Thursday 1 October 2015

காந்தியவாதிகளும் மரண தண்டனையும்


யாகூப் மேமனுக்கு மரண தண்டனை வழங்க கூடாது என்று போராடியவர்கள் மீது இந்த அளவிற்கு வெறுப்பையும் வன்மத்தையும் கக்குபவர்கள் தங்களை காந்தியவாதிகள் என்று சொல்லி கொள்வதை விட காந்தியை இழிவு படுத்த முடியுமா
அந்த குடும்பத்தை சேர்ந்த பலரை விட்டு விட்டார்கள் ,அதனால் இது சரியான தீர்ப்பு என்று ஒருவர் சொல்கிறார்.குண்டு வெடிப்புக்கு ,குண்டுகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட கார் யார் பெயரில் இருந்ததோ ,அந்த பெண்மணிக்கு ஆயுள் தண்டனை.முதல் குற்றவாளி மாட்டவில்லை என்பதால் மாட்டியவர்கள்,அவர்களின் உறவுகளில் ஒருவருக்காவது தூக்கு கொடுக்காவிட்டால் எப்படி என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை கடவுளின் தீர்ப்பு,தவறு இருக்க வாய்ப்பே இல்லை,அதை நிறைவேற்ற வேண்டாம் என்று போராடியவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்லுபவர்கள் தங்களை காந்தியவாதி என்று சொல்லி கொள்வது சரியா
தவறு செய்திருக்க மாட்டார்.. நிரபராதி என்று தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை பற்றி நினைப்பது தவறா. சட்டத்தால் தவறாக தண்டிக்கப்பட்டவர் என்று எண்ணுவது பெரும் குற்றமா .அவருக்காக கூடிய கூட்டத்திற்கு இது தான் முக்கிய காரணம். ஆனால் வெடிகுண்டு வைத்த வீரர் என்று எண்ணி கூடினார்கள் என்று திசை திருப்புவதை வன்மம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது
இஸ்லாமியர் என்பதால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வாழ்க்கையை தொலைத்த இளைஞர்கள் எண்ணிக்கை . பல ஆயிரம் இருக்கும் மும்பையில் யாகூப் மேமொனுக்கு கூட்டம் கூடாமல் இருந்தால் தான் ஆச்சரியம். தன் உறவுகளில் பலர் சந்தேகத்தின் பெயரில் சிறையில் வாடிய நிலையை காணதவர்கள் அதற்கு எதிராக கூக்குரல் இடுவது வியப்பல்ல. சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் இளம் விஞ்ஞானி ஒருவர் தீவிரவாதி என்று கைது செய்யபட்டார்.அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று விடுதலையும் செய்யபட்டார்.அவரும்,அவர் குடும்பமும் சந்தித்த துயரங்களை உணந்தவர்கள் யாரும் வெறி கொண்டு இஸ்லாமியர்கள் தண்டிக்கபடுவதே வெகு அரிது என்று எழுத மாட்டார்கள்.குஜராத்தில் மற்றும் பல மாநிலங்களில் பல ஆண்டுகள் சிறையில் கழித்து பின் குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றங்களினால் விடுதலையானவர்களை பற்றி எழுதினால், பக்கங்களில் அது பல வெண்முரசுகளை தாண்டி விடும்.தவறாக பல ஆண்டுகளை சிறையில் கழித்த,சந்தேகத்தின் பெயரால் துன்புறுத்தபட்ட ,உயிரை இழந்த உறவுகளை,நட்புகளை கொண்ட யாராக இருந்தாலும் யாகூப் மேமொனுக்காக வந்தவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியும்.குறிப்பிட்ட மதத்தை சார்ந்த குற்றவாளிகள் மாட்டி கொள்வது வெகு அபூர்வம் என்று உண்மைக்கு புறம்பாக எழுத தீவிர இந்துத்வர்களே தயங்குவார்கள்,ஆனால் காந்தியவாதிகளுக்கு அந்த தயக்கம் கூட இல்லை.
சுற்றுலா சென்று விட்டு காஷ்மீர் பிரட்சினையை முழும் அறிந்தவராக அக்குவேறாக அலசி அது என்ன என்று ஆணித்தரமாக ?உண்மையை உரைத்தவர் யாகூப் மேமன் இறுதி நிகழ்விற்கு வந்தவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.பா ஜ க தான் பயன் அடைகிறது என்ற வருத்தம் ஆசானுக்கே உரித்தான மெல்லிய நகைச்சுவைக்கு எடுத்துகாட்டு
ஜெ, ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் இப்படி எழுதியிருந்தார்.
JEYAMOHAN.IN

No comments:

Post a Comment