அல்லவா

2007 தேர்தலில் குசெர் பி-சொரபுட்டின் போலி என்சௌண்டேர் (குசர் பி கணவனோடு சேர்த்து கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டவர்)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சொராபுட்தீனை என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொது கூட்டத்திலும் கேட்டு கொலை கொலை என்ற கூச்சல்களுக்கு அதை தான் செய்தோம் என்று பெருமிதமாக பேசியவர் அல்லவா மோடி .

சொராபுட்தினோடு அவர் மனைவியை கடத்தி,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்ற மோடியை கடவுளாக வழிபட்ட காவல்துறையினரை பாராட்டிய மோடியை இஸ்லாமியர்கள் பாராட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அப்பாவி பெண்ணாக இருந்தாலும் கணவன் சந்தேகத்துக்குரிய குற்றவாளியாக இருந்தால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,அந்த வன்செயல்களை புகழ்ந்து வோட்டு வாங்கி வெற்றி பெற முடியும் என்று காட்டியவரை இஸ்லாமியர் மட்டுமல்ல அகில உலகமும் அல்லவா போற்றும்,போற்ற வேண்டும்

       டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நாடே பொங்கிய(நிர்பயா வழக்கு ) பெண்ணின் ஆண் நண்பர்  சந்தேகத்துக்குரிய தீவிரவாதியாகவோ ,அல்லது முன்னாள் குற்றவாளியாகவோ அல்லது இஸ்லாமிய பெயர் கொண்டவாரகவோ இல்லாமல் போனார்.
அப்படி இருந்து இருந்தால் குசெர் பி பாலியல் வன்முறை/கொலை வழக்கு பற்றிய கேள்விகளுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் மாநிலம் முழுவதும் பொது கூட்டம் போட்டு நியாயபடுத்திய மோடி போல நிர்பயாவிர்க்கு ஏற்பட்ட கொடுரம் தேவையான ஒன்று,தீவிரவாதத்திற்கு எதிரான ஒன்று, தீவிரவாதிக்கு,அவர் தோழிக்கு கிடைத்த சரியான தண்டனை என்று மோடி ஆதரவாளர்கள் குதித்திருப்பார்கள்.

 அப்படி இருந்திருந்தால் வன்செயலில் ஈடுபட்டவர்கள் ,அதற்க்கு உத்தரவிட்டவர்கள் மந்திரிகளாக ,மற்ற மாநில பொறுப்பாளர்களாக  மோடியின் கருணையால் பொறுப்பேற்று கொண்டு இருப்பார்கள்.அப்படிப்பட்ட கருநாமூர்த்தியை மக்கள் புகழ்வதில்,பார்த்து பூரிப்படைவதில் ஆச்சரியம் எது
 
     ஒரு அப்பாவி பெண் கடத்தப்பட்டு,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையை கிண்டல் செய்தவர்.தகுந்த தண்டனை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் கொண்டவர் மேல் பாராட்டுக்கள் பல தரப்பிலிருந்தும் வந்து குவிவதில் ஆச்சரியம் ஏது