Thursday 1 October 2015

மதுவிலக்கு

  மதுவிலக்கு ஆதரவாளர்களே
தயவு செய்து மதுவிலக்கு இருப்பதால் உடல்நலம்,கல்வி,போன்றவற்றில் சிறந்த நிலையை அடைந்து இருக்கும்,மனித உரிமைகளை மதிக்கும் ,ஆண்களையும் பெண்களையும் சமமாக மதிக்கும் ஒரு நாட்டை,மாநிலத்தை,சமூக குழுவை காட்டுங்களேன்.
மதுவிலக்கு இருக்கும் நாடுகளோடு,மாநிலங்களோடு மதுவிலக்கு இல்லாத நாடுகளில் மேற்கூறியவற்றை ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் தான் தென்படுகிறது.
மதுவிலக்கு இருக்கும் குஜராத்தில் தான் கலவரங்கள்,படுகொலைகள் மிக மிக அதிகம். எங்கோ வன்முறை நிகழ்ந்தால் மாநிலம் முழுவதும் தேடி தேடி கொள்வது நடக்கும் மாநிலம்.
மதுவிலக்கு இருக்கும் பாகிஸ்தானும் இதே போல தான்.மதுவிலக்கு இருக்கும் மாநிலங்கள்,நாடுகளோடு ஒப்பிட்டு சான்றுகளோடு வாதிடலாம்.இந்தியாவில் ராணுவ ஆட்சி இன்றுவரை வராமல் இருக்க மதுவும் முக்கிய காரணம்.
லவ் ஜெஹாத்,பெண்களை ஏமாற்றி திருமணம் செய்கிறார்கள் என்று பேசும் கூட்டமும்,மதுவை வைத்து மக்களை முட்டாள் ஆக வைத்து இருக்கிறார்கள், மதுவை விட பெரிய தீமை/கேடு கிடையாது என்று பேசும் கூட்டமும் ஒன்று தான். பெண்கள் சுயமாக முடிவாக எடுக்க மாட்டார்கள்,மனிதர்களுக்கு சுயமாக எவ்வளவு குடிக்க வேண்டும் அல்லது குடி தவறு என்று முடிவு எடுக்க தெரியாது.எங்களுக்கு அந்த அதிகாரம் வேண்டும் என்ற காலம் மலையேறி விட்டது.
காவல்துறை மது அருந்துபவர்களையும்,அவர்களின் குடும்பங்களையும் ,பக்கத்து மாநிலத்தில் சட்டப்படி சரி என்று விற்கப்படும் மதுவை எடுத்து கொண்டு வருபவர்களையும்,அப்படி வருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனக்கு வேண்டாதவர்களின் மீது வன்முறையையும் ,அத்து மீறலையும் நடத்துவதை தவிர வேறு எதற்கும் மதுவிலக்கு உதவாது.
தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு சமம் தான் காவல்துறையினருக்கு தரப்படும் அளவுக்கு அதிகமான அதிகாரம்.
பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து மாட்டு கறி எடுத்து வந்தால்,வீட்டில் மாட்டு கறி சமைத்தால் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை என்பதை எதிர்த்து கொண்டே பக்கத்துக்கு மாநிலத்தில் விற்கப்படும் மதுவை வாங்கி வந்தால்,இங்கு வந்து குடித்தால் சிறை தண்டனை என்பதை எப்படி சில மனிதஉரிமை ஆர்வலர்களால் ஆதரிக்க முடிகிறது
அடுத்தவர்களுக்காக முடிவு எடுப்பதை எப்போது தான் விட போகிறோமோ.மத வெறி,சாதிவெறி,மொழிவெறி பிடித்தவர்கள் தான் அடுத்தவனின் உரிமையில் தலை இடுவார்கள்.அவனுக்கு எது சரி,தவறு,எதை சாப்பிட கூடாது,எதை குடிக்க கூடாது என்ற உரிமையை எடுத்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment