Friday 8 December 2017

இந்து மதம்

                         



மிக தெளிவாக ஒரு உண்மையை உரத்து கூறிய அண்ணன் திருமா அவர்களுக்கு கோடி வணக்கங்கள் .இதனை t பெரியார் முதல் நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்கள் முன்னெடுத்து இருந்தால் இன்று உள்ள அவல நிலை ஏற்பட்டிருக்காது.இந்து மதம் தொன்மையான மதம்,சுயம்புவாக உருவான மதம்,மிஷனரிகள் உதவியின்றி தன்னால் பல ஆயிரம் மைல் பரப்பளவில் பரவிய மதம்,எந்த மதத்தையும்,கோவிலையும் அழிக்காத ,ஆக்கிரமிக்காத மதம் என்ற பச்சை பொய்கள் பல கோடி மக்கள் உள்ளத்தில் உண்மையாக பதிந்திருக்காது.
இந்து மதம் எங்கு தோன்றியது,எப்படி பரவியது என்று கொஞ்சம் விளக்க முற்பட்டால்,.உண்மையாக அறிந்து கொள்ள முயற்சித்தால் எது இந்து கடவுள்கு,எது ஆட்டையை போடப்பட்டு உள்ளே இழுக்கப்பட்ட கடவுள் @குறுந்தெய்வம் ,பெரிய தெய்வம்,தெய்வத்தில் உயர் வர்ணம்,கீழ் வர்ணம் எல்லாம் எளிதில் விளங்கி விடும்
பெரும்பான்மை மக்களின் உணவான மாமிச உணவை படைக்க முடியாத தெய்வங்கள் எல்லாம் பெருந் தெய்வம்.தான் சாப்பிடும் உணவுகளை படைக்க முடிந்த தெய்வங்கள் குறுந்தெய்வங்கள் என்று எளிதாகவும் பொருள் கொள்ளலாம்.உள்வாங்கப்பட்ட கடவுள்கள்,சிலைகளின் தொன்மையை இந்து மதத்தில் ஏறி கொள்ளும் அற்புதமான டெக்னீக் மிகவும் பிரமிப்பூட்டும் ஒன்று
மதம் என்பது கட்சி மாதிரி.இப்போது எங்கோ தோன்றிய பாஜக இரண்டு இடங்களில் இருந்து பெருகி ஆட்சியை பிடிக்கவில்லையா.அது போல த்தான் இந்து மதமும் வளர்ந்தது .ஜனதா தள் கட்சியோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பிறகு அந்த கட்சியில் பெரும்பகுதியை விழுங்கியது .அதனால் விழுங்க முடியாத கட்சியினர் (லாலு,முலாயம் போல )புத்த மதம் போல
இப்போது அதிமுகவை விழுங்குவது போல முன்பு தென்னகத்தில் இருந்த மதங்களை விழுங்கியது.சிலரை வில்லனாக்கும்.எம் ஜி ஆர் ,ஜெயலலிதா போன்றோரை குறுந்தெய்வங்களாக மாற்றும். இதே போல வங்காளம் முதல் மணிப்பூர் வரை நடந்தால் அது தான் இது மதம் பரவிய கதை.எங்கு யாரை குறுந்தெய்வங்களாக ஆக்கினாலும் சாவர்க்கர்,ஹெட்கேவார்,கோல்வால்க்கர் தான் முப்பெரும் பெருந் தெய்வங்கள்.அவர்கள் தான் சுப்ரீம் .இதே தான் இந்து மதம் என்று இன்று அழைக்கப்படும் மதத்திலும் நடந்தது
ஆதிசேஷனும் புத்த மதத்தில் இருந்து ஆட்டையை போட்டது தான்.பிள்ளையார் வழிபாடு,முருகர் வழிபாடு ,எல்லம்மா,போச்சம்மா,பச்சம்மா ,கடம்பாடி அம்மா வழிபாடுகளை காளி ,அம்பாள் என்று தொடர்ந்து ஆட்டையை போடுவதை மிக ஆழமாக,அர்ப்பணிப்பு உணர்வு,கடின உழைப்பின் மூலம் இந்து மத மிஷனரிகள் காலகாலமாக செய்து வருகிறார்கள்.
உறவுக்குள் திருமணம் என்றால் வெட்டு கொலை எனும் கூட்டத்தையும்,உறவுக்குள் திருமணம் செய்யவிட்டால் வெட்டு கொலை எனும் நேர்மாறான கூட்டத்தையும் ஒன்று தான் என இணைக்கும் வலைப்பின்னல்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படுத்தும் அதிசய வைக்கும் சாதனைகள் தான் .
கோவிலை ஆட்டையை போட்டாலும் பழங்குடி சடங்குகள் ,புத்தமத வழிபாட்டு முறைகளை,மொட்டை அடிப்பதை மக்கள் தொடர்ந்து தான் வந்தார்கள்.அவர்கள் கடவுள்களின் பெயராக சொல்லி வந்த பெயர் வேறு. மிக அழகாக அப்பண்ணா சாமி என்று வழிபடப்பட்ட கடவுள் வராக லட்சுமி நரசிம்மர் என்று வாயில் நுழையாத பெயராக மாற்றப்பட்டு ஆட்டையை போடப்படுவார்
முருகர் எனும் கடவுள் சுப்பிரமணியர் , ஷ்ரவன் ஆகி அவருக்கு தாய் தந்தை அண்ணன் எல்லாம் முளைப்பார்கள்.மொட்டை அடிப்பது தவறு,வீட்டில் இறப்பு ஏற்பட்டால் நடைபெறும் ஒன்று எனும் கூட்டத்தையும் ,கடவுளுக்கு காணிக்கையாக மொட்டை அடிக்கும் கூட்டமும் ஒன்று தான் ,ஆனால் ஒன்று மேல் வர்ணம் இன்னொன்று கீழ் என்று நிறுவ தொடர்ந்து நடந்து வரும் முயற்சி தான் இந்து மதம்
புத்தர் சிலைகள் பல நாடுகளில் உண்டு.அவற்றின் தொன்மை இந்து கடவுள்களை விட பல நூறு ஆண்டுகள் முந்தையது என்பதும் தெளிவான நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இப்போது தான் இஸ்லாமிய  மத வெறியர்களால் பாமியன் புத்தா சிலைகள் உடைக்கப்பட்டன.அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்தன.காஸ்மீரிலும் மிக பழமையான புத்தர் சிலைகள் இன்றும் உண்டு.
ஆனால் புத்த மதம் தழைத்து ஓங்கிய ஒரிசா,தென்னகத்தில் ஒன்று கூட கிடையாது.அவை அனைத்தும் இந்து கோவில்களாக மாற்றப்பட்டு விட்டன.
அஜந்தா குகை கோவில்கள்,கனேறு குகை கோவில்கள் என அனைத்தும் புத்த மதத்தை சார்ந்தவை தான்.அவற்றுள் இந்து கடவுள்களை வைக்கும் வேலை பின்பு நடந்த ஒன்று ..
உருவ வழிபாடு இருப்பதால் எளிதாக பழங்குடி தெய்வங்களை ,புத்த சிலைகளை இந்து மிஷனரிகள் ஆட்டை போட்டார்கள்.இவர் இவருக்கு மகன்,இவர் இந்த இந்து கடவுளுக்கும் இந்த இந்து கடவுள் பெண் வேடம் போட்ட போது நடந்த பாலியல் வன்முறையால் பிறந்தவர் அய்யப்பன் .
காமவெறி தலைக்கேறி இந்து கடவுள் பெண்ணை துரத்தும் சிதறிய விந்துக்களால் பிறந்தவர் அய்யனார் என்று எல்லாம் மிக அழகாக இந்து மிஷனரிகள் வலைபின்னியதால் உருவானது தான் இன்றைய இந்து மதம்.
முதலில் இந்த ஆதாம் ஏவாள் உருவாக்கத்தில் இருந்து வெளி வர வேண்டும்.அந்தமானில் இருக்கும் ஒவ்வொரு தீவுக்கும் ஒவ்வொரு மொழி,ஒவ்வொரு கடவுள்.ஒரே இனமாக அறியப்பட்டாலும் இது நாகா இன மக்களுக்கும் பொருந்தும்.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கும் இதே நிலை தான்.
எல்லா மதங்களும் ,கடவுள்களும் ஏதோ ஒரு இடத்தில உருவாக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு கொண்டு மிஷனரிகளால் கொண்டு செல்லப்பட்டன.இது கிருத்துவம் இஸ்லாம்,இந்து மதம் என அனைத்துக்கும் பொருந்தும்.இல்லை இந்து மதம் சுயம்புவாக உருவான மதம்,கடவுளே குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களை நேரடியாக இந்துவாக தேர்ந்தெடுத்தார் என்று நம்புபவர்கள் வேண்டுமானால் இந்து மதத்தின் தொன்மையை பற்றி பேசலாம் .உலகில் இயேசு,நபி அவர்கள் தேவ தூதர்களாக தங்களை உருவகப்படுத்தி மதங்களை உருவாக்குவதற்கு முன்பு இருந்த அனைத்து கடவுள்கள்,வழிபாடு முறைகள் இந்து மதம் என்று சொல்வதை விட அதிக நகைச்சுவை இருக்க முடியுமா
யார் இந்து என்று கேட்டால் யார் யார் இஸ்லாமியர்,கிருத்துவன் இல்லையோ அவர்கள் அனைவரும் இந்து என்ற விசித்திரமான விளக்கம் இன்றும் கிடைக்கும்.இதைய அடிப்படையாக வைத்து தான் இந்து மதம் அதன் தொன்மை பற்றிய கதைகள் எல்லாம்
இந்து மதம்,சமஸ்க்ரிதம் இரண்டுமே அவர்களின் மீது ஏற்றி வாய்க்கப்படும் தொன்மைக்கு தொடர்பே இலலாதவை
அகழ்வாராய்ச்சியில் பல்வேறு பகுதிகளில்கிடைத்த சிலைகள்,புத்த விகாரங்கள் இந்து கடவுள் சிலைகள்,கோவில்களை விட பல நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை என்பது தான் இன்றுவரை உள்ள ஆராய்ச்சி முடிவுகள்

No comments:

Post a Comment