Saturday 27 January 2018

மத நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை

மத நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை தான்.அதனை எதிர்க்க மாட்டோம் என்று பாஜகவும் முஸ்லீம் லீகும் தான் சொல்லும்.
இந்தியாவில் ,தமிழ்நாட்டில் பெரும்பான்மை மதம் இந்து மதம் என்பதால் ,இந்து மத எதிர்ப்பு தான் சமூக நீதி,பெண் விடுதலை,சம உரிமைக்கான,சுயமரியாதைக்கான குரலாக இருக்க முடியும்.
மதமாற்றம் இந்துக்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தும் விஷயம்.அதனை திமுக எப்படி பார்க்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயா அவர்கள் கூட மதமாற்ற தடுப்பது சட்டம் கொண்டு வந்து பின்பு அதனை திரும்ப பெற்று கொண்டார்.இது ஞாபகத்துக்கு வந்தால் நல்லது
சுயமரியாதை திருமணம் என்பதே இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான ஒன்று தான்.அதனை சட்டபூர்வமாக ஆக்கியவர் அண்ணா
இன்றுவரை கட்சி தலைமைகள் கலந்து கொள்ளும் திருமணங்கள் சுயமரியாதை திருமணங்களாக தான் இருந்தன.இனிமேல் ஜீயர்,ஆச்சாரியார் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத தான் திருமணங்கள் நடக்குமா
தி க என்றால் சில திமுகவினருக்கு கிண்டலாக இருக்கிறது.
கலைஞர் இந்து மத எதிர்ப்பில் பெரியாருக்கு பிறகான திராவிடர் கழக தலைவர்களை விட பல மடங்கு மேலே இருந்ததால்,பலவற்றை அதிகாரத்தின் துணை கொண்டு சாதித்ததால் இளைஞர் முதல் முதியோர் வரை கழகத்தை விட திமுகவில் அதிகம் இணைந்தனர்.
கேரளாவில் கம்ம்யூனிஸ்ட் கட்சி வாங்கும் வாக்குகள் மத எதிர்ப்பு வாக்குகள்.இங்கு அவை திமுகவுக்கு சென்றன .மத எதிர்ப்பு அனாவசியம் என்று கருதும் வாக்குகள் காங்கிரஸ் பக்கம்.இங்கு அதிமுகவின் பக்கம் மத எதிர்ப்பு வாக்குகள் மிக குறைவு என்பது போல மதப்பற்றுள்ள சில திமுகவினர் நினைப்பது தான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.
இந்து மத நம்பிக்கைகளை எதிர்க்க மாட்டோம் என்றால் அப்படி தான் அர்த்தம்
சமூக நீதி ,இட ஒதுக்கீடு,தமிழ் தான் கோவில்களிலும் ஒலிக்க வேண்டும் என்பது எல்லாம் இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்கள் தான்
மத மாற்றத்துக்கும்,சாதி மறுப்பு காதலுக்கும் முழு ஆதரவான இயக்கம் திமுக.அதுவும் தவறு.,திமுக அப்படி மதம் மாறும் உரிமை தவறு என்று பாஜக போல பேசும் என்றும் சொல்லி விட்டால் இந்த பேச்சுக்களுக்கே அவசியம் இல்லை.ஒதுங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புரிந்து கொண்டு இதனை முன் நிறுத்துபவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.

No comments:

Post a Comment