Saturday 27 January 2018

மொழி போர்


இன்று தமிழுக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நாள்.மொழிக்காக போராடி தன்னுயிரை இந்த பலரை கொண்ட சமூகங்கள் மிக குறைவு.அதில் ஒன்று தமிழ் சமூகம்.மற்றவர்கள் உயிரை எடுக்காமல் தன்னுயிரை தியாகம் செய்த போராட்டம் தமிழுக்கான 1938 ,1948 ,1965 நடந்த போராட்டம்.
மதம்,சாதி,இனம்,நாடு போன்றவற்றின் மீதான பற்று வெறித்தனம் தான் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. இதில் மொழியையும் சேர்த்து கொள்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.ஆனால் தமிழின் போராட்டம் ஆதிக்கத்துக்கான போராட்டம் அல்ல.ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்.மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த பின்பு மத்திய அரசு நிறுவனத்தில் பணியில் இருந்தேன்
அன்றைய காலகட்டத்தில் தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் கையெழுத்து இடும் வழக்கம் வைத்திருந்தேன்.சில மாதங்களுக்கு பிறகு என் கையெழுத்தை தற்செயலாக ஒரு நோயாளியின் மருத்துவமனை அனுமதிக்கான சீட்டில் கண்ட உயர் அதிகாரி என்னை உடனே அழைத்தார்.என்ன பூவண்ணன் (நக்கலான அழுத்தத்தோடு ) தமிழில் கையெழுத்தா .இந்த பெரியார், திமுக வேலை எல்லாம் இங்கு உதவாது. இது மத்திய அரசு நிறுவனம் ,ஸ்டேட் government அல்ல .இங்கு இந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும்..சில காலத்துக்கு ஆங்கிலத்தில் அனுமதி. இன்று முதல் தமிழில் கையெழுத்திடாதே என்று அறிவுறுத்தினார்.
அவருக்கு வந்த கோவம் எனக்கு விளங்கவில்லை.அரசு அதிகாரியான அவரின் டேபிளின் கண்ணாடியின் பின் இருந்து பெரியவா,நடுவா ,சின்னவா மூவரும் என்னை நோக்கி புன்னகைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.இந்த நிகழ்வினால் அதற்கு பிறகு ஆங்கிலத்தில் கையெழுத்து இடுவதை அறவே விட்டு விட்டேன். இன்று வரை ஒரே கையெழுத்து .தமிழில் மட்டுமே கையெழுத்து
வடமொழி தான் உயர்ந்தது ,தெய்வ மொழி,மொழிகளின் தாய்,மொழிகளின் ஆசான் (யார் சிறந்தவர்,எது சிறந்தது என்று வெறி கொண்டு அடித்து கொள்வதில் எழுத்தாளர்களின் அருகில் கூட யாரும் வர முடியாது )என்பதற்கு எதிராக இருக்கும் ஒரே கூட்டம் தமிழ் பேசும் கூட்டம்.இந்து மதம் எனும் வர்ணாசிரம @சனாதன தர்மம் வடமொழியில் தான் நிற்கிறது.வடமொழியை எதிர்க்கும் மொழியை எப்படி இந்து மத குருக்கள் வெறுக்காமல் இருக்க முடியும்
தனி மனித உரிமை, எதிர்ப்பை தெரிவிக்க நிற்கவில்லை என்று சொன்னால் அதனை இரு கை தட்டி வரவேற்பேன்.இந்த உரிமை அனைவர்க்கும் வென்றும் என்று தான் அன்றும் இன்றும் போராட்டம்.ஆனால் அப்படி பதில் வராமல் ,யாரை பார்த்து கேட்கிறாய்?அவர் தகுதி என்ன?மரபு என்ன ?அவர் யார் தெரியுமா ? என்று வரும் பதில்கள் நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம் என்பதை தான் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment