Thursday 1 October 2015

மதுவிலக்கு

  மதுவிலக்கு ஆதரவாளர்களே
தயவு செய்து மதுவிலக்கு இருப்பதால் உடல்நலம்,கல்வி,போன்றவற்றில் சிறந்த நிலையை அடைந்து இருக்கும்,மனித உரிமைகளை மதிக்கும் ,ஆண்களையும் பெண்களையும் சமமாக மதிக்கும் ஒரு நாட்டை,மாநிலத்தை,சமூக குழுவை காட்டுங்களேன்.
மதுவிலக்கு இருக்கும் நாடுகளோடு,மாநிலங்களோடு மதுவிலக்கு இல்லாத நாடுகளில் மேற்கூறியவற்றை ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் தான் தென்படுகிறது.
மதுவிலக்கு இருக்கும் குஜராத்தில் தான் கலவரங்கள்,படுகொலைகள் மிக மிக அதிகம். எங்கோ வன்முறை நிகழ்ந்தால் மாநிலம் முழுவதும் தேடி தேடி கொள்வது நடக்கும் மாநிலம்.
மதுவிலக்கு இருக்கும் பாகிஸ்தானும் இதே போல தான்.மதுவிலக்கு இருக்கும் மாநிலங்கள்,நாடுகளோடு ஒப்பிட்டு சான்றுகளோடு வாதிடலாம்.இந்தியாவில் ராணுவ ஆட்சி இன்றுவரை வராமல் இருக்க மதுவும் முக்கிய காரணம்.
லவ் ஜெஹாத்,பெண்களை ஏமாற்றி திருமணம் செய்கிறார்கள் என்று பேசும் கூட்டமும்,மதுவை வைத்து மக்களை முட்டாள் ஆக வைத்து இருக்கிறார்கள், மதுவை விட பெரிய தீமை/கேடு கிடையாது என்று பேசும் கூட்டமும் ஒன்று தான். பெண்கள் சுயமாக முடிவாக எடுக்க மாட்டார்கள்,மனிதர்களுக்கு சுயமாக எவ்வளவு குடிக்க வேண்டும் அல்லது குடி தவறு என்று முடிவு எடுக்க தெரியாது.எங்களுக்கு அந்த அதிகாரம் வேண்டும் என்ற காலம் மலையேறி விட்டது.
காவல்துறை மது அருந்துபவர்களையும்,அவர்களின் குடும்பங்களையும் ,பக்கத்து மாநிலத்தில் சட்டப்படி சரி என்று விற்கப்படும் மதுவை எடுத்து கொண்டு வருபவர்களையும்,அப்படி வருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனக்கு வேண்டாதவர்களின் மீது வன்முறையையும் ,அத்து மீறலையும் நடத்துவதை தவிர வேறு எதற்கும் மதுவிலக்கு உதவாது.
தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு சமம் தான் காவல்துறையினருக்கு தரப்படும் அளவுக்கு அதிகமான அதிகாரம்.
பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து மாட்டு கறி எடுத்து வந்தால்,வீட்டில் மாட்டு கறி சமைத்தால் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை என்பதை எதிர்த்து கொண்டே பக்கத்துக்கு மாநிலத்தில் விற்கப்படும் மதுவை வாங்கி வந்தால்,இங்கு வந்து குடித்தால் சிறை தண்டனை என்பதை எப்படி சில மனிதஉரிமை ஆர்வலர்களால் ஆதரிக்க முடிகிறது
அடுத்தவர்களுக்காக முடிவு எடுப்பதை எப்போது தான் விட போகிறோமோ.மத வெறி,சாதிவெறி,மொழிவெறி பிடித்தவர்கள் தான் அடுத்தவனின் உரிமையில் தலை இடுவார்கள்.அவனுக்கு எது சரி,தவறு,எதை சாப்பிட கூடாது,எதை குடிக்க கூடாது என்ற உரிமையை எடுத்து கொள்வார்கள்.

தியாகி சசி பெருமாளும் தருமபுரி நாகராஜனும்


              மரணத்தை அடிப்படையாக வைத்து,இறந்த உடல்களை வைத்து நடக்கும் வன்முறைகள்,வெறியேற்றும் செயல்களை பற்றி எழுத வேண்டிய சூழல் வருத்தம் தருகிறது,தன் மகள் வேறு சாதியை சார்ந்த ஒருவனை காதலித்து அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து சென்று விட்டதை பெரும் தீங்காக/கேடான செயலாக நினைத்து தன் உயிரை மாய்த்து கொண்டார் நாகராஜன்.அவரின் இறப்பை வெறியேற்ற பயன்படுத்தி கொண்ட கூட்டம் ஆடிய ஆட்டத்திற்கும் சசிபெருமாள் அவர்களின் இறப்பிற்கு பிறகு நடந்த/நடக்கும் வெறி ஆட்டங்களுக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது.
ஒட்டு போடும் உரிமை கொண்ட,அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட,அரசியலில் போட்டி போடும் வயதை அடைந்த,தான் விரும்பிய படிப்பை படிக்கும் உரிமை கொண்ட ஒருவர் தனக்கு பிடித்த உணவை(மாட்டு கறியை),திரவத்தை(மதுவை )குடிக்க கூடாது.அதை தடை செய்ய வேண்டும். உலகின் மிக பெரும்பாலான பகுதிகளில் சட்டப்படி விற்க/குடிக்க அனுமதிக்கப்பட்ட திரவத்தை சில நூறு சதுர மைல் பரப்பளவில் வைத்திருக்க கூடாது.வைத்திருந்தால் கடும் தண்டனை தர வேண்டும் என்று போராடுவது எந்த அடிப்படையில் என்று எவ்வளவு யோசித்தாலும் விளங்கவில்லை.
பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியரை படுகொலை செய்ததை வெகு எளிதாக கடந்து செல்லும் கூட்டம் தர்மபுரியில் வெறியாட்டம் அடியவர்களை விட எந்த விதத்தில் வித்தியாசபடுகிறது.நாளை வேறு சாதியில் திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று பலர் போராட கூடும்.அதற்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு உடனே காதல் திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்று போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மதுவினால் தமிழ்நாடே அழிந்து வருகிறது என்று எந்த வித சான்றுகளும் இல்லாமல் அடித்து விடும் கூட்டத்திற்கும் லவ் ஜெஹாத்,நாடக காதல் ,தமிழ்நாட்டின் மிக பெரிய பிரச்சினை,பெண்கள்,குடும்பங்கள் சந்திக்கும் மிக பெரிய பிரச்சினை இது தான் என்று அடித்து விட்டு வெறியேற்றி ,வன்முறை வெறியாட்டங்கள் ஆடி கொலை செய்து சாதி தலைவர்களாக மின்னுபவர்களுக்கும் இடையே சிறுதளவு வித்தியாசம் கூட கிடையாது.மதுவிலக்கு இருக்கும் நாடுகள் ,மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து சான்றுகளை வைத்து பார்த்தால் முகத்தில் அரையும் உண்மை என்ன என்று சற்றே சிந்தித்து பார்த்தால் ஏன் இப்படி பொய் உரைக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதளவு நியாய சிந்தனை இருந்தாலும் வரும்.ஆனால் ....

சுந்தர் பிச்சை சத்யா நாடெல்லா முகேஷ் அம்பானி அண்டிலியா மாளிகை இட ஒதுக்கீடு


இட ஒதுக்கீடு, பெரியார், திராவிட இயக்கம் என அனைத்தும் இந்த நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தப்பட்டு வன்மம் கொட்டபடுவதால் சில விளக்கங்கள்.முதலாவதாக சுந்தர் பிச்சை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அளப்பரிய சாதனை என்று பலரும் மூச்சு விடாமல் கத்துவதால் என்ன சாதனை செய்தார் என்று தேடி தேடி பார்த்தும் ஒன்றும் கண்ணுக்கு தென்படவில்லை. கண்டுபிடித்தவர்கள் தயவு செய்து சாதனை என்ன என்று விளக்கவும்.
மிக அதிக சம்பளம் தரும் பதவி கிடைத்தது பெரும் சாதனையா
உலகின் பணக்கார நிறுவனத்தின் CEO பதவி பெறுவது பெரும் சாதனையா
அந்த நிறுவனம் CEO பதவி காட்டி அழைக்கிறது ,இந்த நிறுவனம் இரண்டு மடங்கு சம்பளம் என்று ஆசை காட்டுகிறது ,நீ என்ன சொல்கிறாய் என்று பதவி பெறுதல் பெரும் சாதனையா
என்னோடு பணி புரியும் ஒருவர் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணின்(பெற்றோருக்கு ஒரே மகள்) தந்தைக்கு குர்கானில் பல ஏக்கர் சொத்து இருக்கிறதாம்.அதன் மதிப்பு ஆயிரகணக்கான கோடிகளாம்.அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் கூறினோம்.பெரும் பணக்காரர் ஆகும் அவரும் பெரும் சாதனையாளரா
அவரையும் பணம் வைத்திருந்த மாமனார் உலகெங்கும் தேடி வலைவீசி தகுதியானவன்,திறமையானவன்,இந்த உலகத்திலேயே தன் மகளுக்கு ஏற்றவன்,பொருத்தமானவன் என்று தான் பிடித்தார்,லார்ரி பேஜ் திரு சுந்தர் அவர்களை பிடித்தது போல.இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருக்கிறது என்று எண்ணுபவர்கள் தயவு செய்து விளக்கினால் தன்யனாவேன்
ராஜாவின் மகன் ராஜா எனபது போல பெரும் நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை வாரிசுகள் தலைமை பொறுப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள்.நம் டாட்டா,பிர்லா,அம்பானி மட்டுமல்ல உலகெங்கும் இதே நடைமுறை தான். இந்த பழக்கத்திற்கு மக்கள் இடையே மயக்கம் குறைந்து விட்டதை அறிந்ததால் யானை கையில் மாலையை கொடுத்து தேர்ந்தெடுக்க வைத்த வழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். என்னவொன்று தேர்ந்தெடுக்கும் யானை,அல்லது யானைகள் ஆறறிவு பெற்ற தேர்தெடுக்கபடும் மனிதரால் தனக்கு என்ன பயன் என்று பார்த்து தேர்வு செய்யும் யானைகள்.குறிப்பிட்ட ஒருவர் அல்லது யுவர் சேர்ந்து தேர்தெடுக்கும் செயல் தகுதிக்கும்,திறமைக்கும் எடுத்துக்காட்டு என்பதை விட மேற்கூறிய இரண்டையும் அதிகமாக இழிவுபடுத்த முடியாது.
மகன்களுக்கு உள்ளேயே யார் சிறந்தவர்,தனக்கு அடங்கி நடப்பவர்,தன் வழியை பின்பற்றுபவர் என்று பார்த்து ஒரு தொழில் அதிபர் எடுக்கும் முடிவுக்கும் இருவர்,மூவர் குழு எடுக்கும் முடிவுக்கும் என்ன வித்தியாசம்.இதில் உலகிலேயே சிறந்தவர் என்பதால் கிடைத்த பதவி என்று வாய்கூசாமல் வாதாடுபவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிது.
இங்கேயே அவர் உயர்பதவியை அடைந்திருப்பார் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் என்று வன்மம் கக்கும் கூட்டம் தான் அளப்பரிய சாதனை,நாடே பெருமைப்பட வேண்டிய சாதனை என்று அடித்து விட்டு கொண்டிருக்கிறது . இவர்கள் சொல்வதை பார்த்தால் இந்தியாவில்,தமிழ்நாட்டில்,உயர் கல்வி நிறுவனங்களில்,பொது துறை நிறுவனங்களில்,அரசு உயர்பதவிகளில்,தனியார் துறை உயர்பதவிகளில் ,பெரும்பாலான இடங்களை பெற்று இருப்பவர்கள் இட ஒதுக்கீடு பெரும் சாதிகளை சேர்ந்தவர்கள் என்று தான் அவர்களை படிப்பவர்கள் எண்ணுவார்கள்.உண்மைக்கும் இதற்கும் காத தூரம்.மேலே சொல்லப்பட்ட அனைத்து பதவிகளிலும் 1947 முதல் இன்று வரை மிக மிக பெரும்பான்மையான CEO /அதற்க்கு ஈடான பதவிகள் இட ஒதுக்கீடு பெறாத சாதிகளை சேர்ந்தவர்களுக்கு தான் சென்றுள்ளன.
அமெரிக்காவோ ஆப்ரிகாவோ படித்தவர்களோ,படிக்காதவர்களோ சென்று பணி செய்வதை முழுமனதோடு வரவேற்பவன் நான். ஆனால் இங்கு இட ஒதுக்கீடு காரணமாக தான் வேறு வழி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்ற பொய் முழுக்க முழுக்க வன்மம் தான்.சில தலைவர்கள் தான் இந்தியா ஓரளவாவது முன்னேற காரணம் ,ஒன்றாக இருக்க காரணம் என்று அவரவர் அவரவர்களுக்கு பிடித்த தலைவர்களை தூக்கி பிடித்தாலும் இந்தியா ஒன்றாக இருக்க ,ஓரளவாவது முன்னேற மிக முக்கிய காரணம் இட ஒதுக்கீடு தான். அதற்காக பாடுபட்ட தலைவகளும்,தொண்டர்களும் தான் என்பதை எவ்வளவு மறைக்க பார்த்தாலும் மறையாது.
முகேஷ் அம்பானி உலகத்திலேயே அதிக செலவில் ஒரு மாளிகை கட்டினார். அவர் பணம் ,அவர் கட்டி கொண்டார்.அதை பெரும் சாதனை ,இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய சாதனை என்று கொண்டாட வேண்டும் ,அப்படி கொண்டாடாதவர்கள் சாதி வெறியர்கள்,தேச துரோகிகள் என்று நல்லவேளை யாரும் சொல்லவில்லை. அம்பானி அண்டிலியா கட்டியது போன்ற சாதனை தானே சுந்தர் அவர்கள் பெரும் பணம் தரும் பதவியை அடைவதும்.
உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட இந்திய ரயில்வே தலைமை பொறுப்பை அடைந்தவரை யாரும் தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவது கிடையாது.அதிக எண்ணிக்கை கொண்ட சீன ராணுவத்தின் தலைமை பொறுப்பையோ ,இந்திய ராணுவத்தின் தலைமை பொறுப்பை அடைந்தவரையோ பெரும் சாதனையாளர் என்று புகழ்வது கிடையாது. இங்கு மட்டும் ஏன் என்பதற்கு காரணம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு தானே
கல்பனா சாவ்ளாவோ ,சுனிதா வில்லியம்சோ ,விஜய் சிங்கோ கொண்டாடபடுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஓரளவிற்கு objective வழியில் தேர்தெடுக்கப்பட்டு குறிப்பிட்ட துறைகளில் சாதித்தவர்கள்.பிசிசிஐ தலைவர்கள் டால்மியா,சரத் பவார் ,ஸ்ரீனிவாசன் ஐ சி சி தலைவர்களாக பதவி ஏற்றதை போன்ற நிகழ்வை பெரும் சாதனையாக எண்ணி பெருமிதம் கொள்வது ஒருவர் உரிமை.அதில் யாரும் தலையிட முடியாது.ஆனால் அப்படி கொண்டாடாதவர்களின் மீது வன்மத்தை கக்குவது நியாயமான ஒன்றா
ஜெயமோகன் பாணியில் ஒரு சின்ன நிறுவனத்தில் தலைமை பொறுப்புக்கு கூட வராத வயத்தெரிச்சல் கொண்ட தோல்வி அடைந்தவர்களின் புலம்பல் என்று வரபோகும் குற்றசாட்டுக்கு முன்கூட்டியே பதில் கொடுத்து விடுகிறேன்.பல முறை முதல்வராக இருந்த தேர்தலில் தோல்வியை சந்திக்காத தலைவர்களை 100 பேர் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் பஞ்சாயத்து கவுன்சில்லராக கூட ஆக முடியாதவர்கள்,தோல்வி அடைந்தவர்கள் தான் விமர்சிக்கிறார்கள்,அவர்களால் ஒரு சிறு பதவியை கூட அடைய முடியாது என்று வாதிடுவது சரி என்றால் நானும் தோல்வி அடைந்தவனின் பதிவு தான் இது என்பதை ஒப்பு கொள்கிறேன்.

காந்தியவாதிகளும் மரண தண்டனையும்


யாகூப் மேமனுக்கு மரண தண்டனை வழங்க கூடாது என்று போராடியவர்கள் மீது இந்த அளவிற்கு வெறுப்பையும் வன்மத்தையும் கக்குபவர்கள் தங்களை காந்தியவாதிகள் என்று சொல்லி கொள்வதை விட காந்தியை இழிவு படுத்த முடியுமா
அந்த குடும்பத்தை சேர்ந்த பலரை விட்டு விட்டார்கள் ,அதனால் இது சரியான தீர்ப்பு என்று ஒருவர் சொல்கிறார்.குண்டு வெடிப்புக்கு ,குண்டுகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட கார் யார் பெயரில் இருந்ததோ ,அந்த பெண்மணிக்கு ஆயுள் தண்டனை.முதல் குற்றவாளி மாட்டவில்லை என்பதால் மாட்டியவர்கள்,அவர்களின் உறவுகளில் ஒருவருக்காவது தூக்கு கொடுக்காவிட்டால் எப்படி என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை கடவுளின் தீர்ப்பு,தவறு இருக்க வாய்ப்பே இல்லை,அதை நிறைவேற்ற வேண்டாம் என்று போராடியவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்லுபவர்கள் தங்களை காந்தியவாதி என்று சொல்லி கொள்வது சரியா
தவறு செய்திருக்க மாட்டார்.. நிரபராதி என்று தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை பற்றி நினைப்பது தவறா. சட்டத்தால் தவறாக தண்டிக்கப்பட்டவர் என்று எண்ணுவது பெரும் குற்றமா .அவருக்காக கூடிய கூட்டத்திற்கு இது தான் முக்கிய காரணம். ஆனால் வெடிகுண்டு வைத்த வீரர் என்று எண்ணி கூடினார்கள் என்று திசை திருப்புவதை வன்மம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது
இஸ்லாமியர் என்பதால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வாழ்க்கையை தொலைத்த இளைஞர்கள் எண்ணிக்கை . பல ஆயிரம் இருக்கும் மும்பையில் யாகூப் மேமொனுக்கு கூட்டம் கூடாமல் இருந்தால் தான் ஆச்சரியம். தன் உறவுகளில் பலர் சந்தேகத்தின் பெயரில் சிறையில் வாடிய நிலையை காணதவர்கள் அதற்கு எதிராக கூக்குரல் இடுவது வியப்பல்ல. சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் இளம் விஞ்ஞானி ஒருவர் தீவிரவாதி என்று கைது செய்யபட்டார்.அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று விடுதலையும் செய்யபட்டார்.அவரும்,அவர் குடும்பமும் சந்தித்த துயரங்களை உணந்தவர்கள் யாரும் வெறி கொண்டு இஸ்லாமியர்கள் தண்டிக்கபடுவதே வெகு அரிது என்று எழுத மாட்டார்கள்.குஜராத்தில் மற்றும் பல மாநிலங்களில் பல ஆண்டுகள் சிறையில் கழித்து பின் குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றங்களினால் விடுதலையானவர்களை பற்றி எழுதினால், பக்கங்களில் அது பல வெண்முரசுகளை தாண்டி விடும்.தவறாக பல ஆண்டுகளை சிறையில் கழித்த,சந்தேகத்தின் பெயரால் துன்புறுத்தபட்ட ,உயிரை இழந்த உறவுகளை,நட்புகளை கொண்ட யாராக இருந்தாலும் யாகூப் மேமொனுக்காக வந்தவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியும்.குறிப்பிட்ட மதத்தை சார்ந்த குற்றவாளிகள் மாட்டி கொள்வது வெகு அபூர்வம் என்று உண்மைக்கு புறம்பாக எழுத தீவிர இந்துத்வர்களே தயங்குவார்கள்,ஆனால் காந்தியவாதிகளுக்கு அந்த தயக்கம் கூட இல்லை.
சுற்றுலா சென்று விட்டு காஷ்மீர் பிரட்சினையை முழும் அறிந்தவராக அக்குவேறாக அலசி அது என்ன என்று ஆணித்தரமாக ?உண்மையை உரைத்தவர் யாகூப் மேமன் இறுதி நிகழ்விற்கு வந்தவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.பா ஜ க தான் பயன் அடைகிறது என்ற வருத்தம் ஆசானுக்கே உரித்தான மெல்லிய நகைச்சுவைக்கு எடுத்துகாட்டு
ஜெ, ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் இப்படி எழுதியிருந்தார்.
JEYAMOHAN.IN

இந்தி திணிப்பு

  இந்தி திணிப்பு என்ற இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்குகிறார்கள் உள்நோக்கம் கொண்டவர்கள் என்ற பதிவில் நவோதயா பள்ளிகளை பற்றிய என் பின்னூட்டம் தொடர்பு அற்றது என்று நீக்கபட்டது.
அதனால் இங்கே என் முகநூல் சுவற்றில்
நவோதயா பள்ளிகள் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்றாக முழுவதும் இலவசமாக நடத்தும் பள்ளிகள்.ஏழை மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியோடு அமைக்கப்பட்ட பள்ளிகள். மாநில அரசு நிலம் தர வேண்டும்.மத்திய அரசின் நிதி உதவியால் இலவசமாக பல்வேறு வசதிகளுடன் கல்வி தரும் பள்ளிகள் இவை .
இந்த பள்ளிகளில் இந்தி கட்டாய பாடம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. தமிழ்நாடு,ஜம்மு காஷ்மீர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள்.முழுக்க முழுக்க தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் கட்டாய இந்தி கூடாது. விருப்ப பாடமாக இருக்கலாம் எனபது தான் தமிழ்நாடு அரசின் நிலை.இதை இன்று வரை எந்த மத்திய அரசும் ஒத்து கொள்ளவில்லை.
கட்டாய இந்தி இல்லை என்றால் பள்ளிகள் வராது என்று இன்று வரை நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை.இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தை சார்ந்த மாவட்டங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சிறந்த வசதிகளுடன் கல்வி கிடைக்க கொண்டு வரப்பட்ட திட்டத்தை ,கட்டாய இந்தி வேண்டாம் என்றால் கிடையாது என்று மறுத்தவை தான் மத்திய அரசுகள்.
இங்கு வசிக்கும் மக்களை விட இந்தி தான் முக்கியம் என்பதை தானே இது காட்டுகிறது.இது பெரும் தவறு என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டி இதுவரை தமிழ்நாடு நவோதயா பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வட்டியோடு தர சொல்லும் நாள் உண்மையான மக்கள் ஆட்சி,கூட்டாட்சி மலரும் நாள்.

மரண தண்டனை

பழங்காலத்தில் தண்டனை எனபது பழிக்கு பழியாக இருந்தது.இன்றும் கிராம/காப் பஞ்சாயத்துக்கள் அது போன்ற தண்டனைகளை வழங்குகின்றன/நிறைவேற்றுகின்றன.பிறகு குறிப்பிட்ட தொழில் செய்வோர்,குடும்பங்களில் பிறந்தவர்கள் போன்றோருக்கு,வயது,பாலினம் சார்ந்து எந்த குற்றமாக இருந்தாலும் மரண தண்டனை கிடையாது என்ற நிலையும் இருந்தது.
முன்னேறி வந்த முற்போக்கு எண்ணங்கள் கொண்ட சமுதாயங்கள் தண்டனைகளை குற்றவாளி திருந்த செய்யும் முறையாக பார்க்க துவங்கியது.குற்றவாளிகள் திருந்த வாய்ப்புகள் இருக்கும் போது அது தான் முயற்சிக்க படவேண்டும் எனபது தான் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் மரணதண்டனை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம்.
மரண தண்டனை எதிர்ப்பிற்கு இருக்கும் இன்னொரு முக்கிய காரணம் தவறு செய்யாதவர்கள் தவறாக தண்டனை பெற இருக்கும் வாய்ப்பு. மரணம் மற்ற தண்டனைகளை பெற்ற குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு சிறிது அளவாவது பிராயச்சித்தம் செய்யலாம். ஆனால் தவறாக மரண தண்டனை வழங்கபட்டால் பின்பு அது தவறான தீர்ப்பு என்று தெரிந்தால் மாற்ற முடியுமா
உங்கள் வீட்டில் நடந்தால் என்ற கேள்வி மறுபடியும் மறுபடியும் முட்டாள்தனமாக எழுப்பபடுகிறது.வாகன விபத்தில் உயிர் இழந்தாலும்,கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்தாலும்,மின்சார கம்பி விழுந்து உயிர் இழந்தாலும் இழப்பு ஒன்று தான். இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு குற்றம் செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வேண்டும் என்று போராட உரிமை உண்டா. தவறாக கட்டப்பட்ட,அனுமதி வழங்கப்பட்ட சினிமா தியேட்டரில் இரு குழந்தைகளையும் இழந்த தாய் குறைந்தபட்ச இரண்டு ஆண்டு தண்டனை கூட தரவில்லையே என்று அழுது கொண்டு கதறியதை சென்ற .வாரம் தானே பார்த்தோம்.விபத்துக்களின் காரணமாக உயிர் இழந்த நெருங்கிய உறவுகள் ,நட்புகள் இல்லாத குடும்பத்தை பார்ப்பது மிக மிக அரிது. அவர்களுக்கு குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்ல இருக்காத உரிமை அதே போல உறவுகளை தீவிரவாத செயல்களில் இழந்தவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது.இழப்பு இரு இடங்களிலும் ஒன்று தானே. மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்னை கொலை செய்தவனாக இருந்தாலும்,என் நெருங்கிய உறவுகளை கொடூரமாக கொன்றவனாக இருந்தாலும் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது என்று கார்ட் மணிபர்சில் வைத்து கொண்டால் அவர்கள் உண்மையிலேயே மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்று ஒத்து கொள்வீர்களா
பெரும்பான்மையானோர் மரணதண்டனைக்கு ஆதரவானவர்கள் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்.தமிழ்நாட்டில் மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்று வோட்டெடுப்பு நடத்தலாமா.மக்களால் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கபட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது பெரும்பானமையானோர் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்பதற்கு சான்றா அல்லது மிக மிக குறைவானோர் தான் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்ற உங்கள் வாதத்திற்கு சான்றா
ஆனந்தன் அமிர்தன்
September 1
மரண தண்டனை:
தேவை இல்லை என்பவர்கள், இது வரை சப்பை கட்டு கட்டாமல் தெளிவு படுத்தாத விசயங்கள்
1, மரண தண்டனை என்பது எந்தக் குற்றம் செய்தவருக்கும் கொடுக்கக் கூடாதா? (எ.கா: அப்படிச் சொல்பவர்களின் 7-8 வயது பெண் குழந்தையை ஒரு காமுகன் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகி கொன்று சாக்கடையில் வீசி விடுகிறான். அவனுக்கும் கூட கூடாதா?)
2, ம.தண்டனை வேண்டாம் என்று சொல்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்களா? பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களா?
3, மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் அதற்குச் சமமான மாற்று தண்டனைகளாக எதனை முன்னிறுத்துகிறார்கள்?
4, தண்டனையாகக் கொடுக்கும் மரணமே தவறென்று பேசுபவர்கள், பிறரை கொன்ற குற்றவாளிகளுக்கு எப்படி பரிந்து பேச முடிகிறது?
--------------------------------------------------------------
பெரும்பாண்மையினர் கருத்திற்கு எதிராகப் பேசினால் அறிவாளியாகக் காட்டிக் கொள்ளலாம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் மரண தண்டனையை எதிர்ப்பவர்களிடம் தெரியவில்லை.
மேலேயுள்ள நான்கு கேள்விகளுக்கும் நேரிடையாக பதில் சொல்பவர்கள் மட்டும் விவாதிக்கலாம். வெத்து வேட்டு உதாசீனப் படுத்தப்படும்.

பாசிசம் என்றால் என்ன

பாசிசம் என்றால் என்ன என்று இதுவரை இருந்து வரும் அர்த்தத்திற்கு நேர்மாறான ஒரு அர்த்தத்தை தரும் கட்டுரையை எழுதி உள்ளது வியப்பை தருகிறது
1930 களில் யார் யாருக்கு வோட்டுரிமை இருந்தது,வோட்டுரிமை பெற அடிப்படை தகுதிகள் எவை ,வோட்டு போடும் உரிமை பெற்றவர்கள் எத்தனை சதவீதம் என்பதை விளக்கி இருந்தால் பல உண்மைகள் விளங்குமே.மக்கள் தொகையில் மிக குறைந்த மக்களுக்கே வோட்டுரிமை இருந்த காலகட்டம் அது. உலகெங்கும் வோட்டுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு.வோட்டுரிமைக்கு தகுதி இல்லாதவர்கள் தான் மிக பெரும்பான்மை.பெண் என்பதால்,சொத்து இல்லாததால்,குறிப்பிட்ட பகுதி,கூட்டத்தை சார்ந்தவர்கள்,குற்ற பரம்பரையினர்,பழங்குடிகள் என்று வோட்டுரிமை மறுக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.
வோட்டுரிமையை பெரும்பான்மை மக்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை திரித்து அன்று இருந்த சிறுபான்மை மக்களுக்கு மட்டுமான வோட்டுரிமையை உண்மையான மக்கள் ஆட்சி,அனைத்து மக்களுக்குமான ஒன்று போல எழுதுவது நியாயமான செயலா.அனைவருக்கும் வோட்டுரிமை இருப்பது போலவும் அதை மாற்ற வேண்டும் என்று பெரியார் கூறியதற்கு வெள்ளைகார துரை நியாயமற்ற கோரிக்கை என்று மறுத்தார் என்று எழுதுவது நல்ல நகைச்சுவை
பெரியார் பெரும்பான்மை மக்கள் நம்பிய பல விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர்.இன்றும் சாதி கடந்த திருமணம்,பெண்களுக்கு சொத்துரிமை ,ஒரே கோத்திர திருமணம் ,ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம்,எளிதான மணவிலக்கு மதம் மாறும் உரிமை வேண்டுமா வேண்டாமா என்றால் பெரும்பான்மையினர் வேண்டாம் என்று தான் முடிவு எடுப்பார். அப்படி அவர்கள் முடிவு எடுத்தால் அது சரி என்று ஆகி விடுமா
இன தூய்மைக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்தவருக்கு எதிராக எவ்வளவு வன்மம்.இதை அவர் சொன்னவற்றிற்கு எதிரானவன் என்பவர் செய்தால் புரிந்து கொள்ளலாம்.ஆனால் இட ஒதுக்கீடு,பெண் விடுதலை,மதம் மாறும் உரிமை,சாதி கடந்த திருமணங்கள் ,மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவன் என்று சொல்லி கொள்ளும் கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவர் செய்வதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரியார் வெள்ளையர்களிடம் இருந்து ஆட்சி மத வெறியர்களிடம் செல்வது பெரும்பான்மையான ஏழை,எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் என்று நம்பினார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தார் . நீங்களும் பெரியார் வழியில் தமிழ் தேசியம்,தனி தமிழ்நாடு என்பது ஏழை எளிய மக்களுக்கு தீங்காக தான் இருக்கும் என்று நம்புவது போல.
பெரும்பான்மையான நாக இன மக்களோ,கஷ்மீரிகளோ ,தமிழர்களோ தங்கள் இன தூய்மையை பாதுகாக்க வெளியாட்களை வெளியேற்ற வேண்டும் எனு பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தீர்மானம் இயற்றினால் அதை எதிர்ப்பவர்கள் மக்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் ,பாசிஸ்ட்கள் என்பீர்களா . நீங்கள் இன்று இந்தியாவோடு இருப்பது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள,ஏற்று கொள்ள முடிகிறது.அதே தான் மத வெறியர்களின் கையில் ஆட்சி சிக்குவதை விட neutral umpire வெள்ளையன் மேல் என்று பெரியார் எண்ணியதன் பின் உள்ள நியாயமும் என்பதை உங்களால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை
தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று எழுதிய பாரதியை உலகையே அழிக்க எண்ணிய கொலைக்காரன், ஒரு வேலை உணவு கிடைக்கவில்லை என்பதற்காக அனைவரையும் கொல்ல வேண்டும் என்று பாடியவன் என்று வசைபாடுவதற்கும் நீங்கள் பெரியார் மீது பொழியும் வசைகளுக்கும் வித்தியாசம் கிடையாது.
Ananthakrishnan Pakshirajan
சொல்வனம் கட்டுரை. பிடித்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்
http://solvanam.com/?p=41831

Beef Eating Is My Birthright

1911, சூன் 17 ஆம் நாள் ,15 அக்டோபர் 2002 ,04 ஆகஸ்ட் 2015 ,28 செப்டம்பர் 2015
கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய
ஒரு மிலேச்சனாகிய ------
1911, சூன் 17 ஆம் நாள் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற வெள்ளை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு வாஞ்சிநாதன் இறந்தான். அவனது சட்டைப் பையில் தமிழில் எழுதப்பட்ட பின்வரும் கடிதம் இருந்தது (ரகுநாதன், 1982: 403): “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta
A very disturbing aspect is the involvement of communal forces like the Vishwa Hindu Parishad, Bajrang Dal, etc., who have been continuously active in spreading the virus of communal hatred in the area. They often spread the false rumour of cow slaughter in order to inflame the sentiments of the people against Muslims of the adjoining area of Mewat. Even in this incident a rumour of cow slaughter was used to inflame the crowd. The crime was perpetrated by the frenzied mob armed with irons, rods, spears etc led by these communal forces who controlled the mob and directed their ire against the dalits. The intensity of the communal frenzy can be gauged by an attempt to erase the name of the SSP Jhajjar from the board at chowkie because the concerned officer happens to be a Muslim.
On Sunday morning, 20-year-old Raziya was waiting for her husband to accompany her to a wedding when she received a phone call, informing her about his death. Cradling her two-month-old daughter, Raziya extends a henna-dyed hand and says, “We were supposed to attend a family wedding. The last time I spoke to him, I had been applying henna and I had asked him to reach home on time. I was preparing for the wedding when I received the news of his death.” In the early hours of Sunday, three men — Arif, Anas and Nazim — were beaten to death by villagers in Dadri district, - See more at: http://indianexpress.com/…/suspected-cattle-thieves-beate…/…
இரண்டு நாட்களுக்கு முன் 28 செப்டம்பர் 2011இல் உத்தர்ப்ரதேசத்தில் தாத்ரி எனும் ஊரில் மாட்டு கறி வைதிர்ருந்தார் என்று இஸ்லாமியர் ஒருவர் அடித்து கொல்லபட்டார்.அவர் வீட்டில் மாட்டு கறி இருக்கிறது,பசுவை கொன்று பக்ரீத் நாள் துவங்கி இன்று வரை மாட்டு கறி உண்டு வருகிறார்கள் என்று ஊர் கோவிலில் மைக் மூலம் கோவில் பண்டிதரை வைத்து சொல்ல வைத்து,ஊரில் உள்ள இந்துத்வா ?தேசபக்தர்களை திரட்டி நூற்றுக்கணக்கானவர்கள் வீடு புகுந்து தந்தையையும் மகனையும் அடி அடி என்று அடித்திருக்கிறார்கள்.இதில் தந்தையின் உயிர் பிரிந்து விட்டது. அவர் மகன் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
அவர்கள் வீட்டில் இருந்த கறி மாட்டு கறியா,ஆட்டு கறியா என்று காவல்துறை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.மாட்டு கறியாக இருந்தால் கொலைக்கு முழு பொறுப்பு கொலையானவர் தான் என்று மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் மகேஷ் சர்மா சொல்லி இருக்கிறார்.பா ஜ க வினர் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை/போராட்டத்தை தூண்ட மகாபஞ்சாயத்தை கூட்ட முடிவெடுத்து இருக்கிறார்கள்.
மாட்டுக்காக மனிதர்களை கொலை செய்வது ஹிந்டுத்வர்களுக்கு புதிதான ஒன்று கிடையாது. நூற்றாண்டுகளாக நடக்கும் ஒன்று தான். இதுவரை பசு மாட்டின் மீது உள்ள பக்தியால் மாட்டுக்காக ஹிந்டுத்வர்கள் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை எண்ண எண்ண வற்றாத ஒன்று தான்.முதல் விடுதலை போர் என்று அழைக்கப்படும் சிப்பாய் கலகம் அடிப்படையில் பசுவை /பன்றியை வைத்து உருவாக்கப்பட்ட கலகம் தான். அதனால் ஏற்பட்ட படுகொலைகள் பல ஆயிரங்களை தாண்டும். தங்கள் சொந்த மகள்களை,சகோதரிகளை,உறவுகளை அவர்களின் ஒரே கோத்திர/வேறு சாதி மத ,காதல் காரணமாக செய்த கொலைகளை விட குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர மற்றபடி பசுபாசம் காரணமாக ஹிந்துக்கள் செய்துள்ள கொலைகள் மிக மிக அதிகம்.
அவற்றில் சிலவற்றை மேலே கொடுத்துள்ளேன்.பசுவுக்காக கொலை செய்தவர்களை பெரும் தியாகிகளாக இந்து மதவெறியர்கள் @நம்பிக்கையாளர்கள் சித்தரிக்கும் வழக்கமும் நூறாண்டுகளாக நடக்கும் ஒன்று .ஆங்கில அரசின் ஊழியராக இருந்த கலெக்டர் ஆஷ் அவர்களை சுட்டு கொன்ற வாஞ்சி ஐயர் அவர் கைப்பட எழுதி இருந்த குற்றசாட்டில் இருக்கும் கொலைக்கான மிக முக்கிய காரணம் மாட்டு கறி உண்பவன் என்னை ஆள நினைப்பதா எனபது தான்.
தனக்கு பிடித்த உணவை உண்ணும் உரிமை,தனக்கு பிடித்த பணியை செய்யும் உரிமை வேண்டும்,தனக்கு பிடித்த துணையை தேடி கொள்ளும் உரிமை வேண்டும் என்று போராடிய ஒருவனை பாசிஸ்ட்,தேச துரோகி ,சனநாயகத்தின் எதிரி,அவர்களின் முதல் எதிரியாக கருதுபவர்கள் தான் மாட்டுக்காக கொலை செய்த வாஞ்சிநாதனை மிக பெரிய போராளியாக ,தேசபக்தனாக உருவாக்கியவர்கள் என்பதை புரிந்து கொண்டால் மாட்டுக்கும் இந்துத்வதிர்க்கும் உள்ள நேரடி தொடர்பு விளங்கும்.உண்மையான கம்முநிச்ட்களை ஹிந்டுத்வர்கள் வெறுப்போடு எதிரியாக கருத அவர்கள் வலுவாக உள்ள பகுதிகளில் எளிதாக கிடைக்கும் மாட்டு கறியும் முக்கிய காரணம்.
மாட்டு கறி என்பது வெறும் உணவு கிடையாது. அதன் பின் நூற்றாண்டுகளாக தொடரும் வெறுப்பு/சூழ்ச்சி அரசியல் இருக்கும் உண்மை புரிந்தால் நாம் ஏன் மாட்டு கறி உண்ணும் உரிமைக்காக போராட வேண்டும் எனபது தெளிவாக விளங்கும்.
ஆஷ் துரையை கொன்ற வாஞ்சி ஐயரோ ,அரியானாவில் இறந்த பசுவின் தொலை உரித்து கொண்டிருந்த ஐந்து தலித் சமுதாயத்தை சார்ந்தவர்களை காவல்நிலையத்தில் இருந்து இழுத்து கொண்டு வந்து அடித்தே கொன்ற கூட்டமோ,மனிதர்களின் உயிரை விட பசுவின் உயிர் பெரியது,கொலை சரியான தண்டனை தான் என்று பேசிய ஆசாரிய கிசோர்களோ,ஆசாரிய கிஷோரின் மறைவின் போது அவரை பற்றி உருகி (எழுதிய தேர்தல் பிரசாரத்தின் போது மாட்டு கறி ஏற்றுமதியை பெரும் குற்றம் போல பேசிய இன்று மாட்டு கறி முக்கிய உணவாக இருக்கும் நாடுகளிலேயே காலத்தை கழிக்கிற )பிரதமரோ ,மூன்று இஸ்லாமியர்களை 2 மாதங்கள் முன்பு அடித்து கொன்ற கூட்டமோ, மூன்று நாட்கள் முன்பு 50 வயதான ஒருவரை அடித்தே கொன்ற கொலையாளிகளோ அனைவரையும் நூறாண்டுகளாக பிணைக்கும் கயிறு எது என்பதை ஆராய்ந்தால் ஹிந்துத்வம் என்ற பூனைக்குட்டி குதித்து கொண்டு தெரியும்.
இவர்களை எதிர்க்க போகிறோமா அல்லது நாமும் ஆஷ் துரை,தயா சந்த்,ஆரிப் ,முஹம்மத் அக்லாக் போல பலிகடாவாக ஆக போகிறோமா

Friday 20 February 2015

மோடியின் த்யாகம்


       பரிசாக வந்த பல லட்சம் பெறுமானமுள்ள உடையை ,தன் பெயர் பொரித்த ஆடையை ஒரே ஒரு முறை அணிந்து பின் அதனை ஏலம் விட்டு ,அதன் மூலம் கிடைக்கும் கோடிகளை கங்கையை சுத்தபடுத்த தரும் மோடிஜியின் த்யாகம்,பெருந்தன்மை கண்களை பனிக்க வைக்கிறது

       தினமும் அவருக்கு யாராவது இதே போல பரிசுகளை வழங்கினால்,அவரும் அவற்றை பயன்படுத்தி விட்டு பின் ஏலம் விட்டால்(புரட்சி தலைவி அம்மாவும் டான்சி நிலத்தை ஏலம் விட்டு காவேரியில் தூர் வார தந்திருந்தால் ஒரு முறை பதவி இழக்க,பின் உச்சநீதிமன்றம் என்ன செய்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்று விசித்திர தீர்ப்பு தந்து தப்பிக்க வைத்த நிலை வந்திருக்குமா. வளர்ப்பு மகனே பரிசாக வந்தவர் தான் என்று அவரை ஏலம் விட்டிருந்தால் இன்று எந்த வழக்காவது இருந்திருக்குமா.இன்றும் பரிசாக வந்த 3 லட்சம் டாலர் செக்கை மோடியை போல ஏலம் விட செய்தால் வழக்காவது ஒன்றாவது,த்யாக சீலர் பட்டம் தன்னால் தேடி வருமே) வரும் பல ஆயிரம் கோடியை வைத்து கங்கையை மட்டுமா ,இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் மற்றும் அவர் பிரதமராக பதவி ஏற்ற பின் சென்ற நாடுகளில் உள்ள அனைத்து நதிகளையும் சுத்தபடுத்தி விடலாமே.
      என்னன்ன பொருட்களை பரிசாக தந்தால் ஏலம் விட வசதியாக இருக்கும் என்று எண்ணியதில் வந்த சில யோசனைகள்
   
       அதானி மற்றும் அம்பானி போன்றவர்கள் மோடி மோடி என்று எழுதப்பட்ட விமானங்களை.ஜெட்களை பரிசாக அளிக்கலாம்.பல நூறு முறை அவர் பயணம் செய்த அதானியின் விமானத்தை ஏன் அவர் ஏலம் விடவில்லை என்று சில கிருத்துவ கைக்கூலிகள் கேட்க கூடும். அந்த விமானத்தில் அதானி என்று தான் எழுதி இருந்ததே தவிர மோடி என்று அல்ல என்பதை அறியாத எத்தர்கள் அல்ல அவர்கள்.மோடி என்று எழுதிய ஆடை என்பதால் தான் மோடி அவர்களுக்கு அந்த ஆடை தனக்கு சொந்தம் என்ற எண்ணமே உருவானது.அதனால் தான் அதனை ஏலம் விட ஆணை இட்டார் என்ற உண்மையை ஊர் முழுக்க சொன்னால் தான் போலி மதசார்பின்மைவாதிகளின் முகத்திரையை கிழிக்க முடியும்.

        ஒரு முறை தனியார் விமானத்தில் பறக்க பல லட்சம் ரூபாய் செலவு என்றாலும் ஒரு ரூபாய் கூட தராமல் அடானியின் விமானத்தில் பல நூறு முறை பறந்து இந்தியா முழுவதும் சுற்றிய த்யாகத்தின் திருவுருவை பார்த்து ,அவர் ஆடையை வைத்து கிண்டல் செய்த ஐந்தாம்படையினர் அஞ்சுமாறு மோடியின் பெயர் பொறித்த தங்க /வைர ஆபரணங்களை பரிசாக தரலாம்.நகையும் ஒரு ஆடை தானே.துறவி போல வாழ்ந்தாலும் பரிசாக தருபவர்கள் மனம் கோண கூடாது என்பதால் அவற்றை அணியும் உன்னத மனிதன் உடலில் பட்ட வைர/தங்க நகைகள் மாணிக்கங்களை விட அதிக விலைக்கு ஏலம் போகும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா
இயேசுவின் ரத்தம் ஜெயம்,ஜெய் ஸ்ரீ ராம்,இன்ஷா அல்லா என்று மோடியின் பெயரோடு ஒரு ஓரத்தில் மேற்கூறியவை பொறிக்கப்பட்ட ஆடைகளை அவருக்கு பரிசாக தரலாம். பெருந்தன்மை @மோடி அவற்றை அணிந்த பின் விடும் ஏலத்தில் எந்த உடை அதிக தொகைக்கு போகும் என்று மதங்களுக்கு இடையே நடக்கும் போட்டியினால் கிடைக்கும் தொகையை வைத்து இந்தியாவின் அனைத்து கடன்களையும் அடைத்து விடலாமே

        பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட உமாசங்கர் IAS அவர்களுக்கு மோடியின் வடிவில் இயேசு வழி காட்டி இருக்கிறார். ஏசுவே ஒரே கடவுள்,ஏசுவே உண்மை கடவுள் ,துர்தேவதைகளிடம் இருந்து என்னை மீட்ட பிதாவே எங்களை ரட்சியும் என்று எழுதப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு பணிக்கு வந்தால் மோடியின் ஆட்சியில் அவரை பின்பற்றி வாழ்வதால் சங்க பரிவாரங்களும் அவரை போற்றும்.ஓய்வு நேரம் மட்டுமல்லாமல் பணி நேரத்திலும் ஏசுவுக்கு சேவகம் செய்த மனநிறைவும் உண்டாகும்.

        தங்க குல்லாக்களும்,தங்கத்தில் செய்யப்பட்ட சீக்கிய தலைப்பாக்களையும் பரிசாக வழங்கலாம்.குல்லா போடுவதில் உலகத்திலேயே தலை சிறந்தவர் ஆயிற்றே மோடிஜி அவர்கள்.அவர் போட்ட குல்லாயை வாங்க உலக தலைவர்களே நான் நீ என்று போட்டி போடுவார்கள்.

        மோடி மோடி என்று பெயர் பொறிக்கப்பட்ட கொசு மட்டைகளை பரிசாக வழங்கலாம்.குஜராத்தில் அவர் பெயரை கேட்டே ஓடிய கொசுக்கள் ,அதனால் கொசு இல்லாத மாநிலமாக ,இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக,நோய் இல்லாத மாநிலமாக மாறிய குஜராத் போல இந்தியா முழுவதும் மாறி விடுமே.கொசு அடித்தாலும் மோடி பெயர பொரித்த மோடி பயன்படுத்திய கொசு மட்டையால் அடிக்கும் பாக்கியத்துக்காக எத்தனை கோடிகள் கொடுக்கவும் தொழில் அதிபர்கள் தயங்க மாட்டார்களே

          குஜராத்தில் 0-6 ஆண்.பெண் சதவீதம் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 883 2011இல் 886.இந்த மகத்தான சாதனையை நினைவு கூறும் விதமாக மூன்று பெண் சிசுக்களின் தங்க சிலையை பரிசாக தரலாம். 10 ஆண்டுகளில் அவர் நடத்தி கட்டிய இந்த சாதனையை பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் யாரும் எட்ட முடியாது என்பதை உலகுக்கே அறிவிக்கும் பரிசாக இருக்குமே இந்த மூன்று பெண் குழந்தைகளின் சிலைகள்

          5 ஆண்டுகள் குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக அவர் சாதித்த வரலாற்று சாதனைகளை(சாதனைகள் தொடர பொறுப்பை அமித் ஷாவிடம் ஒப்படைத்து உள்ளார் எனபது கொசுறு செய்தி) நினைவுபடுத்தும் விதமாக மோடி பெயர் பதித்த ஸ்டம்ப்/மட்டை/பந்துகளை பரிசாக தரலாம். அவற்றை ஏலத்தில் எடுக்க நடக்கும் போட்டி IPL ஏலத்தை தூக்கி சாப்பிட்டு விடுமே