Friday 27 September 2013

பிரதமர் பதவி என்ன கல்கி அவதாரமா



   மது கோடா,தேவ கௌடா போல யார் வேண்டுமானாலும் தேர்தலில் வெற்றி பெற்ற எம் பி க்கள் ஆதரவு இருந்தால்  பிரதமர் ஆகலாம்.
    ஒரு தனி மனிதர் குறிப்பிட்ட பதவியில் அதுவும் நேரடி தேர்தல் இல்லாத முறையில் வெற்றி பெற்ற எம் பி க்கள்/கட்சிகளின் ஆதரவில் பிரதமர் ஆனால் பல வியத்தக்க மாற்றங்களை புரிவார் என்ற சாத்தியங்கள் இல்லாத நம்பிக்கை எப்படி உருவானது /ஏன் உருவாக்கபடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை
   அமெரிக்க ஈராக் யுத்தத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்க வாஜ்பாய் தலைமையிலான அரசு முடிவு செய்து பின் பாராளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பால் பின்வாங்கியது
   நானூறு எம் பி க்கள் இருந்தாலும்,மக்களிடம் செய்திகளை இன்றுபோல உடனே கொண்டு செல்லும் வசதிகள் இல்லாத நிலை நிலவிய காலத்தில்/ நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசின் முடிவுகளுக்கு ஒத்து ஊத்தி கொண்டு இருந்த காலங்களில்/,கட்சியில் ஒரு கேள்வி எதிராக கேட்க்கும் கேட்க்கும் நிலையில் கூட யாரும் இல்லாத நிலையில் இருந்த ராஜீவ் கூட மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட முடியவில்லை.மக்களுக்கு நேரடியாக பலன் தர கூடிய அரசுகள் மாநில அரசுகள் தான்
    குறிப்பிட்ட தனி மனிதர் பிரதமர் ஆனால் காவேரி பிரட்சினையில் ஞாயம் கிடைக்கும் ,அனைத்து மாநிலங்களும் சமமாக நியாயமான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எப்படி  வருகிறது

    காவேரிக்கு சென்று விட்டோம்,ஹோகேநேக்கள் குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராடிய எடியுரப்பா அன்றைய நிலையில் பா ஜ க வின் முதலவர் வேட்பாளர்.பிரதமர் தன்கட்சியின் முதலவர்களை ,மாநில தலைவர்களை மிரட்டி தமிழகத்திற்கு ஞாயம் கிடைக்க செய்ய முடியும் என்ற நம்பிக்கை எந்த அடிப்படையில் வருகிறது.
   உச்ச நீதிமன்றத்தின்  வாக்கு பதிவு செய்யும் போது இருக்க வேண்டிய none of the above தீர்ப்பு ஞானி அவர்களின் கட்டுரையில் உள்ள பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன்னிறுத்தப்படுவது தவறு என்பதை நிரூபிக்கும் தீர்ப்பு என்றும் கூறலாம்.

நம் தேர்தல் ம
ுறை நேரிடை தேர்தல் முறை கிடையாது.நாம் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள்.எம் பி க்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமை அது.
மக்கள் போடும் none of the above குறிப்பிட்ட தொகுதியை சார்ந்த வேட்பாளர்களை எதிர்த்தா ,இல்லை பிரதமராக முன்னிருதப்படுபவரை/படுபவர்களை எதிர்த்தா என்பதை புரிந்து கொண்டால்,பிரதமர் வேட்பாளர் என்று முன் நிறுத்தப்படுவது சட்டப்படி தவறு எனபது புரியும்

மோடி எனக்கு வேண்டாம் என்று none of the above என்ற பொத்தானிற்கு விழும் வோட்டுக்களை எடுத்து கொள்ள முடியுமா.அப்படி எடுத்து கொள்வது சரி என்றால் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன் நிறுத்துவதை நம் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது என்று கூறலாம்.எதிராகவோ ,ஆதரவாகவோ விழும் வோட்டுக்கள் குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


 இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள அரசு நிறுவனங்களில் தொழிற்சங்க தேர்தல்களில் அந்தந்த பகுதிகளுக்கான உறுப்பினர்களை வாக்குசீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கும் உரிமை பணியாளர்களுக்கு உண்டு.அப்படி இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்வார்கள்.இதே தான் நம் நாட்டின் சட்ட அமைப்பின் கீழ் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையும்
பிரதமர் மீது திடீரென்று அவர் கட்சிக்காரர்களே கூட அதிருப்தி கொண்டு அவரை நீக்கி விட்டு இன்னொருவரை பிரதமராக பதவியில் அமர்த்தலாம்.மக்களிடம் என்னை பிரதமர் என்று சொல்லி வோட்டு கேட்டீர்கள்.அதனால் நீங்கள் என்னை நீக்க முடியாது,கட்சியை உடைக்க முடியாது,வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க முடியாது என்று யாரும் கூற முடியாது.

தன தொகுதியை சார்ந்த வேட்பாளரை வேண்டாம் என்று சொல்லும் உரிமையை வழங்கி இருப்பதன் மூலம் வாக்காளனின் உரிமை தன் தொகுதி எம் பி யை தேர்ந்தெடுப்பது மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக தீர்ப்பளித்துள்ளது.

நம்முடைய எம் பி க்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு 6 மாதத்திற்கு ஒருவரை,அல்லது பத்து நாட்களுக்கு ஒருவரை பிரதமர் ஆக்குவதையும் சட்டம் அனுமதிக்கிறது.
நாம் வோட்டு போட்டு அதனால் தேர்ந்தேடுக்கபட்ட எம் பி பதவியை ராஜினாமா செய்து விட்டால்,அல்லது சமீபத்திய தீர்புகளின்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ,மரணமடைந்தால் மறு தேர்தல் தான் ஒரே வழி.அது தான் நம் அரசியல் அமைப்பு.
ஆனால் பிரதமர் ராஜினாமா செய்தால் மறு தேர்தலா,அல்லது மற்றொருவரை எம் பி க்கள் பிரதமர் ஆக்குவார்களா

 
எம் பி பதவி ஆளுமை வாய்ந்தது.அவர்களின் உரிமை பிரதமரை தேர்ந்தெடுப்பது.மக்களுக்கு உள்ள உரிமை தங்கள் தொகுதி எம் பி யை தேர்ந்தெடுப்பது மட்டும் தான் என்பதை வலியுறுத்தும் இந்த தீர்ப்பு பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது சட்ட விரோதம் என்பதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது என்றும் எடுத்து கொள்ளலாம்.

Thursday 19 September 2013

மக்களின் வோட்டிற்கு பரிவாரங்கள் தரும் மதிப்பு


  பா ஜ க பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சிக்கு  வந்த மாநிலங்களின் அழகை பார்ப்போமா
 உத்தர்ப்ரதேசம்- இந்தியாவிலயே அதிக மக்கள் தொகையை,எம் பி,எம் எல் ஏ  இடங்களை கொண்ட மாநிலம்.
 அங்கு ஆட்சி செய்த ஐந்து ,6 ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள்.மக்களின் முன் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட கல்யான் சிங்,ஹிந்துத்வாவின் மூன்றாவது தூண் நிலையில் இருந்தவர் தூக்கப்பட்டு குப்தா மற்றும் ராஜ்நாத்  சிங் முதல்வர் ஆனார்கள்.
  ஹிந்துத்வாவின் பரிசோதனை கூடமான குஜராத்தில் அவர்களின் பெரும்சாதனையான 2002 குஜராத் கலவரங்கள் நடைபெறுவதற்கு முன் musical  chair ஆடிய முதல்வர்கள் கேசுபாய்,சுரேஷ் மேஹ்தா ,வகேலா (ஆர் எஸ் எஸ் இல் பல ஆண்டு காலம் பயிற்சி பெற்றாலும் மோடியின் குழிபறிக்கும் வேலைகள் பொறுக்காமல் கட்சியையே உடைத்து கட்சி எம் எல் ஏக்களின் துணை கொண்டு முதல்வர் ஆனவர்).கலவரம் மோடியின் பெருமையை பரிவாரங்களுக்கு உணர்த்தியதால் அவரை தவிர மற்ற அனைவரையும் பரிவாரம் கை கழுவி  விட்டது.ஆனால் மோடி முதல்வர் ஆனா கதையை விட  மஞ்சள் கமெண்டுக்கு பொருத்தமான எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது
 டெல்லியில் ஒரு முறை தான் ஆட்சியில் இருந்தார்கள்.அங்கு மக்கள் முன் முதல்வர் வேட்பாளராக முன் நிருதப்படுபவர் குரானா.ஆனால் musical ஷேர் பா ஜ கா வின் /பரிவாரத்தின் முக்கிய விளையாட்டு ஆயிற்றே -5 வருடத்தில் மூன்று முதல்வ்ர்கள்-குரானா ,சாஹீப் சிங் வர்மா மற்றும் பெரும்பான்மை பலம் பெற்ற எதிர்க்கட்சி தலைவியாக பதவி வகித்தவர் பிரதமர் ஆனால் மொட்டை அடித்து கொண்டு விதவைகள் போல பதியசாப்பாடு சாப்பிட்டு கொண்டு வாழ்வேன் என்று சூளுரைத்த சுஷ்மா.
 மத்ய பிரதேசம்-பெரும் வெற்றி பெற முக்கிய காரணம் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட உமா பாரதி,ஆனால் சில மாதங்களுக்குள் musical chair ஆரம்பித்து உமா போய gaur  வந்தார் டும் டும் டும் .கௌர் போய சௌவான் வந்தார் டும் டும் டும் தான்.
 உமா பாரதி கட்சியை விட்டு பிரிந்து தனி கட்சி துவங்கி வெற்றி பெற்று விடுவாரோ என்ற பயத்தால் சௌவான் musical  chair ஆட்டத்தில் இருந்து இதுவரை தப்பித்து விட்டார்.ஆனால் அவர் மோடியை எதிர்த்த பாண்டாவின் கதியை பார்த்து விட்டு ரொம்ப உஷாராக இருப்பது அவருக்கு உதவுகிறது.
 உத்தர்கந்த் மாநிலம்-அங்கு பிரிந்த பிறகு கட்சியினரால்,மக்களால் முதலவர் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கொஷியாரி ஆகவில்லை.நித்யானந்த் சுவாமி முதலவர் ஆனார். ஆனால் தேர்தலில் அவரை வைத்து வெற்றி பெற முடியாது என்பதால் 6 மாதத்திற்கு முதலவர் ஆக்கப்பட்டார்.
 அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி  பெற்றது..அதற்க்கு அடுத்த தேர்தலில் யாரையும் முன் நிறுத்தவில்லை.அங்குள்ள சாதி போட்டி தான் அதற்க்கு காரணம்.பா ஜ க வெற்றி பெற்ற பிறகு ஜெனரல் கந்தூரி முதலவர் ஆனார். துவங்கியது MUSICAL CHAIR .கந்தூரி போய் போக்ரியால் வந்தார் டும் டும் டும் ,போக்ரியால் போய் மறுபடியும் கந்தூரி வந்தார் டும் டும் டும்
 எதுக்காக அவரை தூக்கினார்கள்,எதற்காக மறுபடியும் அவரை தேர்தலுக்கு முன் முதல்வர் ஆக்கினார்கள் எனபது மக்களுக்கு தெரியாத ஆனால் பரிவாரத்தை யக்கும் சக்திகளுக்கு தான் வெளிச்சம்.
ஜார்க்ஹாந்து மாநிலம்- மக்களிடம் காட்டிய முகம் பாபுலால் மாரண்டி.ஆனால் பரிவாரத்திற்கு கலவரம் எதுவும் நடத்தி சாதிக்காத முதலவர் என்றால் அரிக்க ஆரம்பித்து விடுமே
 அதனால் அவரை தூக்கி விட்டு கரிய முண்டா

ராஜஸ்தானில் வசுன்டரே ராஜே கட்சியை விட்டே சென்று விடுவேன் என்று மிரட்டும் நிலையும் பரிவாரங்களின் கைங்கரியத்தால் நடந்தது.அவரை விளக்கி விட்டு ஆர் எஸ் எஸ் இல் ஊறிய ஒருவரை தலைவர் ஆக்கியதும் நடந்தது
அவர்கள் கை வைக்காத  ஒரே மாநிலம் சத்தீஸ்கர் தான்.
ஆனால் சத்தீஸ்கரிலும் அவர்  முதல்வரான 2003 தேர்தலில்  மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் என்பதாலும்,காங்கிரஸில் அஜீத் ஜோகி முதலவர் ஆக இருந்த காரணத்தினாலும் யாரையும் முதல்வராக முன் நிறுத்தவில்லை  முதல்வர் ராமன் சிங் நாட்டு வைத்தியர் என்பதால் அவர் மீது கை வைக்கவில்லை போல.

மக்களின் வோட்டுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கும் கட்சி நம்ம பா ஜ க

நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி   பிரதமர் ஆகிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று   நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது  பிரதமர் ஆனால்  அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
 அது  போல முதல்வர் ஆனவர் தான் மோடியும்.திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர் ஏதாவது அதை எதிர்த்து சொல்ல முடியுமா

 பரிவாரத்தின் தாதாக்களான நாக்பூர் தாத்தாக்களுக்கு இரண்டு நாள் கக்கா வரவில்லை என்றால் அதற்க்கான காரணத்தை  கண்டுபிடிக்க சோழி போட்டு பார்ப்பார்கள்.
 அதில் யாரவது மாநில முதலவர்,கட்சி தலைவரின் மச்சானின் சகலையின் பேரன் ஜின்னா என்ற பெயருடையவருக்கு facebook  இல் friend request அனுப்பி இருப்பது தெரிந்தால்,
  ஏதாவது மாநில முதல்வரின் மனைவியின் பெரியப்பா மகளின் வீட்டில் இயேசுவின் புகைப்படம் இருப்பது தெரிந்தால் உடனே அந்த முதல்வரை பதவி விலக வைத்து விடுவார்கள்.இது தான் அவர்கள் மக்கள் முன் தலைவராக காட்டும் முகத்திற்கு,மக்களின் வோட்டுக்களுக்கு தரும் மதிப்பு.

மோடீ எனக்கு ஒரு டௌட்டூ

 
          மோடி பக்தர்கள் மோடி பல சாதனைகள் புரிந்தார் என்று பல ஆண்டுகளாக கூவி வருகிறார்கள்.
கரகாட்டக்காரனில் செந்திலும் கோவை சரளாவும் ஆடுவதை ஒருவர் கௌண்ட மணி காதுபட ஒருவர் புகழ்வாரே அதே போல தான் இந்த மோடி பக்தர்கள் அவரை பற்றி புகழ்வதும்

       அவர் சூப்பர் man மாதிரி உத்தர்கண்ட் நிலசரிவு,மழைப்பெருக்கு நிகழ்வில் பல ஆயிரம் குஜராத்திகளை ஒரே நாளில் காப்பாற்றிய சாதனையை சிலர் எப்படி என்று கேட்டதும் துண்டை காணோம்,துணிய காணோம் என்று ஓடிய கூட்டம் மற்ற விஷயங்களில் கேட்டாலும் அப்படி தான் ஓடும்


      குஜராத் 2002 கலவரங்களை விட்டு விடுவோம்




     அண்ணே எனக்கு ஒரு டௌட்டு

மக்கள் ஆதரவு,கட்சி ஆதரவு   இருப்பவர் தான் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தனும்னு நம்ம ஆளுங்களே விட்டு தூண்டி விட்டு பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க இவ்வளோ டகால்டி வேலை பண்ணீங்களே
   நீங்க முதல்வர் ஆனது எப்படின்னே
  நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி அண்ணே நீங்கள்  பிரதமர் ஆகிறீர்கள்  என்று வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று நீங்க  நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது  பிரதமர் ஆனா அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
 அது  போல முதல்வர் ஆனவர் தானே அண்ணே நீங்க
மக்கள் ஆட்சியை சிறிதும் மதிக்காத ஒரு கூட்டத்தின் முடிவால் நேரடியாக பதவியில் உட்காரவைக்கப்பட்டவர்  கட்சிக்காரகளின்,வெற்றி பெற்ற எம் எள் ஏக்களின்,மக்களின் நின் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்று முதலவர் ஆன கேசுபாய் படேலுக்கு குழிபறித்து விட்டு முதல்வர் ஆனவர் ஆச்சே நீங்க
பல்கலைகழகத்தில் அடிப்படை தகுதி கூட இல்லாமல் நேரடியாக ஒரு துறையின் தலைவராக பல்கலைகழகத்தை தன இரும்பு பிடியில் வைத்திருந்த மனிதர்,மறைமுக குழுவின் தயவால் துறை தலைவரானவர் போல முதல்வர் ஆனவர் தானே நீங்க
  அதே போல உங்களை நீக்கி  விட்டு .சுரேஷ் சோனியை ஆக்கினால் நீங்கள் என்ன பண்ணுவீங்க அண்ணே



  
      ஆண் பெண் சதவீதத்தில் குஜராத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை உங்களின்  12 ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டீங்களா அண்ணே
   the state TN ruled by useless corrupt leaders performed very poorly and moved from 987 to 995

http://www.mapsofindia.com/census2011/female-sex-ratio.html


  ஆனா உங்க நல்லாட்சியில gujarat  which had a golden rule between 2001 and 2011 and a role model for others has performed outstandingly by reaching 918 from the 920 in 2001
  \
  எப்புடீன்னே இப்படி.உங்களால மட்டும் எப்படின்னே இவ்வளோ சாதனை புரிய முடியுது 


  மத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றிடிங்களா  அண்ணே 

  முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் சும்மா பிச்சு உதறநீங்க.ராணுவத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையில் பல ஆயிரம் பற்றாக்குறை.அதை நீக்குவேன்.அதை களைய பாடுபடுவேன்.வலுவான தலைமை இருந்தால் அதை உடனே களைய முடியும் என்று.

  ஆனா 12 ஆண்டு ஆட்சியில இப்ப இருக்குற பற்றாக்குறை ஆளுங்கல்ல நூத்துல ஒருத்தர் கூட குஜராத்தை சேர்ந்தவங்களா இல்லையே அண்ணே.12 ஆண்டு ஆட்சி செய்ததுல என்னா கிழிச்சீங்க,இந்தியாவிலேயே பெரிய மாநிலங்களில் இருந்து மிக குறைவான ஆட்கள் ராணுவத்தில்,மத்திய அரசு பணிகளில் சேருவது குஜராத்தில் இருந்து தான் என்ற பெருமையை தக்க வெச்சுட்டு தானே இருக்கிறீர்கள் என்று கேட்டா என்ன சொல்லுவீங்க அண்ணே   



  இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டீங்களா அண்ணே   (நம்ம சகோதரி ஆட்சி செய்கிற ஊழல் தமிழகத்திற்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கீங்களா அண்ணே  )



  ஏன்னா செய்வேன் பார்.ஒலிம்பிசில் நூறு தங்கம்,நானூறு வெள்ளி வாங்கும் நிலைக்கு இந்தியா செல்ல வலிமையான தலைமை வேண்டும் என்று பேச்சுல அனல் பறக்குது
 ஆனா விளையாட்டு துறையில் குஜராத்திகள் உங்க  ஆட்சியில் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா அண்ணே (தமாதூண்டு மாநிலம் மணிபூர்
தேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி )



 

மருத்துவர்,செவிலியர் ,பொறியாளர்,ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் அதற்க்கு அடுத்த மாநிலங்களை நம்பி இருக்கும் நிலையில் இருந்து குஜராத் நம்ம 12 ஆண்டு பொற்கால வலிமையான ஆட்சியில் மாறி விட்டதா அண்ணே


பிரசவத்தின் போது தாய் இறப்பு ,ஒரு வயதுக்கு முன் குழந்தைகள் இறப்பு போன்றவற்றில் கேரளம்,தமிழகத்தின் அருகிலாவது  குஜராத் வந்து விட்டதா அண்ணே


  https://www.facebook.com/#!/photo.php?fbid=10151874077804828&set=a.497812629827.278402.722399827&type=1&theater&notif_t=comment_mention
 
ஊழல் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிக்கிறார்கள் ,வேலை வாய்ப்பில் 1989 முதல் 30 சதவீதம் இருப்பதால் அதிக அளவில் இருக்கிறார்கள்,ஆண்களை விட பெண்கள் மருத்துவ மேற்படிப்பில் அதிக இடம் சேரும் நிலை என்று எல்லாம் பெருமை பீற்றி கொள்கிறார்கள்.நம்ம குஜராத்தில் பெண்கள் ஒரு இருவது சதவீத இடங்களையாவது பிடிக்கும் நிலை இருக்கிறதா அண்ணே 


   நம்ம ஆளுங்க பல வருஷமா அடிச்சு விட்ட பொய்யில ஒன்னு.உலக வங்கியில நாம் போட்ட பணம்.இந்த பொய்யை கூச்சமில்லாம பல வருஷமா சொல்றதுக்கு எப்படி அண்ணே பல ஆயிரம் பேரை தயார் செய்தீங்க 

 
சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த செய்தி SMS /ஈமெயில் /ப்ளாக் /அனைத்து விதமான மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் மோடி ஆதரவாளர்களால் பல முறை பல லட்சம் பேருக்கு பரப்பட்டது
http://sudhanganin.blogspot.in/2011/03/blog-post_28.html
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது.
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது. இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்..
பத்து வருடத்திற்கு முன்பு குஜராத அரசு உலகவங்கியில் வாங்கிய கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.(ஆ.ராசா மதிப்பை விட கொஞ்சம் குறைவுதான் !)
இன்று..
கடனை திருப்பி செலுத்திவிட்டது. இப்போது அந்த அரசின் கையிருப்பது தொகை 1 லட்சம் கோடிகள்.
ஹி ஹி ஹி உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போமா
http://www.indiatvnews.com/business/india/modi-s-gujarat-bears-the-third-highest-debt-burden-after-bengal–5216.html
Chief Minister Narendra Modi’s Gujarat government bears the third highest burden after West Bengal and Uttar Pradesh, says a media report.
While Gujarat’s actual debt was Rs 1,38,978 cr as on March 2012 and is projected to touch Rs 1.76 lakh crore in 2013-14, it is preceded by only two other states: West Bengal (Rs 1.92 lakh crore) and Uttar Pradesh (Rs 1.58 lakh crore), says the report


மது விலக்கு என்று குஜராத்தில் நீங்க அடிக்கிற கூத்தை இன்னும் எப்படி அண்ணே  இந்த உலகம் நம்புது.என்னமோ போங்க அண்ணே.உங்களுக்கு மச்சம்னா மச்சம்
http://www.indianexpress.com/news/gujarat-eases-liquor-norms-tourists-to-get-permit-on-arrival-at-airport/1122093/0

மது விலக்கு  மோசடி
பணம் இருப்பவன் மருத்துவ சான்றிதழ் வாங்கி பெர்மிட் வாங்கி குடிக்கலாம்
அண்டை மாநிலங்களின் அருகில் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள் அங்கு சென்று குடித்து விட்டு வரலாம்,ஊர் சுற்ற வருபவர்கள் குடிக்கலாம், அதற்காக விடுதிகளில் சாராயம் வைத்து இருக்கலாம்.
ஏழைகளுக்கு மட்டும் தான் குடிப்பது சிரமம் அவர்களுக்கு ஒரே வழி கள்ளசாராயம்.இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் கள்ள சாராயதினால் இறப்புகள்,கண்பார்வை போகுதல் அதிக அளவில் நடைபெற்ற மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.
கள்ள சாராய சாவுகள் மிக அதிகம் என்பதால் நம்ம
 சங்க பரிவாரங்களின் வழக்கமான நாட்டாமை தீர்ப்பான மரண தண்டனை சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் கொண்டு வந்தீங்க .கொலை செய்றது நம்ம பரிவாரத்துக்கு சாப்பாடு மாதிரி.எவனையாவது வெட்டு,தூக்குல போடு என்று சொல்லலைனா நம்ம பரிவாரங்களுக்கு சோறு எறங்காதே


      கொள்கை ரீதியாக நாங்கள் மதுவை எங்கள் மண்ணில் ,எப்படி முட்டையை கூட ரயிலில் விடவில்லையோ அது போல அனுமதிக்க மாட்டோம் என்று சிலர் வாதிடுவதை பார்க்கும் பொது சிப்பு சிப்பா வருது.எப்படி மூளை சலவை செய்திருக்குது பாருங்க அண்ணே நம்ம பரிவாரம்

    .ஊர் சுற்ற வருபவனுக்கு சாராயம் குடிக்க/வாங்க பெர்மிட் வாங்க அரசாங்கம் குஜராத்திற்குள் வரும் போதே இரத்தின கம்பளம் விரித்து பெர்மிட் வழங்குகிறது.அதிக பணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகளில் சாராயம் தண்ணீராக ஓடலாம்.இந்த அழகில் மது விலக்கு எங்கள் உயிர்மூச்சு என்று நம்ம ஆளுங்க பெருமை பாடுறது,அதை பார்த்து பலரும் ஆஹா ஆஹா என்று புளகாங்கிதம் அடைவது என்னமோ போங்க அண்ணே
  
  உங்க சக்தியே சக்தி

    

  
   

Friday 13 September 2013

மானமாவது மயிராவது உயிரே பெரிது



    பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது.கடும் தண்டனை வழங்கப்படும்  நாடுகளில்  பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் பெண்கள் தைரியமாக பல்வேறு வேலைகளில் பணிபுரிவதையும் ,விருப்பத்திற்கேற்ப வாழும் நிலையை கண்கூடாக பார்க்கும் போது இந்த வாதத்தின் அர்த்தமற்ற தன்மை தெளிவாக தெரிகிறது.

   டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் கொடூரத்தால் தன உயிரையும் இழந்த பெண்ணின் உடன் இருந்த தோழர் வெளிநோயாளியாக தான் வைத்தியம் பார்க்கப்பட்டார்.அவருக்கு காயங்கள் வெகு குறைவு.இதே போல மக்களின் கவனத்தை  ஈர்த்த மும்பையில் நடந்த பாலியல் வன்முறையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண் சில நாட்களுக்குள் முற்றிலும் குணம் அடைந்து மறுபடியும் வேலைக்கு திரும்பி உள்ளார்.அவரை வன்முறைக்கு உட்படுத்திய குற்றவாளிகள் அதே இடத்தில பலரை வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்திகள் வர துவங்கியுள்ளன
  டெல்லியில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் குற்றவாளிகளின்  பாலியல் இச்சைகளுக்கு/விருப்பத்திற்கு எதிராக தீவிரமாக போராடியதால் தான் உயிரை இழக்கும் அளவிற்கு வன்முறைக்கு ஆளாகி  இருக்கிறார்.
  இதற்கு முன் அந்த கும்பல் ஒரு ஆணை பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி இருக்கிறது.நம்மில் 100இல் 99 பேர் உயிருக்கு பயந்து இருப்பதை எல்லாம் கொடுத்து விட தயங்க மாட்டோம்.ஒட்டு துணி  கூட விடாமல் அனைத்தையும் பிடுங்கி கொண்டாலும் உயிர் பிழைத்ததே மகிழ்ச்சி என்று ஓடி வந்து விடுவோம்.
   காவல்காரர் நண்பர்களோடு இருக்குமிடத்தில் போதை மருந்து விற்கபடுகிறது,rave  பார்ட்டி நடக்கிறது என்ற சந்தேகத்தில் கைது செய்து சந்தேக வழக்கில் கூட்டி சென்று காவல் நிலையத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து கேள்வி கேட்டாலும் ,அடித்து உதைத்தாலும் விட்டு விட்டால் மகிழ்ச்சி தான்.அதனால் மாறாத ரணம் எனபது ஆண்களுக்கு கிடையாது.
  பல லட்சக்கணக்கான ஆண்கள் காவல்துறையினரால் ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய வைக்கப்பட்டு துன்புருத்தபட்டிருக்கிரார்கள்.நிர்வாணமாக நாள் கணக்கில் அடி,உதைகள் வாங்கி இருக்கிறார்கள்.ஆசன வாயில் லத்தியை வைத்து குத்தப்பட்டு கேள்வி கேட்க்கபட்டிருக்கிரார்கள்.

அவர்களில்  லட்சத்தில் ஒருவர்,இருவரை தவிர்த்து யாரும் அதை நினைத்து ,மாறாத ரணம் ஏற்பட்டு விட்டது,என் கற்பை இழந்து விட்டேன்,திருமண வாழ்க்கைக்கான தகுதியை இழந்து விட்டேன் என்று வருந்துவது கிடையாது.
  ஆனால் பெண்கள் மட்டும் பெரிய இழப்பை சந்தித்தது போல ஆணாதிக்க சமூகத்தால் பார்க்கும் நிலையில் வைக்கபட்டிருக்கிறார்கள்.என்னை நாலு பேர் கட்டி போட்டு ,அடி அடி என்று அடித்தாலும்,ஆசன வாயில் கட்டையை விட்டு குத்தினாலும் உயிரோடு தப்பித்தால் பெரும் மகிழ்ச்சி தான்.காயங்கள் ஆறிய பிறகு சில நாளில் பழைய நிலைக்கு திரும்புவதற்கு பெரிய மன தடைகள் கிடையாது.
  என் மகள்கள்,மனைவி,தாய்,பெண்,ஆண் நண்பர்கள் அனைவருக்கும் சொல்வது இது தான். மானமாவது ,மயிராவது,உயிர் தான் முக்கியம்,ரொம்ப ரொம்ப முக்கியம்.திருடர்கள் மிரட்டும் போது நகைகளை கழட்டி கொடுப்பது எப்படி புத்திசாலித்தனமோ,அதே போல எதிர்ப்பில்லாமல்  எல்லா வன்முறைகளையும் தாங்கி கொண்டு உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்.,காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.உயிரை விட முக்கியமானது ஒன்றும் கிடையாது.ஏதோ இழந்து விட்டோம் என்ற நினைப்பு மிக பெரிய தவறு.
  எனக்கு என் குடும்பத்தவரின்,நண்பர்களின்  உயிர் தான் முக்கியம்.உயிரை இழந்தாவது  மானத்தை காப்பற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணுவதை விட  முட்டாள்தனம் கிடையாது என்பதை தான் வலியுறுத்துவேன்.
  இது வன்முறை நிறைந்த உலகம்.இங்கு ஆண் சந்திக்கும் வன்முறைகளுக்கு குறைவு கிடையாது.அவனுக்கு கற்பு,பயிர்ப்பு  ஒன்றும் கிடையாது என்பதால் அவன் அவன் மேல் விழும் வன்முறைகளை எளிதாக தாண்டி செல்கிறான்.அதே மனநிலையை பெண்களும் வளர்த்து கொள்ள வேண்டும்
  கல்லூரியில் ராக்கிங் போது உடைகளை கழட்டு
  என்று மிரட்டப்படும் போது மிகவும் தயங்கும்,அழுது கெஞ்சி,மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மாணவன் தான்  ,மன,உடல் ரீதியான  அதிக ராக்கிங்கிர்க்கு உள்ளாக்கபடுபவன்.சொல்லி முடிக்கும் முன்பே இந்தாடா என்று உடைகளை கழற்றி எறிபவன் தப்பிப்பது எளிது.

    பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது.கடும் தண்டனை வழங்கப்படும்  நாடுகளில்  பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் பெண்கள் தைரியமாக பல்வேறு வேலைகளில் பணிபுரிவதையும் ,விருப்பத்திற்கேற்ப வாழும் நிலையை கண்கூடாக பார்க்கும் போது இந்த வாதத்தின் அர்த்தமற்ற தன்மை தெளிவாக தெரிகிறது.

   டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் கொடூரத்தால் தன உயிரையும் இழந்த பெண்ணின் உடன் இருந்த தோழர் வெளிநோயாளியாக தான் வைத்தியம் பார்க்கப்பட்டார்.அவருக்கு காயங்கள் வெகு குறைவு.இதே போல மக்களின் கவனத்தை  ஈர்த்த மும்பையில் நடந்த பாலியல் வன்முறையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண் சில நாட்களுக்குள் முற்றிலும் குணம் அடைந்து மறுபடியும் வேலைக்கு திரும்பி உள்ளார்.அவரை வன்முறைக்கு உட்படுத்திய குற்றவாளிகள் அதே இடத்தில பலரை வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்திகள் வர துவங்கியுள்ளன
  டெல்லியில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் குற்றவாளிகளின்  பாலியல் இச்சைகளுக்கு/விருப்பத்திற்கு எதிராக தீவிரமாக போராடியதால் தான் உயிரை இழக்கும் அளவிற்கு வன்முறைக்கு ஆளாகி  இருக்கிறார்.
  இதற்கு முன் அந்த கும்பல் ஒரு ஆணை பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி இருக்கிறது.நம்மில் 100இல் 99 பேர் உயிருக்கு பயந்து இருப்பதை எல்லாம் கொடுத்து விட தயங்க மாட்டோம்.ஒட்டு துணி  கூட விடாமல் அனைத்தையும் பிடுங்கி கொண்டாலும் உயிர் பிழைத்ததே மகிழ்ச்சி என்று ஓடி வந்து விடுவோம்.
   காவல்காரர் நண்பர்களோடு இருக்குமிடத்தில் போதை மருந்து விற்கபடுகிறது,rave  பார்ட்டி நடக்கிறது என்ற சந்தேகத்தில் கைது செய்து சந்தேக வழக்கில் கூட்டி சென்று காவல் நிலையத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து கேள்வி கேட்டாலும் ,அடித்து உதைத்தாலும் விட்டு விட்டால் மகிழ்ச்சி தான்.அதனால் மாறாத ரணம் எனபது ஆண்களுக்கு கிடையாது.
  பல லட்சக்கணக்கான ஆண்கள் காவல்துறையினரால் ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய வைக்கப்பட்டு துன்புருத்தபட்டிருக்கிரார்கள்.நிர்வாணமாக நாள் கணக்கில் அடி,உதைகள் வாங்கி இருக்கிறார்கள்.ஆசன வாயில் லத்தியை வைத்து குத்தப்பட்டு கேள்வி கேட்க்கபட்டிருக்கிரார்கள்.அவர்கள் லட்சத்தில் ஒருவர்,இருவரை தவிர்த்து யாரும் அதை நினைத்து ,மாறாத ரணம் ஏற்பட்டு விட்டது,என் கற்பை இழந்து விட்டேன்,திருமண வாழ்க்கைக்கான தகுதியை இழந்து விட்டேன் என்று வருந்துவது கிடையாது.
  ஆனால் பெண்கள் மட்டும் பெரிய இழப்பை சந்தித்தது போல ஆணாதிக்க சமூகத்தால் பார்க்கும் நிலையில் வைக்கபட்டிருக்கிறார்கள்.என்னை நாலு பேர் கட்டி போட்டு ,அடி அடி என்று அடித்தாலும்,ஆசன வாயில் கட்டையை விட்டு குத்தினாலும் உயிரோடு தப்பித்தால் பெரும் மகிழ்ச்சி தான்.காயங்கள் ஆறிய பிறகு சில நாளில் பழைய நிலைக்கு திரும்புவதற்கு பெரிய மன தடைகள் கிடையாது.
  என் மகள்கள்,மனைவி,தாய்,பெண்,ஆண் நண்பர்கள் அனைவருக்கும் சொல்வது இது தான். மானமாவது ,மயிராவது,உயிர் தான் முக்கியம்,ரொம்ப ரொம்ப முக்கியம்.திருடர்கள் மிரட்டும் போது நகைகளை கழட்டி கொடுப்பது எப்படி புத்திசாலித்தனமோ,அதே போல எதிர்ப்பில்லாமல்  எல்லா வன்முறைகளையும் தாங்கி கொண்டு உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்.,காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.உயிரை விட முக்கியமானது ஒன்றும் கிடையாது.ஏதோ இழந்து விட்டோம் என்ற நினைப்பு மிக பெரிய தவறு.
  எனக்கு என் குடும்பத்தவரின்,நண்பர்களின்  உயிர் தான் முக்கியம்.உயிரை இழந்தாவது  மானத்தை காப்பற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணுவதை விட  முட்டாள்தனம் கிடையாது என்பதை தான் வலியுறுத்துவேன்.
  இது வன்முறை நிறைந்த உலகம்.இங்கு ஆண் சந்திக்கும் வன்முறைகளுக்கு குறைவு கிடையாது.அவனுக்கு கற்பு,பயிர்ப்பு  ஒன்றும் கிடையாது என்பதால் அவன் அவன் மேல் விழும் வன்முறைகளை எளிதாக தாண்டி செல்கிறான்.அதே மனநிலையை பெண்களும் வளர்த்து கொள்ள வேண்டும்
  கல்லூரியில் ராக்கிங் போது உடைகளை கழட்டு
  என்று மிரட்டப்படும் போது மிகவும் தயங்கும்,அழுது கெஞ்சி,மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மாணவன் தான்  ,மன,உடல் ரீதியான  அதிக ராக்கிங்கிர்க்கு உள்ளாக்கபடுபவன்.சொல்லி முடிக்கும் முன்பே இந்தாடா என்று உடைகளை கழற்றி எறிபவன் தப்பிப்பது எளிது.

Wednesday 11 September 2013

அமைதிப்படை மணிவண்ணனும் அத்வானியும்



   கடந்த சில மாதங்களாக பா ஜ க வில் நடந்து வரும் காட்சிகள் அச்சு அசல் அமைதிப்படை படத்தில் தேர்தலில் மணிவண்ணனால் நிறுத்தி வைக்கப்பட்ட சத்யராஜ் தேர்தல் முடிவுகள் வர வர நடந்து  கொள்ளும் /அவரை  சுற்றி  இருப்பவர்கள் நடந்து  கொள்ளும் காட்சிகளை ஒத்திருக்கின்றன

   அமைதிப்படை படத்திலாவது தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டு   வெற்றி பெற்றதால் அனைவரையும் தூக்கி எறிகிறார் சத்யராஜ்.மோடி அப்படி கூட கிடையாது.
  ராப்ரி தேவி போல திடீரென்று நேரடியாக மணிவண்ணனால் மன்னிக்கவும் அத்வானியால் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்டவர்.ராப்ரி தேவியின் திடீர் முதல்வர் நிகழ்விலாவது கட்சியில் ,தேர்தெடுக்கப்பட்ட எம் எல்  ஏக்கள்,முன்னாள் முதல்வர்கள்,மந்திரிகளின் எதிர்ப்பு அவ்வளவு கிடையாது.ஆனால் இங்கு நேரடியாக அனைவரின் எதிர்ப்பையும் மீறி மணிவண்ணின் தயவினால் முதல்வராக ஆனார் மோடி

   முதல்வரான இருக்கும் போது நடைபெற்ற  ஆட்சியின் பெரும்சாதனையான குஜராத் கலவரங்களுக்கு பின் இன்று அவரின் ஜட்டியை துவைக்க சண்டை போடும் அதே கூட்டம் அவரை பதவியை விட்டு விலக வைக்க முயற்சித்தது.அன்று அவரை காப்பாற்றி முதல்வராக தொடர்ந்து இருக்க முக்கிய காரணம் மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி

  
    கட்சியை மட்டும் அல்ல இரண்டாம் இரும்பு மனிதர் என்ற பட்டத்தையும் அல்லவா சேர்த்து அடிக்கிறார் மோடி
 
    அரசியலில் நன்றி இல்லாத தலைவர்களை பார்த்திருக்கிறோம்.ஆனால் நன்றி இல்லாத தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி பா ஜ கா தான்.நெசமாலுமே பார்ட்டி வித் எ difference தான்

    இந்தியாவில் உள்ள பல நூறு கட்சிகளில் எந்த கட்சியை எடுத்து கொண்டாலும் (நம்ம கார்த்திக்குக்கு கூட ஆதரவா சில பேர் இருப்பாங்க)கட்சியின் முக்கியமான தலைவரை,ஐம்பது ஆண்டுகள் கட்சியை வளர்த்தவரை  தூக்கி எறியும் நிலை வேறு எந்த கட்சியிலும் தென்படவில்லை.
  என் டி ஆர் ஐ தூக்கி விட்டு மருமகன் ஆட்சியை பிடிக்கும் போது கூட அவர் சிவபார்வதியின் கைப்பாவையாக  மாறி விட்டார் ,அவரை விட்டு விட்டால் உடனே திரும்பி ஆட்சியை தருவோம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.     .கட்சியிலும்  ,பொதுமக்களிடமும் அவருக்கு தொடர்ந்து ஆபரிதமான ஆதரவு இருந்தது.
  அமைதிப்படை மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி ஜட்டி  துவைக்க போட்டி போட போகிறாரா அல்லது அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா  என்பதை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம்

Wednesday 4 September 2013

ஆண் உறுப்பு காம்ப்ளெக்ஸ்

ஆண்கள் உருவாக்கிய மதம்,கலாசாரம்,புத்தகங்கள் அனைத்திற்கும் அடிப்படை ஆண் உறுப்பு காம்ப்ளெக்ஸ் தான்

 ஆண்களை பற்றி ஒரு பிரபலமான நகைச்சுவை பல மொழிகளில்,நாடுகளில் உண்டு

 மூன்று பெண்கள் ஒரு ஆண் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு அவளிடம் கேட்டார்கள்.

 முதல் பெண் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடு என்று கேட்டு வாங்கி ஒரே நாளில் அவளின் சாமர்த்தியத்தால் ஷேர் மார்கெட்டில் அதை பத்து லட்சமாக்கி அவனிடம் திருப்பி கொடுத்தாள்

  இரண்டாமவள் கராத்தே உலக சாம்பியன்

 மூன்றாமவள் சமையல் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்

 ஆண் யாரை திருமணம் செய்து கொண்டான் ?

 மூவரில் யாருக்கு மார்பகம் பெரிதோ அவரை

 ஆண்கள் எப்போதும் ஆண்கள் தான்

 இதே போல பெண்கள்

 நான் ஒரு கோடி சம்பாக்கிறேன்

 அவனுக்கு ஒரு அடி

நான் பார்த்த மாப்பிள்ளை பணக்காரன்,பக்திமான்,நீ  விரும்பும் ஆண் பெண்பித்தன், ஏழை என்று தகப்பன் சொல்லும் போது

பரவாயில்லை அவனுக்கு ஒரு அடி

என்று  பெண்கள் கூறும் நிலை வந்து விடுமோ  என்ற அச்சம் பிடித்து வாட்டுவதால் பெண்ணின் மீது கவலை போன்ற நடிப்புகள்
 எதுவா இருந்தாலும் ஆண் தப்பித்து விடுவான்,பெண்ணுக்கு தான் சேதம் அதிகம் என்ற வாதங்கள்
 முள்ளு மேலே சேலை விழுந்தாலும் பழமொழிகள்
 அவர்கள் மென்மையானவர்கள் என்ற கூற்றை உருவாக்கி பல வேலைகளுக்கு தகுதி இல்லாத உடல்/மன நிலை உள்ளவர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்கி  தங்களின் பாதுகாவலர்கள் என்ற போர்வையை பத்திரமாக பாதுகாத்தல்

  ஆண் பெண் உறவு என்பதில் திருமணதிற்கு முன்-பின் எது தவறு,எது சரி என்பதெல்லாம் இன்று வரை பெண்களுக்கு மட்டும் தான்.