Thursday 19 September 2013

மக்களின் வோட்டிற்கு பரிவாரங்கள் தரும் மதிப்பு


  பா ஜ க பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சிக்கு  வந்த மாநிலங்களின் அழகை பார்ப்போமா
 உத்தர்ப்ரதேசம்- இந்தியாவிலயே அதிக மக்கள் தொகையை,எம் பி,எம் எல் ஏ  இடங்களை கொண்ட மாநிலம்.
 அங்கு ஆட்சி செய்த ஐந்து ,6 ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள்.மக்களின் முன் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட கல்யான் சிங்,ஹிந்துத்வாவின் மூன்றாவது தூண் நிலையில் இருந்தவர் தூக்கப்பட்டு குப்தா மற்றும் ராஜ்நாத்  சிங் முதல்வர் ஆனார்கள்.
  ஹிந்துத்வாவின் பரிசோதனை கூடமான குஜராத்தில் அவர்களின் பெரும்சாதனையான 2002 குஜராத் கலவரங்கள் நடைபெறுவதற்கு முன் musical  chair ஆடிய முதல்வர்கள் கேசுபாய்,சுரேஷ் மேஹ்தா ,வகேலா (ஆர் எஸ் எஸ் இல் பல ஆண்டு காலம் பயிற்சி பெற்றாலும் மோடியின் குழிபறிக்கும் வேலைகள் பொறுக்காமல் கட்சியையே உடைத்து கட்சி எம் எல் ஏக்களின் துணை கொண்டு முதல்வர் ஆனவர்).கலவரம் மோடியின் பெருமையை பரிவாரங்களுக்கு உணர்த்தியதால் அவரை தவிர மற்ற அனைவரையும் பரிவாரம் கை கழுவி  விட்டது.ஆனால் மோடி முதல்வர் ஆனா கதையை விட  மஞ்சள் கமெண்டுக்கு பொருத்தமான எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது
 டெல்லியில் ஒரு முறை தான் ஆட்சியில் இருந்தார்கள்.அங்கு மக்கள் முன் முதல்வர் வேட்பாளராக முன் நிருதப்படுபவர் குரானா.ஆனால் musical ஷேர் பா ஜ கா வின் /பரிவாரத்தின் முக்கிய விளையாட்டு ஆயிற்றே -5 வருடத்தில் மூன்று முதல்வ்ர்கள்-குரானா ,சாஹீப் சிங் வர்மா மற்றும் பெரும்பான்மை பலம் பெற்ற எதிர்க்கட்சி தலைவியாக பதவி வகித்தவர் பிரதமர் ஆனால் மொட்டை அடித்து கொண்டு விதவைகள் போல பதியசாப்பாடு சாப்பிட்டு கொண்டு வாழ்வேன் என்று சூளுரைத்த சுஷ்மா.
 மத்ய பிரதேசம்-பெரும் வெற்றி பெற முக்கிய காரணம் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட உமா பாரதி,ஆனால் சில மாதங்களுக்குள் musical chair ஆரம்பித்து உமா போய gaur  வந்தார் டும் டும் டும் .கௌர் போய சௌவான் வந்தார் டும் டும் டும் தான்.
 உமா பாரதி கட்சியை விட்டு பிரிந்து தனி கட்சி துவங்கி வெற்றி பெற்று விடுவாரோ என்ற பயத்தால் சௌவான் musical  chair ஆட்டத்தில் இருந்து இதுவரை தப்பித்து விட்டார்.ஆனால் அவர் மோடியை எதிர்த்த பாண்டாவின் கதியை பார்த்து விட்டு ரொம்ப உஷாராக இருப்பது அவருக்கு உதவுகிறது.
 உத்தர்கந்த் மாநிலம்-அங்கு பிரிந்த பிறகு கட்சியினரால்,மக்களால் முதலவர் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கொஷியாரி ஆகவில்லை.நித்யானந்த் சுவாமி முதலவர் ஆனார். ஆனால் தேர்தலில் அவரை வைத்து வெற்றி பெற முடியாது என்பதால் 6 மாதத்திற்கு முதலவர் ஆக்கப்பட்டார்.
 அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி  பெற்றது..அதற்க்கு அடுத்த தேர்தலில் யாரையும் முன் நிறுத்தவில்லை.அங்குள்ள சாதி போட்டி தான் அதற்க்கு காரணம்.பா ஜ க வெற்றி பெற்ற பிறகு ஜெனரல் கந்தூரி முதலவர் ஆனார். துவங்கியது MUSICAL CHAIR .கந்தூரி போய் போக்ரியால் வந்தார் டும் டும் டும் ,போக்ரியால் போய் மறுபடியும் கந்தூரி வந்தார் டும் டும் டும்
 எதுக்காக அவரை தூக்கினார்கள்,எதற்காக மறுபடியும் அவரை தேர்தலுக்கு முன் முதல்வர் ஆக்கினார்கள் எனபது மக்களுக்கு தெரியாத ஆனால் பரிவாரத்தை யக்கும் சக்திகளுக்கு தான் வெளிச்சம்.
ஜார்க்ஹாந்து மாநிலம்- மக்களிடம் காட்டிய முகம் பாபுலால் மாரண்டி.ஆனால் பரிவாரத்திற்கு கலவரம் எதுவும் நடத்தி சாதிக்காத முதலவர் என்றால் அரிக்க ஆரம்பித்து விடுமே
 அதனால் அவரை தூக்கி விட்டு கரிய முண்டா

ராஜஸ்தானில் வசுன்டரே ராஜே கட்சியை விட்டே சென்று விடுவேன் என்று மிரட்டும் நிலையும் பரிவாரங்களின் கைங்கரியத்தால் நடந்தது.அவரை விளக்கி விட்டு ஆர் எஸ் எஸ் இல் ஊறிய ஒருவரை தலைவர் ஆக்கியதும் நடந்தது
அவர்கள் கை வைக்காத  ஒரே மாநிலம் சத்தீஸ்கர் தான்.
ஆனால் சத்தீஸ்கரிலும் அவர்  முதல்வரான 2003 தேர்தலில்  மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் என்பதாலும்,காங்கிரஸில் அஜீத் ஜோகி முதலவர் ஆக இருந்த காரணத்தினாலும் யாரையும் முதல்வராக முன் நிறுத்தவில்லை  முதல்வர் ராமன் சிங் நாட்டு வைத்தியர் என்பதால் அவர் மீது கை வைக்கவில்லை போல.

மக்களின் வோட்டுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கும் கட்சி நம்ம பா ஜ க

நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி   பிரதமர் ஆகிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று   நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது  பிரதமர் ஆனால்  அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
 அது  போல முதல்வர் ஆனவர் தான் மோடியும்.திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர் ஏதாவது அதை எதிர்த்து சொல்ல முடியுமா

 பரிவாரத்தின் தாதாக்களான நாக்பூர் தாத்தாக்களுக்கு இரண்டு நாள் கக்கா வரவில்லை என்றால் அதற்க்கான காரணத்தை  கண்டுபிடிக்க சோழி போட்டு பார்ப்பார்கள்.
 அதில் யாரவது மாநில முதலவர்,கட்சி தலைவரின் மச்சானின் சகலையின் பேரன் ஜின்னா என்ற பெயருடையவருக்கு facebook  இல் friend request அனுப்பி இருப்பது தெரிந்தால்,
  ஏதாவது மாநில முதல்வரின் மனைவியின் பெரியப்பா மகளின் வீட்டில் இயேசுவின் புகைப்படம் இருப்பது தெரிந்தால் உடனே அந்த முதல்வரை பதவி விலக வைத்து விடுவார்கள்.இது தான் அவர்கள் மக்கள் முன் தலைவராக காட்டும் முகத்திற்கு,மக்களின் வோட்டுக்களுக்கு தரும் மதிப்பு.

No comments:

Post a Comment