Sunday 10 December 2017

மதங்கள் -தொன்மை


கிருத்துவம்,இஸ்லாம்,சமணம் ,புத்தம் ,சீக்கியம் போன்ற மதங்கள் தெளிவான மூடநம்பிக்கைகள் என்றால் இந்து மதம் தெளிவற்ற மூடநம்பிக்கை.
சந்தடி சாக்கில் மிக தொன்மையான,5000 ,6000 என்று எல்லாம் அடித்து விடுவதும் நடக்கிறது.இந்து மிஷனரிகள் (ஐயமோஹன் வரை)இப்படி பேசி பேசியே
கூட பல கொலைகளை புரிந்து ,புத்த விகாரங்களை ஆட்டையை போட்டு ,பழங்குடி தெய்வங்களை கைப்பற்றி சமஸ்க்ரிதமயமாக்கி வளர்த்த மதம் இந்து மதம்.
கோவில் என்பதே புத்த விகாரங்களை ஆட்டையை போடுவதில் தான் முதல்முறையாக ?இந்து மதத்தில் ஆரம்பித்தது. எந்த பகுதியிலும் பழமையான கோவில் என்பது 1800 வருடங்களை தாண்டாது.மிக பெரும்பாலான பகுதிகளில் 1000 ஆண்டுகள் 500 ஆண்டுகள் தான். ஆனால் புத்த விஹாரங்களும் சமண பள்ளிகளும் பழங்குடி வழிபாட்டு தளங்களும் மிக பெரும்பாலான இடங்களில் 2000 ஆண்டுகளுக்கு பிந்தையவை என்பதை அகழ்வாராய்ச்சி முடிவுகள் தெளிவாக மிக தெளிவாக நிறுவுகின்றன
இந்து மதத்தின் பெருமைகள் என்று முற்போக்காளர் முதல் பிற்போக்காளர் வரை விடும் பீலா தாங்க முடியவில்லை .ஒருவர் தொகுப்பு மதம் என்று monogamy ,polygamy போல மதங்களை முன் நிறுத்தி பெருமை பேசுகிறார். இன்னொருவர் நெகிழ்வுத்தன்மை ,பழங்குடி வழிபாட்டு முறைகளை போற்றி பாதுகாத்த மதம் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்.
மோனோகெமி என்பதை மனைவி ,கணவன் என்று வரும் போது உன்னதமாக சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கும் அதே கூட்டம் மதம் கடவுள்கள் என்று வரும் போது அப்படியே திருப்பி போட்டு பல்டி அடிப்பது விந்தையாக இருக்கிறது.எத்தனை மனைவி,கணவன் வேண்டுமானாலும் அனுமதிக்கும் மனநிலையை விட சிறந்த மனநிலை உண்டா என்பது போல அறிவார்ந்த கேள்விகளை அள்ளி வீசுகிறார்கள்.ஆயிரம் மனைவி கணவன் இருந்தாலும் அவர்களுக்குள் யாருக்கு முக்கியத்துவம் என்று இருப்பது போல ,கோசலைக்கும்,கைகேயிக்கும் மற்ற அறுபது ஆயிரம் மனைவியருக்கும் இடையே தெளிவான ப்ரோடோகால் ,யாருக்கு முதன்மை ,யார் வாரிசுக்கு பட்டம்,யார் சூத்திர வேலைக்காரி என்று தெளிவான விதிகள் பல கடவுள்கள் இடையே கதைகளிலும் வழிபாட்டிலும் உண்டு.இதை பெருமையாக சொல்வதே விசித்திரமான ஒன்று.
இன்னொருவர் ஒரு நெகிழ்வான தொகுப்புமத இந்து மேரி மாதாவை வழிபடுவூதில் தயக்கம் காட்ட மாட்டார்,மற்றவர்கள் அப்படியா என்று புதுவிதமான தாக்குதலை மேற்கொள்கிறார். அப்படி என்றால் மேரிமாதாவை ,இயேசுவை மட்டும் வழிபடுவதை இந்து தான் என்று ஏற்று கொண்டு போக வேண்டியது தானே என்றால் போடா பாவாடை கிருத்துவ பாதிரி என்று அற்புத இந்து மதத்தின் நெகிழ்வுத்தன்மையை உடனே வெளிப்படுத்துகிறார்.பார்வதியை வழிபட மாட்டேன்,சிவனை மட்டும் வழிபடுவேன் என்பதை போல ஒரே கடவுள் இயேசு தான் என்று சொல்வதை ஏற்று கொண்டால்,பல கோடி இந்துக்கள் கர்த்தரே ஒரேகடவுள் என்பதை மகிழ்ச்சியோடு மனமுவந்து ஏற்று கொண்டால் நெகிழ்வுத்தன்மை ,அன்பு,பாசம்,அறிவு,கருணை எல்லாம் ஒருங்கே அளவற்ற முறையில் கொண்ட இந்துக்கள் மகிழ்ச்சி தானே அடைய வேண்டும்.அப்படியா நடக்கிறது
மாமிசத்தை தங்கள் குடும்ப நிகழ்வுகளில் ,பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கியமான உணவாக கொண்ட இஸ்லாமியர்,கிருத்துவர்,இந்துவின் கீழ் கொண்டு வரப்பட்ட பல கோடி மக்கள் உண்டு.அவர்கள் மாமிசம் உண்ணாத மற்றவர்களுக்காக சைவ உணவும் திருமணம் முதல் பண்டிகை வரை தருவது அவர்களை அப்படி செய்ய மறுக்கும் சைவர்களை விட மிக உயர்ந்தவர்களாக மாற்றி விடுகிறதா என்ன ?அதே தானே இங்கும்.இவருக்கு மாமிசம் பெரும் குற்றம் எனும் மூட நம்பிக்கை போல அவருக்கு வேறு கடவுளை வணங்குதல் குற்றம் எனும் மூட நம்பிக்கை
நெகிழ்வுத்தன்மை என்றால் என்ன என்றே மிக குழப்பமாக இருக்கிறது. இருப்பதிலேயே நெகிழ்வுத்தன்மை அறவே அற்ற மத நம்பிக்கை இந்து மத நம்பிக்கை தான். இங்கு பிறப்பே அடிப்படை
தென் இந்தியாவில் வாழும் இந்துவின் கீழ் கொண்டுவரப்பட்ட மக்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஒரு இந்து அதுவும் நெகிழ்வுத்தன்மையே மதமாக கொண்ட வடஇந்தியாவை சார்ந்த தொகுப்புமத இந்து அதனை ஏற்று கொள்கிறேன் என்று ஏற்று கொள்வாரா அல்லது குறைந்தபட்சம் தொகுப்புமத இந்து மத தலைவர்கள் இது தவறல்ல என்று சொல்வார்களா ?
எதையும் மாற்றவே முடியாது என்று பல நூறாண்டுகளாக சொல்லி வரும் கூட்டம் மட்டுமே இந்து மதம் கீழ் வந்த கூட்டம் .மற்ற மதங்களை சேர்ந்த முட்டாள் மதகுரு கூட்டத்தில் ஒன்றிரண்டாவது இது தவறு,மாற்றம் வேண்டும்,ஓரின சேர்க்கையாளரும் மத குரு ஆகலாம் ,பெண்களும் மத குருக்கள் ஆகலாம் என்று எல்லாம் சொல்லும் வாய்ப்புகள் உண்டு
மிக பெரும்பாலான விஷ்ணு ஆலயங்கள் நேரடியாக புத்த விகாரங்களை ஆட்டையை போட்டு கோவிலாக ஆனது தான்.நரசிம்ம அவதாரமே புத்தரை கிழித்த அவதாரம் தான்.பெரும்பாலான நரசிம்மர் சிலைகள் கிழிப்பது புத்த உருவமாக வழிபட்டு வரப்பட்ட உருவத்தை தான்
ஆந்திராவில் எந்த மலையை ஆராய்ந்தாலும் அங்கு புத்த விகாரங்கள் கிடைக்கும்.அவை அப்படியே நரசிம்மர் கோவில்களாக,விஷ்ணு கோவில்களாக மாற்றப்பட்டன.
அதற்கான சுயம்பு கதைகளை கொஞ்சம் ஆராய்ந்தால் கூட எப்படி ஏமாற்றி இன்றும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள் என்று பிரமிப்பாக இருக்கும் .நாம் சிம்மாச்சலம் மலையின் கீழ் நான்கு வருடங்கள் பணியில் இருந்தேன்.அங்கு வருடத்தில் ஒரு நாள் தான் மூலவரை பார்க்க முடியும்.மற்ற நாட்களில் சந்தனத்தால் முழுவதும் மூட்டை போல மூடி வைத்திருப்பார்கள்.அக்சய திதி அன்று கண்களை கட்டி கொண்டு சந்தனத்தை பிரிப்பார்கள் பின்பு மீண்டும் சந்தனம் அப்பி விடுவார்கள்.பழனி முருகனை ஒத்த சிறுவடிவிலான புத்தர் சிலை அது
கோவிலில் சில சிற்பங்கள் மட்டும் பல இடங்களில் அடைக்கப்பட்டிருக்கும்.அவற்றை இஸ்லாமியர்கள் உடைத்தார்கள் என்று பல கதைகள் கூறுவார்கள்.பாழடைந்த புத்த விஹாரைகளில் திடீரென்று கடந்த 30 வருடங்களாக பார்ப்பனர்கள் நுழைந்து விஷ்ணு ,சிவா,விநாயக என்று பூஜை துவக்கப்பட்ட விஹாரங்களும் உண்டு
ஸ்ரீ கூர்மம் என்றொரு ஊரில் கோவில் உள்ளேயே ஆமைகள் வளர்ப்பார்கள்.முன்னோர்களுக்கு சடங்கு செய்யும் இடமாக இருந்த கோவில் அது.முதலில் சிவன் கோவிலாக இருந்து திருப்பதி போல ராமானுஜர் விஷ்ணு கோவிலாக உலகில் கூர்ம அவதாராத்தை வழிபடும் ஒரே கோவிலாக கோவில் என்ற கதை தான் இப்போது ஓடி கொண்டிருக்கும் கதை.
தென்னிந்தியாவிலேயே கர்ப்பக்கிருகத்திற்குள் அனைவரும் செல்ல கூடிய கோவில் இதுவாக தான் இருக்கும்.மிக சிறிய கல் தான் மூலவர். லிங்கத்தை மறைத்து கூர்ம அவதாரம் ஆக்கி விட்டார்கள் என்று ஒரு சாரார் கதை சொல்வார்கள்.லிங்கமும் கிடையாது விஷ்ணுவும் கிடையாது பழங்குடி வழிபாட்டுக்கு ஆட்டையை போட்டு பார்ப்பனர்கள் முழுவதுமாக கைப்பற்றி கொண்டார்கள் என்று இன்னொரு சாரார்.பழமை வாய்ந்த கோவில்,புத்த மதம் சார்ந்த ஓவியங்கள் இருந்த ஒன்று.ஓவியங்களின் தொன்மையை வைத்து அகழ்வாராய்ச்சி துறைக்கு விண்ணப்பங்கள் சென்றதால்,கோயில் எங்கே அவர்களிடம் சென்று விடுமோ என்று வேகவேகமாக அனைத்து ஓவியங்களின் மீதும் சுண்னாம்பு அடித்து அழித்து விட்டதை தான் நெகிழ்வான தொகுப்பு மதத்தை சார்ந்தவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் செய்தார்கள்.
கும்பாபிஷேகம் என்பதே ஆட்டையை போட்ட விஹாரங்களின் தீட்டை கழிக்கும்,முழுவதுமாக ஆக்கிரமிக்க ,சான்றுகளை அழிக்க நடக்கும் ஒன்று தான்

No comments:

Post a Comment