பழங்காலத்தில் தண்டனை எனபது பழிக்கு பழியாக இருந்தது.இன்றும் கிராம/காப் பஞ்சாயத்துக்கள் அது போன்ற தண்டனைகளை வழங்குகின்றன/நிறைவேற்றுகின்றன.பிறகு குறிப்பிட்ட தொழில் செய்வோர்,குடும்பங்களில் பிறந்தவர்கள் போன்றோருக்கு,வயது,பாலினம் சார்ந்து எந்த குற்றமாக இருந்தாலும் மரண தண்டனை கிடையாது என்ற நிலையும் இருந்தது.
முன்னேறி வந்த முற்போக்கு எண்ணங்கள் கொண்ட சமுதாயங்கள் தண்டனைகளை குற்றவாளி திருந்த செய்யும் முறையாக பார்க்க துவங்கியது.குற்றவாளிகள் திருந்த வாய்ப்புகள் இருக்கும் போது அது தான் முயற்சிக்க படவேண்டும் எனபது தான் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் மரணதண்டனை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம்.
மரண தண்டனை எதிர்ப்பிற்கு இருக்கும் இன்னொரு முக்கிய காரணம் தவறு செய்யாதவர்கள் தவறாக தண்டனை பெற இருக்கும் வாய்ப்பு. மரணம் மற்ற தண்டனைகளை பெற்ற குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு சிறிது அளவாவது பிராயச்சித்தம் செய்யலாம். ஆனால் தவறாக மரண தண்டனை வழங்கபட்டால் பின்பு அது தவறான தீர்ப்பு என்று தெரிந்தால் மாற்ற முடியுமா
உங்கள் வீட்டில் நடந்தால் என்ற கேள்வி மறுபடியும் மறுபடியும் முட்டாள்தனமாக எழுப்பபடுகிறது.வாகன விபத்தில் உயிர் இழந்தாலும்,கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்தாலும்,மின்சார கம்பி விழுந்து உயிர் இழந்தாலும் இழப்பு ஒன்று தான். இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு குற்றம் செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வேண்டும் என்று போராட உரிமை உண்டா. தவறாக கட்டப்பட்ட,அனுமதி வழங்கப்பட்ட சினிமா தியேட்டரில் இரு குழந்தைகளையும் இழந்த தாய் குறைந்தபட்ச இரண்டு ஆண்டு தண்டனை கூட தரவில்லையே என்று அழுது கொண்டு கதறியதை சென்ற .வாரம் தானே பார்த்தோம்.விபத்துக்களின் காரணமாக உயிர் இழந்த நெருங்கிய உறவுகள் ,நட்புகள் இல்லாத குடும்பத்தை பார்ப்பது மிக மிக அரிது. அவர்களுக்கு குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்ல இருக்காத உரிமை அதே போல உறவுகளை தீவிரவாத செயல்களில் இழந்தவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது.இழப்பு இரு இடங்களிலும் ஒன்று தானே. மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்னை கொலை செய்தவனாக இருந்தாலும்,என் நெருங்கிய உறவுகளை கொடூரமாக கொன்றவனாக இருந்தாலும் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது என்று கார்ட் மணிபர்சில் வைத்து கொண்டால் அவர்கள் உண்மையிலேயே மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்று ஒத்து கொள்வீர்களா
பெரும்பான்மையானோர் மரணதண்டனைக்கு ஆதரவானவர்கள் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்.தமிழ்நாட்டில் மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்று வோட்டெடுப்பு நடத்தலாமா.மக்களால் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கபட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது பெரும்பானமையானோர் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்பதற்கு சான்றா அல்லது மிக மிக குறைவானோர் தான் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்ற உங்கள் வாதத்திற்கு சான்றா
No comments:
Post a Comment