Tuesday 12 December 2017

இந்து மதம் -தொகை மதம்



இந்த தொகை மதம் என்ற பெயரை பிலிம் சேம்பேரில் பதிவு செய்து வைத்து விட வேண்டும்.அற்புத வார்த்தை இது.

என்னா அழகா ஒரு வார்த்தையின் மூலம் பல ஆயிரம் வழிபாட்டு தளங்களை ஆட்டையை போட்டதை.கடவுள்களை இழிவுபடுத்தும் கதைகளை உருவாக்கியதை நியாயப்படுத்தி விடுகிறார்கள் .ஹேவிளம்பி போல அற்புதமான சொல் இது

வருங்கால பிரதமர் கமல்ஹாசன்  மஹாவிஷ்ணுவின் அவதாரம்.அவர் காப்பி அடித்து நடித்த பல படங்களை அவர் இந்நாள் ரசிகர்கள் மற்றும் வருங்கால ரசிகர்கள் இதே போல தான் அவரை பார்த்து தான் மற்றவர்கள் காப்பி அடித்தார்கள்.ஐந்து வயதில் நடிக்க வந்த கமலஹாசன் ஐநூறு படம் நடித்த கமல்ஹாசன் ஐந்து படம் நடித்த ஐம்பது வயதில் நடிக்க வந்த ஐந்து படங்கள் நடித்தவரை பார்த்து காப்பி அடித்தார் என்று சொல்வதா என்று வெகுண்டு எழுவார்கள்

சான்றுகளை நடுநிலையாக ஆராயும் மனநிலை வேண்டும்.முன்முடிவோடு இருப்பவருக்கு சான்றுகள் உதவாது.,அதுவும் முட்டாள்த்தனமும் மூர்க்கத்தனமும் இருந்தால் மட்டுமே ஒருவர் இந்துத்வராக இருக்க முடியும்

 ஆதி சங்கரர் புத்த விகாரமாக மாற்றப்பட்ட பத்ரிநாத் எனும் விஷ்ணு கோவிலை மறுபடியும் விஷ்ணு கோவிலாக அதுவும் சைவ,அத்வைதர் மாற்றினார் எனும் கதை தான் ஸ்தலபுராணம்.அங்கிருந்து பூரி ஜெகநாதருக்கு வந்தாலும் புத்தர் ஜெகந்நாதராக மாற்றப்பட்டு சில நூற்றாண்டுகள் தான் ஆகின்றன.அதனை விட சமீபத்தில் மாற்றப்பட்டவர் சபரிமலை அய்யப்பன் .ஆந்திர கோவில்களும் ,ஸ்ரீரங்கமும் அதே கதை தான்

இந்து மதம் எங்கிருந்து எப்படி யாரால் எப்போது பரவியது?

எது இந்து மதம் ?இந்தியா முழுமைக்கும் சிவா விஷ்ணு,பிரேமா சரஸ்வதி எப்போது எப்படி கொண்டு வரப்பட்டார்கள் ?

இந்தியா முழுமைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலைகள்,புத்த விகாரங்கள் கிடைப்பது எத்தனை சுட்டி காட்டுகிறது

புத்த மதம் எலைட் மதம் இந்து மதம் கம்முனிச மதம் என்று சொல்வது நல்ல நகைச்சுவை .இருக்கும் மதங்களில் மிக எலைட் மதம் இந்து மதம் தான்.ஊரில் இருந்த எல்லா கடவுள்கள்,வழிபாடுகள்,வழிபாட்டு தளங்கள் அனைத்தையும் இந்து மதம் என்று சொல்வதை விட நேர்மையற்ற செயல் இருக்க முடியுமா

இந்து மதத்தில் இருந்த உருவ வழிபாடுகள் எவை ?திடீர் என்று விஷ்ணுவுக்கு 4000 ஆண்டு பழமை வருவது சூப்பர் ட்விஸ்ட் .சிலர் நாப்பது லட்சம் ஆண்டுகள் என்று தர்க்கரீதியாக ,அறிவியல்பூர்வமாக வாதிடுவது சுப்ரீம் ட்விஸ்ட்.

  இந்து மதத்தவர் பயன்படுத்தும் மிக பெரும்பான்மையான வசை சொற்கள் சமண,புத்த மதத்தை இழிவுபடுத்துபவை தான்.சமண புத்த பழங்குடி மதங்களை சார்ந்தவர்களை குறிக்கும் சொற்கள் அனைத்தும் வசை சொற்களாக பயன்படுத்தப்படுகிறது.அம்மண குண்டி,மொட்டை,நாதாரி,கேப்மாரி,சோமாறி,முடிச்சவிக்கி, பற பயல்,பள்ளி பயல்,பள்ள பயல் எல்லாம் புத்த சமண மதத்தின் மீது வெறுப்பை உமிழும் சொற்கள் தான்

 தீண்டாமை என்ற ஒன்று உருவாக்கப்பட்டதே ஆட்டையை போட்ட இந்து கோவிலாக மாற்றப்பட்டவற்றை காப்பாற்ற,அவற்றின் முந்தைய கடவுள்களின் எச்சங்களை அடியோடு அழிக்க தான் என்ற முடிவுக்கு வருவதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.

இந்து அல்லாதவர் ,இந்த இந்த சாதியினர் மட்டுமே குறிப்பிட்ட இடம் வரை அனுமதி  எனும் விசித்திர விதிகள் இருப்பதன் பின்னே இருப்பதும் இதே காரணங்கள் தான்.புத்த ,சமண வழிபாட்டை தொடருவதை அழிக்க உருவாக்கப்பட்டது தான் தீண்டாமை,இந்து அல்லாதவர் அனுமதி மறுப்பு,மேலாடை கழட்டி விட்டு செல்ல வேண்டிய விதிகள் (வர்ணம் பூணூலை வைத்து எளிதாக தெரிந்து விடும் )எல்லாம் உருவாக்கப்படவும் இதுவே காரணம்.

 வேறு எந்த மதத்தினரின் வழிபாட்டு தளங்களில் இது போன்ற வர்ணம்,கோத்திரம் சார்ந்த தீண்டாமைகள் உள்ளதா என்பதை சிந்தித்தால் இணைத்த உண்மை எளிதில் விளங்கும்


No comments:

Post a Comment