Tuesday 19 December 2017

இரு பெண்களின் கதை




 கல்லூரியில் மருத்துவம் படித்து கொண்டிருந்த இருவது வயதை கடந்த மேஜர் ஆன பெண்,தன்னுடன் தங்கி வந்த தோழிகளின் மத நம்பிக்கைகளை கண்டு ஈர்க்கப்பட்டு அதன் பால் செல்கிறார்.விடுமுறையில் ஊருக்கு சென்றவர் தன் தந்தையின் குடும்பம் சார்ந்த மதரீதியான முயற்சிகளில் ஈடுபட மறுக்கிறார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட்  என்று சொல்லி கொள்ளும் இந்து தந்தை மேஜர் ஆன தன் மகளை அவள் விருப்பத்துக்கு மாறாக  இந்துவாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கிறார்.வழக்கு தொடுக்கிறார்.நீதிபதிகளும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மேஜர் ஆன ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொண்ட கணவனிடம் இருந்து பிரிக்கிறார்கள்.

 இதற்கு ஆதரவாக பல முதல்வர்கள்,கட்சி தலைவர்கள் ,மதவாதிகள்,கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ,முற்போக்காளர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் என்று பெருங்கூட்டம் இருக்கிறது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் மிகவும் சிந்திக்க வைக்கும்  வழக்கு என்கிறார்.திருமணம் செல்லாது , திருமணமான மேஜர் பெண் கணவனோடு  சேர்ந்து வசிக்க கூடாது,கல்லூரி தாளாளரே கார்டியன் என்று எல்லாம் அற்புத தீர்ப்புகள் அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருக்கின்றன

  சற்றே பின்னோக்கி எண்பது ஆண்டுகள் பின்னே சென்று இன்னொரு பெண்ணின் கதையை பார்ப்போம்.பாடகியான தாய் தேவதாசியாக வாழ்ந்தவர்.தன் மகளையும் பாடகியாக்க சிறுவயது முதல் பயிற்சிகள்,கடும் முயற்சிகள் எடுக்கிறார்.20 வயது மகள் தன் தாயாரோடு வாழ பிடிக்காமல் அவருக்கு தெரிந்த ஒரு காங்கிரஸ்க்காரரை சந்திக்க சென்னை வருகிறார்.அவர் உதவி கேட்டு வந்த காங்கிரஸ்க்காரர் குடும்பம் தேவதாசியின் மகளை கண்டு கோவம் கொண்டதால் இன்னொரு காங்கிரஸ் தியாகியிடம் சென்று உதவுமாறு இந்த காங்கிரஸ் தியாகி கேட்கிறார்.

 இரண்டாவது காங்கிரஸ் தியாகி இரு பெண் குழந்தைகளுக்கு தந்தை.பிரசவத்துக்கு சென்ற மனைவி தாய் வீட்டில் இருந்ததால் காங்கிரஸ் தியாகி வீட்டில் தங்க துவங்குகிறார் பாடகி.அவளை தேடி அவர் சகோதரர் காங்கிரஸ் தியாகி வீட்டுக்கு வருகிறார். தங்கள் வீட்டுக்கு வருமாறு பாடகியை அழைக்கிறார்.ஒழுக்க சீலர் காங்கிரஸ் தியாகி பாடகியின் சகோதரர் சக்திவேலை துரத்தி விடுகிறார்.

 தியாக சீலர் காங்கிரஸ் தியாகி பாடகிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைகிறார் என்று அவர் புகழ் பாடுபவர்கள் இன்று புத்தகங்கள் எழுதுகிறார்கள்.தூய்மையான காங்கிரஸ் தியாகி வீட்டில் தங்கி பாடகி சினிமாவில் நடிக்கிறார்.காங்கிரஸ் தியாகியின் மனைவி திடீர் என்று இறந்து விடுகிறார்.தியாகி உடனே அவர்வீட்டில் வாழ்ந்து வந்த பாடகியை துணைவியாக ஏற்று கொள்கிறார். அவர் தாய்,சகோதரர்,உறவுகள் அனைத்தோடும் எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று அளவுகடந்த அன்பு,பாசம்,காதலோடு உத்தரவிடுகிறார்.

 அடுத்ததாக தன் குழந்தைகளுக்கும் ,தனக்கும் சூத்திர பணியாளாக  பாடகியின் குடும்ப தொழிலை பார்க்கும் அற்புத பணியை தியாக உள்ளதோடு தருகிறார். விதுரரின் தாய் போல் மனமுவந்து அந்த பாடகி அவருக்கு தியாகி தந்த பணியை வாழ்நாள் முழுவதும் செய்கிறாள்.பாடகியை  உச்சநீதிமன்ற நீதிபதிகள்,பிரதமர்கள்,முதல்வர்கள் என அனைவரும் புகழ்கிறார்கள்.

  அவரின் கதையை,அவர் குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட்டதை எழுதுவதை,சுட்டி காட்டுவதை கூட பெரும் குற்றமாக பார்க்கும் கூட்டம் 2016 இல் அகிலாவாக தந்தையால் பெயர் சூட்டப்பட்டு தன் சுயவிருப்பத்தால் மேஜர் ஆன பின்பு ஹதியாவான பெண்ணை 24  வயது பெண்ணை (முதலில் சுட்டி காட்டப்பட்ட ) லவ் ஜிஹாத்,மூளை சலவை என்று பேசும் போது எங்கு சென்று முட்டி கொள்வது என்றே தெரியவில்லை.

  யார் பாடகி(இரண்டாவதாக சுட்டி காட்டப்படுபவர் ) என்று எளிதில் ஊகிக்க முடியும் தான். அவர் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 

Thursday 14 December 2017

காதல்


இதில் என்ன தவறு என்றே விளங்கவில்லை .பள்ளி,கல்லூரி ,பணி என அனைத்து இடங்களிலும் காதலித்திருக்கிறேன்.சிலரின் பள்ளி காதல் திருமணத்தில் முடிந்தது.அதை விட அதிக சதவீதம் கல்லூரியில் நடந்தது.நான் பணி புரிந்த ராணுவம் மற்றும் விமான கம்பெனியில் அதிகாரிகளில் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் தான் அதிகம்.பிறந்து வளர்ந்த சென்னையிலும் அதிகம் தான்.
விமான பணிப்பெண்களுக்கு instructor பணியில் இருந்தேன். 18 வயது பெண் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு விமான பணிப்பெண்ணாக தேர்வு பெற்று பயிற்சியில் இருந்தார்.படிப்பை முடித்து விட்டு வர வேண்டியது தானே என்று கேட்ட போது ,பணிக்கு சேர்ந்து எனக்கு பிடித்த படிப்பை என் காசில் படிப்பேன் என்கிறார்.பெண்கள் வெகுவாக மாறி விட்டார்கள்.பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்று சுற்றும் ஆண்களுக்கு திருமணம் வெகு வெகு கடினம் தான் என்பதையும் சொல்லி வைக்கிறேன்
காதலை குற்றமாக பார்க்கும் நாட்டுப்புறத்தான் கூட்டம் தான் சென்னையை நோக்கி,ஐரோப்பாவை நோக்கி ஓடி வருகிறது.மாற வேண்டியது இவர்கள் தானே தவிர நாங்கள் அல்ல
அழகை பார்த்து,சொத்தை பார்த்து,படிப்பு,பணியை பார்த்து, கவர்ச்சியால் காதலிக்கிறார்கள் ,காதலை சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டே விந்தையாக இருக்கிறது.எதை பார்த்து சொன்னாலும் அதில் தவறு,குற்றம் எங்கே வருகிறது ?
தாம்பரத்தில் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த இரு பெண்களும் காதல் திருமணம் ,பெரிய பெண் இந்துவை திருமணம் செய்து கொண்டார். சின்னவர் இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டார்..தாய் சிறிய மகளுடன் தான் வசிக்கிறார். தினமும் கோவிலுக்கு வருவார்.நகர் கோவிலுக்கு லட்சக்கணக்கில் கட்டிடம் கட்ட பணம் கொடுத்தார்.இஸ்லாமிய மருமகன் தன மாமியாருக்கு வீட்டின் கீழ் போர்ஷனை கொடுத்து விட்டார் .
எதிர் வீட்டில் இருந்த கிருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு மூன்று மகன்கள் .மூவரும் வேறு சாதி,மதத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்கள்.மூவரும் படிப்பை சரியாக முடிக்கவில்லை.ஆனால் நல்ல விளையாட்டு வீரர்கள்,இசை கலைஞர்கள்.மனைவிகள் நல்ல பணியில் இருக்கிறார்கள்.இவர்கள் ஜாலியாக விளையாட்டு,கலை என்று சுற்றி கொண்டு இருக்கிறார்கள் .பின் வீட்டின் தோழர் அவர் எதிர் வீட்டு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
எங்கள் வீட்டிலும் இதே கதை தான். எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களும் இதே கதை தான்.காதலை எந்த வயதில் வந்தாலும் காதலை பெருங்குற்றமாக பார்க்கும் மனநிலை விந்தையாக இருக்கிறது..
பெத்து வளர்த்த பெற்றோருக்கு தெரியாதா என்ற கேள்வியின் முட்டாள்தனம் புரியாத பெருங்கூட்டம் இருவத்தி ஆறாம் நூற்றாண்டிலும் இருப்பது மிகவும் வருத்தம் தான்.
பெற்றோர் சரியான முடிவு எடுப்பர் என்பதே மூட நம்பிக்கை தான்.தாய்மாமன் மகன் படிக்கவில்லை என்று பள்ளிப்படிப்போடு தன மகளின் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்தவர்களை என்னால் பட்டியல் இட முடியும்.நீ ஒன்னும் வெளியூர் சென்று படிக்க வேண்டாம் என்று படிப்பை நிறுத்திய பெற்றோர் தான் பல ஆயிரம்.
நானும் என் குடும்பத்தினரும் செல்லும் ராணுவ கிளப்களுக்கு நூற்றுக்கணக்கில் பத்தாவது ,பதினொன்றாவது சிறுவர் சிறுமியர் எல்லாம் பாய் friend ,கேர்ள் friend ஓடு தான் வருவார்கள்.
இவர்களில் ஒருவரை கூட காதலினால் வாழ்க்கை பாழானது என்று கேள்விப்படவில்லை, பார்க்கவில்லை,யாரும் சொன்னதும் இல்லை. சிறுவயது காதல் திருமணத்தில் முடிந்ததும் உண்டு.பல பிரிந்ததும் நடந்தது.அது அவரவர் வாழ்க்கை
முள்ளு மேல் சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் என்று பேசும் ஊர்நாட்டான் கூட்டம் திடீர் என்று காதல் பெருங்குற்றம் என்று அட்டூழியம் செய்வது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை
இயக்குனர் சேரன் அவர் மகள் காதலை எதிர்த்த நிகழ்வை வைத்து கொக்கரிக்கும் அவலம் ஆச்சரியம் தருகிறது.தோனியை மகள் காதலித்திருந்தால் எதிர்த்திருக்க மாட்டார்.சாமான்யனை காதலித்தால் எதிர்த்தார் என்பது அவர் முடிவு. மேஜர் ஆன மகள்,மகன் தன சொத்து என்ற எண்ணம் அவ்வளவு எளிதில் நாட்டுப்புறத்தான்களுக்கு போய் விடுமா என்ன ?
சேரன் பாரதிராஜா எல்லாம் நாட்டுப்புறத்தான்கள் தானே.அவர்களுக்கு புரட்சி ,காதல் எல்லாமே ஆணாதிக்கம் சார்ந்த ஒன்று தான்.
அடுத்து நாடக காதல்,பஞ்சாயத்து எனும் கதைகள் அடித்து விடப்படுகின்றன.
நாடக காதல் எனும் பொய் திருப்பி திருப்பி சொல்லப்படுவது விளங்கவில்லை.அப்படி ஒன்று இருந்தால் அது அதிகம் நடக்கும் ஊராக சென்னை தான் இருக்க வேண்டும். இங்கு தான் பணக்காரர்களும்,சொத்து வைத்திருக்கிறவர்களும் அதிகம்.வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் இளைஞர்களும் அதிகம்.சாதி,மதம் தாண்டிய காதலும் அதிகம்.
திருமணம் ஆன ஒரே நாளில் பிரிந்து அந்த பஞ்சாயத்து நடக்கும் பெற்றோர் பார்த்து வாய்க்கும் திருமணங்கள் பல ஆயிரம் உண்டு. திருமண செலவை திருப்பி கொடு,போட்ட நகையை திருப்பி கொடு என்று பஞ்சாயத்து நடப்பது காதலை பிரிக்க நடப்பதை விட பல நூறு மடங்கு.
கவுண்டர் ,வன்னியர்,முக்குலத்தோர் மூர்க்கமாக எண்ணிக்கை ஆதிக்கம் காரணமாக ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் இருந்து மட்டுமே இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுவதை கொஞ்சம் சிந்தித்தாலும் எளிதில் விளங்கி கொள்ளலாம்.
ஆங்கிலோ இந்தியர்கள் என்ற சமூகம் உண்டு. எங்கள் ஊரில் நிறைய பேர் இருந்தார்கள்.அவர்கள் இடையே மிக பெரும்பான்மை காதல் திருமணங்கள் தான்.அவர்களை போல தான் சென்னையின் மற்ற சமூகங்களை சார்ந்த மக்களும் மாறி வந்தார்கள்.வேலை இருக்கிறவனோ ,இல்லாதவனோ பிடித்தவனை திருமணம் செய்து கொண்டால் விட்டு விடுவார்கள்.பட்டிகாட்டங்கள் படித்து,பணி கிடைத்து சென்னை,சிங்கப்பூர் ,அமெரிக்கா என்று வந்து விட்டாலும் கிராமத்து வெறித்தனத்தை தூக்கி கொண்டு அலைவதும் அதனை அனைவர் மீதும் திணிப்பதும் தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம்

Tuesday 12 December 2017

இந்து மதம் -தொகை மதம்



இந்த தொகை மதம் என்ற பெயரை பிலிம் சேம்பேரில் பதிவு செய்து வைத்து விட வேண்டும்.அற்புத வார்த்தை இது.

என்னா அழகா ஒரு வார்த்தையின் மூலம் பல ஆயிரம் வழிபாட்டு தளங்களை ஆட்டையை போட்டதை.கடவுள்களை இழிவுபடுத்தும் கதைகளை உருவாக்கியதை நியாயப்படுத்தி விடுகிறார்கள் .ஹேவிளம்பி போல அற்புதமான சொல் இது

வருங்கால பிரதமர் கமல்ஹாசன்  மஹாவிஷ்ணுவின் அவதாரம்.அவர் காப்பி அடித்து நடித்த பல படங்களை அவர் இந்நாள் ரசிகர்கள் மற்றும் வருங்கால ரசிகர்கள் இதே போல தான் அவரை பார்த்து தான் மற்றவர்கள் காப்பி அடித்தார்கள்.ஐந்து வயதில் நடிக்க வந்த கமலஹாசன் ஐநூறு படம் நடித்த கமல்ஹாசன் ஐந்து படம் நடித்த ஐம்பது வயதில் நடிக்க வந்த ஐந்து படங்கள் நடித்தவரை பார்த்து காப்பி அடித்தார் என்று சொல்வதா என்று வெகுண்டு எழுவார்கள்

சான்றுகளை நடுநிலையாக ஆராயும் மனநிலை வேண்டும்.முன்முடிவோடு இருப்பவருக்கு சான்றுகள் உதவாது.,அதுவும் முட்டாள்த்தனமும் மூர்க்கத்தனமும் இருந்தால் மட்டுமே ஒருவர் இந்துத்வராக இருக்க முடியும்

 ஆதி சங்கரர் புத்த விகாரமாக மாற்றப்பட்ட பத்ரிநாத் எனும் விஷ்ணு கோவிலை மறுபடியும் விஷ்ணு கோவிலாக அதுவும் சைவ,அத்வைதர் மாற்றினார் எனும் கதை தான் ஸ்தலபுராணம்.அங்கிருந்து பூரி ஜெகநாதருக்கு வந்தாலும் புத்தர் ஜெகந்நாதராக மாற்றப்பட்டு சில நூற்றாண்டுகள் தான் ஆகின்றன.அதனை விட சமீபத்தில் மாற்றப்பட்டவர் சபரிமலை அய்யப்பன் .ஆந்திர கோவில்களும் ,ஸ்ரீரங்கமும் அதே கதை தான்

இந்து மதம் எங்கிருந்து எப்படி யாரால் எப்போது பரவியது?

எது இந்து மதம் ?இந்தியா முழுமைக்கும் சிவா விஷ்ணு,பிரேமா சரஸ்வதி எப்போது எப்படி கொண்டு வரப்பட்டார்கள் ?

இந்தியா முழுமைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலைகள்,புத்த விகாரங்கள் கிடைப்பது எத்தனை சுட்டி காட்டுகிறது

புத்த மதம் எலைட் மதம் இந்து மதம் கம்முனிச மதம் என்று சொல்வது நல்ல நகைச்சுவை .இருக்கும் மதங்களில் மிக எலைட் மதம் இந்து மதம் தான்.ஊரில் இருந்த எல்லா கடவுள்கள்,வழிபாடுகள்,வழிபாட்டு தளங்கள் அனைத்தையும் இந்து மதம் என்று சொல்வதை விட நேர்மையற்ற செயல் இருக்க முடியுமா

இந்து மதத்தில் இருந்த உருவ வழிபாடுகள் எவை ?திடீர் என்று விஷ்ணுவுக்கு 4000 ஆண்டு பழமை வருவது சூப்பர் ட்விஸ்ட் .சிலர் நாப்பது லட்சம் ஆண்டுகள் என்று தர்க்கரீதியாக ,அறிவியல்பூர்வமாக வாதிடுவது சுப்ரீம் ட்விஸ்ட்.

  இந்து மதத்தவர் பயன்படுத்தும் மிக பெரும்பான்மையான வசை சொற்கள் சமண,புத்த மதத்தை இழிவுபடுத்துபவை தான்.சமண புத்த பழங்குடி மதங்களை சார்ந்தவர்களை குறிக்கும் சொற்கள் அனைத்தும் வசை சொற்களாக பயன்படுத்தப்படுகிறது.அம்மண குண்டி,மொட்டை,நாதாரி,கேப்மாரி,சோமாறி,முடிச்சவிக்கி, பற பயல்,பள்ளி பயல்,பள்ள பயல் எல்லாம் புத்த சமண மதத்தின் மீது வெறுப்பை உமிழும் சொற்கள் தான்

 தீண்டாமை என்ற ஒன்று உருவாக்கப்பட்டதே ஆட்டையை போட்ட இந்து கோவிலாக மாற்றப்பட்டவற்றை காப்பாற்ற,அவற்றின் முந்தைய கடவுள்களின் எச்சங்களை அடியோடு அழிக்க தான் என்ற முடிவுக்கு வருவதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.

இந்து அல்லாதவர் ,இந்த இந்த சாதியினர் மட்டுமே குறிப்பிட்ட இடம் வரை அனுமதி  எனும் விசித்திர விதிகள் இருப்பதன் பின்னே இருப்பதும் இதே காரணங்கள் தான்.புத்த ,சமண வழிபாட்டை தொடருவதை அழிக்க உருவாக்கப்பட்டது தான் தீண்டாமை,இந்து அல்லாதவர் அனுமதி மறுப்பு,மேலாடை கழட்டி விட்டு செல்ல வேண்டிய விதிகள் (வர்ணம் பூணூலை வைத்து எளிதாக தெரிந்து விடும் )எல்லாம் உருவாக்கப்படவும் இதுவே காரணம்.

 வேறு எந்த மதத்தினரின் வழிபாட்டு தளங்களில் இது போன்ற வர்ணம்,கோத்திரம் சார்ந்த தீண்டாமைகள் உள்ளதா என்பதை சிந்தித்தால் இணைத்த உண்மை எளிதில் விளங்கும்


Sunday 10 December 2017

மோடியும் சசிகலாவும்


திராவிட கழக தலைவர் வீரமணி அவர்கள் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தாரை போற்றும் விதமாக வெளியிட்ட அறிக்கை வியப்பையும் வேதனையும் அளிக்கிறது.இந்த நிலைப்பாடு கொண்ட ஒருவர் எப்படி மோடியை அவர் சாதியை வைத்து ஆதரிக்காமல் இருக்கிறார் என்று ஆச்சரியம் வருகிறது.
சசிகலா பிராமணர் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.அப்போதும் வீரமணி இதே நிலை தான் எடுத்திருப்பாரா அல்லது அவருக்கு எதிராக பொங்கி இருப்பாரா.
மோடிக்கும் சசிகலாவுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலா அவர்களை விலக்கி வைத்தது போல மோடி அவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்று கட்சியினர் போராட்டம் நடத்தியதால் குஜராத் அரசின் நிழல் அரசியலில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.மீண்டும் சசிகலா சேர்த்து கொள்ளப்பட்டது போல மோடி மீண்டும் பின்வாசல்/புழக்கடை /நிழல் அரசியலில் சேர்த்து கொள்ளப்பட்டார்.
நிழல் முதல்வராக டெல்லி துணை கொண்டு பா ஜெ க வை ஆட்டிப்படைத்து கொண்டிருந்த மோடி ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்காத மோடி நேரடியாக மக்கள் முன் முன்னிறுத்தப்பட்ட கேஷுபாய் அவர்களை முதுகில் குத்தி ,எம் எள் ஏக்களின் ஆதரவு இல்லாமல் முதல்வர் ஆனவர்.
இருவருக்கும் இடையே ஒரே வித்தியாசம் -கேசுபாய் உயிரோடு இருக்கும் போதே அவர் முதுகில் குத்தி விட்டு மோடி நேரடி முதல்வர் ஆனார். அவர் வெற்றி பெற நல்ல தொகுதியாக தேடியதில் ஹரேன் பாண்டியா அவர்கள் தொகுதி சிக்கியது.ஆனால் ஹரேன் பாண்டியா இதற்கு ஒத்து கொள்ளவில்லை. பின் வேறொரு தொகுதியில் சாம தான தாண்ட பேதங்களை பிரயோகித்து குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உடன் இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ஹரேன் பாண்டியா என்னவானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.அத்வானி ஹரேன் பாண்ட்யாவுக்கு போட்டியிட வாய்ய்பு தர வேண்டும் என்று சொன்னதற்கு கோவித்து கொண்டு மருத்துவமனையில் படுத்து கொண்டவர் மோடி.விடாப்பிடியாக அவருக்கு போட்டியிட வாய்ப்பு தர மறுத்தவர்.அதே போல வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிக்க மருத்துவமனையை பயன்படுத்தி கொண்டவர் சசிகலா
தமிழகத்தின் மோடியாக சசிகலா உருவானால் ஹரேன் பாண்டியா யாராக இருக்கும் என்ற சுவாரசியம் மிகுந்த கேள்வி எழுகிறது..மோடி தன்னை ஆதரித்த அனைவரையும் நடுக்காட்டில் தான் நிறுத்தி விட்டிருக்கிறார்.அதே நிலை தான் இங்கும் நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
மாநிலம் தழுவிய மத கலவரம் மட்டும் இல்லை என்றால் மோடி ஒரு ஆண்டு முதல்வராக தூக்கி எறியப்பட்டிருப்பார். அவர் அரசியல் வாழ்வுக்கு மிக முக்கிய காரணம் மத கலவரம்.தமிழ்நாட்டின் மோடியாக இங்கு உருவாக நினைப்பவர்கள் அதே போல சாதிக்கலவரங்களை தூண்டி விடுவார்களோ என்ற பயம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அ தி மு க வின் 135 எம் எல் ஏக்களில் அதிகம் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் தான்-31 பேர்.இப்போது வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி சேர்ந்து கவுண்டர்கள் 24 பேர் .ஹிந்து பத்திரிக்கை கூட தவறாக 28 பேர் என்று எழுதுவது வருத்தம் தரும் ஒன்று.அடுத்து முக்குலத்தோர் 19 பேர்.வன்னியர் 17 பேர்,முத்தரையர் 6 பேர் ,நாடார்கள் 4
சென்ற முறை மத்திய அரசில் தமிழ்நாட்டில் இருந்து 12 அமைச்சர்கள்.இந்த முறை ஒரே ஒருவர்.பா ஜெ க வென்றது ஒன்று தான்.மக்களாட்சி என்பதே எண்ணிக்கையை வைத்து தான்.எம் எல் ஏ க்கள் இதை மனதில் வைத்து கொண்டு கூட்டாக கட்சிக்கு உள்ளும்,வெளியிலும் போராடினால் தான் சதவீதத்துக்கு ஏற்ற இடங்கள் கிடைக்கும்.அரசியலில் இட ஒதுக்கீடு மற்ற அணைத்து மக்கள் ஆட்சி தூண்களை விட மிக மிக முக்கியமானது. இதில் கோட்டை விட்டு விட்டால் அனைத்திலும் கோட்டை தான்.

திரு ஓ பி எஸ் அவர்கள் முதல் முறை,இரண்டாம் இப்போது மூன்றாம் முறை முதல்வராக பதவி ஏற்க ஒரே காரணம் தான்-சாதி .முக்குலத்தோர் சமூகத்தில் இருந்து மட்டும் 9 அமைச்சர்கள் இருக்க ஒரே காரணம் சாதி தான்.வன்னியர்,முக்குலத்தோர்,கவுண்டர் என்ற மூன்று சாதிகளுமே அவர்களின் சதவீதத்துக்கு அதிகமான இடங்களை தான் கட்சி,ஆட்சி,சட்டசபையில் கடந்த பல தேர்தலுக்காக பெற்று வருகின்றன. வெள்ளையர் காலத்தில் நடந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சட்டநாதன் கமிஷன் அறிக்கைபடி பார்த்தல் இந்த சாதிகளின் மக்கள் தொகையை பற்றி ஓரளவுக்கு அறிய முடியும்.
தி மு க வில் இந்த நிலை கிடையாது. எந்த சாதியும் 3 ,4 அமைச்சர்களுக்கு மேல் பெற்றது கிடையாது.கம்ம்யூனிஸ்ட் பௌத்ததேப் அவர்கள் அமைச்சரவையில் 33 பேரில் 16 பேர் பிராமணர்கள்.அதே போன்ற நிலை இங்கு ஓ பி எஸ் அல்லது சசிகலா அவர்கள் தலைமையில் நடக்க தான் வாய்ப்புகள் அதிகம்.எண்ணிக்கை அதிகம் இருக்கின்ற எந்த சாதி தலைமைக்கு வந்தாலும் சாதி வெறியாட்டங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.தமிழ்நாடு ஓரளவுக்கு சாதி,மத கலவரங்கள் குறைவாக உள்ள மாநிலமாக இருக்க இதுவரை இருந்த எண்ணிக்கை குறைவாக இருக்கும் சமூகங்களை சார்ந்த ,ஓரளவுக்கு சாதியை கடந்த தலைமைகள் காரணம்.
இது தொடர வேண்டுமானால் , சபாநாயகர் தனபால் அல்லது முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் அவர்கள் முதல்வர் மற்றும் பொது செயலாளராக பதவி ஏற்றால் ,எந்த சாதியையும் அளவுக்கு அதிகமான அமைச்சர்களை கொண்ட நிலை இல்லாத அமைச்சரவை உருவானால் தான் சாத்தியம். இதை கேட்கும் உரிமை கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் உண்டு.
எம் ஜி ஆர் முதல் முறை ஆட்சி அமைத்த 1977 தேர்தலில் எம் எல் ஏ வாக வெற்றி பெற்றவர்.அமைச்சராக இருந்தவர், சபாநாயகர் தனபால் அவர்கள் என்பதையும் எந்த விதத்தில் ,எதனால்,எந்த அடிப்படையில் அவர் இப்போது முன்னிறுத்தப்படுபவர்களை விட குறைந்தவர் என்பதனை ஆய்ந்து அறிந்து கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று பொதுவில் வைக்கிறேன் .

சென்னை வெள்ளமும் சகிப்புத்தன்மையும்,சகிப்புத்தன்மை இன்மையும்


சென்னை, கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்கள் பேரழிவுகளை சந்தித்துள்ள நிலையில்,பல ஆயிரம் மக்கள் அந்த துயரை துடைக்க போராடி கொண்டிருக்கும் வேலையில் சகிப்புத்தன்மை இன்மை பற்றி எழுத தயக்கமாக இருந்தாலும் தமிழக,மற்ற மாநில மற்றும் என் ஆர் ஐ ஹிந்துத்வா குழுக்கள் சென்னை வெள்ளத்தை வைத்து தங்கள் வெருப்பரசியலையும்,சகிப்புதன்மையற்ற நிலைக்கு எதிரான போராட்டங்களையும் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில்,இணைய பத்திரிக்கைகளில்,திறந்த மடல்களாக அடித்து ஆட துவங்கியுள்ளதால் மறுப்பு எழுத வேண்டிய நிலை.
ஹிந்து மதமே சென்னை மக்கள் மற்றவர்களுக்கு மற்றும் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ள காரணம் என்று ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது.எங்கள் மதத்தை சேர்ந்தவர்கள்,சங்க பரிவாரங்கள் தான் அதிக அளவில் உதவிகளை செய்தவர்கள் என்ற பிரசாரங்கள்,உதவி செய்யும் மாற்று மதத்தை சார்ந்த குழுக்களின் மீது வெறுப்பும்,வன்மமும் கொண்ட பதிவுகள்.சந்தில் சிந்து பாடும் முறையில் சகிப்புத்தன்மை குறைந்தது என்று சொன்னவர்களை செய்யும் நக்கல் என ஹிந்துத்வ குழுக்கள் முழுமூச்சில் சமூக வலைதளங்களில் இறக்கி விடப்பட்டுள்ளன
முதலில் சில உண்மைகள்.தமிழ்நாடு ,முக்கியமாக சென்னையும் சுற்றுப்புறமும் ஹிந்டுத்வதையும் அதன் பல்வேறு இயக்கங்களையும்,கட்சிகளையும் பொருட்டாக எண்ணாத இடம்.இங்கு அதனால் தான் இஸ்லாமியர்களும் ,கிருத்துவர்களும் எளிதில் இறங்கி பலருக்கு உதவ முடிந்தது.20 ஆண்டுகளாக தொடர்ந்து பா ஜ க ஆட்சியில் இருக்கும் குஜராத்தில் இஸ்லாமியர் சென்று ஹிந்து தெருக்களில் உதவும் நிலை உள்ளதா,அவர்கள் தரும் பொருட்களை மாற்றுமதத்தவர்கள் ஏற்று கொள்வார்களா என்பதை சற்று எண்ணி பார்த்து விட்டு ஹிந்துத்வா இயக்கங்கள் பீற்றி கொண்டால் நலம்.
ஆமீர் கான் மனைவி ஹிந்துவாக பிறந்தவர்.இஸ்லாமியரை காதல் மணம் புரிந்து கொண்டவர்.இந்துவாகவோ ,இஸ்லாமியராகவோ,கடவுள் மறுப்பாளராகவோ,மாட்டு கறி உண்பவராகவோ அல்லது சைவ உணவு உண்பவராகவோ வாழ்பவர். அவரை போன்றவர்களின் உரிமைகளை ஆதரிக்கும் கட்சிகள் ,மக்கள் பலரை கொண்ட இடம் தமிழ்நாடு.அவரின் திருமணம் ,உணவு.கடவுள் நம்பிக்கை,பிறப்பால் திணிக்கப்பட்ட மதத்தை தூக்கி எரிந்து விட்டு தனக்கு வேண்டிய கடவுளை,மதத்தை தேர்ந்தெடுத்து கொள்ளும் உரிமை அதிகம் இருக்கும் மாநிலம் இது. இவை அனைத்துக்கும் எதிரான இயக்கங்கள் அதிகாரத்திற்கு வரும் போது அச்சபடுவதில் தவறு என்ன.அவர் அச்சம் தவறு என்று சங்க பரிவாரங்கள் காட்ட வேண்டுமானால் கீழே சுட்டி காட்டப்படும் மூன்றையும் முழுமனதோடு ஆதரிக்கிறேன் என்று அறிக்கை விடுங்களேன்
உலகின் பெரும்பான்மையான மக்களின் உணவான மாட்டு கறி உண்ண யாருக்கும் தடை கிடையாது. தனி மனிதரின் விருப்பு வெறுப்புகளில் அரசு தலையிடாது
சாதி மதம் கடந்து யாரை வேண்டுமானாலும் காதலித்து திருமணம் செய்து கொள்ள மேஜர் ஆன ஆண்,பெண்களுக்கு உரிமை உண்டு.லவ் ஜெஹாத் எதிர்ப்பு என்று பெண்களை இழிவாக நினைக்கும் ,சுய முடிவு எடுக்கும் திறன் அற்றவர்கள் என்று எண்ணும் போராட்டங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது.சாதி,மதம் கடந்த காதல் திருமணங்களை முழுமனதோடு ஆதரிக்கிறேன்.
பிறப்பால் திணிக்கப்பட்ட மதம்,சாதி,சாதி சார்ந்த தொழில்,பெண்ணடிமைத்தன சடங்குகளை உதறி தள்ளி விட்டு தனக்கு பிடித்த கடவுள்,படிப்பு,வேலை,வாழ்விடம் ,வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து கொள்ள ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிமை உண்டு .
மேற்கூறிய மூன்றுக்கும் ஆதரவான நிலை எடுத்த கட்சிகள் தான் தமிழ்நாட்டில் மிக பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்ற கட்சிகள்.இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குங்கள்,மாற்று மதத்தவர் நடத்தும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காதீர்கள்,மாற்று மதத்தவரோடு ஹிந்து பிள்ளைகள் பழகுவதை தவிருங்கள்,தீவிரமாக கண்காணியுங்கள் என்று பேசும் ராம கோபாலன் ,அர்ஜுன் சம்பத்,எச் ராஜா,மணியம் போன்றோரை தலைவர்களாக கொண்ட இயக்கங்கள் சென்னைக்கு ,இங்கு உதவும் மக்களை எடுத்துகாட்டாக மற்றவருக்கு சொல்வதை விட சிறந்த நகைச்சுவை உண்டா.சங்க பரிவாரங்கள் வலியுறுத்தும் அனைத்துக்குமே நேரெதிர் நிலை கொண்டவர்கள் அதிகம் இருப்பதால் தான் மக்கள் சாதி,மடம் கடந்து உதவும் நிலை இருக்கிறது என்பதை பரிவாரங்கள் புரிந்து கொண்டு தங்களை மாற்றி கொண்டால் மகிழ்ச்சி தான்

மீட்பு பணி


விவசாயம் எவ்வளவு முக்கியமான கடினமான தொழில்.மீன் பிடிப்பது எவ்வளவு சுலபமான அதிக வருவாய் தரும் தொழில் .கிருத்துவர்கள் அதிகம் இருப்பதால் கூச்சல் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு பதிவு கண்ணில் பட்டது. இந்துத்வர்கள் பலர் இது போன்ற,இதை விட மோசமான பதிவுகளை எழுதி கொட்ட துவங்கியுள்ளதன் காரணம் விளங்கவில்லை.
அங்கு குஜராத்தில் ஹிந்து சாம்ராட் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தான் அஹ்மத் படேல் முதல்வராக விரும்புவது ஏன் என்று புரிகிறதா என்று கேள்வி கேட்கும் போது அவரின் தொண்டர்கள் இப்படி பேசாமல் இருந்தால் தானே ஆச்சரியம் என்ற உண்மை உறைத்தாலும் இந்த சூழலில் இப்படி பேச முடியுமா என்று வேதனையாக இருக்கிறது.
கன்யாகுமரி வாழ் மீனவர்கள் ஒக்கி புயலில் அடைந்த பெரும் பாதிப்புக்கு மத்திய மாநில அரசுகள் புயலுக்கு முந்தைய ,எச்சரிக்கை ,துரிதப்படுத்தி இருக்க வேண்டிய மீட்புப்பணிகளில் ஆர்வம் காட்டாததால் ,பாதிக்கப்பட்ட மக்களின் துயர் தீர்க்க முக்கியத்துவம் தராததால் எழுந்துள்ள மீனவ மக்களின் கோவம் மிக நியாயமானது.
கடலும் மலையும் எந்த மீட்பு பணிக்கும் சவால் விடும் இடங்கள்.பனிமலைகளில் பனிச்சரிவு காரணமாக பல நூறு வீடுகள் பல கிலோமீட்டர் சாலைகள் அடித்து செல்லப்படும்.ராணுவத்தில் எதிரி ராணுவத்தின் குண்டுகள்,போரில் உயிர் இழந்தவர்களை விட பனி சரிவுகளில் ,பனி புயல்களில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.இது அப்படியே கடல்வாழ் மீனவர்களுக்கும் பொருந்தும்.
மிகவும் சவாலான வாழ்க்கை அது.இங்கு மீட்பு பனி மிக கடினமான ஒன்று.சென்னை வெள்ளத்தின் போது உதவிய வகையில் இங்கு உதவ வேண்டிய சூழல் இல்லை என்பதை தான் அங்கு வசிக்கும் மக்கள் சுட்டி காட்டுகின்றனர்.அவர்களுக்கு வேண்டியது துரிதமான தீவிரமான மீட்பு பணி.இதனை மத்திய அரசு மட்டுமே செய்ய முடியும்.மத்திய அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க கோவம் அனைவரின் மீதும் திருப்படுகின்றதோ என்று தெரியவில்லை.
உலகமே சேர்ந்து தேடியும் காணாமல் போன் விமானம் இன்றும் கிடைக்கவில்லை.அதில் பயணித்த பல நூறு பயணிகள் நிலை இன்றும் புரியாத புதிர் தான்.பரந்து விரிந்திருக்கும் கடலில் எங்கோ வீழ்ந்திருக்கும் வாய்ப்புகள் தான் மிக அதிகம்.கடல் பயமுறுத்தும் அளவுக்கு வேறு எதுவும் பயமுறுத்தாது .கடல் வாழ் வாழ்க்கை வீரம் மிகுந்த வாழ்க்கை.
இதற்கு நடுவே தமிழ்நாட்டை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்லக்கூடிய நிகழ்வான சல்லிக்கட்டு போராட்டம் வேறு அடிக்கடி எடுத்துக்காட்டாக முன் நிறுத்தப்படுகிறது .முட்டாள்தனம்,மூர்க்கத்தனம்,மூடத்தனம் நிரம்பிய ஒரு சடங்கு சல்லிக்கட்டு.அதற்கு நடந்த ?போராட்டத்தால் பல டஜன் உயிரிழப்புகள் தான் ஒரே பலன்.சல்லிக்கட்டுக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு .தமிழன் மிக முட்டாளான,தான் இத்தனை நாள் போராடி வந்த,பெற்ற அனைத்து உரிமைகளுக்கும் எதிரான போராட்டம் சல்லிக்கட்டு போராட்டம் என்பதை உணராத போராட்டம்.
அதற்கு கூடிய கூட்டம் ஒரு ஜாலி கூட்டம்.,மத்திய அரசு,மாநில அரசு அனைத்தும் சாமரம் வீசி வேடிக்கை பார்த்த கூட்டம்.போராட்டம் சற்றே வேறு பிரச்சினைகளை பேச துவங்கும் சூழல் உருவாகுமோ என்ற அச்சம் வந்தவுடனே அரசு தன் கோரமுகத்தை காட்டிய போராட்டம்.இந்த ஆண்டோடு ஒரு துன்பியல் சம்பவமாக இதனை நினைத்து அதனை மேற்கோள் காட்டுவதை கைவிட்டாலே நன்மை தான்.
பெரும்பான்மை மக்களுக்கு மீட்பு பணி,நிவாரண பணி ,உதவி என்பதன் வித்தியாசம் தெரியாத நிலை தான் மிகவும் வருத்தம் தருகிறது.இங்கே மீட்பு பணி என்பது இப்போதும் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வாய்ப்புகள் உள்ள மீனவர்களை காப்பாற்றும் ,காப்பாற்ற கூடிய ஒன்று என்பதை விளங்கி கொள்ள கூடிய சூழல்,அறிவு பெரும்பாலானோருக்கு இல்லை என்பது சுடும் உண்மை.
அரசின் வேலை,மீட்பு,நிவாரணம்,உதவி செய்பவர்களின் வேலை பெட் சீட்,உணவு பொட்டலம் தருவது மற்றும் அரசு வீட்டுக்கு தரும் நிவாரண தொகை மட்டுமே என்று நினைத்து கொண்டிருப்பவர்களை வைத்து கொண்டு சல்லிக்கட்டு வேண்டும் என்று கூவ தான் முடியும்.உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ள ,பல நாட்களாக கடலில் போராடி கொண்டிருக்கும் ,தத்தளித்து கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க மத்திய அரசு கடற்படை,விமான படை ,தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் முழுமூச்சில் ஈடுபட்டால் பலரை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை நியாயமான ஒன்று.
ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் மூழ்கி இருக்கும் மத்திய அரசும்,மாநில அரசும் இதனை உணர்ந்தது போல தெரியவில்லை.பெரும்பான்மை மக்களும் மீனவர்கள் ஏன் நிவாரணத்திற்காக இவ்வளவு போராடுகிறார்கள் என்று கேட்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்.தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தத்தளித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைய காரணம் என்பதை விளங்கி கொண்டால் போராட்டங்களுக்கு ஆதரவு தர,அரசை நிர்பந்திக்க பலரும் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது

மதங்கள் -தொன்மை


கிருத்துவம்,இஸ்லாம்,சமணம் ,புத்தம் ,சீக்கியம் போன்ற மதங்கள் தெளிவான மூடநம்பிக்கைகள் என்றால் இந்து மதம் தெளிவற்ற மூடநம்பிக்கை.
சந்தடி சாக்கில் மிக தொன்மையான,5000 ,6000 என்று எல்லாம் அடித்து விடுவதும் நடக்கிறது.இந்து மிஷனரிகள் (ஐயமோஹன் வரை)இப்படி பேசி பேசியே
கூட பல கொலைகளை புரிந்து ,புத்த விகாரங்களை ஆட்டையை போட்டு ,பழங்குடி தெய்வங்களை கைப்பற்றி சமஸ்க்ரிதமயமாக்கி வளர்த்த மதம் இந்து மதம்.
கோவில் என்பதே புத்த விகாரங்களை ஆட்டையை போடுவதில் தான் முதல்முறையாக ?இந்து மதத்தில் ஆரம்பித்தது. எந்த பகுதியிலும் பழமையான கோவில் என்பது 1800 வருடங்களை தாண்டாது.மிக பெரும்பாலான பகுதிகளில் 1000 ஆண்டுகள் 500 ஆண்டுகள் தான். ஆனால் புத்த விஹாரங்களும் சமண பள்ளிகளும் பழங்குடி வழிபாட்டு தளங்களும் மிக பெரும்பாலான இடங்களில் 2000 ஆண்டுகளுக்கு பிந்தையவை என்பதை அகழ்வாராய்ச்சி முடிவுகள் தெளிவாக மிக தெளிவாக நிறுவுகின்றன
இந்து மதத்தின் பெருமைகள் என்று முற்போக்காளர் முதல் பிற்போக்காளர் வரை விடும் பீலா தாங்க முடியவில்லை .ஒருவர் தொகுப்பு மதம் என்று monogamy ,polygamy போல மதங்களை முன் நிறுத்தி பெருமை பேசுகிறார். இன்னொருவர் நெகிழ்வுத்தன்மை ,பழங்குடி வழிபாட்டு முறைகளை போற்றி பாதுகாத்த மதம் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்.
மோனோகெமி என்பதை மனைவி ,கணவன் என்று வரும் போது உன்னதமாக சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கும் அதே கூட்டம் மதம் கடவுள்கள் என்று வரும் போது அப்படியே திருப்பி போட்டு பல்டி அடிப்பது விந்தையாக இருக்கிறது.எத்தனை மனைவி,கணவன் வேண்டுமானாலும் அனுமதிக்கும் மனநிலையை விட சிறந்த மனநிலை உண்டா என்பது போல அறிவார்ந்த கேள்விகளை அள்ளி வீசுகிறார்கள்.ஆயிரம் மனைவி கணவன் இருந்தாலும் அவர்களுக்குள் யாருக்கு முக்கியத்துவம் என்று இருப்பது போல ,கோசலைக்கும்,கைகேயிக்கும் மற்ற அறுபது ஆயிரம் மனைவியருக்கும் இடையே தெளிவான ப்ரோடோகால் ,யாருக்கு முதன்மை ,யார் வாரிசுக்கு பட்டம்,யார் சூத்திர வேலைக்காரி என்று தெளிவான விதிகள் பல கடவுள்கள் இடையே கதைகளிலும் வழிபாட்டிலும் உண்டு.இதை பெருமையாக சொல்வதே விசித்திரமான ஒன்று.
இன்னொருவர் ஒரு நெகிழ்வான தொகுப்புமத இந்து மேரி மாதாவை வழிபடுவூதில் தயக்கம் காட்ட மாட்டார்,மற்றவர்கள் அப்படியா என்று புதுவிதமான தாக்குதலை மேற்கொள்கிறார். அப்படி என்றால் மேரிமாதாவை ,இயேசுவை மட்டும் வழிபடுவதை இந்து தான் என்று ஏற்று கொண்டு போக வேண்டியது தானே என்றால் போடா பாவாடை கிருத்துவ பாதிரி என்று அற்புத இந்து மதத்தின் நெகிழ்வுத்தன்மையை உடனே வெளிப்படுத்துகிறார்.பார்வதியை வழிபட மாட்டேன்,சிவனை மட்டும் வழிபடுவேன் என்பதை போல ஒரே கடவுள் இயேசு தான் என்று சொல்வதை ஏற்று கொண்டால்,பல கோடி இந்துக்கள் கர்த்தரே ஒரேகடவுள் என்பதை மகிழ்ச்சியோடு மனமுவந்து ஏற்று கொண்டால் நெகிழ்வுத்தன்மை ,அன்பு,பாசம்,அறிவு,கருணை எல்லாம் ஒருங்கே அளவற்ற முறையில் கொண்ட இந்துக்கள் மகிழ்ச்சி தானே அடைய வேண்டும்.அப்படியா நடக்கிறது
மாமிசத்தை தங்கள் குடும்ப நிகழ்வுகளில் ,பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கியமான உணவாக கொண்ட இஸ்லாமியர்,கிருத்துவர்,இந்துவின் கீழ் கொண்டு வரப்பட்ட பல கோடி மக்கள் உண்டு.அவர்கள் மாமிசம் உண்ணாத மற்றவர்களுக்காக சைவ உணவும் திருமணம் முதல் பண்டிகை வரை தருவது அவர்களை அப்படி செய்ய மறுக்கும் சைவர்களை விட மிக உயர்ந்தவர்களாக மாற்றி விடுகிறதா என்ன ?அதே தானே இங்கும்.இவருக்கு மாமிசம் பெரும் குற்றம் எனும் மூட நம்பிக்கை போல அவருக்கு வேறு கடவுளை வணங்குதல் குற்றம் எனும் மூட நம்பிக்கை
நெகிழ்வுத்தன்மை என்றால் என்ன என்றே மிக குழப்பமாக இருக்கிறது. இருப்பதிலேயே நெகிழ்வுத்தன்மை அறவே அற்ற மத நம்பிக்கை இந்து மத நம்பிக்கை தான். இங்கு பிறப்பே அடிப்படை
தென் இந்தியாவில் வாழும் இந்துவின் கீழ் கொண்டுவரப்பட்ட மக்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஒரு இந்து அதுவும் நெகிழ்வுத்தன்மையே மதமாக கொண்ட வடஇந்தியாவை சார்ந்த தொகுப்புமத இந்து அதனை ஏற்று கொள்கிறேன் என்று ஏற்று கொள்வாரா அல்லது குறைந்தபட்சம் தொகுப்புமத இந்து மத தலைவர்கள் இது தவறல்ல என்று சொல்வார்களா ?
எதையும் மாற்றவே முடியாது என்று பல நூறாண்டுகளாக சொல்லி வரும் கூட்டம் மட்டுமே இந்து மதம் கீழ் வந்த கூட்டம் .மற்ற மதங்களை சேர்ந்த முட்டாள் மதகுரு கூட்டத்தில் ஒன்றிரண்டாவது இது தவறு,மாற்றம் வேண்டும்,ஓரின சேர்க்கையாளரும் மத குரு ஆகலாம் ,பெண்களும் மத குருக்கள் ஆகலாம் என்று எல்லாம் சொல்லும் வாய்ப்புகள் உண்டு
மிக பெரும்பாலான விஷ்ணு ஆலயங்கள் நேரடியாக புத்த விகாரங்களை ஆட்டையை போட்டு கோவிலாக ஆனது தான்.நரசிம்ம அவதாரமே புத்தரை கிழித்த அவதாரம் தான்.பெரும்பாலான நரசிம்மர் சிலைகள் கிழிப்பது புத்த உருவமாக வழிபட்டு வரப்பட்ட உருவத்தை தான்
ஆந்திராவில் எந்த மலையை ஆராய்ந்தாலும் அங்கு புத்த விகாரங்கள் கிடைக்கும்.அவை அப்படியே நரசிம்மர் கோவில்களாக,விஷ்ணு கோவில்களாக மாற்றப்பட்டன.
அதற்கான சுயம்பு கதைகளை கொஞ்சம் ஆராய்ந்தால் கூட எப்படி ஏமாற்றி இன்றும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள் என்று பிரமிப்பாக இருக்கும் .நாம் சிம்மாச்சலம் மலையின் கீழ் நான்கு வருடங்கள் பணியில் இருந்தேன்.அங்கு வருடத்தில் ஒரு நாள் தான் மூலவரை பார்க்க முடியும்.மற்ற நாட்களில் சந்தனத்தால் முழுவதும் மூட்டை போல மூடி வைத்திருப்பார்கள்.அக்சய திதி அன்று கண்களை கட்டி கொண்டு சந்தனத்தை பிரிப்பார்கள் பின்பு மீண்டும் சந்தனம் அப்பி விடுவார்கள்.பழனி முருகனை ஒத்த சிறுவடிவிலான புத்தர் சிலை அது
கோவிலில் சில சிற்பங்கள் மட்டும் பல இடங்களில் அடைக்கப்பட்டிருக்கும்.அவற்றை இஸ்லாமியர்கள் உடைத்தார்கள் என்று பல கதைகள் கூறுவார்கள்.பாழடைந்த புத்த விஹாரைகளில் திடீரென்று கடந்த 30 வருடங்களாக பார்ப்பனர்கள் நுழைந்து விஷ்ணு ,சிவா,விநாயக என்று பூஜை துவக்கப்பட்ட விஹாரங்களும் உண்டு
ஸ்ரீ கூர்மம் என்றொரு ஊரில் கோவில் உள்ளேயே ஆமைகள் வளர்ப்பார்கள்.முன்னோர்களுக்கு சடங்கு செய்யும் இடமாக இருந்த கோவில் அது.முதலில் சிவன் கோவிலாக இருந்து திருப்பதி போல ராமானுஜர் விஷ்ணு கோவிலாக உலகில் கூர்ம அவதாராத்தை வழிபடும் ஒரே கோவிலாக கோவில் என்ற கதை தான் இப்போது ஓடி கொண்டிருக்கும் கதை.
தென்னிந்தியாவிலேயே கர்ப்பக்கிருகத்திற்குள் அனைவரும் செல்ல கூடிய கோவில் இதுவாக தான் இருக்கும்.மிக சிறிய கல் தான் மூலவர். லிங்கத்தை மறைத்து கூர்ம அவதாரம் ஆக்கி விட்டார்கள் என்று ஒரு சாரார் கதை சொல்வார்கள்.லிங்கமும் கிடையாது விஷ்ணுவும் கிடையாது பழங்குடி வழிபாட்டுக்கு ஆட்டையை போட்டு பார்ப்பனர்கள் முழுவதுமாக கைப்பற்றி கொண்டார்கள் என்று இன்னொரு சாரார்.பழமை வாய்ந்த கோவில்,புத்த மதம் சார்ந்த ஓவியங்கள் இருந்த ஒன்று.ஓவியங்களின் தொன்மையை வைத்து அகழ்வாராய்ச்சி துறைக்கு விண்ணப்பங்கள் சென்றதால்,கோயில் எங்கே அவர்களிடம் சென்று விடுமோ என்று வேகவேகமாக அனைத்து ஓவியங்களின் மீதும் சுண்னாம்பு அடித்து அழித்து விட்டதை தான் நெகிழ்வான தொகுப்பு மதத்தை சார்ந்தவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் செய்தார்கள்.
கும்பாபிஷேகம் என்பதே ஆட்டையை போட்ட விஹாரங்களின் தீட்டை கழிக்கும்,முழுவதுமாக ஆக்கிரமிக்க ,சான்றுகளை அழிக்க நடக்கும் ஒன்று தான்

Friday 8 December 2017

இந்து மதம்

                         



மிக தெளிவாக ஒரு உண்மையை உரத்து கூறிய அண்ணன் திருமா அவர்களுக்கு கோடி வணக்கங்கள் .இதனை t பெரியார் முதல் நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்கள் முன்னெடுத்து இருந்தால் இன்று உள்ள அவல நிலை ஏற்பட்டிருக்காது.இந்து மதம் தொன்மையான மதம்,சுயம்புவாக உருவான மதம்,மிஷனரிகள் உதவியின்றி தன்னால் பல ஆயிரம் மைல் பரப்பளவில் பரவிய மதம்,எந்த மதத்தையும்,கோவிலையும் அழிக்காத ,ஆக்கிரமிக்காத மதம் என்ற பச்சை பொய்கள் பல கோடி மக்கள் உள்ளத்தில் உண்மையாக பதிந்திருக்காது.
இந்து மதம் எங்கு தோன்றியது,எப்படி பரவியது என்று கொஞ்சம் விளக்க முற்பட்டால்,.உண்மையாக அறிந்து கொள்ள முயற்சித்தால் எது இந்து கடவுள்கு,எது ஆட்டையை போடப்பட்டு உள்ளே இழுக்கப்பட்ட கடவுள் @குறுந்தெய்வம் ,பெரிய தெய்வம்,தெய்வத்தில் உயர் வர்ணம்,கீழ் வர்ணம் எல்லாம் எளிதில் விளங்கி விடும்
பெரும்பான்மை மக்களின் உணவான மாமிச உணவை படைக்க முடியாத தெய்வங்கள் எல்லாம் பெருந் தெய்வம்.தான் சாப்பிடும் உணவுகளை படைக்க முடிந்த தெய்வங்கள் குறுந்தெய்வங்கள் என்று எளிதாகவும் பொருள் கொள்ளலாம்.உள்வாங்கப்பட்ட கடவுள்கள்,சிலைகளின் தொன்மையை இந்து மதத்தில் ஏறி கொள்ளும் அற்புதமான டெக்னீக் மிகவும் பிரமிப்பூட்டும் ஒன்று
மதம் என்பது கட்சி மாதிரி.இப்போது எங்கோ தோன்றிய பாஜக இரண்டு இடங்களில் இருந்து பெருகி ஆட்சியை பிடிக்கவில்லையா.அது போல த்தான் இந்து மதமும் வளர்ந்தது .ஜனதா தள் கட்சியோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பிறகு அந்த கட்சியில் பெரும்பகுதியை விழுங்கியது .அதனால் விழுங்க முடியாத கட்சியினர் (லாலு,முலாயம் போல )புத்த மதம் போல
இப்போது அதிமுகவை விழுங்குவது போல முன்பு தென்னகத்தில் இருந்த மதங்களை விழுங்கியது.சிலரை வில்லனாக்கும்.எம் ஜி ஆர் ,ஜெயலலிதா போன்றோரை குறுந்தெய்வங்களாக மாற்றும். இதே போல வங்காளம் முதல் மணிப்பூர் வரை நடந்தால் அது தான் இது மதம் பரவிய கதை.எங்கு யாரை குறுந்தெய்வங்களாக ஆக்கினாலும் சாவர்க்கர்,ஹெட்கேவார்,கோல்வால்க்கர் தான் முப்பெரும் பெருந் தெய்வங்கள்.அவர்கள் தான் சுப்ரீம் .இதே தான் இந்து மதம் என்று இன்று அழைக்கப்படும் மதத்திலும் நடந்தது
ஆதிசேஷனும் புத்த மதத்தில் இருந்து ஆட்டையை போட்டது தான்.பிள்ளையார் வழிபாடு,முருகர் வழிபாடு ,எல்லம்மா,போச்சம்மா,பச்சம்மா ,கடம்பாடி அம்மா வழிபாடுகளை காளி ,அம்பாள் என்று தொடர்ந்து ஆட்டையை போடுவதை மிக ஆழமாக,அர்ப்பணிப்பு உணர்வு,கடின உழைப்பின் மூலம் இந்து மத மிஷனரிகள் காலகாலமாக செய்து வருகிறார்கள்.
உறவுக்குள் திருமணம் என்றால் வெட்டு கொலை எனும் கூட்டத்தையும்,உறவுக்குள் திருமணம் செய்யவிட்டால் வெட்டு கொலை எனும் நேர்மாறான கூட்டத்தையும் ஒன்று தான் என இணைக்கும் வலைப்பின்னல்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படுத்தும் அதிசய வைக்கும் சாதனைகள் தான் .
கோவிலை ஆட்டையை போட்டாலும் பழங்குடி சடங்குகள் ,புத்தமத வழிபாட்டு முறைகளை,மொட்டை அடிப்பதை மக்கள் தொடர்ந்து தான் வந்தார்கள்.அவர்கள் கடவுள்களின் பெயராக சொல்லி வந்த பெயர் வேறு. மிக அழகாக அப்பண்ணா சாமி என்று வழிபடப்பட்ட கடவுள் வராக லட்சுமி நரசிம்மர் என்று வாயில் நுழையாத பெயராக மாற்றப்பட்டு ஆட்டையை போடப்படுவார்
முருகர் எனும் கடவுள் சுப்பிரமணியர் , ஷ்ரவன் ஆகி அவருக்கு தாய் தந்தை அண்ணன் எல்லாம் முளைப்பார்கள்.மொட்டை அடிப்பது தவறு,வீட்டில் இறப்பு ஏற்பட்டால் நடைபெறும் ஒன்று எனும் கூட்டத்தையும் ,கடவுளுக்கு காணிக்கையாக மொட்டை அடிக்கும் கூட்டமும் ஒன்று தான் ,ஆனால் ஒன்று மேல் வர்ணம் இன்னொன்று கீழ் என்று நிறுவ தொடர்ந்து நடந்து வரும் முயற்சி தான் இந்து மதம்
புத்தர் சிலைகள் பல நாடுகளில் உண்டு.அவற்றின் தொன்மை இந்து கடவுள்களை விட பல நூறு ஆண்டுகள் முந்தையது என்பதும் தெளிவான நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இப்போது தான் இஸ்லாமிய  மத வெறியர்களால் பாமியன் புத்தா சிலைகள் உடைக்கப்பட்டன.அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்தன.காஸ்மீரிலும் மிக பழமையான புத்தர் சிலைகள் இன்றும் உண்டு.
ஆனால் புத்த மதம் தழைத்து ஓங்கிய ஒரிசா,தென்னகத்தில் ஒன்று கூட கிடையாது.அவை அனைத்தும் இந்து கோவில்களாக மாற்றப்பட்டு விட்டன.
அஜந்தா குகை கோவில்கள்,கனேறு குகை கோவில்கள் என அனைத்தும் புத்த மதத்தை சார்ந்தவை தான்.அவற்றுள் இந்து கடவுள்களை வைக்கும் வேலை பின்பு நடந்த ஒன்று ..
உருவ வழிபாடு இருப்பதால் எளிதாக பழங்குடி தெய்வங்களை ,புத்த சிலைகளை இந்து மிஷனரிகள் ஆட்டை போட்டார்கள்.இவர் இவருக்கு மகன்,இவர் இந்த இந்து கடவுளுக்கும் இந்த இந்து கடவுள் பெண் வேடம் போட்ட போது நடந்த பாலியல் வன்முறையால் பிறந்தவர் அய்யப்பன் .
காமவெறி தலைக்கேறி இந்து கடவுள் பெண்ணை துரத்தும் சிதறிய விந்துக்களால் பிறந்தவர் அய்யனார் என்று எல்லாம் மிக அழகாக இந்து மிஷனரிகள் வலைபின்னியதால் உருவானது தான் இன்றைய இந்து மதம்.
முதலில் இந்த ஆதாம் ஏவாள் உருவாக்கத்தில் இருந்து வெளி வர வேண்டும்.அந்தமானில் இருக்கும் ஒவ்வொரு தீவுக்கும் ஒவ்வொரு மொழி,ஒவ்வொரு கடவுள்.ஒரே இனமாக அறியப்பட்டாலும் இது நாகா இன மக்களுக்கும் பொருந்தும்.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கும் இதே நிலை தான்.
எல்லா மதங்களும் ,கடவுள்களும் ஏதோ ஒரு இடத்தில உருவாக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு கொண்டு மிஷனரிகளால் கொண்டு செல்லப்பட்டன.இது கிருத்துவம் இஸ்லாம்,இந்து மதம் என அனைத்துக்கும் பொருந்தும்.இல்லை இந்து மதம் சுயம்புவாக உருவான மதம்,கடவுளே குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களை நேரடியாக இந்துவாக தேர்ந்தெடுத்தார் என்று நம்புபவர்கள் வேண்டுமானால் இந்து மதத்தின் தொன்மையை பற்றி பேசலாம் .உலகில் இயேசு,நபி அவர்கள் தேவ தூதர்களாக தங்களை உருவகப்படுத்தி மதங்களை உருவாக்குவதற்கு முன்பு இருந்த அனைத்து கடவுள்கள்,வழிபாடு முறைகள் இந்து மதம் என்று சொல்வதை விட அதிக நகைச்சுவை இருக்க முடியுமா
யார் இந்து என்று கேட்டால் யார் யார் இஸ்லாமியர்,கிருத்துவன் இல்லையோ அவர்கள் அனைவரும் இந்து என்ற விசித்திரமான விளக்கம் இன்றும் கிடைக்கும்.இதைய அடிப்படையாக வைத்து தான் இந்து மதம் அதன் தொன்மை பற்றிய கதைகள் எல்லாம்
இந்து மதம்,சமஸ்க்ரிதம் இரண்டுமே அவர்களின் மீது ஏற்றி வாய்க்கப்படும் தொன்மைக்கு தொடர்பே இலலாதவை
அகழ்வாராய்ச்சியில் பல்வேறு பகுதிகளில்கிடைத்த சிலைகள்,புத்த விகாரங்கள் இந்து கடவுள் சிலைகள்,கோவில்களை விட பல நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை என்பது தான் இன்றுவரை உள்ள ஆராய்ச்சி முடிவுகள்