Thursday 1 October 2015

Beef Eating Is My Birthright

1911, சூன் 17 ஆம் நாள் ,15 அக்டோபர் 2002 ,04 ஆகஸ்ட் 2015 ,28 செப்டம்பர் 2015
கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய
ஒரு மிலேச்சனாகிய ------
1911, சூன் 17 ஆம் நாள் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற வெள்ளை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு வாஞ்சிநாதன் இறந்தான். அவனது சட்டைப் பையில் தமிழில் எழுதப்பட்ட பின்வரும் கடிதம் இருந்தது (ரகுநாதன், 1982: 403): “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta
A very disturbing aspect is the involvement of communal forces like the Vishwa Hindu Parishad, Bajrang Dal, etc., who have been continuously active in spreading the virus of communal hatred in the area. They often spread the false rumour of cow slaughter in order to inflame the sentiments of the people against Muslims of the adjoining area of Mewat. Even in this incident a rumour of cow slaughter was used to inflame the crowd. The crime was perpetrated by the frenzied mob armed with irons, rods, spears etc led by these communal forces who controlled the mob and directed their ire against the dalits. The intensity of the communal frenzy can be gauged by an attempt to erase the name of the SSP Jhajjar from the board at chowkie because the concerned officer happens to be a Muslim.
On Sunday morning, 20-year-old Raziya was waiting for her husband to accompany her to a wedding when she received a phone call, informing her about his death. Cradling her two-month-old daughter, Raziya extends a henna-dyed hand and says, “We were supposed to attend a family wedding. The last time I spoke to him, I had been applying henna and I had asked him to reach home on time. I was preparing for the wedding when I received the news of his death.” In the early hours of Sunday, three men — Arif, Anas and Nazim — were beaten to death by villagers in Dadri district, - See more at: http://indianexpress.com/…/suspected-cattle-thieves-beate…/…
இரண்டு நாட்களுக்கு முன் 28 செப்டம்பர் 2011இல் உத்தர்ப்ரதேசத்தில் தாத்ரி எனும் ஊரில் மாட்டு கறி வைதிர்ருந்தார் என்று இஸ்லாமியர் ஒருவர் அடித்து கொல்லபட்டார்.அவர் வீட்டில் மாட்டு கறி இருக்கிறது,பசுவை கொன்று பக்ரீத் நாள் துவங்கி இன்று வரை மாட்டு கறி உண்டு வருகிறார்கள் என்று ஊர் கோவிலில் மைக் மூலம் கோவில் பண்டிதரை வைத்து சொல்ல வைத்து,ஊரில் உள்ள இந்துத்வா ?தேசபக்தர்களை திரட்டி நூற்றுக்கணக்கானவர்கள் வீடு புகுந்து தந்தையையும் மகனையும் அடி அடி என்று அடித்திருக்கிறார்கள்.இதில் தந்தையின் உயிர் பிரிந்து விட்டது. அவர் மகன் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
அவர்கள் வீட்டில் இருந்த கறி மாட்டு கறியா,ஆட்டு கறியா என்று காவல்துறை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.மாட்டு கறியாக இருந்தால் கொலைக்கு முழு பொறுப்பு கொலையானவர் தான் என்று மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் மகேஷ் சர்மா சொல்லி இருக்கிறார்.பா ஜ க வினர் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை/போராட்டத்தை தூண்ட மகாபஞ்சாயத்தை கூட்ட முடிவெடுத்து இருக்கிறார்கள்.
மாட்டுக்காக மனிதர்களை கொலை செய்வது ஹிந்டுத்வர்களுக்கு புதிதான ஒன்று கிடையாது. நூற்றாண்டுகளாக நடக்கும் ஒன்று தான். இதுவரை பசு மாட்டின் மீது உள்ள பக்தியால் மாட்டுக்காக ஹிந்டுத்வர்கள் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை எண்ண எண்ண வற்றாத ஒன்று தான்.முதல் விடுதலை போர் என்று அழைக்கப்படும் சிப்பாய் கலகம் அடிப்படையில் பசுவை /பன்றியை வைத்து உருவாக்கப்பட்ட கலகம் தான். அதனால் ஏற்பட்ட படுகொலைகள் பல ஆயிரங்களை தாண்டும். தங்கள் சொந்த மகள்களை,சகோதரிகளை,உறவுகளை அவர்களின் ஒரே கோத்திர/வேறு சாதி மத ,காதல் காரணமாக செய்த கொலைகளை விட குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர மற்றபடி பசுபாசம் காரணமாக ஹிந்துக்கள் செய்துள்ள கொலைகள் மிக மிக அதிகம்.
அவற்றில் சிலவற்றை மேலே கொடுத்துள்ளேன்.பசுவுக்காக கொலை செய்தவர்களை பெரும் தியாகிகளாக இந்து மதவெறியர்கள் @நம்பிக்கையாளர்கள் சித்தரிக்கும் வழக்கமும் நூறாண்டுகளாக நடக்கும் ஒன்று .ஆங்கில அரசின் ஊழியராக இருந்த கலெக்டர் ஆஷ் அவர்களை சுட்டு கொன்ற வாஞ்சி ஐயர் அவர் கைப்பட எழுதி இருந்த குற்றசாட்டில் இருக்கும் கொலைக்கான மிக முக்கிய காரணம் மாட்டு கறி உண்பவன் என்னை ஆள நினைப்பதா எனபது தான்.
தனக்கு பிடித்த உணவை உண்ணும் உரிமை,தனக்கு பிடித்த பணியை செய்யும் உரிமை வேண்டும்,தனக்கு பிடித்த துணையை தேடி கொள்ளும் உரிமை வேண்டும் என்று போராடிய ஒருவனை பாசிஸ்ட்,தேச துரோகி ,சனநாயகத்தின் எதிரி,அவர்களின் முதல் எதிரியாக கருதுபவர்கள் தான் மாட்டுக்காக கொலை செய்த வாஞ்சிநாதனை மிக பெரிய போராளியாக ,தேசபக்தனாக உருவாக்கியவர்கள் என்பதை புரிந்து கொண்டால் மாட்டுக்கும் இந்துத்வதிர்க்கும் உள்ள நேரடி தொடர்பு விளங்கும்.உண்மையான கம்முநிச்ட்களை ஹிந்டுத்வர்கள் வெறுப்போடு எதிரியாக கருத அவர்கள் வலுவாக உள்ள பகுதிகளில் எளிதாக கிடைக்கும் மாட்டு கறியும் முக்கிய காரணம்.
மாட்டு கறி என்பது வெறும் உணவு கிடையாது. அதன் பின் நூற்றாண்டுகளாக தொடரும் வெறுப்பு/சூழ்ச்சி அரசியல் இருக்கும் உண்மை புரிந்தால் நாம் ஏன் மாட்டு கறி உண்ணும் உரிமைக்காக போராட வேண்டும் எனபது தெளிவாக விளங்கும்.
ஆஷ் துரையை கொன்ற வாஞ்சி ஐயரோ ,அரியானாவில் இறந்த பசுவின் தொலை உரித்து கொண்டிருந்த ஐந்து தலித் சமுதாயத்தை சார்ந்தவர்களை காவல்நிலையத்தில் இருந்து இழுத்து கொண்டு வந்து அடித்தே கொன்ற கூட்டமோ,மனிதர்களின் உயிரை விட பசுவின் உயிர் பெரியது,கொலை சரியான தண்டனை தான் என்று பேசிய ஆசாரிய கிசோர்களோ,ஆசாரிய கிஷோரின் மறைவின் போது அவரை பற்றி உருகி (எழுதிய தேர்தல் பிரசாரத்தின் போது மாட்டு கறி ஏற்றுமதியை பெரும் குற்றம் போல பேசிய இன்று மாட்டு கறி முக்கிய உணவாக இருக்கும் நாடுகளிலேயே காலத்தை கழிக்கிற )பிரதமரோ ,மூன்று இஸ்லாமியர்களை 2 மாதங்கள் முன்பு அடித்து கொன்ற கூட்டமோ, மூன்று நாட்கள் முன்பு 50 வயதான ஒருவரை அடித்தே கொன்ற கொலையாளிகளோ அனைவரையும் நூறாண்டுகளாக பிணைக்கும் கயிறு எது என்பதை ஆராய்ந்தால் ஹிந்துத்வம் என்ற பூனைக்குட்டி குதித்து கொண்டு தெரியும்.
இவர்களை எதிர்க்க போகிறோமா அல்லது நாமும் ஆஷ் துரை,தயா சந்த்,ஆரிப் ,முஹம்மத் அக்லாக் போல பலிகடாவாக ஆக போகிறோமா

No comments:

Post a Comment