Thursday 1 October 2015

இந்தி திணிப்பு

  இந்தி திணிப்பு என்ற இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்குகிறார்கள் உள்நோக்கம் கொண்டவர்கள் என்ற பதிவில் நவோதயா பள்ளிகளை பற்றிய என் பின்னூட்டம் தொடர்பு அற்றது என்று நீக்கபட்டது.
அதனால் இங்கே என் முகநூல் சுவற்றில்
நவோதயா பள்ளிகள் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்றாக முழுவதும் இலவசமாக நடத்தும் பள்ளிகள்.ஏழை மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியோடு அமைக்கப்பட்ட பள்ளிகள். மாநில அரசு நிலம் தர வேண்டும்.மத்திய அரசின் நிதி உதவியால் இலவசமாக பல்வேறு வசதிகளுடன் கல்வி தரும் பள்ளிகள் இவை .
இந்த பள்ளிகளில் இந்தி கட்டாய பாடம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. தமிழ்நாடு,ஜம்மு காஷ்மீர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள்.முழுக்க முழுக்க தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் கட்டாய இந்தி கூடாது. விருப்ப பாடமாக இருக்கலாம் எனபது தான் தமிழ்நாடு அரசின் நிலை.இதை இன்று வரை எந்த மத்திய அரசும் ஒத்து கொள்ளவில்லை.
கட்டாய இந்தி இல்லை என்றால் பள்ளிகள் வராது என்று இன்று வரை நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை.இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தை சார்ந்த மாவட்டங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சிறந்த வசதிகளுடன் கல்வி கிடைக்க கொண்டு வரப்பட்ட திட்டத்தை ,கட்டாய இந்தி வேண்டாம் என்றால் கிடையாது என்று மறுத்தவை தான் மத்திய அரசுகள்.
இங்கு வசிக்கும் மக்களை விட இந்தி தான் முக்கியம் என்பதை தானே இது காட்டுகிறது.இது பெரும் தவறு என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டி இதுவரை தமிழ்நாடு நவோதயா பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வட்டியோடு தர சொல்லும் நாள் உண்மையான மக்கள் ஆட்சி,கூட்டாட்சி மலரும் நாள்.

No comments:

Post a Comment