Thursday 1 October 2015

தியாகி சசி பெருமாளும் தருமபுரி நாகராஜனும்


              மரணத்தை அடிப்படையாக வைத்து,இறந்த உடல்களை வைத்து நடக்கும் வன்முறைகள்,வெறியேற்றும் செயல்களை பற்றி எழுத வேண்டிய சூழல் வருத்தம் தருகிறது,தன் மகள் வேறு சாதியை சார்ந்த ஒருவனை காதலித்து அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து சென்று விட்டதை பெரும் தீங்காக/கேடான செயலாக நினைத்து தன் உயிரை மாய்த்து கொண்டார் நாகராஜன்.அவரின் இறப்பை வெறியேற்ற பயன்படுத்தி கொண்ட கூட்டம் ஆடிய ஆட்டத்திற்கும் சசிபெருமாள் அவர்களின் இறப்பிற்கு பிறகு நடந்த/நடக்கும் வெறி ஆட்டங்களுக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது.
ஒட்டு போடும் உரிமை கொண்ட,அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட,அரசியலில் போட்டி போடும் வயதை அடைந்த,தான் விரும்பிய படிப்பை படிக்கும் உரிமை கொண்ட ஒருவர் தனக்கு பிடித்த உணவை(மாட்டு கறியை),திரவத்தை(மதுவை )குடிக்க கூடாது.அதை தடை செய்ய வேண்டும். உலகின் மிக பெரும்பாலான பகுதிகளில் சட்டப்படி விற்க/குடிக்க அனுமதிக்கப்பட்ட திரவத்தை சில நூறு சதுர மைல் பரப்பளவில் வைத்திருக்க கூடாது.வைத்திருந்தால் கடும் தண்டனை தர வேண்டும் என்று போராடுவது எந்த அடிப்படையில் என்று எவ்வளவு யோசித்தாலும் விளங்கவில்லை.
பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியரை படுகொலை செய்ததை வெகு எளிதாக கடந்து செல்லும் கூட்டம் தர்மபுரியில் வெறியாட்டம் அடியவர்களை விட எந்த விதத்தில் வித்தியாசபடுகிறது.நாளை வேறு சாதியில் திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று பலர் போராட கூடும்.அதற்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு உடனே காதல் திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்று போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மதுவினால் தமிழ்நாடே அழிந்து வருகிறது என்று எந்த வித சான்றுகளும் இல்லாமல் அடித்து விடும் கூட்டத்திற்கும் லவ் ஜெஹாத்,நாடக காதல் ,தமிழ்நாட்டின் மிக பெரிய பிரச்சினை,பெண்கள்,குடும்பங்கள் சந்திக்கும் மிக பெரிய பிரச்சினை இது தான் என்று அடித்து விட்டு வெறியேற்றி ,வன்முறை வெறியாட்டங்கள் ஆடி கொலை செய்து சாதி தலைவர்களாக மின்னுபவர்களுக்கும் இடையே சிறுதளவு வித்தியாசம் கூட கிடையாது.மதுவிலக்கு இருக்கும் நாடுகள் ,மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து சான்றுகளை வைத்து பார்த்தால் முகத்தில் அரையும் உண்மை என்ன என்று சற்றே சிந்தித்து பார்த்தால் ஏன் இப்படி பொய் உரைக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதளவு நியாய சிந்தனை இருந்தாலும் வரும்.ஆனால் ....

No comments:

Post a Comment