Thursday 1 October 2015

சுந்தர் பிச்சை சத்யா நாடெல்லா முகேஷ் அம்பானி அண்டிலியா மாளிகை இட ஒதுக்கீடு


இட ஒதுக்கீடு, பெரியார், திராவிட இயக்கம் என அனைத்தும் இந்த நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தப்பட்டு வன்மம் கொட்டபடுவதால் சில விளக்கங்கள்.முதலாவதாக சுந்தர் பிச்சை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அளப்பரிய சாதனை என்று பலரும் மூச்சு விடாமல் கத்துவதால் என்ன சாதனை செய்தார் என்று தேடி தேடி பார்த்தும் ஒன்றும் கண்ணுக்கு தென்படவில்லை. கண்டுபிடித்தவர்கள் தயவு செய்து சாதனை என்ன என்று விளக்கவும்.
மிக அதிக சம்பளம் தரும் பதவி கிடைத்தது பெரும் சாதனையா
உலகின் பணக்கார நிறுவனத்தின் CEO பதவி பெறுவது பெரும் சாதனையா
அந்த நிறுவனம் CEO பதவி காட்டி அழைக்கிறது ,இந்த நிறுவனம் இரண்டு மடங்கு சம்பளம் என்று ஆசை காட்டுகிறது ,நீ என்ன சொல்கிறாய் என்று பதவி பெறுதல் பெரும் சாதனையா
என்னோடு பணி புரியும் ஒருவர் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணின்(பெற்றோருக்கு ஒரே மகள்) தந்தைக்கு குர்கானில் பல ஏக்கர் சொத்து இருக்கிறதாம்.அதன் மதிப்பு ஆயிரகணக்கான கோடிகளாம்.அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் கூறினோம்.பெரும் பணக்காரர் ஆகும் அவரும் பெரும் சாதனையாளரா
அவரையும் பணம் வைத்திருந்த மாமனார் உலகெங்கும் தேடி வலைவீசி தகுதியானவன்,திறமையானவன்,இந்த உலகத்திலேயே தன் மகளுக்கு ஏற்றவன்,பொருத்தமானவன் என்று தான் பிடித்தார்,லார்ரி பேஜ் திரு சுந்தர் அவர்களை பிடித்தது போல.இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருக்கிறது என்று எண்ணுபவர்கள் தயவு செய்து விளக்கினால் தன்யனாவேன்
ராஜாவின் மகன் ராஜா எனபது போல பெரும் நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை வாரிசுகள் தலைமை பொறுப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள்.நம் டாட்டா,பிர்லா,அம்பானி மட்டுமல்ல உலகெங்கும் இதே நடைமுறை தான். இந்த பழக்கத்திற்கு மக்கள் இடையே மயக்கம் குறைந்து விட்டதை அறிந்ததால் யானை கையில் மாலையை கொடுத்து தேர்ந்தெடுக்க வைத்த வழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். என்னவொன்று தேர்ந்தெடுக்கும் யானை,அல்லது யானைகள் ஆறறிவு பெற்ற தேர்தெடுக்கபடும் மனிதரால் தனக்கு என்ன பயன் என்று பார்த்து தேர்வு செய்யும் யானைகள்.குறிப்பிட்ட ஒருவர் அல்லது யுவர் சேர்ந்து தேர்தெடுக்கும் செயல் தகுதிக்கும்,திறமைக்கும் எடுத்துக்காட்டு என்பதை விட மேற்கூறிய இரண்டையும் அதிகமாக இழிவுபடுத்த முடியாது.
மகன்களுக்கு உள்ளேயே யார் சிறந்தவர்,தனக்கு அடங்கி நடப்பவர்,தன் வழியை பின்பற்றுபவர் என்று பார்த்து ஒரு தொழில் அதிபர் எடுக்கும் முடிவுக்கும் இருவர்,மூவர் குழு எடுக்கும் முடிவுக்கும் என்ன வித்தியாசம்.இதில் உலகிலேயே சிறந்தவர் என்பதால் கிடைத்த பதவி என்று வாய்கூசாமல் வாதாடுபவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிது.
இங்கேயே அவர் உயர்பதவியை அடைந்திருப்பார் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் என்று வன்மம் கக்கும் கூட்டம் தான் அளப்பரிய சாதனை,நாடே பெருமைப்பட வேண்டிய சாதனை என்று அடித்து விட்டு கொண்டிருக்கிறது . இவர்கள் சொல்வதை பார்த்தால் இந்தியாவில்,தமிழ்நாட்டில்,உயர் கல்வி நிறுவனங்களில்,பொது துறை நிறுவனங்களில்,அரசு உயர்பதவிகளில்,தனியார் துறை உயர்பதவிகளில் ,பெரும்பாலான இடங்களை பெற்று இருப்பவர்கள் இட ஒதுக்கீடு பெரும் சாதிகளை சேர்ந்தவர்கள் என்று தான் அவர்களை படிப்பவர்கள் எண்ணுவார்கள்.உண்மைக்கும் இதற்கும் காத தூரம்.மேலே சொல்லப்பட்ட அனைத்து பதவிகளிலும் 1947 முதல் இன்று வரை மிக மிக பெரும்பான்மையான CEO /அதற்க்கு ஈடான பதவிகள் இட ஒதுக்கீடு பெறாத சாதிகளை சேர்ந்தவர்களுக்கு தான் சென்றுள்ளன.
அமெரிக்காவோ ஆப்ரிகாவோ படித்தவர்களோ,படிக்காதவர்களோ சென்று பணி செய்வதை முழுமனதோடு வரவேற்பவன் நான். ஆனால் இங்கு இட ஒதுக்கீடு காரணமாக தான் வேறு வழி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்ற பொய் முழுக்க முழுக்க வன்மம் தான்.சில தலைவர்கள் தான் இந்தியா ஓரளவாவது முன்னேற காரணம் ,ஒன்றாக இருக்க காரணம் என்று அவரவர் அவரவர்களுக்கு பிடித்த தலைவர்களை தூக்கி பிடித்தாலும் இந்தியா ஒன்றாக இருக்க ,ஓரளவாவது முன்னேற மிக முக்கிய காரணம் இட ஒதுக்கீடு தான். அதற்காக பாடுபட்ட தலைவகளும்,தொண்டர்களும் தான் என்பதை எவ்வளவு மறைக்க பார்த்தாலும் மறையாது.
முகேஷ் அம்பானி உலகத்திலேயே அதிக செலவில் ஒரு மாளிகை கட்டினார். அவர் பணம் ,அவர் கட்டி கொண்டார்.அதை பெரும் சாதனை ,இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய சாதனை என்று கொண்டாட வேண்டும் ,அப்படி கொண்டாடாதவர்கள் சாதி வெறியர்கள்,தேச துரோகிகள் என்று நல்லவேளை யாரும் சொல்லவில்லை. அம்பானி அண்டிலியா கட்டியது போன்ற சாதனை தானே சுந்தர் அவர்கள் பெரும் பணம் தரும் பதவியை அடைவதும்.
உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட இந்திய ரயில்வே தலைமை பொறுப்பை அடைந்தவரை யாரும் தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவது கிடையாது.அதிக எண்ணிக்கை கொண்ட சீன ராணுவத்தின் தலைமை பொறுப்பையோ ,இந்திய ராணுவத்தின் தலைமை பொறுப்பை அடைந்தவரையோ பெரும் சாதனையாளர் என்று புகழ்வது கிடையாது. இங்கு மட்டும் ஏன் என்பதற்கு காரணம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு தானே
கல்பனா சாவ்ளாவோ ,சுனிதா வில்லியம்சோ ,விஜய் சிங்கோ கொண்டாடபடுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஓரளவிற்கு objective வழியில் தேர்தெடுக்கப்பட்டு குறிப்பிட்ட துறைகளில் சாதித்தவர்கள்.பிசிசிஐ தலைவர்கள் டால்மியா,சரத் பவார் ,ஸ்ரீனிவாசன் ஐ சி சி தலைவர்களாக பதவி ஏற்றதை போன்ற நிகழ்வை பெரும் சாதனையாக எண்ணி பெருமிதம் கொள்வது ஒருவர் உரிமை.அதில் யாரும் தலையிட முடியாது.ஆனால் அப்படி கொண்டாடாதவர்களின் மீது வன்மத்தை கக்குவது நியாயமான ஒன்றா
ஜெயமோகன் பாணியில் ஒரு சின்ன நிறுவனத்தில் தலைமை பொறுப்புக்கு கூட வராத வயத்தெரிச்சல் கொண்ட தோல்வி அடைந்தவர்களின் புலம்பல் என்று வரபோகும் குற்றசாட்டுக்கு முன்கூட்டியே பதில் கொடுத்து விடுகிறேன்.பல முறை முதல்வராக இருந்த தேர்தலில் தோல்வியை சந்திக்காத தலைவர்களை 100 பேர் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் பஞ்சாயத்து கவுன்சில்லராக கூட ஆக முடியாதவர்கள்,தோல்வி அடைந்தவர்கள் தான் விமர்சிக்கிறார்கள்,அவர்களால் ஒரு சிறு பதவியை கூட அடைய முடியாது என்று வாதிடுவது சரி என்றால் நானும் தோல்வி அடைந்தவனின் பதிவு தான் இது என்பதை ஒப்பு கொள்கிறேன்.

No comments:

Post a Comment